(-கம்பெனிகளுக்கிடையிலான ஊழியர் சங்கத்தின் 25 வது வருடாந்த மாநாடு – மாளிகாவத்த பி.டீ. சிறிசேன விளையாட்டரங்கு-) இலங்கையில் இதுவரைகாலமும் இருபக்கத்திற்கு பரிமாறிக்கொண்டிருந்த அரசியல் அதிகாரம் இந்த செப்டெம்பர் 21 ஆந் திகதி முற்றுப்பெறுவது நிச்சயமாகிவிட்டது. இதன்காரணமாக பகைவர்கள் அனைவரும் அரசியல் வாதங்களுக்குப் பதிலாக பொய்யான குறைகூறல்கள், திரிபுபடுத்தல்களை பாரியளவில் பிரச்சாரம்செய்த வருகிறார்கள். தோழர் வசந்தவையும் தோழர் மகிந்தவையும் கைதுசெய்யுமாறு நீதிமன்றம் பணிப்புரை விடுத்ததாக கடந்த 06 ஆந் திகதி பிரச்சாரமொன்று மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்ற பணிப்பரையொன்றை திரிபுபடுத்தியமை தொடர்பாக […]
(-கம்பெனிகளுக்கிடையிலான ஊழியர் சங்கத்தின் 25 வது வருடாந்த மாநாடு – மாளிகாவத்த பி.டீ. சிறிசேன விளையாட்டரங்கு-)
இலங்கையில் இதுவரைகாலமும் இருபக்கத்திற்கு பரிமாறிக்கொண்டிருந்த அரசியல் அதிகாரம் இந்த செப்டெம்பர் 21 ஆந் திகதி முற்றுப்பெறுவது நிச்சயமாகிவிட்டது. இதன்காரணமாக பகைவர்கள் அனைவரும் அரசியல் வாதங்களுக்குப் பதிலாக பொய்யான குறைகூறல்கள், திரிபுபடுத்தல்களை பாரியளவில் பிரச்சாரம்செய்த வருகிறார்கள். தோழர் வசந்தவையும் தோழர் மகிந்தவையும் கைதுசெய்யுமாறு நீதிமன்றம் பணிப்புரை விடுத்ததாக கடந்த 06 ஆந் திகதி பிரச்சாரமொன்று மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்ற பணிப்பரையொன்றை திரிபுபடுத்தியமை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம். இன்றளவில் எமக்கு கோரிக்கைக் கடிதம் அனுப்பிவைத்தல், முறைப்பாடுகள் செய்தல் குறைவின்றி இடம்பெற்று வருகின்றது. நீதிமன்றம் தொடர்பில் பொய்யான கூற்றுகளை வெளியிடுதல் சம்பந்தமாக சட்டத்தரணிகளின் மேலங்கிகளைக்கூட கழற்றமுடியும். நாங்கள் நீதிமன்றத்தின் முன் அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். அரசியல் மேடையில் இந்த திரிபுபடுத்தல்களையும் பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதையும் இப்போதாவது நிறுத்தவேண்டும். றவூப் ஹக்கீம், திஸ்ஸ அத்தநாயக்க போன்றவர்களுக்கும் கோரிக்கைக் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. திஸ்ஸ அத்தநாயக்க மன்னிப்புக் கோரினாலும் வழக்கத் தொடுக்கக்கூடிய அளவில் போலியாவணம் புனைவதில் பிறவித்திறமை கொண்டவராக மாறியிருக்கிறார். அதைப்போலவே ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்குப்போய் தமிழ் மக்களை அச்சுறுத்தியதாகக் கூறுகிறார். அதற்காக மன்னிப்புக் கோரவேண்டுமாம். நான் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கூறுகிறேன் “ரணில் விக்கிரமசிங்க, நீங்கள் அசிங்கமானவகையில் அரசியலில் இனவாதத்தை விதைக்க முயற்சிசெய்ய வேண்டாம்.” என்றாலும் தான் அதற்கு பதிலளிக்க முன்னராக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சரியான பதிலை அளித்துள்ளமை தொடர்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வடக்கிற்குச்சென்று இனவாதத்தை தூண்டிவிட ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட முயற்சியை வடக்கு மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற திரு. சுமந்திரனே நிராகரித்துள்ளார், இப்போது ரணில் நீங்கள் மன்னிப்புக் கோருங்கள்.
மத்திய வங்கி மோசடி பற்றிய விசாரணைகளை மேற்கொள்வோம்.
நாட்டில் மற்றவருக்கு எதிராக இனவாதத்தை விதைத்திட, ஒருவருக்கொருவர் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த மேற்கொள்கின்ற முயற்சிகள் இப்போது செல்லுபடியாக மாட்டாது. எனினும் ரணில் விக்கிரமசிங்காக்கள் இப்போதும் பழைய கடையிலேயே சாமான்களை வாங்குகிறார்கள். ரணில் விக்கிரமசிங்க அண்மைக்காலமாக பல சந்தர்ப்பங்களில் “எனது நண்பர் அநுர, எனது கூட்டாளி அநுர” எனக் கூறியிருக்கிறார். அது “ஷேப்” ஆக்க வருவதாகும். ரணில் விக்கிரமசிங்க உங்களால் எங்களுடன் ‘ஷேப்” ஆக முடியாது. மத்திய வங்கி மோசடி பற்றிய விசாரணைகளை மேற்கொள்வோம். காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகளை நண்பர்களுக்கு பகிர்ந்தளித்த விதத்தை விசாரிப்போம். அதைப்போலவே மோசடிக்காரர்கள், ஊழல் பேர்வழிகளை பாதுகாத்த விதம்பற்றி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளும். அதேவேளையில் மென்மேலும் குறைகூறல்களை முன்வைத்து தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்தால் 22 ஆம் திகதி கலவரங்கள் இடம்பெறும் எனவும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்த பின்னர் வெற்றியை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை நாங்கள் கற்றுக்கொடுப்போம்.
வெற்றிபெற்றதும் தோல்விகண்டவர்களை துன்புறுத்துகின்ற வரலாறு அவர்களுக்கே இருக்கின்றது. குறிப்பாக 1977 இல் இருந்து ரணில் விக்கிரமசிங்க தொடர்பிலாகும். அன்று தோ்தல் வெற்றியின் பின்னர் இரண்டு வாரங்கள் பொலிஸாரை பொலிஸ் நிலையங்களில் முடக்கி வைத்து எதிர்கட்சியினர் மீது தாக்குதல் நடாத்த, வீடுகளை தீக்கிரையாக்க, துப்பாக்கி பிரயோகம் செய்ய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். எனினும் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்த பின்னர் வெற்றியை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை நாங்கள் கற்றுக்கொடுப்போம். செப்டெம்பர் 23 ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு கட்சியையும் சோ்ந்த ஆதரவாளர்களை சந்தித்து மாற்றமடையுமாறு அழைப்பு விடுப்போம். ஆனாலும் மாற்றமடைய விரும்பாவிட்டால் அவர்கள் விரும்பிய அரசியல் இயக்கத்தின் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை இருக்கிறது. அது ஒரு ஜனநாயக உரிமையாகும். செப்டெம்பர் 21 ஆம் திகதிவரை கட்சிகளாக பிரிந்து நாங்கள் உழைப்போம். எனினும் செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக எமக்கு வாக்களிக்காதவர்களையும் சோ்த்துக் கொண்டு இந்த நாட்டை கட்டியெழுப்புவோம். அதனால் வெற்றிக்கு பின்னர் ஏனைய கட்சியைச் சோ்ந்தவர்களுக்கு நகத்தின் நுனியினால் கூட சேதம் விளைவிக்க தேசிய மக்கள் சக்தி இடமளிக்கமாட்டாது.
இந்நாட்டு மக்கள் நேரடியாகவே திசைக்காட்டிக்கு புள்ளடியிட அணிதிரண்டிருக்கிறார்கள்.
நூற்றுக்கு மூன்று வீதத்தை வைத்துக்கொண்டு வெற்றி பெறுவது எப்படியென முன்னர் கேட்டார்கள். இப்போது சஜித்திற்கு புள்ளடியிட்டு எம்மை தோற்கடிக்க முடியாதென ரணில் கூறுகிறார். ரணிலுக்கு புள்ளடியிட்டு எம்மை தோற்கடிக்க முடியாதென சஜித் கூறுகிறார். இப்போது இந்நாட்டு மக்கள் நேரடியாகவே திசைக்காட்டிக்கு புள்ளடியிட அணிதிரண்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் ஏற்கெனவே எங்கள் வெற்றியை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். வென்றாலும் ஆறு மாதங்கள் ஓட்ட முடியாதென புதிதாகக் கூறுகிறார்கள். அவர்களின் பிரச்சாரங்களில் ஆரம்பத்தில் “திசைக்காட்டிக்கு வெற்றிபெற முடியாது.” எனக்கூறினார்கள். அடுத்ததாக “திசைக்காட்டி வெற்றிபெற்றால்…” எனக்கூறினார்கள். “திசைக்காட்டி வெற்றிபெற்றால் ஆறு மாதங்கள் கூட ஓட முடியாது.” என இப்போது கூறுகிறார்கள். இந்த மாற்றம் பற்றி ஆழமாகவும் பாரிய எதிர்பார்ப்புடனும் நாங்கள் நீண்டகாலமாக திடசங்கற்பத்துடன் இருந்து கொண்டு பாரிய சக்திகளை ஒன்று திரட்டியிருக்கிறோம். அதைபோலவே பலம்பொருந்திய வேலைத்திட்டமொன்றை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். நாங்கள் இந்த வெற்றியை அடைந்தது ஆறு மாதங்கள் பயணம் செய்யவா? இந்த வெற்றி மூலமாக இலங்கை வரலாற்றில் மிக நீண்ட வெற்றியை உருவாக்குவோம் என்பது உறுதியாகும்.
தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் வேலை செய்கின்ற எல்லா இடத்திலும் மிகவும் அமைதியான வகையில் செயலாற்றி வருகின்றதென்பதை மகிழ்ச்சியுடன் கூறவேண்டும்.
இந்த இடத்தில் குழுமியுள்ளவர்கள் இலங்கையின் தனியார் துறையில் பணியாற்றுபவர்களாவர். இலங்கையின் பலம்பொருந்திய தனியார் துறையின் தொழிற்சங்க இயக்கம் கம்பெனிகளுக்கிடையிலான ஊழியர் சங்கமே என்பதை எவரும் அறிவார்கள். தேசிய மக்கள் சக்தியின் தொழிற்சங்க இயக்கத்தினால் தனியார் துறையை சீரழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் வேலை செய்கின்ற எல்லா இடத்திலும் மிகவும் அமைதியான வகையில் செயலாற்றி வருகின்றதென்பதை மகிழ்ச்சியுடன் கூறவேண்டும். அதன் விளைவாக தனியார் துறையின் மிக அதிகமான சம்பளம் பெறுகின்ற நிறுவனங்கள் கம்பெனிகளுக்கிடையிலான ஊழியர் சங்கத்தில் உள்ள நிறுவனங்களாகும். அந்த நிறுவனங்களிலிருந்து மிக அதிகமான போனஸ் ஊழியர்களுக்கு வழங்கப்படுவதோடு மிக அதிகமான அந்நிய செலாவணி இந்நாட்டுக்கு அந்த நிறுவனங்களாலேயே ஈட்டித்தரப்படுகிறது. தேசிய பொருளாதாரத்திற்கு தனியார்துறையை பலம் பொருந்திய வகையில் பங்களிக்கச் செய்வித்து அவர்கள் பெறுகின்ற வருமானத்திலிருந்து நியாயமான ஒரு பங்கினை அந்த ஊழியர்களுக்கு பெற்றக்கொடுப்பது எங்களுடைய கொள்கையாகும்.
