(-“நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கான கூட்டம் – அம்பலாந்தோட்டை – 2024.09.12-) முன்பெல்லாம் தேர்தலொன்று வரும்போது தேர்தல் தினம் எப்போது என நாட்களை எண்ணிக்கொண்டிருந்தவர்கள் இந்த நாட்டின் ஆளுங் கும்பலாகும். எனினும் இத்தடவை தேர்தல்வரும்வரை பார்த்துக்கொண்டிருப்பவர்கள் இந்நாட்டு மக்களே. 21 அல்ல, தேர்தல் நாளை நடைபெற்றாலும் நாங்கள் வெற்றிபெறுவோம். இந்த நாட்டு மக்கள் நீண்டகாலமாக இந்த தேர்தலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த மரபுரீதியான அதிகாரப் பாங்கினை மாற்றியமைத்திட 21 ஆம் திகதி உதயமாகும் வரை […]
(-“நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கான கூட்டம் – அம்பலாந்தோட்டை – 2024.09.12-)
முன்பெல்லாம் தேர்தலொன்று வரும்போது தேர்தல் தினம் எப்போது என நாட்களை எண்ணிக்கொண்டிருந்தவர்கள் இந்த நாட்டின் ஆளுங் கும்பலாகும். எனினும் இத்தடவை தேர்தல்வரும்வரை பார்த்துக்கொண்டிருப்பவர்கள் இந்நாட்டு மக்களே. 21 அல்ல, தேர்தல் நாளை நடைபெற்றாலும் நாங்கள் வெற்றிபெறுவோம். இந்த நாட்டு மக்கள் நீண்டகாலமாக இந்த தேர்தலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த மரபுரீதியான அதிகாரப் பாங்கினை மாற்றியமைத்திட 21 ஆம் திகதி உதயமாகும் வரை இந்நாட்டு மக்கள் வழிமேல்விழிவைத்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஒருசிலநாட்களில் நாங்கள் நன்றாக உழைப்போம். உழைப்பின் மூலமாக இந்த வெற்றியை பெருவெற்றியாக மாற்றிடுவோம்.
இந்த வாய்ப்பினை நாங்கள் கைநழுவ விடமாட்டோம்.
நாங்கள் ஒருசில பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. எமது நாட்டின் அரசியல் ஊழல்பேர்வழிகளான சில அரசியல் குடும்பங்களின் கைகளில் குவிந்திருந்தது. அவர்கள் சதாகாலமும் அவர்களுக்காகவே அரசியலில் ஈடுபட்டார்கள்: ஒரு பரம்பரையிலிருந்து மற்றுமொரு பரம்பரைக்கு கொண்டுசெல்கின்ற விதத்திலாகும். அரசியல் மாத்திரமன்றி நாட்டின் வளங்களையும் சில குடும்பங்களின் கைகளில் மையப்படுத்திக் கொண்டார்கள். நாட்டு மக்களின் பணத்தை கோடிக்கணக்கில் அவர்களின் பைகளில் நிரப்பிக்கொண்டார்கள். இந்த ஊழல்மிக்க குடும்ப ஆட்சியின் கைகளிலிருந்து மக்களின் கைகளுக்கு அதிகாரம் வருகின்ற இந்த சந்தர்ப்பத்தை நீங்களும் நாங்களும் தவறவிடக்கூடாது. இந்த வாய்ப்பினை நாங்கள் கைநழுவ விடமாட்டோம். இப்போது எமக்கு நேரெதிரான தரப்பினர் மிகவும் அச்சமடைந்துள்ளார்கள். அவர்களுக்கு வலி அதிகரித்துள்ளது. அவர்கள் கணிசமான அளவில் வெறிபிடித்தவர்களாக உள்ளார்கள். அதனால் எதிர்வரும் சில நாட்களில் அவர்களிடமிருந்து நழுவிச்செல்கின்ற அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக எப்படிப்பட்டவற்றை செய்யவேண்டுமென அவர்கள் சிந்தித்துக்கொண்டு, கலந்தாலோசித்து வருகிறார்கள். அவர்கள் என்ன செய்தாலும் பலனில்லை.
