(-Colombo, January 26, 2025-) அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சலுகைகளை வழங்கும் அரசியல் கலாச்சாரத்திற்கு தற்போதைய அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதியும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு நடந்து கொண்டாலும், முன்னாள் தலைவர்கள் தங்கள் வீண்விரய வாழ்க்கையை தங்களின் உரித்தாக கருதுவதாகவும் தெரிவித்தார். பழைய வீண்விரய வடிக்கைகள் குறித்து தான் எதுவும் கூறப்போவதில்லை என்றும், இன்று முதல் புதிய அரசியல் கலாச்சாரத்தில் இணையுமாறு அவர்களை அழைப்பதாகவும் ஜனாதிபதி கூறினார். அநுராதபுரம் விவேகானந்த […]
(-Colombo, January 26, 2025-)
அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சலுகைகளை வழங்கும் அரசியல் கலாச்சாரத்திற்கு தற்போதைய அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதியும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு நடந்து கொண்டாலும், முன்னாள் தலைவர்கள் தங்கள் வீண்விரய வாழ்க்கையை தங்களின் உரித்தாக கருதுவதாகவும் தெரிவித்தார்.
பழைய வீண்விரய வடிக்கைகள் குறித்து தான் எதுவும் கூறப்போவதில்லை என்றும், இன்று முதல் புதிய அரசியல் கலாச்சாரத்தில் இணையுமாறு அவர்களை அழைப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
அநுராதபுரம் விவேகானந்த விளையாட்டு மைதானத்தில் நேற்று (26) பிற்பகல் நடைபெற்ற நட்புறவுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
சில காரணிகள் தொடர்பில் கவனம் செலுத்தியே தற்போதைய அரசாங்கத்தை மக்கள் ஆட்சிக்குக் கொண்டு வந்ததாகவும் தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றுவதும், வீண்விரயம் மற்றும் ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவதும் மக்களின் பிரதான அபிலாஷை என்றும் நினைவு கூர்ந்த ஜனாதிபதி, வீண்விரய அரசியல் முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கையில் அதனை அரசியல் பழிவாங்கலாக சித்தரிக்க முயல்வதாகவும் தெரிவித்தார்.
மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறியதாவது:
கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் நாங்கள் அநுராதபுரத்தில் பாரிய கூட்டத்துடன் எங்கள் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தோம். அதைத் தொடர்ந்து, கடந்த பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களைப் பெற்று மகத்தான வெற்றியைப் பெற முடிந்தது. இலங்கை வரலாற்றில், ஆட்சி அதிகாரம் தலைமுறை தலைமுறையாகவே கைமாறியது. தாய் பிரதமராக இருந்ததால் மகளுக்கு அதிகாரம் கிடைத்தது. மூத்த சகோதரர் ஜனாதிபதியாக இருந்ததால் இளைய சகோதரருக்கு அதிகாரத்தைப் பெற்றுக் கொடுத்தார். மாமா ஜனாதிபதியாக இருந்ததால் மருமகன் ஜனாதிபதியானார்.
பெருமளவு பணம் செலவிடுவதன் மூலம் அரசாங்கங்களைக் கட்டியெழுப்பும் வரலாறு எமது நாட்டில் இருந்தது. சதி மற்றும் ஊடகங்களில் தம் நிலைப்பாட்டை பிரச்சாரம் செய்வதன் மூலம் அரசாங்கங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களின் தலையீட்டின் மூலம் உருவாக்கப்பட்டது. தலையீடு மூலம். மக்களால் கூட்டாக அமைக்கப்பட்ட இந்த அரசாங்கம், இரண்டு மாதங்களாக செயற்பட்டு வருகிறது. எனவே, இந்த வெற்றியை வழங்கிய மக்களுடன் நட்புறவாகப் பேச இந்த சந்திப்பைப் பயன்படுத்துகிறோம்.
கடந்த செப்டம்பர் மாதத்தில் நாங்கள் வெற்றி பெற்றபோது, மிகச் சிறிய அரசாங்கமே இருந்தது. நவம்பர் 14 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்தி, நவம்பர் 21 ஆம் திகதி அமைச்சரவையை அமைக்க எமக்கு முடிந்தது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது சர்வதேச உறவுகள் சீர்குலைந்துவிடும் என்று சில குழுக்கள் பிரச்சாரங்களை மேற்கொண்டன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் கைத்தொழிலாளர்களும் முதலீட்டாளர்களும் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று வேறு சிலர் வதந்திகளைப் பரப்பினர். அந்த சமயத்தில் இலங்கையின் பொருளாதாரம் எந்த சூழ்நிலையையும் தாங்கக்கூடிய ஒன்றாக இருக்கவில்லை. இந்த நிலைமை தொடர்ந்திருந்தால், ஆட்சியாளர்களுக்கு டொலர் மீதான கட்டுப்பாட்டை இழக்க நேர்ந்திருக்கும். எனவே, அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை வளர்க்க நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். பங்குச் சந்தை இன்று வேகமாக முன்னோக்கி நகர்கிறது. ஆனால் பங்குச் சந்தை முழுப் பொருளாதாரத்தையும் பிரதிபலிப்பதில்லை. பங்குச் சந்தையினால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை உருவாகிறது. கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து பங்குச் சந்தை பெறுமதி உயர்ந்து வருகிறது.