ஒவ்வொருவருக்கும் நியாயமான மனநிறைவுகொண்ட இளைப்பாறிய வாழ்க்கையொன்று அவசியமாகும்.
தனியார் துறையின் முன்னேற்றம் தொடர்பில் ஏற்கெனவே ஏதேனும் தடைகள் இருப்பின் அந்த சிக்கல்களை தீர்த்து வைக்க தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் முன்னுரிமையளிக்கும். எனினும் இலாபத்தில் ஒரு நியாயமான பங்கு உழைக்கும் மக்களுக்கு நன்மைகளாக வழங்கப்படல் வேண்டும். அது தவறா? அந்த நிறுவனங்கள் சீர்குலையுமா? ஒருபோதும் இல்லை. கைத்தொழில் அதிபர்களைப்போன்றே அதன் ஊழியர்கள் ஆகிய இரு தரப்பினரதும் உறுதி நிலையினை பாதுகாக்கின்ற கொள்கையொன்றை அமுலாக்குவோம். ஒன்றரை தசாப்தங்களாக கட்டி வளர்க்கப்பட்டுள்ள “மேன்பவர் ஏஜன்சி” ஊடாக தொழில்களை வழங்குகின்ற முறைமை நவீன அடிமை வியாபாரத்தை ஒத்ததாகும். அந்த மாதிரியை தொடர்ந்தும் பேணிவரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். பொருளாதாரம் உறுதியானதெனில் பண்டங்களினதும் சேவைகளினதும் விலைகள் தளம்பலடைய மாட்டாது. பொருளாதாரத்தில் நிலவுகின்ற உறுதியற்றத்தன்மை நிலையான சம்பளம் பெறுபவர்களுக்கு பாரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதனால் அதனை பாதுகாப்பதற்கான வழிமுறைகளுக்கு நாங்கள் முன்னுரிமையளிப்போம். மீன்பிடி, விவசாயம், கைத்தொழில்கள், பெருந்தோட்டச் சேவை போன்றே அரசாங்க சேவை ஆகிய அனைத்து பிரிவுகளிலும் செல்வத்தை உற்பத்தி செய்கின்ற குழுவினருக்கு வாழ்க்கையின் இறுதிவரை அவ்வண்ணமே தொழில் புரிய முடியாது. ஒரே மாதிரியாக வேலைசெய்ய முடியாது. ஒவ்வொருவருக்கும் நியாயமான மனநிறைவுகொண்ட இளைப்பாறிய வாழ்க்கையொன்று அவசியமாகும். எனினும் எமது நாட்டில் பெரும்பாலானோர் துன்பகரமான, விரக்தியடைந்த, உணவு பெற்றுக்கொள்ள முடியாத, மருந்து பெற்றக்கொள்ள முடியாத கடினமான வாழ்க்கையையே கழித்து வருகிறார்கள். அதனால் அனைவரும் பங்கேற்கக்கூடிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டமொன்றை வழங்குவதற்கான முறையொன்று வகுக்கப்படும். அரச பிரிவில் அனைவரும் செய்ய வேண்டிய பங்கினையும் தனியார் துறையின் பங்கினையும் நாங்கள் மிகவும் நன்றாக விளங்கிக் கொண்டுள்ளோம். தனியார் துறையின் செயற்பொறுப்பினை வெற்றியீட்டச் செய்விக்கையில் அந்த ஊழியர்கள் மிகப்பெரிய செயற்பொறுப்பினை ஆற்றி வருகிறார்கள். அவர்களை பேணிப்பாதுகாக்கின்ற அவர்கள் மீது கவனிப்பு காட்டுகின்ற அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தியே தாபிக்கும்.
உழைக்கும் மக்களின் உழைப்பில் கட்டியெழுப்பப்பட்ட ஊழியர் சேமலாப நிதியத்தைக் கொள்ளையடித்த அரசாங்கங்களே இதுவரை நிலவின.
செப்டெம்பர் 21 ஆம் திகதி கட்டியெழுப்பப்படுகின்ற அரசாங்கம் ஏனைய எல்லா அரசாங்கங்களைவிட வித்தியாசப்படுவது அதனலேயே. உழைக்கும் மக்களின் உழைப்பில் கட்டியெழுப்பப்பட்ட ஊழியர் சேமலாப நிதியத்தைக் கொள்ளையடித்த அரசாங்கங்களே இதுவரை நிலவின. சீர்குலைகின்ற கம்பெனிகளில், சீர்குலைகின்ற நிறுவனங்களில் முதலீடுசெய்து பல்லாயிரக்கணக்கான கோடி நட்டம் விளைவித்தார்கள். எனினும் முதலீடுசெய்த டீல்காரர்கள் தமக்கிடையே பெருந்தொகையான பணத்தை பகிர்ந்து கொண்டார்கள். ஊழியர் சேமலாப நிதியத்தை கொள்ளையடிப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டது. பெருந்தொகையானோர் காயமுற்று ஏலாமை நிலையை அடைந்தார்கள். அண்மையில் கடன் மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தை அமுலாக்கி மிகப்பெரிய சேதத்தை ஊழியர் சேமலாப நிதியத்திற்கு விளைவித்தார்கள். ஆட்சியாளர்கள் உழைக்கும் மக்களை பற்றி சிந்திப்பதற்கு பதிலாக எல்லா நேரத்திலும் அவர்களுக்கு எதிரான தீர்மானங்களையே மேற்கொண்டார்கள். அதற்கு வித்தியாசமாக செயற்படுகின்ற உழைக்கும் மக்கள் பற்றி சிந்தித்து தீர்மானம் மேற்கொள்கின்ற அரசாங்கமொன்றை கட்டியெழுப்புவோம். இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி இலங்கையின் எதிர்காலத்தை கட்டியெழுப்புகின்ற அரசாங்கமொன்றை உருவாக்குவதை செப்டெம்பர் 21 ஆம் திகதி ஆரம்பிப்போம். இந்த வெற்றியை மென்மேலும் உறுதி செய்வதற்காக அனைவரையும் செயலாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.
(-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் மாநாடு – 2024.09.07 – தாஜ் சமுத்ரா ஹோட்டல்-) மக்களின் நோக்கங்களும் ஆட்சியாளரின் நோக்கங்களும் இணையாக பயணிக்கின்ற அரசாங்கமொன்றே இப்போது எங்களுக்கு தேவை. இந்த நாட்டில் கீர்த்திமிக்கவர்களாக இருந்த நீதிபதிகள், சட்டத்தரணிகள் பெருந்திரளாக இன்று இந்த இடத்தில் குழுமியிருப்பது மிக்க மகிழ்ச்சிதருகின்ற விடயமாகும். நாட்டின் ஏதேனும் அரசியல் நகர்வு இடம்பெற போகின்றபோது முதன்முதலில் அது சட்டத்தரணிகளாலேயே உணரப்படுகிறது. அதனால் தான் இவ்வளவு பெருந்தொகையானோர் இன்று இந்த இடத்தில் குழுமியிருக்கிறார்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் […]
(-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் மாநாடு – 2024.09.07 – தாஜ் சமுத்ரா ஹோட்டல்-)
மக்களின் நோக்கங்களும் ஆட்சியாளரின் நோக்கங்களும் இணையாக பயணிக்கின்ற அரசாங்கமொன்றே இப்போது எங்களுக்கு தேவை.
இந்த நாட்டில் கீர்த்திமிக்கவர்களாக இருந்த நீதிபதிகள், சட்டத்தரணிகள் பெருந்திரளாக இன்று இந்த இடத்தில் குழுமியிருப்பது மிக்க மகிழ்ச்சிதருகின்ற விடயமாகும். நாட்டின் ஏதேனும் அரசியல் நகர்வு இடம்பெற போகின்றபோது முதன்முதலில் அது சட்டத்தரணிகளாலேயே உணரப்படுகிறது. அதனால் தான் இவ்வளவு பெருந்தொகையானோர் இன்று இந்த இடத்தில் குழுமியிருக்கிறார்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் எமது நாட்டு மக்கள் அரசாங்கங்களை அமைத்தார்கள். தலைவர்களை நியமித்தார்கள். அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமது பிரஜைகள் ஒரு சாதகமான எதிர்பார்ப்பினையே கொண்டிருந்தார்கள். சிறிய ஒரு குழுவினர் தனிப்பட்ட முறையில் தமக்கு எதையாவது பெற்றுக்கொள்ள முடியுமென நினைத்திருக்கக்கூடும். எனினும் பெரும்பாலானவர்கள் வாக்குச்சாவடிக்கு செல்வது சாதகமான ஒரு நாட்டை உருவாக்கிக் கொள்ளும் எதிர்பார்ப்புடனேயேயாகும். மக்களின் அந்த எதிர்பார்ப்புக்களை அந்த ஆளும் குழுக்கள் சிதைத்துவிட்டார்கள். மக்களின் நோக்கங்களும் ஆட்சியாளரின் நோக்கங்களும் இணையாக பயணிக்கின்ற அரசாங்கமொன்றே இப்போது எங்களுக்கு தேவை. எமது நாட்டில் மக்களின் எதிர்பார்ப்பும் ஆட்சியாளரின் எதிர்பார்ப்பும் ஒன்றுக்கொன்று முரணாக அமைகின்ற அரசாங்கங்களே சதாகாலமும் உருவாகின. இந்த இடத்தில் தான் சிக்கல் நிலவுகின்றது.
“சட்டத்தின் ஆட்சியின் முன் அனைவரும் சமமானவர்களே” எனும் கோட்பாட்டினை நாங்கள் கட்டாயமாக அமுலாக்குவோம்.
உங்களுக்கு உங்களின் விடயத்துறை சார்ந்த பாரிய அனுபவம் இருக்கின்றது. எமது நாட்டில் “அனைவரும் சட்டத்தின்முன் சமமானவர்களே” எனும் கோட்பாட்டுக்கு உயிர்கொடுக்கவேண்டியது அவசியமாகும். இன்னமும் எமது சமூகத்தில் அது நடைமுறையில் சாத்தியமாகவில்லை. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் இந்த கோட்பாட்டுக்கு புத்துயிரளிக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை நாங்கள் கொடுக்கிறோம். “சட்டத்தின் ஆட்சியின் முன் அனைவரும் சமமானவர்களே” எனும் கோட்பாட்டினை நாங்கள் கட்டாயமாக அமுலாக்குவோம். சட்டத்தை அமுலாக்குகின்ற நிறுவனங்களுக்கு நாங்கள் சுயாதீனத்தன்மையை வழங்குவோம். அந்த நிறுவன முறைமையை சம்பந்தப்பட்ட நோக்கங்களுக்கு அமைவாக நெறிப்படுத்த நாங்கள் தலைமைத்துவம் வழங்குவோம். ஒருபோதும் மேற்படி நிறுவன முறைமையை நாங்கள் எங்களுடைய தனிப்பட்ட நோக்கங்களுக்காக ஈடுபடுத்தமாட்டோம். எமது நாட்டில் ஜனாதிபதிமார்கள் கூட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை பொருட்படுத்தாமல் விடுவார்களாயின் எமது நாட்டின் தலைவிதி எப்படிப்பட்டதாக அமையும்?