இப்போது இந்நாட்டு மக்கள் இனவாதத்திற்கு எதிராக தேசிய ஒற்றுமையின் கொடியை கையிலேந்தி இருக்கிறார்கள்
தேசிய மக்கள் சக்தியின் அரசியல் இயக்கம் தற்போது மக்களின் கைகளிலேயே இருக்கின்றது. மக்கள் இப்போது எங்களின் அரசியல் இயக்கத்தை அவர்களின் கைகளில் எடுத்துவிட்டார்கள். குறைகூறல்கள், வெறிபிடித்த பிரதிபலிப்புகளால் இதனை திசைதிருப்ப முடியாது. எவருக்கேனும் சந்தேகம் நிலவுமாயின் நாங்கள் இந்த விடயங்களை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் எமது நாட்டின் அரசியல் மேடையில் மிகவும் அதிகமாக பேசப்பட்ட விடயம் இனம், மதம், நாட்டைப் பாதுகாத்துக் கொள்வது பற்றியாகும். மகிந்தாக்கள் கோட்டாபயாக்கள் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இனவாத, மதவாத போராட்டக் கோஷங்களையே பாவித்தார்கள். தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களை ஒருவருக்கொருவர் எதிராக வைத்து தமது அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்கின்ற இனவாத போராட்டக் கோஷங்களையே அவர்கள் அதிகமாக பாவித்தார்கள். தமது அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உணவு, உடைகள் தொடக்கம் உயிர்த்தஞாயிறு தாக்குதல்வரை அவர்கள் இனவாதத்தைப் பாவித்து இனவாதத்தின் ஊடாக சென்றால் இந்த நாடு இருள்மயமான படுகுழிக்குள்ளேயே விழுமென்பதை இப்போது மக்கள் படிப்படியாக உணர்ந்து வருகிறார்கள். இப்போது இந்நாட்டு மக்கள் இனவாதத்திற்கு எதிராக தேசிய ஒற்றுமையின் கொடியை கையிலேந்தி இருக்கிறார்கள். எனினும் இன்றளவில் மீண்டும் இனவாதம் மற்றும் மதவாதம் என்பவற்றைக் களமிறக்கத் தொடங்கி உள்ளார்கள்.
ஒருதுண்டு கல்லைக்கூட கையில் எடுக்கவேண்டாமென நாங்கள் எங்கள் அங்கத்தவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்
நாங்கள் கலவரங்களை ஏற்படுத்தப் போவதாக இப்போது கூறுகிறார்கள். வெற்றிபெறப் போகின்ற தேர்தலுக்காக கலவரங்களை ஏற்படுத்தப்பபோவது யார்? எமக்கு அமைதியான ஒரு தேர்தலே அவசியம். தோற்பவர்களுக்குத் தான் கலவரங்கள் தேவை, அவர்களுக்குத்தான் மோதல்கள் தேவை, சமூகத்தில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த வேண்டியது தேவை. அதனால் தேர்தல் வரையும் தேர்தல் தினத்தன்றும் தேர்தலுக்குப் பின்னரும் உச்சஅளவில் அமைதியான சூழ்நிலைக்காக இடையீடுசெய்கின்ற இயக்கம் தேசிய மக்கள் சக்தியாகும். எனினும் அவர்கள் மீண்டும் மீண்டும் இதனைக் கூறுவதிலிருந்து இதன் பின்னணியில் ஏதொவொரு சதித்திட்டம் இருக்கின்றதோ எனும் சந்தேகம் எமக்கு எழுகின்றது. ஒருதுண்டு கல்லைக்கூட கையில் எடுக்கவேண்டாமென நாங்கள் எங்கள் அங்கத்தவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். இந்த நாட்டு மக்களின் விருப்பத்துடன் அரசாங்கமொன்றை மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கின்றதென நாங்கள் பொலீஸாரிடம் தெரிவித்துக்கொள்கிறோம். அது நாட்டின் ஜனநாயகம். எமது நாட்டின் பொலீஸார், இராணுவம், விசேட அதிரடிப் படையினர் இவையனைத்துமே நாட்டின் அரசியலமைப்பினை பாதுகாப்பதற்கான கடப்பாடு கொண்டிருக்கின்றன. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான கடப்பாடு கொண்டிருக்கின்றன. அதனால் தோல்வியடைகின்ற தரப்பினரால் ஏதேனும் சதிவேலையை புரிவதற்கான தயார்நிலை இருக்குமாயின் ஓர் அரசியல் இயக்கமென்றவகையில் அதனைத் தடுக்க நாங்கள் ஆவனசெய்வோம்.
ரணில் ஐயா! இதில் வீழ்வதற்கு இன்னும் என்ன எஞ்சியிருக்கிறது?