நமது நாடு பாரியளவில் வங்குரோத்தடைந்து விட்டது. தற்போதைய அரசாங்கத்தால் அந்த நிலைமையைச் சீர்செய்து , கடந்த டிசம்பரில் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை நிறைவு செய்ய முடிந்தது. அதனோடு அதுவரை இருந்த வங்குரோத்து நிலையிலிருந்து இலங்கையை மீட்க்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முடிந்தது. வங்குரோத்து நிலையினால் அது வரை செயற்படுத்தப்பட்டு வந்த அபிவிருத்தித் திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டன. ஜப்பானிய அரசாங்கம் இதுபோன்ற 11 திட்டங்களை நிறுத்தியிருந்தது. கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்தும் திட்டம் அவற்றில் ஒன்றாகும். கடன் மறுசீரமைப்பைத் தொடர்ந்து, ஜப்பானிய அரசாங்கம் அந்த 11 திட்டங்களையும் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுத்தது அதே போன்று சீன அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டு வந்த மற்றும் முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த 76 திட்டங்களை மீண்டும் தொடங்க சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு எனது அண்மைய சீன விஜயம் பாரிய உத்வேகத்தை அளித்தது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிநாடுகளுடனான தனது நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது.
எமது முதல் விஜயத்திற்கு நாம் இந்தியாவைத் தெரிவு செய்தோம். அதன் மூலம் நாட்டுக்குப் பல பொருளாதார நன்மைகளைப் பெற முடிந்ததோடு மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான ரயில்வே சமிக்ஞைக் கட்டமைப்பை நிதிஉதவியாக மாற்ற இந்த விஜயத்தின் ஊடாக வாய்ப்பு ஏற்பட்டது. அத்தோடு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக நிவாரணம் வழங்க இந்திய அரசாங்கமும் ஒப்புக்கொண்டுள்ளது. சர்வதேச அளவில் தற்போதைய அரசாங்கத்தைப் பற்றி நாங்கள் நம்பிக்கையை வளர்க்க முடிந்துள்ளது. இன்று முதலீட்டாளர்களுக்கு நம்பகமான நாடாக இலங்கை மாறி வருகிறது.
பாடசாலை சீருடைகளுக்காக வழங்கும் 80% சலுகையை 100% ஆக மாற்ற சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. 2026 ஆம் ஆண்டிற்கான சீருடைகளை வழங்க சீன அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்காக 3.7 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டது. இது இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய முதலீடாக வரலாற்றில் இடம்பிடிக்கிறது. கடவத்தை-மீரிகம அதிவேக நெடுஞ்சாலைப் பகுதியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இழப்பீடு செலுத்த வேண்டியிருந்தது. அந்த இழப்பீட்டை 50% வீதத்தினால் குறைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அந்த பாதையை மீண்டும் நிர்மாணிப்பதற்கு சீனாவிடமிருந்து உதவி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
பொது மக்களைக் கவனித்துக் கொள்ள தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஓய்வூதியதாரர்களிடையிலான சம்பள முரண்பாட்டை நீக்க நாம் நடவடிக்கை எடுத்தோம். அத்தோடு அஸ்வெசும வழங்கப்படும் குழுக்கள் தொடர்பாக எதிர்வரும் ஜூன் மாதத்தில் மீளாய்வு செய்ய எதிர்பார்க்கிறேன். உதவி கிடைக்க வேண்டிய தரப்பினர்களை இலக்காகக் கொண்டு உதவி வழங்கும் திட்டமொன்றைச் செயல்படுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம்.உதவி கிடைக்க வேண்டிய தரப்பினர்களுக்கு உதவு வழங்குவதே உலகில் அநேக அரசாங்கங்களின் திட்டமாகும். அதற்கு துல்லியமான தரவுகள் திரட்டப்பட வேண்டும்.
இதுவரை, பிரஜைகளின் கண்ணோட்டத்தில் அன்றி அரசியல் கண்ணோட்டத்தில் தான் உதவிகள் வழங்கப்பட்டன என்பதை நாம் அறிவோம். எனவே, உதவி பெறத் தகுதியான குடிமக்களை முறையாகப் பராமரிப்பதற்கான ஒரு குறிப்பிட்ட திட்டத்தை வகுப்பதே எங்கள் நோக்கமாகும். இந்தத் திட்டங்களுக்கு மக்களின் வரிப் பணம் தான் பயன்படுத்தப்படுகிறது. எனவே, ஒரு குறிப்பிட்ட, இலக்கு வைக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
பாடசாலைக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாத மாணவர்களுக்கு உதவி வழங்க ஒரு திட்டத்தை நாங்கள் தயாரித்தோம். அதில் அஸ்வெசும கிடைக்கும் குழுவுக்கு மேலதிகமாக மேலும் பிள்ளைகள் இருந்தனர். எனவே, இந்த தரவுகளில் சில குழப்பங்கள் உள்ளன. முன்னூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்க முடிவு செய்தோம். துல்லியமான தரவைப் பெற்ற பிறகு, உதவி தேவைப்படும் சமூகத்தை இலக்காக வைத்து உதவி வழங்க நடவடிக்கை எடுப்போம்.