இப்பொழுது இலஞ்சமும் ஊழலும் ஒருவருடைய கடமையாகவும் மற்றுமொருவரின் உரிமையாகவும் மாறிவிட்டது.
சட்டத்தின் ஆட்சியை ஆட்சியாளர்களே பொருட்படுத்தாமல் விடுவது எமது நாட்டின் பொருளாதாரமும் சமூக கட்டமைப்பும் சீரழிவதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இப்போது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. நான் ஓரிரு உதாரணங்களை தருகிறேன். ஹோட்டல் ஒன்றை நிர்மானிப்பதற்காக காணியொன்றை வாங்கப்போனால் அரசாங்கத்தின் அமைச்சர் அவருடைய கையொப்பத்தினால் தான் அந்த காணி கிடைக்கின்றதெனும் கருத்தினை உருவாக்குவார். அதனால் ஒருவர் ஹோட்டல் ஒன்றை அமைப்பதானால், அதிலிருந்து இலாபமும் கிடைக்குமென்றால், அந்த இலாபம் எனது கையொப்பத்தினாலேயே கிடைப்பதனால் அந்த இலாபத்தின் ஒரு பகுதி எனக்கு சொந்தமானது என நினைக்கிறார். இப்பொழுது எமது நாட்டில் ஊழலும் மோசடியும் தொடர்ந்தும் நிலவுவது ஒரு மோசடி என்ற வகையில் அல்ல; உரிமையென்ற வகையிலாகும். என்ன ஆனாலும் அமைச்சரல்லவா எனக்கு ஒரு துண்டு காணியை கொடுத்தார் என பிரஜைகள் நினைக்கிறார்கள். அதனால் அவருக்கு ஒரு தொகை பணத்தை கொடுப்பது எனது கடமையென நினைக்கிறார்கள். இப்பொழுது ஊழலும் இலஞ்சமும் ஒருவருடைய கடமையாகவும் மற்றுமொருவரின் உரிமையாகவும் மாறிவிட்டது. இந்த அரசியல் கலாசாரத்தை நிச்சயமாக மாற்றியமைக்க வேண்டும்.
மோசடி, ஊழலை நிறுத்திவிடாமல் நாட்டை சீராக்குவது பற்றி நினைத்துப்பார்க்கக்கூட முடியாது.
மோசடியையும் ஊழலையும் நிறுத்திவிட்டால் மாத்திரம் நாட்டை சீராக்கிவிட முடியாதென ஒரு சிலர் கூறுகிறார்கள். அது எங்களுக்கும் தெரியும். ஆனால் மோசடி, ஊழலை நிறுத்திவிடாமல் நாட்டை சீராக்குவது பற்றி நினைத்துப்பார்க்கக்கூட முடியாது. தற்போது இந்த மோசடி, ஊழல்கள் காரணமாகவே எமது பெரும்பாலான துறைகள் சீர்குலைந்துள்ளன. மருந்துகளிலிருந்து திருடுவார்களாயின் சுகாதாரத்தை சீராக்க முடியுமா? மோசடி ஊழல்களை வைத்துக் கொண்டு வீதிகளை அமைக்க முடியுமா? இந்த பாராளுமன்றத்தில் அவர்கள் அமைச்சர் பதவி வகிப்பது திருடுவதற்காகவே என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஜனாதிபதி அமைச்சர் பதவியை கொடுப்பதா இல்லையா என்பதை அவருக்கு அதிகமான பணத்தொகை கிடைக்கின்றதா என்ற அடிப்படையிலேயே கருத்திற்கொள்வார். கரையோரம் பேணல் சுற்றாடல் அமைச்சிற்கே சொந்தமானது. ஒரு காலகட்டத்தில் கரையோரம் பேணல் நாட்டின் சனாதிபதியின் கையிலேயே இருந்தது. ஏனென்றால் பெறுமதிமிக்க காணிகள் கரையோரம் பேணலின் கீழேயே இருந்தன. தொலைத்தொடர்பு அமைச்சுப் பதவி இருந்தது. அதில் ரீ.ஆர்.சீ. ஐ சனாதிபதியின்கீழ் கொண்டுவந்தார். ஏன்? அங்குதான் பெருமளவிலான பணம் சுற்றோட்டத்தில் இருந்தது. நீதி அமைச்சின்கீழ் சட்டவரைஞர் திணைக்களம் இருந்தது. அதனை சனாதிபதியின்கீழ் எடுத்துக்கொண்டார். இலஞ்சம், ஊழலுக்கு வாய்ப்பு கிடைக்கத்தக்க வகையிலேயே இந்த விடயத்துறைகள் பகிர்ந்துசென்றன. இது எமது சமூகம், பொருளாதாரம் சீர்குலைய உறுதுணையாக அமைந்த பலம்பொருந்திய விடயமாகும்.
அரசியல் அதிகாரத்துவத்திற்கு எவ்வளவு பணம் கிடைக்கின்றது என்ற விடயத்தின் அடிப்படையில் தான் இந்த கருத்திட்டங்கள் தாமதமாகின்றன
எமது களணிதிஸ்ஸ மின்நிலையம் உள்ளிட்ட கெரவலபிட்டிய மின்நிலைய தொகுதியை இயற்கை வாயுவுக்கு மாறியமைக்க முடியும். இதனை தற்காலிகமாக டீசலில் இயக்கத்தொடங்கினார்கள். செலவு அதிகமாகின்றது. இதனை இயற்கை வாயுவுக்கு சீராக்கி இயங்க தொடங்கியிருந்தால் செலவு மிகவும் குறைவானதாகும். தற்போது 15 வருடங்களுக்கு கிட்டிய காலமாக அதனை செயற்படுத்தாமல் காலந்தாழ்த்தி வைத்திருக்கிறார்கள். அது ஏன்? முதல் முதலில் ரணில் – மைத்திரி முரண்பாடு அந்த இடத்திலிருந்து தான் ஆரம்பித்தது. ரணில் எல்.என்.ஜி.ற்கான கருத்திட்டத்தை ஜப்பானிலிருந்து கொண்டு வந்தார். மைத்திரி கொரியன் கம்பெனியிலிருந்து கொண்டு வந்தார். கொரியன் கம்பெனிக்கு கொடுப்பதா ஜப்பானிய கம்பெனிக்கு கொடுப்பதா என்ற பிரச்சினையிலேயே பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சண்டை ஆரம்பித்தது. ஐந்து வருடங்களாக சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். கருத்திட்டம் ஸ்தம்பித்தது. அதன் பின்னர் இலங்கை மின்சார சபையும் பெற்றோலியக்கூட்டுத்தாபனமும் இதனை அமுலாக்க முயற்சி செய்தன. குழாய் தொகுதிக்காக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டென்டரை அழைப்பித்தது. டென்டர் திறக்கும் நாள் நெருங்குகையில் அதனை நிறுத்திவிட்டு பசில் ராஜபக்ஷ நிவ்போட்ரஸ் எனும் கம்பெனியை கொண்டு வந்தார். அதன் பின்னர் பசில் ராஜபக்ஷ நிதியமைச்சிலிருந்து போனார். கருத்திட்டம் இன்னும் அதே இடத்தில் தான். இப்பொழுது நாங்கள் ஏறக்குறைய 15 வருடங்களாக ரூபா 70 ற்கு – 120 ற்கு மின்சார அலகொன்றை உற்பத்தி செய்கிறோம். ரூபா 30 ற்கு மின்சார அலகொன்றை உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கையில் பிரஜை இந்த வலுச்சக்திக்காக செலுத்துகின்ற விலை நியாயமானதொன்றல்ல. அரசியல் அதிகாரத்துவத்திற்கு எவ்வளவு பணம் கிடைக்கின்றது என்ற விடயத்தின் அடிப்படையில் தான் இந்த கருத்திட்டங்கள் தாமதமாகின்றன.
உங்களின் தேவையும் எங்களின் தேவையும் ஒன்றேயன்றி இரண்டல்ல.
இந்த ஆட்சியாளர்கள் திட்டவட்டமான அந்த தருணத்தில் செய்ய வேண்டியவற்றை கைவிட்டார்கள். இது மக்களின் பக்கத்தில் நாட்டின் உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தின் பக்கத்தில் மிகவும் பயங்கரமான நிலைமையாகும். நீங்கள் சட்டத்தரணிகள் சமுதாயம் என்ற வகையில் அடிக்கடி இந்த நாட்டின் சனநாயக்கத்திற்காக குரல் கொடுக்கின்ற குழுவினராவீர்கள். நான் உங்களுக்கு ஒரு விடயத்தை கூறி வைக்க வேண்டும். உங்களின் தேவையும் எங்களின் தேவையும் ஒன்றேயன்றி இரண்டல்ல. இந்த சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்த நாட்டை மீளக்கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றாக மல்லுக்கட்டுவோம். அதற்காக அனைவரையும் ஒன்றுசேருமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்.
(-”நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – ஜாஎல – 2024.09.04-) அவர்கள் தற்போது தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்பதே உண்மை. கடந்த காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி பற்றிய விடயங்களை நாங்களே முன்வைத்தோம். இப்போது அவர்கள்தான் எமது வெற்றியை உறுதிசெய்கிறார்கள். ஒருவாரத்திற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகிய தலதா அத்துகோரள சஜித் – ரணில் ஒன்றுசேராவிட்டால் அவர்கள் தோல்வியடைவார்கள் எனக் கூறினார். இன்று (04) அருந்திக்க பர்னாந்து ஒன்றுசேராவிட்டால் அவர்கள் தோல்வியடைந்துவிடுவதாக […]
(-”நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – ஜாஎல – 2024.09.04-)
அவர்கள் தற்போது தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்பதே உண்மை.
கடந்த காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி பற்றிய விடயங்களை நாங்களே முன்வைத்தோம். இப்போது அவர்கள்தான் எமது வெற்றியை உறுதிசெய்கிறார்கள். ஒருவாரத்திற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகிய தலதா அத்துகோரள சஜித் – ரணில் ஒன்றுசேராவிட்டால் அவர்கள் தோல்வியடைவார்கள் எனக் கூறினார். இன்று (04) அருந்திக்க பர்னாந்து ஒன்றுசேராவிட்டால் அவர்கள் தோல்வியடைந்துவிடுவதாக பாராளுமன்றத்தில் உரத்தகுரலில் கூறினார். அதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பாராளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக செயற்படப்போவதாக கூறினார். அடுத்ததாக தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுக்க முடியாதென ரணில் கூறுகிறார். அதனால் சஜித்திற்கு வாக்களிக்காமல் தனக்கு வாக்களிக்குமாறு அவர் கூறுகிறார். ‘ரணில் எப்படியும் தோல்வியடைவார். தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறுவதை தடுக்கவேண்டுமானால் சஜித்திற்கு வாக்களியுங்கள்’ என சஜித்தின் ஆட்கள் கூறுகிறார்கள். இவை அனைத்திலிருந்தும் தெளிவாகின்ற விடயம் என்ன? அவர்கள் தற்போது தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்பதே உண்மை. அதனால் எமக்கு எதிராக கதைகளை சோடிக்க, குறைகூற, பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்ற நிலையை அவர்கள் அடைந்திருக்கிறார்கள். என்னதான் செய்தாலும் தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ள இந்த வெற்றியை எவராலும் திசைத்திருப்ப முடியாது.