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் வந்தால் பொருளாதாரம் வீழச்சியடைந்துவிடுமென அடுத்ததாக கூறுகிறார்கள். ரணில் அவர்களே இதைவிட பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைய என்ன இருக்கின்றது? உலகில் கடனை திருப்பிச் செலுத்தாத ஒரு நாடு. உலகமும் கடன் கொடுக்காத ஒரு நாடு. வைத்தியசாலைகளில் மருந்து இல்லாத ஒரு நாடு. இளைஞர்களால் ஒரு தொழிலைத் தேடிக்கொள்ள முடியாத நாடு. தொழில்தேடி நாட்டைக் கைவிட்டுச் செல்லவேண்டிய நிலையேற்பட்டுள்ள ஒரு நாடு. கமக்காரர்களுக்கு விவசாயத்திலிருந்து முறையான வருமானம் கிடைக்காத ஒரு நாடு. கடலுக்குச் செல்லமுடியாமல் மீன்பிடிப் படகுகள் கரையில் குவிந்துள்ள ஒரு நாடு. தொழில்முயற்சியாளர் தமது கடன்களை மீளச்செலுத்த முடியாமல் இறுகிப்போயுள்ள நாடு. முச்சக்கரவண்டி வாங்கி லீசிங் தவணையைச் செலுத்த முடியாதுள்ள நாடு. மக்களுக்கு மூன்றுவேளை உண்ணக்கிடைக்காத ஒரு நாடு. போதைப்பொருள் நிரம்பி வழிகின்ற ஒரு நாடு. ரணில் ஐயா! இதில் வீழ்வதற்கு இன்னும் என்ன எஞ்சியிருக்கிறது? வீழ்ந்துவிட்டோம். வீழ்ந்த இந்த நாட்டை மீட்டெடுக்கவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வருகின்றது. 76 வருடங்களாக நீங்கள் இந்த நாட்டை வீழ்த்தினீர்கள். தற்போது எங்களால் செலுத்த முடியாமல் போயுள்ள சர்வதேச இறையாண்மை முறிக்கடன் 12.5 பில்லியன் டொலர்களாகும். இந்த 12.5 பில்லியன் டொலர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பெற்ற கடனாகும். இதுதான் நாட்டை வீழ்த்திய விதம். அதேநேரத்தில் ரணில் அரச நிறுவனங்களை விற்கும்போது நாங்கள் அதற்கெதிராக குரல் எழுப்பவில்லையென சஜித் கூறுகிறார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்று காசோலையை வாங்கும்போது சஜித் காசோலையை வணங்கிக்கொண்டு இருக்கிறார். நீங்கள் பார்த்திருப்பீர்கள். நாங்கள் எதிராக குரல் எழுப்பவில்லையென அப்படிப்பட்ட மகன் கூறுகிறார். இப்போது அவர் திகைப்படைந்து இருக்கிறார். எங்கள் மேடையில் கூறவேண்டிய ஒருசிலவற்றை அவர் அவருடைய மேடையில் கூறுகிறார். அவர் குழப்பியடித்துக் கொள்கிறார். என்ன கூறவேண்டுமென அவரால் நினைத்துக்கொள்ள முடியாது.
செப்டெம்பர் 21 ஆந் திகதி எமது நாட்டின் வரலாற்று முக்கியம் வாய்ந்த தினமாகும்
நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்று 03 – 04 மாதங்களில் செய்கின்ற வேலைகளைப் பார்த்தால் எங்களுக்கு வாக்களிக்காதவர்களும் அநியாயம் நாங்களும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கவில்லையே என நினைப்பார்கள். நாங்கள் அமைப்பது 06 மாதங்களில் 01 வருடத்தில் விழ்கின்ற அரசாங்கத்தையல்ல. வீழ்த்தக்கூடிய அரசாங்கத்தையல்ல. இங்கு கட்டியெழுப்பப்படுவது நாட்டு மக்களுடன் ஒருங்கிணைந்த அரசாங்கமாகும். தற்போது எங்கள் தேர்தல் இயக்கத்தை முன்னெடுத்து வருபவர்கள் மக்களாவர். நீங்கள் இந்த கூட்டங்களுக்கு வந்து கைதட்டி 21 ஆந் திகதி வரை கைகட்டிக்கொண்டு இருக்கப்போகிறீர்களா? இல்லை. மற்றவர்களை சந்திக்கிறார்கள். எமது செய்தி போகின்றது. எமது பக்கம் இன்னமும் திரும்பியிராதவர்களை திருப்பிக்கொள்கிறார்கள். நீங்கள் அந்த முயற்சியில் நிலைதளராமல் இருக்கிறீர்கள். அதில் சந்தேகமே கிடையாது. இவ்வளவு பெருந்தொகையான மக்கள் எங்களுடன் தன்னிச்சையாக இணைந்திருப்பது 06 மாதங்களில் கைவிட்டுச் செல்வதற்காகவா? 06 மாதங்களில் வீழ்த்திவிடுவதற்காகவா? இல்லை. இந்த நாட்டுக்கு அவசியமான அனைத்துவிதமான பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பினை ஏற்படுத்துவோம். அதனால் செப்டெம்பர் 21 ஆந் திகதி எமது நாட்டின் வரலாற்று முக்கியம் வாய்ந்த தினமாகும். 21 ஆந் திகதிதான் இதுவரை அவர்கள் கையிலிருந்த அதிகாரம் பொதுமக்களின் கைகளுக்கு கைமாறுகின்ற தினமாகும்.