மக்களைக் கவனித்துக் கொள்வதற்காக கடந்த இரண்டு மாதங்களாக நாம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். நாங்கள் இன்னும் வரவு செலவுத்திட்ட ஆவணத்தை சமர்ப்பிக்கவில்லை. வரவு செலவுத்திட்ட ஆவணம் பெப்ப்ரவரி 17 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும். இந்த நாட்டில் எப்போதும் நிவாரணங்களைச் சார்ந்து இருக்கும் மக்கள் இருக்கக் கூடாது. நமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருளாதார பலத்தை முறையாக வழங்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. அதுதான் அரசாங்கத்தின் குறிக்கோள். 2022-2023 ஆம் ஆண்டு போல மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை நம் நாடு சந்திக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த நாட்டிற்கு வலுவான பொருளாதார அடித்தளத்தை உருவாக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
துறைமுகத்தை இலக்கு வைத்து பாரிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளோம். 2030 ஆம் ஆண்டுக்குள் கொழும்பு துறைமுகத்தில் 113 இலட்சம் கொள்கலன் செயற்பாடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. முன்னாள் தலைவர்களிடம் துறைமுகம் குறித்த எந்த திட்டமும் இருக்கவில்லை. துறைமுகத்தில் நான்கு நுழைவாயில்கள் உள்ளன. அவற்றில் இரண்டு நுழைவாயில்கள் மட்டுமே செயல்படுகின்றன. அதற்கான திட்டங்களை கூட முன்னாள் தலைவர்கள் செயல்படுத்தவில்லை. இதனாலேயே துறைமுகத்தில் நெரிசல் அதிகரித்துள்ளது. கிழக்கு இறங்குதுறை பணிகளை எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனால் கொள்கலன் செயல்பாடுகள் மேலும் அதிகமாகும். அப்போது நெரிசல் அதிகரிக்கும். அதற்காக, கெரவலப்பிட்டியில் கொள்கலன் இறங்குதுறை ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். அதனை அமைப்பதற்கு இன்னும் ஒரு வருடமாகும். இந்த இறங்குதுறை செயற்பாடுகளுக்கு விரைவான திட்டமொன்று அவசியம். தூரநோக்கம் கொண்ட ஆட்சியாளர்கள் இல்லாதிருந்தமையால் துறைமுகத்தில் நெரிசல் அதிகரித்துள்ளது. நாம் படிப்படியாக நெரிசலை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சுற்றுலாத் துறையில், மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்க்கிறோம். சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வந்தாலும், சுற்றுலா பயணிகளை கவரும் பகுதிகள் குறைவாக காணப்படுகின்றன. சுற்றுலா பயணிகள் நெரிசல் இன்றி பார்க்க கூடிய இடங்களை உருவாக்க வேண்டும். அனுராதபுரத்தை சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக மாற்ற வேண்டும். இலங்கையின் முதலாவது இராசதானி, இலங்கையின் முதலாவது குளம் அமைக்கப்பட்ட இடம் அனுராதபுரமாகும். எனவே, அனுராதபுரத்தை ஒரு ரம்மியமான சுற்றுலா மையமாக மேம்படுத்தும் இயலுமை காணப்படுகிறது. உலகத்திற்குச் செல்லும்போது நாட்டின் பெயர் கூறப்படுவதில்லை. நகரத்தின் நாமமே கூறப்படுகிறது. லண்டன், பாரிஸ் என்று கூறுவது நகரங்களின் நாமங்களை அடையாளப்படுத்துவதற்காகும். அனுராதபுரத்தை வரலாற்று நகரமாக மாற்ற வேண்டும். மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வந்தால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் விஸ்தரிக்க வேண்டும்.
நம் நாட்டில் இயற்கை வளங்கள் குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை. நமது கனிம வளங்களுக்கு பெறுமதி சேர்க்க எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கனிம வள மேம்பாட்டுக்கான தொழிற்சாலையை திறக்க திட்டமிட்டுள்ளோம். அனுராதபுரம் நகரில் 07 பழமையான நீர்ப்பாசன முறைமைகள் உள்ளன. அந்த ஏழு நீர்ப்பாசன முறைகளை மீளமைக்க நடவடிக்கை எடுப்போம். இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை உரிய திட்டங்களுக்கு செலவிட நடவடிக்கை எடுப்போம். இந்த செயற்பாடுகள் மூலம் பொருளாதாரத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த எதிர்பார்க்கிறோம்.