இந்த வெற்றியை எவராலும் திசைதிருப்ப முடியாது.
தற்போது எமது தேர்தல் இயக்கத்தை மேற்கொள்வதை பொதுமக்கள் பொறுப்பேற்று விட்டார்கள். முன்னர் அவர்கள் கூறிக்கொண்டு இருந்தார்கள் “ஐயோ தேசிய மக்கள் சக்தி 3% அல்லவா. அது எப்படி 51% ஆகும் ” என. நாங்கள் வெற்றிபெற்றால் நாடு ஆபத்தில் என்று தற்போது ரணில் கூறத்தொடங்கி இருக்கிறார். தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றால் 22 ஆந் திகதி பாரிய கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்கள் என்று குருநாகல் பக்கத்தில் உள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூறுகிறார். நாங்கள் வெற்றிபெற்றால் 6 மாதங்கள்கூட அரசாங்கத்தை கொண்டுநடாத்த முடியாதென ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றுமொரு பெண் கூறுகிறார். வெற்றிபெறுவது ஒருபுறமிருக்க நினைத்துப்பார்க்ககூட முடியாது என அவர்கள் முன்னர் கூறினார்கள். இப்பொழுது “வெற்றிபெற்றால்” எனக் கூறுகிறார்கள். “தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றால் உங்களின் பன்றிக்கொட்டில் இல்லாமல் போய்விடும்” எனக் கூறுகிறார். அதாவது கொட்டிலுக்குள் அவர்கள் வந்துவிடுவதாக நினைத்தா எனத் தெரியாது. ஜாஎலவில் உள்ள பன்றிக்கொட்டில்களை மூடி அவர்களை பன்றிக்கொட்டிலில் கட்டிவிடுவார்களா என்ற பயம்தான் காரணமோ தெரியவில்லை. எம்மால் வெற்றிபெற முடியாதென தேர்தல் இயக்கத்தின் ஆரம்பத்தில் அவர்கள் கூறினார்கள். இடைநடுவில் ‘வெற்றிபெற்றால்” எனக் கூறுகிறார்கள். “22 ஆம் திகதி ” அப்பச்சி அவர்கள்தான் வெற்றிபெறுவார்கள்” எனக் கூறுவார்கள். இந்த வெற்றியை எவராலும் திசைதிருப்ப முடியாது. அதனால் வெற்றியின் பின்னர் நாங்கள் நாங்கள் பயணிக்கின்ற பாதைபற்றி சற்று பேசுவோம்.
அரசியலமைப்பின்படி ஜனாதிபதியால் அனைத்து அமைச்சுக்களினதும் பொறுப்பினை தனக்குக்கீழ் எடுத்துக்கொள்ளமுடியும்.
நாங்கள் வெற்றிபெற்றதன் பின்னர் எங்கள் மக்கள் ஆணைக்கும் பாராளுமன்றத்தின் மக்கள் ஆணைக்கும் இடையில் துரித திரிபுநிலையொன்று தோன்றும். மொட்டுக்கு வாக்களித்து நாலக்க கொடஹேவாவிற்கு விருப்புவாக்கினைக் கொடுத்தார்கள். இப்போது அவர் சஜித்திடம். எனவே இப்போது 2020 மக்கள் ஆணை எங்கே? அது ஒழிந்துவிட்டது. அதனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடக்கத்திலேயே இந்த பாராளுமன்றத்தை கலைத்துவிடும். அவ்வாறு செய்து அடுத்த பாராளுமன்றம் உருவாகும்வரை அமைச்சரவைக்கு என்னநேரிடுமென அவர்கள் கேட்கிறார்கள். பதற்றப்பட வேண்டாம். அரசியலமைப்பிற்கு அமைவாக நாங்கள் அந்த இடைக்காலத்தில் நாட்டை ஆட்சிசெய்வோம். எப்படி? ஒன்றுதான் நாங்கள் வென்றதும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகும். வேறொருவர் அதற்காக நியமிக்கப்படமுடியும். நால்வரைக்கொண்ட அமைச்சரவையை அமைக்கலாம். அது அரசியலமைபிற்கு அமைவானதாகும். அவ்வாறில்லாவிட்டால் அரசியலமைப்பின்படி ஜனாதிபதியால் அனைத்து அமைச்சுக்களினதும் பொறுப்பினை தனக்குக்கீழ் எடுத்துக்கொள்ளமுடியும். அப்படியும் இல்லாவிட்டால் காபந்து அரசாங்கமொன்றையும் அமைத்துக்கொள்ளலாம். மூன்றுவிதமாக செயலாற்றலாம். அதனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய பாராளுமன்றம் நியமிக்கப்படும்வரை நாங்கள் அரசியலமைப்பிற்கு அமைவாக நாட்டை ஆட்சிசெய்வோம்.
இப்போது இருக்கின்றவர்களில் 2/3 பங்கினர் அடுத்த பாராளுமன்றத்தில் இல்லையென்பது எமக்குத்தெரியும்.
அடுத்ததாக பாராளுமன்றத் தேர்தல் வரும். இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்ற உறுப்பினர்களின் பெரும்பகுதியினரை வீட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டுமென்ற பாரிய உரையாடலொன்று தற்போது நாட்டில் நிலவிவருகின்றது. இப்போது இருக்கின்றவர்களில் 2/3 பங்கினர் அடுத்த பாராளுமன்றத்தில் இல்லையென்பது எமக்குத்தெரியும். அதன்படி அந்த 2/3 பங்கினரின் இறுதி பாராளுமன்ற அமர்வுதினமே இன்று. அதன்பின்னர் தேசிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வருவார்கள். அதில் 25 பேரை உச்ச அளவினராகக்கொண்ட அமைச்சரவையொன்றை நாங்கள் நியமிப்போம். இன்றைய பாராளுமன்ற அமர்வின் பின்னர் அடுத்த ஒக்டோபர் மாதம் முதலாந் திகதியே பாராளுமன்ற அமர்வு நடைபெறும். 25 பேரைக்கொண்ட அமைச்சரவைக்கு அறிவியல்ரீதியாக விடயத்துறைகள் பகிரப்படும். இதுவரை காலமும் அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அல்ல. தமக்கிடையே பகிர்ந்து கொண்டார்கள். நாங்கள் அந்தந்த விடயத்துறைகளுக்கு பொருந்தக்கூடிய ஒருங்கிணைப்புகளைச்செய்து அமைச்சுக்களை பிரித்தொதுக்குவோம்.
நாங்கள் அமைச்சர்களுக்கு கார் பேர்மிட் வழங்குவதை நிறுத்துவோம்
நாங்கள் அமைச்சர்களுக்கு கார் பேர்மிட் வழங்குவதை நிறுத்துவோம். “மரிக் கார் பேர்மிட்” ஐயும் நிறுத்துவோம். இந்த தடவை சரியாக புள்ளடி இடுக. அப்போதுதான் வீட்டுக்கு அனுப்பவேண்டியவர்களை வீட்டுக்கு அனுப்ப முடியும். இந்த 21 ஆந் திகதி இடுகின்ற புள்ளடிமூலமாக வீட்டுக்குப்போவது ரணில் மாத்திரமல்ல: இது மிகவும் பலம்பொருந்திய புள்ளடியாகும். நாங்கள் நீண்டகாலமாக இந்த அரசியலில் ஈடுபட்டிருக்கிறோம். சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறோம். குறைகூறல்களுக்கு இலக்காகி இருக்கிறோம். 06 மாதங்களில் வீட்டுக்குச்செல்வதற்கான ஒரு அரசாங்கத்தை நாங்கள் அமைப்போமா? இல்லை. நாங்கள் இந்த நாட்டின் மிகஉறுதியான அரசாங்கத்தை அமைப்போம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். எமது வெற்றி உறுதியானது. அந்த உறுதிநிலையை ஏற்கெனவே இந்த நாட்டுமக்கள் எற்கெனவே உறுதிசெய்துவிட்டார்கள்.
(-தேசிய மக்கள் சக்தியின் தேசிய தொழில்முனைவோர் மாநாடு – 2024.09.03 – மொனாக் இம்பீரியல் – ஸ்ரீ ஜயவர்தனபுர-) அரசியல் களம் கணிசமான அளவில் சூடுபிடித்துள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலின்போதும் இலங்கையில் தீர்மானகரமானதாக அமைந்தது பொருளாதாரக் காரணியல்ல. ஒரு காலத்தில் யுத்தம், தேசத்தைக் காப்பாற்றிக்கொள்ளல், நாடு ஆபத்தில் போன்ற கோஷங்கள் மேடையில் அடிப்படைக் விடயங்களாக கொள்ளப்பட்டன. அண்மைக்கால வரலாற்றில் முதல்த்தடவையாக பொருளாதாரத்தை முதன்மையாகக்கொண்ட உரையாடலொன்று அரசியல் களத்தில் தோன்றிவந்து கொண்டிருக்கிறது. 2021 – 2022 […]
(-தேசிய மக்கள் சக்தியின் தேசிய தொழில்முனைவோர் மாநாடு – 2024.09.03 – மொனாக் இம்பீரியல் – ஸ்ரீ ஜயவர்தனபுர-)
அரசியல் களம் கணிசமான அளவில் சூடுபிடித்துள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலின்போதும் இலங்கையில் தீர்மானகரமானதாக அமைந்தது பொருளாதாரக் காரணியல்ல. ஒரு காலத்தில் யுத்தம், தேசத்தைக் காப்பாற்றிக்கொள்ளல், நாடு ஆபத்தில் போன்ற கோஷங்கள் மேடையில் அடிப்படைக் விடயங்களாக கொள்ளப்பட்டன. அண்மைக்கால வரலாற்றில் முதல்த்தடவையாக பொருளாதாரத்தை முதன்மையாகக்கொண்ட உரையாடலொன்று அரசியல் களத்தில் தோன்றிவந்து கொண்டிருக்கிறது. 2021 – 2022 காலப்பகுதியில் பொருளாதாரம் பாரியளவில் சீர்குலைந்திராவிட்டால் இந்த தேர்தலிலும் வேறு வேறு விடயங்கள் முதன்மையாகக் கொள்ளப்பட்டிருக்கும். ஒருசில காரணிகள் அவர்களாலேயே உருவாக்கிக் கொள்ளப்பட்டவையாகும். எனினும் பொருளாதார சீர்குலைவிற்குப் பின்னர் பிரஜைகளுக்கும் அரசியல் இயக்கங்களுக்கும் பொருளாதாரம் பற்றிய ஏதேனும் முறைசார்ந்த உரையாடலில் பிரவேசிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இத்தகைய பின்னணியிலேயே இத்தடவை தேர்தல் மேடையில் இந்த தலைப்பு முன்நோக்கி வந்துள்ளது. தேசிய மக்கள் சக்தி என்றவகையில் எமது பொருளாதாரப் பாதையை அடிப்படையில் பொழிப்பாக்கி உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டுமென நாங்கள் சிந்தித்தோம். எங்கள் அடிப்படை சாரத்தை அதற்கிணங்கவே இன்று முன்வைக்கிறோம்.