நாட்டின் முன்னால் மக்களின் முன்னால் ஒரே இடத்தில் இருந்துகொண்டு வாதம் புரிவோம்.
இப்போது ரணில் விக்கிரமசிங்க ஏதோ கூறிக்கொண்டு நாட்டைச்சுற்றிக் கொண்டிருக்கிறார். எனக்கு சவால் விடுக்கிறார். அவர் ஏதேதோ கூறி பதிலளிக்குமாறு என்னிடம் கூறுகிறார். இது உடனடிக் கவிதை அரங்கமா? அவருக்கு பொருளாதாரம் பற்றிய முறைசார்ந்த உரையாடல் அவசியமாயின் தொலைக்காட்சி அலைவரிசையொன்றை தெரிவுசெய்வோம். நான் வருவேன். நாட்டின் முன்னால், மக்களின் முன்னால், ஒரே இடத்தில் இருந்துகொண்டு வாதம் புரிவோம். ஐ.எம்.எஃப். பிரதிநிதிகளை கூட்டிக்கொண்டு வரத்தேவையில்லை. ஐ.எம்.எஃப். தேர்தலில் போட்டியிடுகின்றதா? அவர் கூறுவது சிறுபிள்ளைத்தனமான கதைகளையே. எந்தவிதமான பொறுப்பும் கிடையாது. அவர் கூறுவது என்னவென்று அவருக்கே தெரியாது. அவர் கூறுவதை கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் விளங்கமாட்டாது. தேர்தலொன்றில் இருக்கின்ற சிக்கலானதன்மையும் பொறுப்புடைமையும் அவருக்குத் தெரியாது. சஜித்தைப் பற்றிப் பேசுவதில் பயனில்லை. இந்த அம்பலாந்தோட்டை மக்களுக்கு அவரை நன்றாகவே தெரியுமல்லவா? நாங்கள் செப்டெம்பர் 21 ஆந் திகதி வெற்றிபெறுவோம், அது உறுதியானது. எங்களுக்கு அம்பலாந்தோட்டையிலிருந்தும் சிறந்த பெறுபேறு தேவை. அம்பாந்தோட்டை மாவட்டம்தான் எமக்கு சதாகாலமும் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த மாவட்டம். நீங்கள் எங்களுக்கு அமோக வெற்றியை பெற்றுக்கொடுப்பீர்களென்பதில் சந்தேகம் கிடையாது.
எமது நாட்டின் ஒரு பிள்ளைகூட போதைப்பொருள் தொல்லைக்கு இரையாகக்கூடாது.
நாங்கள் அதிகாரத்தை பெற்றபின்னர் இந்த நாட்டில் பயிர்செய்யக்கூடிய காணிகள் அனைத்தையும் பயிர்செய்யுமாறு நாங்கள் விவசாயிகளிடம் கேட்டுக்கொள்கிறோம். ஒருதுண்டு காணியையேனும் தரிசுநிலமாக இடமளிக்கவேண்டாம். பயிர்செய்வதற்கு அவசியமான எல்லா வசதிகளையும் நாங்கள் உங்களுக்கு பெற்றுக்கொடுப்போம். தற்போது பாதாளக்கோஷ்டி, போதைத்தூள் தீத்தொழில் நாட்டை ஆக்கிரமித்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் நாட்டின் அரசியல்வாதிகளாவர். ஒரு தடவை கொழும்பில் உறுப்பினர் ஒருவரின் வாகனத்தில் இருந்து 8 கிலோ போதைத்தூள் அகப்பட்டது. கேகாலையில் இருந்த முதலமைச்சரின் ஜீப் மூலமாகத்தான் அநுராதபுரத்திற்கு கஞ்சா இழுத்தார்கள். பொலீஸில் மாட்டிக் கொண்டார்கள். அவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. குற்றச்செயல்புரிபவர்கள். எமது நாட்டின் ஒரு பிள்ளைகூட போதைப்பொருள் தொல்லைக்கு இரையாகக்கூடாது. நாங்கள் அதற்கு இடமளிக்கமாட்டோம். எமது ஆட்சியன்கீழ் நாங்கள் போதைத்தூள், குற்றச்செயல்கள் அற்ற ஒரு நாட்டை உருவாக்குவோம். நாங்கள் எவருக்கும் கடப்பாடு கொண்டவர்களுமல்ல: பயந்தவர்களும் அல்ல. பொலீஸாருக்கு நாங்கள் பாதாள உலகத்தையும் போதைத்தூளையும் ஒழித்துக்கட்ட அவசியமான அதிகாரத்தைக் கொடுப்போம். நாங்கள் ஒன்றுசேர்ந்து இந்த நாட்டை அழிவிலிருந்து விடுவித்துக்கொள்வோம்.