எரிசக்தி பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் முக்கிய துறையாகும். இன்று மின் கட்டணம் குறைந்துள்ளது. ஆனால் மின் கட்டண குறைப்பை நிலையாக வைத்திருக்க முடியாது. மழை பெய்தால் மின்கட்டணம் குறைவடைந்து வெயில் காலத்தில் அதிகரிக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். மன்னாரில் காற்றாலை மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம்.அதிலிருந்து பெறப்படும் மின்சார அலகு ஒன்றின் கொள்வனவு விலை பதினான்கு ரூபாய். ஆனால் கடந்த அரசாங்கம் சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இவ்வாறான ஒரு திட்டத்தை நிர்மாணிப்பதற்காக ஒப்பந்தம் செய்திருந்தபோது கொள்வனவு விலை 18 ரூபாயாக இருந்தது. கடந்த அரசாங்கம் சாம்பூர் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின் அலகு ஒன்றை கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்திருந்த விலை அண்ணளவாக இருபத்தி நான்கு ரூபாய். ஆனால் அதை நாங்கள் பதினேழு ரூபாயாக குறைக்க நடவடிக்கை எடுத்தோம். சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையங்களை அமைக்க 10,000 ஏக்கர் ஒதுக்கி டெண்டர் முறையில் முதலீட்டாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பொருளாதாரத்திற்குள் புதிதாக பிரவேசிப்போருக்கு அரசாங்க வங்கியொன்றுடன் இணைத்து அபிவிருத்தி கடன் திட்டத்தை தயாரித்து வருகிறோம்.
அதன் கீழ், சலுகை வட்டியில் கடன் வழங்கப்படும். திட்ட அறிக்கை காண்பித்து தொழிற்சாலைகள் அமைச்சின் அனுமதியுடன் வங்கியில் கையளிக்கும்போது கடன் வழங்கும் முறையை உருவாக்குவோம். புதிய விளைச்சல் நிலத் தொகுதிகளின் உரிமங்களை உருவாக்க இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு வழங்குவோம். சிறு மற்றும் மத்தியத்தர தொழில்துறை கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் பொருளாதாரத்தில் உயர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். கிராமங்கள் அபிவிருத்தி அடைந்து கிராமிய பொருளாதாரம் என்ற வகையில் உயர்வடைந்து செல்வது அவசியமாகிறது.
அதேபோல், பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம். நகர்ப்புறங்களில் முன்னோடி திட்டமாக இந்த முறைமையை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை பல வழிகளில் முன்னோக்கி கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுப்போம். எமக்கு வாக்களிக்கும் போது மக்கள் பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தினர். அரசியல் கலாசாரம், வீண்விரயம், ஊழலை மட்டுப்படுத்தல் போன்ற விடயங்களை மக்கள் எங்களிடம் கேட்டனர். அதன்படி, முதலில் நிலவிய ஊழல் அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தோம். அமைச்சர்கள், எம்.பிக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்போவதில்லை. அந்த கலாச்சாரத்திற்கு முடிவுகட்டியுள்ளோம். அம்பியூலன்ஸ்கள் பின்னால் சென்ற வரலாறு இருந்தது. எந்த அமைச்சருக்கும், எம்.பி.க்கும் நாங்கள் வீடுகள் வழங்கவில்லை. கொழும்பு, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து இல்லங்களையும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் இவ்வாறு செயற்படும் போது முன்னாள் ஜனாதிபதிகள் அரசியல் பழிவாங்கல்கள் என்று கூறுகின்றனர். இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் கொழும்பு 07 இல் கோடிக்கணக்கில் பெறுமதியான காணிகள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் முப்பதாயிரம் சதுர அடி கொண்ட வீட்டில் இருக்கிறார். நல்ல அரசியல் கலாச்சாரத்திற்குள் வர விரும்புவோர் வாருங்கள். முன்னாள் ஆட்சியாளர்களுடன் எமக்கு காணி வழக்குகள் இல்லை. வீண்விரயம் செய்வது எமக்கு பழக்கமில்லை. வீண்விரயம் செய்து வாழ்வது அவர்களின் வாழ்வுரிமை என்று கூறுகிறார்கள். பொதுமக்களின் பணத்தை அதற்காக கொடுக்க வேண்டுமா? முன்னாள் ஜனாதிபதி அம்மையார் 15,000 சதுர அடி வீட்டில் இருக்கிறார். பழைய வீண்விரயம் குறித்து நாங்கள் எதுவும் கூறவில்லை. இன்று முதல் புதிய அரசியல் கலாசாரத்திற்கு வாருங்கள் என்று அவர்களை அழைக்கிறோம்.
அரசியல்வாதி என்பவர் மக்களுக்கு மேலாக இருப்பவர் அல்ல. எம்.பி.க்களுக்கு நாங்கள் வாகன கொள்வனவு அனுமதிகளை வழங்கவில்லை, வீடுகளை வழங்கவில்லை. ஓய்வூதியம் கொடுக்கவில்லை. ஊழல்வாதிகள் பிடிபட்டுள்ளனரா? என்று சிலர் கேட்கின்றனர். இது தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இடமளித்திருக்கிறோம். வலுவான முறையில் அந்த வழக்குகளை தொடருமாறு சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் என்பவைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் எவரையும் தனிப்பட்ட முறையில் துறத்தவில்லை. விசாரணைகள் முடிவடையும் விதத்தில் நீதிமன்றத்தில் அறிக்கையிடுவோம்.
லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டு பத்து வருடங்கள் ஆகிவிட்டன. தாஜுதீன் கொல்லப்பட்டு பதின்மூன்று வருடங்கள் ஆகின்றன. தாஜுதீன் கொலையை கையாண்ட சட்ட வைத்திய அதிகாரி தற்போது மரணமடைந்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய பிரதிப் பொலிஸ் மா அதிபரும் தற்போது உயிரிழந்துள்ளார். எனவே சில விசாரணைகள் கால தாமதம் ஆகலாம்.