பொருளாதார சீர்குலைவின்போது மக்கள் காட்டுகின்ற பிரதிபலிப்பினை நாங்கள் 2022 இல் கண்டோம்.
அரசியல் மேடையில் மீண்டுமொருதடவை “பயம்” எனும் காரணியை முதன்மைப்படுத்த மாபெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு முன்னர் இந்த காரணி வேறுவிதமாக முன்னெடுத்து வரப்பட்டிருந்தது. “இந்த வேட்பாளரை தெரிவுசெய்து கொள்ளாவிட்டால் தேசம் ஆபத்தில் விழும், இந்த வேட்பாளருக்கு வாக்களிக்காவிட்டால் நாடு ஆபத்தில் வீழந்துவிடும்” என்றவகையில் பலவிதங்களில் பயம் சமூகமயப்படுத்தப்பட்டது. அதுவே தற்போது வித்தியாசமான தோற்றத்தில் “இந்த வேட்பாளரை தெரிவுசெய்து கொள்ளாவிட்டால், கேஸ் சிலிண்டர் வெடிக்கும்” என்ற பயம் உருவாக்கப்பட்டு வருகின்றது. மறுபுறத்தில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றால் பொருளாதாரம் பாரியளவி்ல் சீர்குலைந்து விடுமென்ற பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த சீர்குலைவு பற்றிய உண்மைக்கதை என்ன? நாங்கள் ஓர் அரசியல் இயக்கமென்றவகையில் நீண்டகாலமாக அரசியலில் ஈடுபட்டு வந்தாலும் முதல்த்தடவையாகவே அரச அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள நெருங்குகின்ற வாய்ப்பிற்கு வந்திருக்கிறோம். அது நீண்டகாலமாக மேற்கொண்ட பாரிய அரசியல் நடவடிக்கையின் விளைவு என்றவகையிலாகும். பொருளாதார சீர்குலைவின்போது மக்கள் காட்டுகின்ற பிரதிபலிப்பினை நாங்கள் 2022 இல் கண்டோம். அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதிக்கு இரண்டே ஆண்டுகளில் தப்பியோட நேரிட்டது. நீண்டகாலமாக அரசியல் நோக்கத்துடன் செயலாற்றிய நாங்கள் ஆறுமாதங்களில் தப்பியோடவேண்டிய சூழ்நிலையை உருவாக்குவோமா? பொருளாதார சீர்குலைவிற்கு ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர், நிதி அமைச்சு செயலாளர் போன்றே அத்தருணத்தில் இருந்த மத்தியவங்கி ஆளுனரும் தவறாளிகளென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜனாதிபதிக்குக்கூட எதிராக அத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கையில் நாங்களும் உயர்நீதிமன்றத்தில் தவறாளிகளாக்கப்படுகின்ற நடைமுறைகளை கடைப்பிடிப்போமா? இல்லை. ஒருபோதுமே இல்லை. அதனால் நாங்கள் உங்களுக்கு முதலில் கொடுக்கின்ற உத்தரவாதம்தான் தற்போது நிலவுகின்ற பொருளாதாரத்தை எவ்விதத்திலும் சீர்குலைய ஒருபோதுமே இடமளிக்கமாட்டோம் என்பதாகும். அதைப்போலவே பொருளாதாரத்தை மென்மேலும் பலப்படுத்தி முன்னெடுத்து வருவது எமக்கும் மக்களுக்கும் இடையிலான உடன்பாடாக அமையும்.
நாங்கள் எவ்விதத்திலும் ஒருதலைப்பட்சமாக சர்வதேச நாணய நிதியத்திலிருந்து நீங்கமாட்டோம் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்குகிறோம்
ஜனரஞ்சகமான போராட்டக் கோஷங்களால் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நோக்கம் எமக்குக் கிடையாது. எப்படிப்பட்ட பொருளாதாரம் எமக்கு கிடைக்கப்போகிறதென்பதை நாங்கள் நன்றாக விளங்கிக் கொண்டிருக்கிறோம். தபால்மூல வாக்களிப்பினை நெருங்கிக்கொண்டிருக்கையில் அரச ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்கின்றது. ஒருவர் 24% அதிகரிப்பதாகக் கூறியதும் அடுத்தவர் அதை முதலில் கூறியது நான்தான் எனக் கூறுகிறார். ஒருவர் சம்பள அதிகரிப்பு 25,000 ரூபா எனக் கூறியதும் அடுத்தவர் குறைந்தபட்ச சம்பளத்தை 57,000 ரூபாவாக மாற்றுவதாக கூறுகிறார். நாங்கள் அந்த இலாபகரமான போட்டியில் இல்லை. பொருளாதாரம் சீர்குலைந்து கொண்டிருக்கின்ற பாரதூரத்தன்மையை நாங்கள் ஆழமாக விளங்கிகொண்டுள்ளோம். துரித திருப்புமுனைகளை, துரித மாற்றங்களை இந்த பொருளாதாரத்தில் ஏற்படுத்துவதற்கான இயலுமை எவ்விதத்திலும் கிடையாது. மிகவும் மெல்லிய நூலினால் முடிச்சுப்போடப்பட்டுள்ள இந்த பொருளாதாரத்தில் ஏற்படுத்துகின்ற சிறிய மாற்றம்கூட மரணம்விளைவிக்க கூடியதாக அமையலாம். அதனால் தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் பொருளாதாரத்தில் எற்படுத்துகின்ற நுணுக்கமான மாற்றங்கள்கூட மிகவும் சிறப்பாக எவ்வாறான பாதகவிளைவுகளை எற்படுத்தும் என்பது பற்றி சிந்தித்து செயலாற்றவேண்டும். நாங்கள் இந்த நாட்டின் மக்களுக்கு பொறுப்புக்கூறுகின்ற பொறுப்பு வகிக்கின்ற ஓர் இயக்கமாவோம். எங்களுடைய ஒட்டுமொத்த சர்வதேச பொருளாதார தொடர்புகளும் சர்வதேச நாணய நிதியம் என்கின்ற கூடைக்குள்ளேயே இருக்கின்றது. இருதரப்பு கடன் கொடுக்கல் வாங்கல்கள், பல்தரப்புக் கடன் கொடுக்கல் வாங்கல்கள், இறையாண்மை முறிகளை உள்ளிட்ட அனைத்தும் நாணய நிதியத்துடன் முடிச்சுப் போடப்பட்டுள்ளது. அதனால் எவரேனும் ஒருதலைப்பட்சமாக அந்த நிகழ்ச்சித்திட்டத்திலிருந்து நீங்குதல் பற்றி சிந்திப்பாரெனில் அவர் நாடு அல்லது நட்டுமக்கள் பற்றிய பொறுப்புக்கூறலை கைவிடுபவராக அமைவார். நாங்கள் எவ்விதத்திலும் ஒருதலைப்பட்சமாக சர்வதேச நாணய நிதியத்திலிருந்து நீங்கமாட்டோம் என்பதற்கான உத்தரவாததை வழங்குகிறோம். நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ள நாட்டுக்குப் பாதகமற்ற அளவுருக்களைப் பேணிவந்து மிகவும் பொருத்தமான பாதை பற்றி நாங்கள் பரிசீலனை செய்வோம். அது எவ்விதத்திலும் நாட்டை சீர்குலைக்கின்ற திசையை நோக்கியதல்ல. எனவே வீண் பயத்தை சமூகமயப்படுத்த வேண்டாமென நாங்கள் சனாதிபதிக்கு வலியுறுத்துகிறோம். பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்தமைக்கான பிரதான காரணகர்த்தா அவரே. நாட்டின் நிதி அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி என்றவகையில் பொருளாதாரம் சீர்குலைதல் பற்றிய வீண் பயத்தை அடிக்கடி வேண்டுமென்றே உருவாக்கி வருகிறார். அதனால் பொருளாதார நெருக்கடியொன்றை உருவாக்குகின்ற திட்டமிட்ட குறிக்கோளுடன் அவர் செயலாற்றுகிறாரோ எனும் பாரதூரமான சந்தேகம் எழுகின்றது. பொருளாதாரம் சீர்குலைய இடமளியோமென நாங்கள் கூறுகின்றவேளையில் அவர் வந்து நாங்கள் பொருளாதாரத்தை வீழ்த்துவதாக கூறுகிறார். தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் சனாதிபதியின் எதிர்பார்ப்பிற்கு ஒருபோதுமே இரையாக மாட்டோம்.
அரசியல் தேவைகளுக்காக மத்தியவங்கி நெறிப்படுத்தப்பட்டமையால் அதன் சுயாதீனத்தன்மை சீர்குலைந்தது
மத்திய வங்கியின் செயற்பொறுப்பு பற்றிய விவாதமொன்று நிலவுகின்றது. எமது நாட்டின் நிதிச் சந்தையில், பணவீக்கத்தின், வட்டி வீதத்தின் மற்றும் செலாவணி விகிதத்தின் நிலைப்பாடுகள் மற்றும் எதிர்வுகூறல்கள் பற்றி தெளிவான கருத்தொன்று நிலவவேண்டும். கடந்த காலத்தில் ஒரே இரவில் செலாவணி விகிதத்தை பாரியளவில் மாற்றியதால் பொருளாதாரத்தில் ஒரு திரிபுநிலையை உருவாக்கினார்கள். அதனால் எம்மால் எதிர்வுகூற இயலுமானவகையில் செலாவணி விகிதத்தை பேணிவருதல், வட்டி வீதத்தை பேணிவருதல் மற்றும் பணவீக்க வீதத்தைப் பேணிவருதல் பொருளாதார உறுதிநிலைக்கு மிகவும் இன்றமையாததாகும். இந்த அலுவல்களுக்கு மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை மிகவும் முக்கியத்துவம் வகிக்கின்றது. அரசியல் தேவைகளுக்காக மத்தியவங்கி நெறிப்படுத்தப்பட்டமையால் அதன் சுயாதீனத்தன்மை சீர்குலைந்தது. அதைப்போலவே பொருளாதாரத்தை நெறிப்படுத்துவதற்காக மக்களால் வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணையை எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக மத்திய வங்கியின் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதை தவிர்ந்தாக எமது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக நாங்கள் ஒருபோதுமே மத்திய வங்கியை பயன்படுத்தப் போவதில்லை. அதைப்போலவே அரசாங்க பொறுப்புமுயற்சிகளை நெறிப்படுத்தல் பற்றிய பாரிய உரையாடலொன்று தோன்றியுள்ளது. பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் கூருணர்வுமிக்தாக அமைகின்ற வலுச்சக்தி, நிதிச்சந்தை மற்றும் தேசிய பாதுகாப்புடன் நேரடியாகவே தொடர்புபடுகின்ற ஒருசில துறைகளில் அரசாங்கத்தின் பிரதான பங்கு நிலவவேண்டும். அதைவிடுத்து இலாபம் பெறுவதை நோக்கமாகக்கொண்ட தொழில்முயற்சிகள் அரசாங்கத்தினால் நெறிப்படுத்தப்படமாட்டாது. தொடர்ந்தும் பேணிவரப்படவேண்டிய மற்றும் கைவிடப்படவேண்டிய துறைகளை நாங்கள் இனங்கண்டுள்ளோம். அதைப்போலவே பிரஜைகளுக்கு அத்தியாவசியமான சேவைகளையும் பண்டங்களையும் இடையறாமல் நியாயமான விலையில் அத்துடன் உரிய தரத்தில் வழங்குவதற்காக பலம்பொருந்திய ஒழுங்குறுத்தல் அதிகாரசபையொன்று அவசியமென நாங்கள் கருதுகிறோம். அத்தகைய நிறுவனக் கட்டமைப்பினைப் பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
நாங்கள் மக்களின் வாழ்க்கை அனுபவங்கள் வாயிலாக கற்றுக்கொண்ட மனிதர்கள்.