எல்லாவற்றிலும் புதுதன்மை அடைகின்ற, மாறிவருகின்ற நாட்டை, அனைத்துத் துறைகளிலும் புதியவை உருவாக்கப்படுகின்ற நாட்டை, எல்லாப் பக்கத்திலும் உலகத்தாருடன் முன்நோக்கி நகர்கின்ற தேசத்தை நாங்கள் கட்டியெழுப்புவோம். அதற்காக செப்டெம்பர் 21 ஆந் திகதி திசைகாட்டியை வெற்றிபெறச் செய்விப்போம். அதற்காக உச்சமட்டத்தில் இடையீடுசெய்ய ஒன்றுசேருமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
(-தேசிய மக்கள் சக்தியின் தோ்தல் கண்காணிப்பு நிலையத்தின் ஊடக சந்திப்பு – 2024-09-11-) ஜனாதிபதி தோ்தல் பிரகடனம் செய்யப்பட்டுள்ள தருணத்தில் செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள் 1981 இல் 15 ஆம் இலக்கமுடைய ஜனாதிபதியொருவரை தெரிவு செய்வதற்கான சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற வேட்பாளரும் மேலும் பலரும் இந்த சட்டத்தை தொடர்ச்சியாக மீறுதல் பற்றி மொத்தமாக 358 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பான 178 முறைப்பாடுகளும், சட்டமுறையான தோ்தல் இயக்கங்களுக்கு தடை […]
(-தேசிய மக்கள் சக்தியின் தோ்தல் கண்காணிப்பு நிலையத்தின் ஊடக சந்திப்பு – 2024-09-11-)
ஜனாதிபதி தோ்தல் பிரகடனம் செய்யப்பட்டுள்ள தருணத்தில் செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள் 1981 இல் 15 ஆம் இலக்கமுடைய ஜனாதிபதியொருவரை தெரிவு செய்வதற்கான சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற வேட்பாளரும் மேலும் பலரும் இந்த சட்டத்தை தொடர்ச்சியாக மீறுதல் பற்றி மொத்தமாக 358 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பான 178 முறைப்பாடுகளும், சட்டமுறையான தோ்தல் இயக்கங்களுக்கு தடை ஏற்படுத்துதல் தொடர்பான 06 முறைப்பாடுகளும், வன்முறை செயல்கள் சம்பந்தமாக 26 முறைப்பாடுகளும், மக்கள் அபிப்பிராயம் மீது முறைதகாதவகையில் அழுத்தம் கொடுத்தல் பற்றிய 104 முறைப்பாடுகளும், அரச வளங்களின் துஷ்பிரயோகம் சம்பந்தமாக 62 முறைப்பாடுகளும், அரச உத்தியோகத்தர்களை தோ்தல் நடவடிக்கைகளில் முறை தகாதவகையில் ஈடுபடுத்துதல் சம்பந்தமாக 33 முறைப்பாடுகளும் என்ற வகையில் இவை கிடைத்துள்ளன.
இந்த அனைத்து முறைப்பாடுகள் சம்பந்தமாகவும் தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கும் பொலிசுக்கும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பில் சாதகமான பிரதிபலிப்புக்கள் கிடைத்து சட்டவிரோத செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தோ்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது. அரச ஆதனங்கள் எனும் பதத்தில் தோ்தல்கள் சட்டத்திற்கிணங்க உத்தியோகத்தர்களும் உள்ளடங்குவர். ரணில் விக்கிரமசிங்கவின் தோ்தல் இயக்கத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்காக அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவது முனைப்பான ஒரு விடயமாக அமைந்துள்ளது. ரணவிரு சேவா அதிகார சபை மூலமாக இராணுவ வீரர்களை அழைப்பித்து அவர்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்த தயாராகி வருவது உறுதியாகி இருக்கிறது. நாளை (12 ஆம் திகதி) ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சார அலுவல்களை மேம்படுத்துவதற்கான மாநாடொன்றினை நடாத்த ஏற்பாடு செய்துள்ளார். அரசாங்க வாகனங்களும் உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இதனை ஏற்பாடு செய்தவர் ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவராவார். அதைப்போலவே அரசாங்கத்திற்கு சொந்தமான வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் எல்.ஆர்.டி.சி. பாதுகாப்பு கம்பெனியின் ஊழியர்களையும் கடமைக்கு சமூகமளித்த பின்னர் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறும் போக்குவரத்து வசதிகளை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“போலி ஆவணம் தயாரித்தவர்கள் மாத்திரமல்ல பிரச்சாரம் செய்த சமூக ஊடகங்களும் பொறுப்புக்கூறவேண்டும்.”