போதைப்பொருள் கைது தொடர்பில் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.இந்த நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பை உடைப்பதற்கு தேவையான வசதிகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்படாத துப்பாக்கிகள் சமூகத்தில் புழக்கத்தில் உள்ளன. அதனால் தான் சட்டவிரோதமான பாதாள உலகம் ஒன்று உள்ளது. இதை எதிர்த்துப் போராட தேவையான வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளில் இந்த பாதாள உலகத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். நாம் மக்களுக்கு நெருக்கமானவர்கள். நாங்கள் ஊடக நிறுவனங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல. கறுப்பு சந்தை வியாபாரிகளுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. எங்களின் அடிப்படை பிணைப்பு இந்த நாட்டு மக்களுடன் மட்டுமே உள்ளது. மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை சிதைய இடமளியோம்.
இலங்கையின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க காலத்திற்குப் பின்னர் மாற்று அரசியல் தலைமைத்துவம் உருவாகியுள்ளது. அதற்கு உங்களுடைய ஆதரவு தேவை. பொலிஸ், இராணுவம், அரசாங்க அதிகாரிகளின் உதவி எமக்குத் தேவை. உலகம் ஒரு காலத்தில் வெயிலையும் மழையையும் பார்த்துக்கொண்டு பயணித்தது. ஆனால் இப்போது உலகம் தரவுகளின் அடிப்படையில் பயணிக்கிறது. எனவே, தயாரிப்புகள் நுகர்வுக்கு போதுமானதா இல்லையா என்பது தரவுகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. அந்த தரவு சேகரிப்பு முழுமையாக செய்யப்பட வேண்டும். கமநல அதிகாரி ஒரு முறை ஒரு மில்லியன் மெட்ரிக் டொன் நெல் காணாமல் போனதாக கூறினார். ஆனால் அரச அரிசி களஞ்சியங்களில் மூன்று இலட்சம் மெட்ரிக் டொன் அரிசி மட்டுமே இருக்க முடியும். பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களின் மொத்த தொகை சேகரிப்பும் மூன்று இலட்சம் மெட்ரிக் டொன் மட்டுமேயாகும். அவ்வாறிருக்க குறித்த அதிகாரி அவ்வாறானதொரு அறிக்கையை எதற்காக வெளியிட வேண்டும்? சரியான முறையில் தரவு சேகரிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. தரவு சரியாக இருந்தால், தேவையான நேரத்தில் முடிவுகளை எடுக்க முடியும். எனவே, எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் அரச சேவை முழுவதிலும் தரவு சேகரிப்புத் திட்டத்தை முழுமைப்படுத்த எதிர்பார்க்கிறோம். இதன் பின்னர் அரிசி தட்டுப்பாடு ஏற்பட இடமளியோம். நெல்லுக்கான நிர்ணய விலையும் நுகர்வோருக்கு நியாயமான விலையையும் வழங்க நடவடிக்கை எடுப்போம்.
வடக்கில் தென்னைச் செய்கைக்காக 3000 ஏக்கர் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கான நிதியை இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்க எதிர்பார்க்கிறோம். மிகவும் மோசமாக, முற்றிலும் சரிந்த நாட்டை படிப்படிகயாகக் கட்டியெழுப்பி வருகிறோம். அந்த வேலைத்திட்டத்தை இன்னும் வலுவாக முன்னெடுத்துச் செல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
(-Colombo, January 22, 2025-) இன்று (22) முற்பகல் மக்கள் விடுதலை முன்னணி பிரதான அலுவலகத்தில் ஐக்கிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது நடப்பு சமூக மற்றும் அரசியல் தொடர்பாகவும் “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பில் ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் அலுவலகத்தின் அரசியல் பொறுப்பதிகாரி ஆதம் எல்.மிச்சலோ, அரசியல் அலுவல்கள் நிபுணர் நசீர் மரிக்கார் […]
(-Colombo, January 22, 2025-)
இன்று (22) முற்பகல் மக்கள் விடுதலை முன்னணி பிரதான அலுவலகத்தில் ஐக்கிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது நடப்பு சமூக மற்றும் அரசியல் தொடர்பாகவும் “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் அலுவலகத்தின் அரசியல் பொறுப்பதிகாரி ஆதம் எல்.மிச்சலோ, அரசியல் அலுவல்கள் நிபுணர் நசீர் மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துப்படுத்தி அதன் சர்வதேச பிரிவுக் குழுவின் உறுப்பினர் சட்டத்தரணி மது கல்பனா தோழர் இணைந்துகொண்டிருந்தார்.