செல்வம் படைத்தவர்களிடமிருந்து செல்வத்தையும், தொழில்முயற்சிகள் உள்ளவர்களிடமிருந்து தொழில்முயற்சிகளையும், வீடுகள் உள்ளவர்களிடமிருந்து வீடுகள் என்றவகையிலுமாக ஆதனங்களை எமது ஆட்சியின்கீழ் சுவீகரித்துக்கொள்வதாக மற்றுமொரு பிரச்சாரத்தை அனுப்பிவைக்கிறார்கள். நாங்கள் சரதியலிடமிருந்து கற்றுக்கொண்டவர்கள் அல்ல. நாங்கள் மக்களின் வாழ்க்கை அனுபவங்கள் வாயிலாக கற்றுக்கொண்ட மனிதர்கள். அவர்கள் முன்னெடுத்துவருகின்ற குறைகூறல்கள் 21 ஆம் நூற்றாண்டுக்கு ஒத்துவரமாட்டாதென்பதையே நாங்கள் கூறவேண்டி உள்ளது. அதைப்போலவே அரச மற்றும் தனியார் பிரிவுகளுக்கிடையில் நிலவுகின்ற தொடர்பினை “சீசருக்கு சொந்தமானதை சீசருக்கும் ஆண்டவனுக்கு சொந்தமானதை ஆண்டவனுக்கும்” என்றவகையில் நாங்கள் நன்றாக விளங்கிகொண்டுள்ளோம். நாங்கள் இந்த இரண்டையும் குழப்பியடித்துக் கொள்ளப்போவதில்லை. அரசியல்வாதிகள் என்றவகையில் எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ள பங்கினையும் தொழில்முனைவோர் என்றவகையில் உங்களிடம் கையளிக்கப்படுள்ள பங்கினையும் நாங்கள் தெளிவாக பகிர்ந்துகொண்டிருக்கிறோம். எமது பொருளாதாரத்தின் ‘எஞ்சின்’ ஆக அமைவது பிரத்தியேக தொழில்முனைவோரும் கைத்தொழிலதிபர்களுமே. எமது அரச கட்டமைப்பின் தன்மை, சட்டங்களின் தன்மை, அரசிய அதிகாரத்துவத்தின் தன்மை போன்ற விடயங்கள் காரணமாக எமது பொருளாதாரம் சிறைவைக்கப்பட்டுள்ளது. இது சுதந்திரமானது எனக்கூறினாலும் எந்தவிதமான சுதந்திரமும் கிடையாது. அவசியப்பாட்டுக்கிணங்க அசைகின்ற பொருளாதாரமொன்று இருந்திருப்பின் 1950 இல் எமது ஏற்றுமதி வருமானம் 316 மில்லியன் டொலரக விளங்கியதோடு கொரியாவில் இது 25 மில்லியன் டொலராகும். அன்று கொரியாவைவிட 12 மடங்கு அதிகமான ஏற்றுமதி வருமானத்தை நாங்கள் பெற்றுக்கொண்டோம். எனினும் இன்று எமது நாட்டின் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலராக அமைகையில் தென் கொரியாவில் அது 685 பில்லியன் டொலராகும். எம்மைவிட 50 மடங்கிற்கு மேலான ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்கின்றது. அதைப்போலவே நாங்கள் ஏன் 3,800 டொலர் என்கின்ற தலா வருமானத்தில் இறுகிப்போனோம்? அது பல தசாப்தங்களாக இறுகிப்போனதன் பெறுபேறாகும். ஊழலும் இலஞ்சமும், தேசிய திட்டத்துடன் நேரொத்ததாக பொருளாதாரத்தை நெறிப்படுத்தாமை போன்ற விடயங்களால் இறுகிப்போயுள்ளோம். வரவு செலவு ஆவணமொன்று வருகையில் முதலீட்டாளர்கள் ஐயப்பாட்டு நிலையிலேயே இருக்கிறார்கள். தொழில்முனைவோர் தமது பொருளாதாரத் தீர்மானங்களை பொருளாதாரரீதியான எதிர்வுகூறல்களுக்கு அமைவாகவே எடுக்கவேண்டியிருப்பினும் எமது தொழில்முனைவோர் ஞானக்கா போன்ற சோதிடம் கூறுபவர்களின் ஆலோசனைகளின்படியே எடுக்கவேண்டியுள்ளது. தற்போது நாட்டின் தொழில்முனைவோர் என்ன நேரிடுமென்ற அச்சத்துடனேயே இருக்கிறார்கள்.
நீங்கள் முதலீடு செய்யுங்கள், நாங்கள் அதன் பாதுகாப்பினை உறுதிசெய்வோம்.
எனினும் தரவுகளை சேகரித்தல், தரவுகளை பகுப்பாய்தல் போன்ற விடயங்களை அடிப்படையாகக்கொண்டே உலகம் முன்நோக்கி நகர்கின்றது. தேசிய நோக்கங்களின் அடிப்படையில் நீங்கள் ஈடுபடவேண்டிய துறைகள் யாவை? அந்த துறைகளுக்கு அரசாங்கம் வழங்குகின்ற உட்கட்டமைப்பு வசதிகள் என்ன? அரச சேவையால் ஈடேற்றிக் கொடுக்கப்படவேண்டிய பணிகள் யாவை? என்பதை நாங்கள் சரிவர விளங்கிக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக அரச சேவையை அரசியல் நோக்கங்களுக்காக ஈடுபடுத்த மாட்டோம். கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளுகக்கான அத்தியாவசியமான வெற்றிடங்களைத் தவிர்ந்த அரச சேவையை நிரப்பமாட்டோம். அரசாங்கத்திடமிருந்து பெறப்படவேண்டிய சேவைகள் பரந்துவிரிந்து காணப்படுவதற்குப் பதிலாக ஒருங்கிணைத்து வினைத்திறன்கொண்டதாக வழங்க அவசியமான பொறியமைப்பினை தயாரிப்போம். ஒருசில காலங்கடந்த சட்டங்களை மாற்றியமைத்து பொருளாதாரத்தை வேகமாக முன்னெடுத்துச் செல்கின்ற பின்னணியை அமைத்துக்கொடுப்போம். பொருளாதாரத்தில் கணிசமான வளர்ச்சியை கையகப்படுத்திக் கொள்ளாவிட்டால் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்வது தொடர்பில் எத்தகைய உண்மையான தேவை நிலவினாலும் எம்மால் அதனை சாதித்துவிட முடியாது. அதன் முன்னோடிச் செயற்பொறுப்பு உங்கள் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீங்கள் முதலீடு செய்யுங்கள், நாங்கள் அதன் பாதுகாப்பினை உறுதிசெய்வோம். கடந்த காலத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பல கைத்தொழில்கள் சீர்குலைந்தன. அதற்கான காரணம் நீங்கள் மேற்கொண்ட தீர்மானங்களிலான தவறு அல்ல: பொருளாதாரத்தின் பாரிய வீழ்ச்சியே காரணமாகும். புதிய தொழில்முயற்சிகளை உருவாக்குவது சற்று கடினமான பணியாகும். அனுபவங்கள் வாய்ந்த, அதனூடாக அறிவினைப்பெற்ற, முகாமைத்துவ ஆற்றல்கள் படைத்தவர்களின் தொழில்முயற்சிகளை மீள்நிறுவுதல் மிகவும் முக்கியமானது. அதனால் நீங்கள் இறுகிப்போயுள்ள பராட்டே சட்டம் போன்ற சட்டங்களால் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைத்துக்கொள்வதற்கான அனைத்துவிதமான பின்னணியையும் அமைத்துக்கொடுப்போம். நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் புதிய தொழில்நுட்பமும் அறிவும் மேற்கிலேயே உருவாகின்றது. அந்த அறிவினை விரைவில் உறிஞ்சிக்கொள்ளத் தவறினால் எமது கைத்தொழிலதிபர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அவசியமான விருத்தியடைந்த மனிதவளத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விடும். பொருளாதார இலக்குகளுக்காக அவசியமாகின்ற மனித வளத்தை எமது கல்விமூலமாக கட்டியழுப்ப நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்காக உலகின் முன்னேற்றமடைந்த பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி கூர்மையாக்கிக்கொண்ட அறிவினை இலங்கைக்கு கொண்டுவருவோம். அதைப்போலவே உலகின் உழைப்புச் சந்தையில் முன்னேற்றமடைந்த பங்கினை கையகப்படுத்திக்கொள்ளவும் பொருத்தமான வகையில் கல்வியில் வேகமான மறுசீரமைப்பினை ஏற்படுத்துவோம்.
மிக அதிகமான தொழில்நுட்ப சொத்துவத்தைக் கொண்டுள்ள நாடே எதிர்கால உலகில் பலம்பொருந்தியதாக அமையும்.