-தேசிய மக்கள் சக்தி தோ்தல் கண்காணிப்பு அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி அகலங்க உக்வத்த-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு சுயேட்சை வேட்பாளராக தோ்தலில் போட்டியிட முன்வந்துள்ளபோதிலும் சுயாதீனத்தன்மையை வெளிப்படுத்தாமல் அரச வளங்கள், ஆதனங்கள், அரச உத்தியோகத்தர்கள், இராணுவ உத்தியோகத்தர்கள், விமான நிலைய உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். எனினும் அந்த செயல்களை நிறுத்துவதற்கான ஆக்கமுறையான பிரதிபலிப்பு தென்படவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியை போன்றே சுயேட்சை வேட்பாளர் ஆகிய இருவரும் ஊடகங்களை பாவித்து தொடர்ச்சியாக பொய்யான விடயங்களையும் சேறு பூசல்களையும் மேற்கொண்டு வருகிறார்கள். அவ்வாறான செயல்கள் தோ்தல் தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ஆங்காங்கே பதிவாகியபோதிலும் இன்றளவில் அன்றாடம் பல சம்பவங்கள் பற்றி பதிவாகி வருகின்றது. பிரச்சார நடவடிக்கைகளுக்காக எஞ்சியுள்ள ஒரு வாரகாலத்திற்குள் இந்த நிலைமை தொடர்ந்தும் வளர்ச்சியடைவதற்காக செயலாற்றிக் கொண்டிருப்பதும் எமக்கு அறியக்கூடியதாக உள்ளது.
அந்த விடயங்கள் சம்பந்தமாக முறைப்பாடு செய்வதே எங்களுடைய பொறுப்பாகும். புலனாய்வு செய்வது தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கும் பொலிசுக்கும் பொறுப்பான விடயமாகும். இது சம்பந்தமாக துரிதமாக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் 22 ஆம் திகதிக்கு பின்னரேனும் பெற்றுக்கொள்ள வேண்டிவரும். போலியாவணம் பிரச்சாரம் செய்தல் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. இவை தண்டனைச் சட்டகோவையின் 154 தொடக்கம் 159 வரையான பிரிவுகளில் உள்ளடக்கப்பட்ட கடுமையான விடயங்களாகும். தோ்தல் காலத்தின் பின்னர் இது சம்பந்தமாக சிக்கலொன்று ஏற்படமாட்டாதென சமூக ஊடகங்களை பாவித்து இந்த சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் நினைத்துக்கொண்டிருப்பார்களாயின் அது அப்படியல்ல. போலியாவணம் புனைந்தவர்கள் மாத்திரமல்ல அவற்றை பிரச்சாரம் செய்த சமூக ஊடகங்களும் பொறுப்புக்கூற வேண்டும். தண்டனைச் சட்டக்கோவை அமுலில் இருக்கிறது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் காலை நேர நிகழ்ச்சிகள் பற்றியும் விசேட கவனம் செலுத்தினால் நீண்டகாலமாக சமூகத்தில் துர்நாற்றம் வீசுகின்ற ஒரு நிகழ்ச்சியாக இனம்காணப்பட்டிருந்தது. இப்பொழுது அது மிகவும் அருவருக்கத்தக்க வித்தத்தில் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவரால் தேசிய மக்கள் சக்தியின் தலைவரையும் அரசியல் இயக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு பொய்யான விடயங்களையும் தோ்தலை அடிப்படையாகக் கொண்டு மக்களின் மனங்களை திரிபுபடுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக தனித்துவமான முறைப்பாடொன்று நாளையதினம் மேற்கொள்ளப்படும். அவரால் தலைவர் வகிபாகத்தை தோ்தல் காலத்தில் முறைப்படி ஈடேற்ற முடியாவிட்டால் தகுதிவாய்ந்த அதிகாரியின் கீழ் கொண்டுவருமாறு கோரிக்கை விடுக்க நேரிடும். இந்த துர்நாற்றத்தை தாங்கிக் கொள்வது சமூகத்திற்கு மிகவும் சிரமமானதாகும். அதனை நீக்கவேண்டும். அரச நிறுவனமொன்றான ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இந்த செயற்பாடு சம்பந்தமாக ஏற்கெனவே எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதென்பதை அறியக்கூடியதாக இருக்கிறது. தோ்தல் சட்டம் மாத்திரமன்றி குற்றவியல் சட்டத்தையும் மீறி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் புரிகின்ற இந்த செயல்கள் சுதந்திரமானதும் நியாயமானதுமான தோ்தல் நடைமுறைக்கு தடையாக அமைந்துள்ளது.