(-Colombo, January 21, 2025-) நேற்று (21) முற்பகல் ம.வி.மு. பிரதான அலுவலகத்தில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பெட்ரிக் அவர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது நடப்பு சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் அலுவல்களுக்கான முதலாவது செயலாளர் டொம் சொப்பர் அவர்களும், ஆலோசகர் இன்சாப் பாகீர் மாக்கர் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் […]
(-Colombo, January 21, 2025-)
நேற்று (21) முற்பகல் ம.வி.மு. பிரதான அலுவலகத்தில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பெட்ரிக் அவர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது நடப்பு சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் அலுவல்களுக்கான முதலாவது செயலாளர் டொம் சொப்பர் அவர்களும், ஆலோசகர் இன்சாப் பாகீர் மாக்கர் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் அதன் சர்வதேச பிரிவுக் குழுவின் உறுப்பினர், சட்டத்தரணி மது கல்பனா தோழரும் கலந்துகொண்டிருந்தார்.
(-Colombo, January 14, 2025-) “அறுவடைத் திருநாள்” என்று பொருள்படும் தைப்பொங்கல், உலகம்முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இந்துக்களால் மிகுந்த பக்தியுடன்கொண்டாடப்படுகிறது. நிறைவான அறுவடைக்கு பங்களித்த சூரியன், பூமி, மழை மற்றும் பசுக்கள், உபகரணங்களுக்கு நன்றி செலுத்துவதுஇந்த நாளின் சிறப்பம்சமாகும். இந்த விழா ‘தை’மாதத்தின் முதல் நாளில்கொண்டாடப்படுகிறது. சூரியனின் வடக்கு நோக்கிச் செல்லும்’உத்தராயணம்’, தைப் பொங்கல் நாளில் தொடங்குகிறது. புதிய திசையைநோக்கிச் செல்லல், மனித சமூகத்தின் உள்ளக-வெளிப்புற சகவாழ்வுஎன்பனவே தைப்பொங்கல் பண்டிகையின் அர்த்தமாகும். இந்த நாட்டு மக்களின் […]
(-Colombo, January 14, 2025-)
“அறுவடைத் திருநாள்” என்று பொருள்படும் தைப்பொங்கல், உலகம்முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இந்துக்களால் மிகுந்த பக்தியுடன்கொண்டாடப்படுகிறது. நிறைவான அறுவடைக்கு பங்களித்த சூரியன், பூமி, மழை மற்றும் பசுக்கள், உபகரணங்களுக்கு நன்றி செலுத்துவதுஇந்த நாளின் சிறப்பம்சமாகும். இந்த விழா ‘தை’மாதத்தின் முதல் நாளில்கொண்டாடப்படுகிறது. சூரியனின் வடக்கு நோக்கிச் செல்லும்’உத்தராயணம்’, தைப் பொங்கல் நாளில் தொடங்குகிறது. புதிய திசையைநோக்கிச் செல்லல், மனித சமூகத்தின் உள்ளக-வெளிப்புற சகவாழ்வுஎன்பனவே தைப்பொங்கல் பண்டிகையின் அர்த்தமாகும்.
இந்த நாட்டு மக்களின் நற்பண்புகள்,நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுஎன்பவற்றை மேம்படுத்தி சமூக மாற்றத்திற்கான ஆரம்ப முயற்சியாகவும், சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறைக்கான புதிய ஒரு திசையின் தொடக்கமாக ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளசமயத்தில், தைப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதுமகிழ்ச்சியளிக்கிறது. வரலாற்று ரீதியாக வேரூன்றிய ஆசிய மரபுகளில்மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான பிணைப்பு பிரிக்கமுடியாதது. தைப்பொங்கல் தினத்தால் வெளிப்படுத்தப்படும் அந்த மரபுகள்இந்த திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், தைப்பொங்கல் கொண்டாட்டம் மக்களின் கலாச்சாரவாழ்வில் புதிய நம்பிக்கைகளை கட்டியெழுப்புகிறது. நாட்டில்உருவாகியுள்ள புதிய உத்வேகத்துடன், இலங்கையர்களாகிய நம்அனைவருக்கும், “அழகான வாழ்க்கை” என்ற நம்பிக்கையை நம்இதயங்களில் சுமந்து, புத்தாண்டில் புதிய உற்சாகத்துடன் முன்னோக்கிக்கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்காக சுற்றுச்சூழல் முன்னேற்றத்திற்கு உகந்த முன்னுரிமை அளிக்கும் ஒரு புதிய கலாசாரநெறிமுறை இருப்பை உருவாக்குவதன் மூலம் நிலையான அமைதி, நல்லிணக்கம் என்பவற்றை மேம்படுத்துவதற்குத் தேவையான கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தலைமை பொறுப்பு மற்றும்பொறுப்புக்கூறலை நாங்கள் ஏற்கிறோம்.