மிக அதிகமான தொழில்நுட்ப சொத்துவத்தைக் கொண்டுள்ள நாடே எதிர்கால உலகில் பலம்பொருந்தியதாக அமையும். உலகில் உருவாகிய பாரிய தொழில்நுட்ப மாற்றங்களை எமது எமது கல்வியில் சேர்த்து முன்நோக்கிப் பயணிப்பதற்காக நாங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பற்றிய கொள்கை வெளியீட்டினை தனிவேறாக தயாரித்துள்ளோம். ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, புதிய கண்டுபிடிப்புகளையும் புத்தாக்குனர்களையும் உருவாக்கிக்கொள்வதோடு எமக்கே தனித்துவமான துறைகளை இனங்காணலும் மேற்கொள்ளப்படும். அதைப்போலவே எமக்கு இருக்கின்ற சிறிய சந்தைக்குப் பதிலாக அரச நோக்கு மற்றும் அனுசரணையின்பேரில் வெளிநாட்டுச் சந்தைகளை கைப்பற்றிக்கொள்கின்ற வரத்தக தூதுவர் செவையை உருவாக்குவோம். எமது தொழில்முனைவோரும் நாட்டில் நிலவுகின்ற 22 மில்லியன் சந்தையிலிருந்து வெளியே செல்லாவிட்டால் எமது பண்டங்களின் தரத்தை பாதுகாத்து கிரயத்தைக் குறைத்துக் கொள்வதற்கான இயலுமை கிடைக்கமாட்டாது. உற்பத்திக் கிரயத்தைக் குறைத்துக்கொள்வதற்காக இரண்டு வருடங்களுக்குள் மின்சார பில்லை மூன்றில் ஒன்றால் குறைத்துக்கொள்கின்ற நோக்கமொன்று இருக்கின்றது. அதைப்போலவே 2030 இல் உயிர்ச்சுவட்டு எரிபொருளுக்கான கேள்வி ஆகக்குறைந்த மட்டத்திற்கு வந்து 2050 இல் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி முதன்மைத்தானத்தை அடையும். எமக்கு அவசியமான பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்ள வெளிநாட்டு முதலீடுகள் அத்தியாவசியமாகும். 1978 இல் இருந்து 2022 வரை 22 பில்லியன் டொலர் முதலீடே நாட்டுக்குள் வந்திருக்கிறது. வியட்நாமில் கடந்த வருடத்தில் மாத்திரம் 23 பில்லியன் டொலர் முதலீடு கிடைத்திருக்கிறது. ‘சர்வதெச தொடர்புகள் உள்ளவர்கள்’, ‘வெளிநாட்டு நண்பர்கள் உள்ளவர்கள்’ 42 வருடங்களாக 22 பில்லியன் டொலர்ளை மாத்திரமே முதலீடாக கொண்டுவந்திருக்கிறார்கள். மூலதன அவசியப்பாடு, தொழில்நுட்ப அவசியப்பாடு மற்றும் உலக வர்த்தக சங்கிலித்தொடரில் பிரவேசிக்கின்ற நோக்கத்துடன் வெளிநாட்டு முதலீடுகளுக்கு வாய்ப்புகளை எற்படுத்திக் கொடுப்போம். அதைப்போலவே அவர்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளுக்கு ஒத்த சலுகைகளை உள்நாட்டு முதலீட்டாளர்களாகிய உங்களுக்கும் வழங்குவோம்.
உங்களிடமிருந்து எங்களுக்கு ஒரு கிளாஸ் பச்சைத்தண்ணீர்கூட வேண்டாம். அரசியல்வாதிகள் என்றவகையில் எங்களுக்கு நிலவுகின்ற தேவையைப்போன்றே தொழில்முனைவோரான உங்களுக்கும் தேவை நிலவுகின்றது. இந்நாட்டு வரலாற்றில் முதல்த்தடவைாக அரசியல்வாதியினதும் தொழில்முனைவோரதும் நோக்கங்கள் இணையாக பயணிக்கின்ற அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் நீங்களும் நாமனைவரும் இந்நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றாக உழைக்கின்ற ஒரே சக்தியாக மாறுவோம்.
(-யாழ்ப்பாணம், செப். 5-) இன்று (05 பிற்பகல் இடம்பெற்ற வெற்றிக்கான மக்கள் கூட்டத் தொடரின் யாழ்ப்பாணம் மாபெரும் கூட்டத்தில் கலந்துகொண்ட போது. நாட்டில் இன்று பெருமளவான போதைப்பொருள் கடத்தல்களின் பின்னணியில் அரசியல்வாதிகளே இருக்கின்றனர். ஆட்சிக்கு வந்ததும், போதைப்பொருள் சாம்ராட்யம் அடியோடு துடைத்தெறியப்படும் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: போதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்படும் பணம்தான் இன்று பல அரசியல்வாதிகளின் பரப்புரைகளுக்குப் பயன்படுகின்றது. போதைப்பொருளின் பின்னணியில் அரசியல்வாதிகளே உள்ளனர். போதைப்பொருள்கள் இலங்கைக்குரியனவையா? இல்லை. அவை கொண்டுவரப்படுகின்றன. […]
(-யாழ்ப்பாணம், செப். 5-)
இன்று (05 பிற்பகல் இடம்பெற்ற வெற்றிக்கான மக்கள் கூட்டத் தொடரின் யாழ்ப்பாணம் மாபெரும் கூட்டத்தில் கலந்துகொண்ட போது.
நாட்டில் இன்று பெருமளவான போதைப்பொருள் கடத்தல்களின் பின்னணியில் அரசியல்வாதிகளே இருக்கின்றனர். ஆட்சிக்கு வந்ததும், போதைப்பொருள் சாம்ராட்யம் அடியோடு துடைத்தெறியப்படும் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
போதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்படும் பணம்தான் இன்று பல அரசியல்வாதிகளின் பரப்புரைகளுக்குப் பயன்படுகின்றது. போதைப்பொருளின் பின்னணியில் அரசியல்வாதிகளே உள்ளனர். போதைப்பொருள்கள் இலங்கைக்குரியனவையா? இல்லை. அவை கொண்டுவரப்படுகின்றன. அதை அனுமதிக்கின்றனர். எனவே ஆட்சிக்கு வந்ததும், போதைப்பொருள் குழுக்கள் அடியோடு துடைத்தெறியப்படும். இந்த உத்தரவாதத்தை நான் மக்களுக்கு உறுதியுடன் தருகின்றேன் – என்றார்.
ஊடகப் படுகொலைகளுக்கு முழுமையான விசாரணைகள்
உதயன் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை என்பன தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உதயன் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, உதயன் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் மீதான அடக்குமுறைகள் தாக்குதல்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் படுகொலைகள் தொடர்பில் அநுரவிடம் சுடடிக்காட்டப்பட்டது. இதையடுத்தே ஊடகப் படுகொலைகள் மற்றும் அடக்குமுறைகள் தொடர்பில் மிக ஆழமான விசாரணைகள் நடத்தப்படும் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து நீதி நிலைநாட்டப்படும் என்பதில் நான் மிக ஆழமான உறுதியுடன் உள்ளேன். இந்தக் குற்றங்கள் நிகழ்ந்து எத்தனை வருடங்கள் கடந்திருந்தாலும் நிச்சயமாக நீதியென்பது நிலைநாட்டப்பட்டே தீPரும். அனைத்து வழக்குகள் தொடர்பிலும் நான் தீர்க்கமாக விசாரிப்பேன் – என்றார்.
இதன்போது உதயன் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் குறித்த அறிக்கையொன்று உதயனின் நிர்வாக இயக்குநர் சரவணபவனால் அநுரகுமாரவிடம் கையளிக்கப்பட்டது.
விக்னேஸ்வரன் சொல்வதை தமிழர்களே கேட்பதில்லை கண்டுகொள்வேனா நான் அநுரவின் நகைச்சுவை
நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சொல்வதை தமிழர்களே கேட்பதில்லை. நான் அவரையெல்லாம் கண்டுகொள்வேனா? என்று அநுரகுமார தெரிவித்துள்ளார்.
அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், ‘அநுரகுமார ஜனாதிபதியாகத் தெரிவானால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டங்களோ அல்லது சர்வதேச ஒத்துழைப்பையோ அவரால் பெறமுடியாது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டுமானால் அவர்கள் சீனாவின் உதவியை நாட வேண்டிய தேவை ஏற்பாடும். ஏற்கனவே நாடு சீனாவின் கடன்பொறிக்குகள் சிக்கியுள்ள நிலையில் நாட்டு மக்கள் அதனை விரும்ப மாட்டார்கள்’ என்று விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடியாகவே, விக்னேஸ்வரன் கூறுவதை தமிழர்களே பொருட்படுத்துவதில்லை. நான் ஏன் பொருட்படுத்த வேண்டும் என்று அநுர தெரிவித்துள்ளார்.
இன்றைய உலகில் எந்தவொரு நாட்டையும் சார்ந்திருக்காமல் ஒன்றும் செய்ய முடியாது. அரசாங்கங்கள் இன்னொரு அரசாங்கங்களுக்குத்தான் ஆதரவை வழங்குகின்றன. தனி நபருக்கு அல்ல. ஆதலால், இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டிய விடயங்களில் நான் இந்தியாவுடன் நெருக்கமாகவே பணியாற்றுவேன். சீனாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டிய விடயங்களில் நான் சீனாவுடன் நெருக்கமாகவே பணியாற்றுவேன் – என்றார்.
போர்க் குற்றவாளிகளை நீதிமன்றுகள் தண்டிக்கும்!
போரின்போது என்ன நடந்தது என்பதை கண்டறிந்து வெளிப்படுத்துவதில் நான் அப்போதும், இப்போதும்உறுதியாகவுள்ளேன். ஆனால் போர்க்குற்றவாளிகளுக்கான தண்டனைகள் நீதிமன்றங்களுடன் தொடர்புடைய விடயம் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுரகுமார அண்மையில் வழங்கிய செவ்வியொன்றில், போரின்போது என்ன நடந்தது என்பதைக் கண்டறிய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது. அவர்கள் எவரையும் தண்டிக்கவேண்டும் என்று கோரவில்லை. எனவே, போரில் என்ன நடந்தது என்று வெளிப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். அவரின் இந்த செவ்வியை மேற்கொள்காட்டி, ‘இறுதிப்போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கும் நிலைப்பாட்டில் நீங்கள் இல்லையா?’ என்று ஊடகவியலாளர்கள் வினவினார்கள். இதற்குப் பதிலளிக்கும்போதே, ‘இறுதிப்போரின்போது என்ன நடந்தது என்பதை கண்டறிவதும் வெளிப்படுத்துவதும்தான் என் வேலை. தண்டனை வழங்குவது நீதிமன்ற சுயாதீனத்துடன் தொடர்புடைய விடயம். நான் போர்க்குற்றவாளிகளைக் கண்டறிவேன்.நீதிமன்றங்கள் அவஎகளைத் தண்டிக்கும்’ என்று அநுர தெரிவித்துள்ளார்.