“பொதுமக்கள் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தோ்தலையே எதிர்பார்க்கிறார்கள்”
-தேசிய மக்கள் சக்தியின் இளைப்பாறிய பொலிஸ் கூட்டமைவின் பிரதானி இளைப்பாறிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனெவிரத்ன-
கடந்த 30 ஆம் திகதிவரை எமக்கு பதிவாகிய தோ்தல் வன்செயல்கள் மற்றும் சட்டமீறல்கள் சம்பந்தமாக பொலிஸ் தலைமையகத்தின் தோ்தல் தொழிற்பாடுகள் பணியகத்தில் முறைப்பாடு செய்திருக்கிறோம். அந்த முறைப்பாடுகள் பற்றி ஆக்கமுறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம். மக்கள் எதிர்பார்ப்பது சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தோ்தலையே. அரசியல் இயக்கமென்ற வகையில் நாங்களும் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தோ்தல் இயக்கத்திற்காக முழுமையாக எங்களை அர்ப்பணித்துள்ளோம். எனினும் ஒரு சில சந்தர்ப்பங்களில் தேசிய மக்கள் சக்தியை இலக்காகக் கொண்டு வன்முறை செயல்கள் புரியப்படுவது பதிவாகியுள்ளது. கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஒரு வீட்டுக்குச் சென்று இவ்வாறு அச்சுறுத்தியிருக்கிறார்கள். ராஜகிரியவிலும் மருதானையிலும் இரண்டு அச்சகங்களில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரை இலக்காகக் கொண்டு சேறுபூசும் போஸ்டர்கள் அச்சிடப்பட்டு வருவதாக இன்று காலை பதிவாகியது. அது சம்பந்தமாக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் தயாராகிவருகிறோம்.
அதைப்போலவே கழிந்த 07 நாட்களுக்குள் இடம் பெற்றுள்ள சட்டவிரோதமான செயல்கள் பற்றிய விபரமொன்றை சமர்ப்பிக்கிறேன். செப்டெம்பர் 03 ஆம் திகதி மகாஓயா பிரதேச செயலாளர் பிரிவில் பொல்லபெத்த பிரிவில் அமைந்திருந்த தோ்தல் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே நோனாகம உஹபிட்டகொடவில் அமைந்திருந்த தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தின் முன்னால் காணப்பட்ட பதாகையை உடைத்து எடுத்துச் சென்றிருக்கிறார்கள். செப்டெம்பர் 07 ஆம் திகதி ஹாரிஸ்பத்துவ, உகுரெஸ்ஸபிட்டிய அலுவலகம் மீதும் கம்பொல, தெல்பிட்டிய அலுவலகத்திற்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே பிபில பொலிஸ் பிரிவில் “அதிட்டன” இளைப்பாறிய முப்படை அங்கத்தவரொருவரின் வீட்டுக்கு கல்லெறிந்து சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. அதைப்போலவே செப்டெம்பர் 08 ஆம் திகதி நாத்தண்டிய, இரணவில பிரதேசத்தின் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் 10 ஆம் திகதி கம்பொல, அட்டபாகே அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அன்றையதினமே திஸ்ஸமஹாராம, ரன்மிணிதென்ன பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த முறைப்பாடுகளை நோக்கும்போது தோ்தல் சார்ந்த வன்முறை சம்பவங்களின் தெளிவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை தெளிவாகிறது. தேசிய மக்கள் சக்தியை சோ்ந்தவர்களின் முழுமையான ஒத்துழைப்பு தோ்தல்கள் செயலகத்திற்கும் பொலிசுக்கும் வழங்கப்படுகிறது. சுதந்திரமான, நீதியான மற்றும் அமைதியான தோ்தலை நடத்துவதே எம்மனைவரின் எதிர்பார்ப்பாகும். தோ்தல்கள் ஆணைக்குழு அந்த எதிர்பார்ப்பினை ஈடேற்றுமென எதிர்பார்க்கிறோம்.
(-‘நாடு அநுரவோடு’ தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – தம்புத்தேகம – 2024-09-09-) இதற்கு முன்னர் இந்த தோ்தல் மல்யுத்தம் அவர்களின் ஒரு சில குடும்பங்கள் மத்தியிலேயே நிலவியது. இன்று 2024 இல் அது ஒரு சில வளவுகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான போராட்டமாக மாறியுள்ளது. தேசிய மட்டத்திலிருந்து ஊர்கள் வரை இந்த போராட்டம் வியாபித்துள்ளது. இதுவரை காலமும் ஒரு சில குடும்பங்களே இந்த நாட்டை ஆட்சி செய்தன. ஆனாலும் நாட்டுக்கு எதையாவது செய்திருந்தால், மக்களை துன்ப […]
(-‘நாடு அநுரவோடு’ தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – தம்புத்தேகம – 2024-09-09-)
இதற்கு முன்னர் இந்த தோ்தல் மல்யுத்தம் அவர்களின் ஒரு சில குடும்பங்கள் மத்தியிலேயே நிலவியது. இன்று 2024 இல் அது ஒரு சில வளவுகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான போராட்டமாக மாறியுள்ளது. தேசிய மட்டத்திலிருந்து ஊர்கள் வரை இந்த போராட்டம் வியாபித்துள்ளது. இதுவரை காலமும் ஒரு சில குடும்பங்களே இந்த நாட்டை ஆட்சி செய்தன. ஆனாலும் நாட்டுக்கு எதையாவது செய்திருந்தால், மக்களை துன்ப துயரங்களிலிருந்து மீட்டெடுத்திருந்தால் பரவாயில்லை. பல தசாப்தங்களாக என்னை உள்ளிட்ட நீங்களும் இந்த அனர்த்தத்தை பார்த்துக் கொண்டிருந்தீர்கள். நாங்கள் சிறிய மனிதர்கள் என்றாலும் திடசங்கற்பம் கொண்டவர்கள். நோக்கத்தை கைவிடாத மக்கள்.