நாட்டிற்கும் மக்களுக்கும் பல நல்ல விடயங்களை நிறைவேற்றஉறுதிபூண்டு, நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாங்கள், அந்தவாக்குறுதிகளை தடைகளுக்கு மத்தியிலும் பின்வாங்காததுணிச்சலுடனும் அசைக்க முடியாத உறுதியுடனும் நிறைவேற்றஉறுதிபூண்டுள்ளோம். இந்த நாட்டு மக்களின் முகங்களில் நீடித்தபுன்னகையைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட இந்தசெயற்பாட்டில், புதிய அணுகுமுறைகளுடன், ஒற்றுமையுடனும்பங்கேற்புடனும் ஒன்றிணைய உங்கள் அனைவருக்கும் அழைப்புவிடுக்கிறேன். சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம்பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
இலங்கை மற்றும் உலகளாவிய இந்து பக்தர்கள் அனைவருக்கும்நல்லிணக்கம் மற்றும் நன்றியுணர்வு நிறைந்த, வளமான மற்றும்மகிழ்ச்சியான தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
2025 ஜனவரி 14 ஆம் திகதி
(-Colombo, January 12, 2025-) ஆராய்வு மட்டத்திலான கொள்கலன்களை வைப்பதற்காக புளூ மெண்டல் பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம். தடயவியல் எழுதுவினைஞர்களை செயற்திறனுடன் பணியமர்த்த துறைமுகம் தொடர்பான சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் உடன்பாடு இலங்கை சுங்கம் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான சேவைகளை வழங்கும் சங்கங்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது. இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களின் சுங்கத்துறை விடுவிப்பில் ஏற்படும் […]
(-Colombo, January 12, 2025-)
ஆராய்வு மட்டத்திலான கொள்கலன்களை வைப்பதற்காக புளூ மெண்டல் பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம்.
தடயவியல் எழுதுவினைஞர்களை செயற்திறனுடன் பணியமர்த்த துறைமுகம் தொடர்பான சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் உடன்பாடு
இலங்கை சுங்கம் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான சேவைகளை வழங்கும் சங்கங்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது.
இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களின் சுங்கத்துறை விடுவிப்பில் ஏற்படும் தாமதத்தை அடுத்த நான்கு நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இலங்கை சுங்கம் உட்பட அரசதுறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி , துறைமுகம் தொடர்பான சேவைகளை வழங்கும் சங்கங்களின் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராய்ந்தார்.
இதன் போது துறைமுக துறையை அபிவிருத்தி செய்வதற்கான குறுகிய கால மற்றும் மத்திய கால மற்றும் நீண்ட கால திட்டங்களைச் செயற்படுத்துவது அவசியமான போதும் தற்பொழுது எழுந்துள்ள சூழ்நிலையைத் தீர்க்க,அனைவரும் இணைந்து செயற்படுவதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டது.
தற்பொழுது எழுந்த சூழ்நிலையைத் தீர்க்க, ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களின்படி, அரச மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டன.
இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களுக்கு அனுமதி வழங்கும் செயல்பாட்டில் நிலுவையில் உள்ள தேக்கத்தைத் தீர்க்க, இலங்கை சுங்க அதிகாரிகள் வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணிநேரமும் பணியாற்ற உடன்பாட தெரிவித்துள்ளனர்.
பரிசோதனை மட்டத்திலுள்ள கொள்கலன்களை வைப்பதற்கான துரித நடவடிக்கையாக UCTயில் (Unity container Terminal) இடம் ஒதுக்க அமைச்சு முடிவு செய்துள்ளது. அதற்கமைய புளூ மெண்டல் பகுதியில் 5 ஏக்கர் காணியைப் பயன்படுத்த இதன் போது முடிவு செய்யப்பட்டது. ஜனவரி 31 ஆம் திகதிக்குள் இரண்டு ஏக்கர் நிலத்தை பெற்றுக் கொடுப்பதற்கும், எஞ்சிய நிலத்தை பெப்ரவரி 28 ஆம் திகதிக்குள் வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டது.
துறைமுக முனையத்தில் வேண்டுமென்றே கொள்கலன் லாரிகளை நிறுத்தி வைத்திருப்பது கொள்கலன் போக்குவரத்து நெரிசல் உக்கிரமடைய காரணம் என அடையாளம் காணப்பட்டதால், இந்தக் கொள்கலன் லாரிகளை நிறுத்துவதற்கு பேலியகொட பகுதியில் காணியொன்றை வழங்க அரசாங்கம் உடன்பாடு தெரிவித்தது.
இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களுக்கு சுங்கத்துறை விடுவிப்பு வழங்குவதில் இலங்கை தர நிர்ணய நிறுவனம், உணவு ஆணையாளர் திணைக்களம், தாவர தனிமைப்படுத்தல் பிரிவு ஆகியவற்றில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த நிறுவனங்களில் ஊழியர் பற்றாக்குறை நிலவுவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அந்த வெற்றிடங்களை நிரப்பவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் நலன்புரி கொடுப்பனவுகளை அதிகரிக்கவும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
இதற்கான நிதி தேவை இருந்தால், துறைமுக அமைச்சினால் அதை வழங்க முடியும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களுக்கு சுங்கத்துறை விடுவிப்புக்கான நேரத்தில் பணிக்கு வராத தடயவியல் எழுதுவினைஞர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தனியார் சங்கங்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தன. இந்த ஊழியர்கள் சரியான நேரத்தில் வேலைக்கு அழைத்து வரும் பொறுப்பு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களிடமே உள்ளது என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்.
உணவு சார்ந்த பொருட்களுக்கு வெளிநாட்டு ஆய்வகங்களிலிருந்து பெறப்பட்ட சான்றிதழ்கள் கட்டாயம் என்பதையும்,அதில் ஏதேனும் முறைகேடுகள் நடத்திருந்தால், அரசாங்க சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு இறக்குமதியாளர்கள் உடன்பாடு தெரிவித்தனர்.