(-தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – எல்பிட்டிய – 2024.09.03-) எமக்கு எதிரானவர்கள் இதுவரை கூறிக்கொண்டிருந்த எம்மால் வெற்றிபெற முடியாது என்கின்ற கதை இப்போது மாறிவிட்டது. இப்போது ரணில் கூறுகிறார் நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால் கேஸ் இல்லாமல் போய்விடுமாம்; எல்லாமே முடிந்துவிடுமாம். அவர்கள் சமூகத்தில் ஒரு அச்சத்தை உருவாக்குகிறார்கள். தோல்வியடைகின்ற தலைவர்கள் சதாகாலமும் சமூகத்தில் ஒரு பீதியை ஏற்படுத்துவார்கள். அவர்கள் வெற்றிபெறாவிட்டால் தேசம் ஆபத்திலாம்; பொருளாதாரம் ஆபத்திலாம். ஆனால் வெற்றிபெற்ற அவர்கள்தான் இந்த நாட்டையும் மக்களையும் […]
(-தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – எல்பிட்டிய – 2024.09.03-)
எமக்கு எதிரானவர்கள் இதுவரை கூறிக்கொண்டிருந்த எம்மால் வெற்றிபெற முடியாது என்கின்ற கதை இப்போது மாறிவிட்டது. இப்போது ரணில் கூறுகிறார் நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால் கேஸ் இல்லாமல் போய்விடுமாம்; எல்லாமே முடிந்துவிடுமாம். அவர்கள் சமூகத்தில் ஒரு அச்சத்தை உருவாக்குகிறார்கள். தோல்வியடைகின்ற தலைவர்கள் சதாகாலமும் சமூகத்தில் ஒரு பீதியை ஏற்படுத்துவார்கள். அவர்கள் வெற்றிபெறாவிட்டால் தேசம் ஆபத்திலாம்; பொருளாதாரம் ஆபத்திலாம். ஆனால் வெற்றிபெற்ற அவர்கள்தான் இந்த நாட்டையும் மக்களையும் ஆபத்தில் தள்ளிவிட்டவர்கள். இப்போது சஜித் அணியைச் சோ்ந்தவர்களும் நாங்கள் வந்தால் நாடு ஆபத்தில் எனக்கூறுகிறார்கள். அந்த எல்லோரையும் விட இந்த நாடு பற்றியும் நாட்டில் உள்ள மக்கள் பற்றியும் தேசிய மக்கள் சக்தியை சோ்ந்த எமக்கு பொறுப்பு இருக்கின்றதென்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டதன் பாதகவிளைவுகளைத்தான் நாங்கள் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இப்போதும் அப்படித்தான்.
இற்றைக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் இந்த நாட்டின் அரசாங்க ஊழியர்கள் உயிர்வாழ இயலுமான அளவிலான சம்பளத்தை கொடுக்குமாறு பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் அப்போது ஒரு சதம் கூட அதிகரித்துக் கொடுக்க முடியாது அவ்வாறு அதிகரித்தால் நாடு சீரழிந்து விடுமென ரணில் கூறினார். நிதியமைச்சின் செயலாளர் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தால் வற் வரியை 21% வரை அதிகரிக்க வேண்டிவரும் எனக்கூறினார். கடந்த ஜுலை மாதத்திலே இவ்வாறு கூறினார். இப்போது கூறுகிறார் ஜனவரி மாதத்திலிருந்து அரசாங்க ஊழியர்களுக்கு ரூபா 25,000 கொடுப்பனவினை வழங்குவதாக; 24% சம்பள அதிகரிப்பினை வழங்குவதாகவும் கூறுகிறார். அவரால் அப்படிக் கூறமுடியும். ஏன்? அவர் என்றால் இந்த தடவை தோல்வியடைவார் அல்லவா! இன்று அமைச்சரவையில் விவசாயிகளின் பயிர்ச்செய்கை கடன்கள் அனைத்தையும் வெட்டிவிடுவதாக தீர்மானம் எடுத்திருக்கிறார்கள். இவ்வாறு இடம்பெற்றால் ஒவ்வொரு நாளும் தோ்தல் நடைபெற்றால் நல்லதென மக்கள் நினைப்பார்கள். இவை தோல்வியின் மத்தியில் கொடுக்கின்ற போலித்தனமான வாக்குறுதிகள். நீங்கள் இப்பொழுது தாமதித்துவிட்டீர்கள் என நாங்கள் ரணிலுக்கு கூறுகிறோம். நீங்கள் இந்நாடு பற்றி இந்த நாட்டு மக்களை பற்றி சிந்தித்திருந்தால் இவற்றில் பெரும்பாலானவற்றை இற்றைக்கு நீண்ட காலத்திற்கு முன்னரே செய்திருக்கவேண்டும். இப்போது அதிகாரம் கைநழுவிப் போய்விடும் என நினைத்து துடிக்கிறார்கள்; மக்கள் தம்மோடு இல்லையென நினைக்கிறார்கள். அதோ பழைய பழக்கங்கள் தோ்தல் ஏமாற்று வேலைகளை செய்ய தொடங்கி விட்டார்கள். ரணில் இன்னமும் பழைய அரசியலில் தான் இருக்கிறார். இந்நாட்டு மக்கள் இனிமேலும் தோ்தல் ஏமாற்று வேலைகளில் மாட்டிக்கொள்ள மாட்டார்கள். சிறிய சிறிய கொடுப்பனவுகளால் இந்நாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என்பது நிரூபணமாகியிருக்கிறது. அவர்கள் இப்பொழுது பழக்கங்களை கைவிட்டு தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி குழுமிக் கொண்டிருக்கிறார்கள். அதனை ரணிலால் மீளத்திருப்ப முடியாது.
ரணிலுடைய மற்றும் சஜித்துடைய இரண்டாம் மட்டத்தைச் சோ்ந்தவர்களிடம் இப்போது ஒரு கதை அடிபடுகிறது நாங்கள் பிரிந்து சென்றால் அதோ கதிதான். அதனால் ஒன்றுசோ்வதற்கு ஒரு வழிகிடையாதா? என்று. தேசிய மக்கள் சக்தி இவ்வாறு பயணித்தால் வென்றுவிடும். நாங்கள் இருசாராரும் பிரச்சினையில் வீழ்ந்துவிடுவோம். அதனால் ஒன்று சேர ஒரு வழிகிடையாதா? இன்னமும் இரண்டாம் அடுக்கினைச் சோ்ந்தவர்கள் தான் அந்தக் கதையை தொடங்கியிருக்கிறார்கள். அதற்கும் நாங்கள் கூறவேண்டிய பதில் நீங்கள் தாமதித்துவிட்டீர்கள் என்று தான். தற்போது கட்டியெழுப்பப்பட்டுள்ள இந்த மக்கள் பலத்தையும் அதற்கு தலைமைத்துவம் வழங்குகின்ற இயக்கத்தையும் மீளவும் திருப்பமுடியாது. அதனை வெற்றியிலேயே முடிப்போம் என மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். இன்று எமது தோ்தல் இயக்கத்தை மக்கள் தமது கைகளில் எடுத்துவிட்டார்கள். நாங்கள் அறிந்திராத பாரிய மக்கள் சக்தி எமக்காக இப்பொழுது சுயமாக முன்வந்து உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது சுயமாகவே எழுதத்தொடங்கி விட்டார்கள். இப்போது ரணில் நீங்கள் இதனை எப்படி நிறுத்துவது? இதனை நிறுத்த முடியாது. உறுதியாக நாங்கள் வெற்றிபெறுவோம். ஆனால் எங்களுக்கு தேவை சாதாரண வெற்றியல்ல. இந்த நாடு மிகவும் ஆழமான படுகுழிக்குள் இழுத்துப் போடப்பட்டுள்ளது. அதனால் நாட்டை மீட்டெடுக்க நிலையான, பலம்பொருந்திய ஒரு சில தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. நாடு இவ்விதமாக பாய்ந்து செல்லவேண்டுமானால் அது ஒரு பெரிய பிரச்சினையாகும்.
நாங்கள் தொடர்ந்தும் பாய்ந்தோடுகின்ற இந்த நாட்டிலே அழிவுத்திசையை நோக்கி நீந்திக்கொண்டிருந்தால் நாடு படுகுழிக்குள் நிச்சயமாக வீழ்ந்து விடும். இந்த அழிவுப்பாதையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவே தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தை கோரி நிற்கிறது. அவ்வாறு செய்ய பலம்பொருந்திய தீர்மானங்களை எடுக்கவேண்டும். அதற்காக மக்களின் பலம்பொருந்திய மக்கள் ஆணை அவசியமாகும். இந்த நாட்டை சரியான திசைக்கு திருப்புகின்ற தீர்மானங்களை எடுக்க பலம்பொருந்திய மக்கள் ஆணை அவசியமாகும். முதலில் இந்த அரசியல் போராட்டக்களத்தை சுத்தம் செய்ய வேண்டும். இந்த அரசியலை பொதுமக்கள் அறவோடு வெறுக்கிறார்கள்; அருவருக்கிறார்கள். இப்போது சமூக வலைத்தளங்கள் முன்னேற்றமடைந்து தகவல்கள் எளிதாக பாய்ந்து வருகின்றன. அதனால் இந்த நாட்டை இதுவரை ஆட்சி செய்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்கிறார்கள். ரிச்சட் பத்திரண மகனுக்கு பாதையை அமைக்கிறார். தொடங்கொட மகனுக்கு பாதையை அமைக்கிறார். அப்படித்தான் இவ்வளவு காலமும் அரசியல் பயணம் நிலவியது. இதுவரைகாலமும் அவர்களின் குடும்பங்களுக்கே அவர்களின் அன்பர்களுக்கே பாதையை அமைத்தார்கள். அதனால் மக்கள் இந்த அரசியலை அருவருத்தார்கள். தேசிய மக்கள் சக்தியை சோ்ந்த நாங்கள் அதிகாரத்தை எடுத்து இந்த அரசியல் களத்தை கட்டம் கட்டமாக சுத்தம் செய்வோம்.
ஊர்களில் பொலிஸில் உத்தியோகத்தர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். ஆனால் பிரமுகர்களின் பாதுகாப்பிற்காக அதிகரித்த குழுவினர் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். நாங்கள் இவையனைத்தையும் நிறுத்துவோம். இலங்கையில் இதுவரை அரசாங்கம் எனக்கூறி ஒன்றில் ஒரு குடும்பத்தை உருவாக்கினார்கள். அல்லது ஒரு கும்பலை உருவாக்கினார்கள். நாங்கள் இலங்கையில் முதல் தடவையாக அரசாங்கம் என்றால் என்ன? என்பதை உண்மையாக உணர்த்தும் அரசாங்கமொன்றை அமைப்போம். அப்போது மக்களிடம் நம்பிக்கை உருவாகும். மக்கள் தமது பொறுப்புக்கூறலை ஈடேற்ற முனைவார்கள். கைத்தொழில் முனைவோர் தொழில் முனைவோர் தமது பங்கினை ஆற்றத் தொடங்குவார்கள். இந்த எல்பிடியவின் தேயிலை சிறு பற்றுநில உரிமையாளர்கள் தமது வேலைகளை செய்ய தொடங்குவார்கள். அதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு நல்கும். எல்லாத்துறைக்கும் எமது அரசாங்கத்தின் கவனிப்பு கிடைக்கும். அப்போது உங்களுடைய வருமானம் அதிகரிக்கும். நாட்டின் வருமானம் அதிகரிக்கும். நாடு வளமடையும்.
நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்திற்கு ஒத்துவரக்கூடிய கல்வித் திட்டமொன்று, பாடசாலை முறைமையொன்று, பல்கலைக்கழக முறைமையொன்று எம்மால் கட்டியெழுப்பப்படும். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் சுமையாக அமைந்துள்ள இந்த கல்வித்திட்டத்திற்கு பதிலாக அவர்களுக்கு சுமையாக அமைந்திடாத நவீன முன்னேற்றகரமான கல்வி முறையொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம். தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே அதிகாரத்தை கோரி நிற்கிறது. இந்த நாட்டை அழகானதாக்க இந்த நாட்டு மக்களுக்கு அழகான வாழ்க்கையை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்காக இந்த மாதம் 21 ஆம் திகதி தேசிய மக்கள் சக்திக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்க முன்னணிக்கு வருமாறு உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.