துறைமுக வளாகத்திற்குள் கொள்கலன்களை சுங்கத்துறை விடுவிப்பு வரையான காலம் வரை கட்டணமின்றி தரித்து வைப்பதற்கான காலத்தை இரண்டு நாட்களாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டதாகவும், அடுத்த ஜூன் மாதத்திற்குப் பிறகு இதனை ஒரு நாளாகக் குறைக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த அவசரகால செயல்முறையை ஜூன் 30 ஆம் திகதி வரை தொடர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க , துறைமுகங்கள், சுங்கம் மற்றும் துறைமுகம் தொடர்பான ஏனைய சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனங்கள் யாவும் ஒரே குடும்பமாக செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
தற்பொழுது வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொள்கலன் வாகனங்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற துறைமுக சேவை வழங்கும் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர்கள் ரஸ்ஸல் அப்பொன்சு, கபில பெரேரா, இலங்கை சுங்க அதிகாரிகள், இலங்கை துறைமுக அதிகாரிகள், இலங்கை தரநிர்ணய நிறுவன அதிகாரிகள் , உணவு ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள், இலங்கை கப்பல் ஏற்றுவோர் சங்கத்தின் அதிகாரிகள், கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள், கொள்கலன் போக்குவரத்து செய்பவர்கள் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சுங்கத்துறை விடுவிப்பு அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
(-Colombo, January 01, 2025-) வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளையும் இணைத்து அனைத்து மக்களின் நம்பிக்கையையும் பெற்று 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க எம்மால் முடிந்தது. அதற்கிணங்க, மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த ஆட்சியொன்றை உருவாக்கும் நோக்கில் அன்றிருந்த அரசியல் கலாசாரத்தில் பாரிய மாற்றத்தை மேற்கொண்டு, மக்கள் ஆணையின் பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நாம் தற்போது துரிதமாக செயற்பட்டு வருகின்றோம். கிராமிய வறுமையை ஒழித்தல், ‘கிளீன் ஶ்ரீலங்கா’ […]
(-Colombo, January 01, 2025-)
வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளையும் இணைத்து அனைத்து மக்களின் நம்பிக்கையையும் பெற்று 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க எம்மால் முடிந்தது. அதற்கிணங்க, மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த ஆட்சியொன்றை உருவாக்கும் நோக்கில் அன்றிருந்த அரசியல் கலாசாரத்தில் பாரிய மாற்றத்தை மேற்கொண்டு, மக்கள் ஆணையின் பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நாம் தற்போது துரிதமாக செயற்பட்டு வருகின்றோம்.
கிராமிய வறுமையை ஒழித்தல், ‘கிளீன் ஶ்ரீலங்கா’ திட்டம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் ஆகியவை நாட்டின் முன்னணி அபிவிருத்தித் தேவைகளாக நாம் அடையாளம் கண்டுள்ளோம். அந்தப் பின்னணியில் சமூக, சுற்றாடல் மற்றும் நெறிமுறை புத்தெழுச்சியின் ஊடாக சமூகத்தை மேலும் மேம்பட்ட நிலைக்கு உயர்த்தும் நோக்கில் “கீளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டம் புத்தாண்டு உதயத்துடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த பரிமாற்றரீதியான அபிவிருத்திச் செயற்பாடுகளின் ஊடாக நாடென்ற ரீதியில் நாம் 2024 ஆம் ஆண்டில் நாம் அடைந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை மேலும் உறுதிப்படுத்த இருக்கிறோம். அனைவருக்கும் “வளமான நாடு – அழகான வாழ்வை” பெற்றுக் கொடுப்பதற்காக புதிய மனப்பாங்குகளை மேம்படுத்தி,புதிய உறுதிப்பாடுகளை மனதில் கொண்டு சகோதரத்துவத்துடன் முன்னோக்கி வருவதற்கு 2025 புதுவருட உதயத்துடன் சிறந்த வாய்ப்பு உருவாகியிருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.
சுதந்திரத்தின் பின்னர் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மக்கள் நேய அரசாங்கத்தை உருவாக்கி, அனைத்து மக்களும் ஒன்றிணைந்த அபிவிருத்தியடைந்த இலங்கை பற்றிய கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது. விட்டுக்கொடுக்க முடியாத இந்தப் பாரிய பொறுப்பு நம் அனைவரின் தோள்களிலும் சுமத்தப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. இந்த நூற்றாண்டின் தவறவிட்ட சாதனைகளை மீண்டும் நாட்டுக்கு வென்று கொடுக்கவும் மக்களின் கனவுகளை நனவாக்கவும், 2025ஆம் ஆண்டு புத்தாண்டில் மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் அர்ப்பணிக்க நடவடிக்கை எடுப்போம்.
தேசிய மறுமலர்ச்சிக்காக எங்களுடன் இணைந்து பங்காற்றும் உங்கள் அனைவருக்கும் செழுமையும் ஒற்றுமையும் புதிய நம்பிக்கையும் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
2025 ஜனவரி 01 ஆம் திகதி