மரணம் எங்கள் வீட்டுக் கதவுகளை தட்டிக்கொண்டிருந்தது.
நான் இந்த அரசியல் பயணத்தை 1988 இல் தம்புத்தேகம மத்திய மாகாண பாடசாலையில் கல்வி பயின்ற காலத்திலிருந்தே தொடங்கினேன். அந்த பயணம் தற்போது 36 வருடங்களாக தொடர்கிறது. நாங்கள் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்நோக்கியுள்ளோம். எங்கள் நண்பர்கள் எங்கள் கண்ணெதிரில் இறந்ததை கண்டிருக்கிறோம். மரணம் எங்கள் வீட்டுக் கதவுகளை தட்டிக்கொண்டிருந்தது. எனினும் இந்த நாட்டையும் மக்களையும் இந்த அனர்த்தத்திலிருந்து விடுவித்துக்கொள்வதற்கான திடசங்கற்பத்தை நாங்கள் கைவிடவில்லை. 1994 இல் இருந்து நாங்கள் மீண்டும் ஓரளவு தலைத்தூக்கத் தொடங்கினோம். வெற்றிகளை பெற்றோம். பின்னடைவுகளை சந்தித்தோம். ஒரு சிலர் எம்மை விட்டு நீங்கிச் சென்றார்கள். குறைகூறல்கள் வந்தன. பொய்யான தகவல்கள் வரத்தொடங்கின. சதி வேலைகள் இயங்கத் தொடங்கின. எனினும் இந்த முயற்சியில் எங்கேயாவது என்றாவது ஒரு நாள் வெற்றிபெறுவோம் என்கின்ற கடுமையான திடசங்கற்பத்தை நாங்கள் கைவிடவில்லை. இந்த 36 வருடங்களுக்குள் நான் 24 வருடங்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கிறேன்.
நாங்கள் எவருமே தனிப்பட்ட முறையில் எங்களுக்கு ஏதாவது ஈட்டிக்கொள்ளும் நோக்கத்துடன் அரசியல் புரிய வந்த மனிதர்கள் அல்ல.
நாங்கள் இந்த அரசியலிலியிருந்து ஒரு சதத்தைக்கூட ஈட்டிக்கொள்ளாதவர்கள். பொதுப்பணத்தில் ஒரு சதம் கூட விரயம் செய்யாதவர்கள். நாங்கள் எவருமே தனிப்பட்ட முறையில் எங்களுக்கு ஏதாவது ஈட்டிக்கொள்ளும் நோக்கத்துடன் அரசியல் புரிய வந்த மனிதர்கள் அல்ல. நாங்களும் பல்கலைக்கழகங்களுக்கு சென்று பட்டம் பெறுகிறோம். தொழில் ஒன்றை புரிந்து தனிப்பட்ட முறையில் ஒரு வாழ்க்கைத்தரத்திற்கு அமைவாக வாழ்க்கையை நடாத்திச் செல்லக்கூடிய மனிதர்கள். இந்த மேடையில் இருக்கின்ற தோழர் வசந்த சமரசிங்கவும் அப்படித்தான். எங்களுக்கு எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள கல்வி மூலமாகவும் பாதைகள் நிலவின. அரசியல் பக்கத்திலும் பாதைகள் இருந்தன. எனினும் இந்த நாட்டையும் மக்களையும் இந்த அனர்த்தத்திலிருந்து மீட்டெடுக்கும் நற்பணியை ஒரு புறம் ஒதுக்கிவைக்க எங்களுக்கு தார்மீக உரிமை கிடையாது. இந்த தொலைதூர கிராமங்களில் எவ்வளவோ பெருந்தொகையான மக்கள் வறுமையால் வாடுகிறார்கள்? எமது உறவினர்கள், நண்பர்கள் இந்த வறுமையில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொண்ட தருணங்களை நாங்கள் கண்டிருக்கிறோம். பாரிய எதிர்பார்ப்புடன் வளர்த்தெடுக்கின்ற தமது பிள்ளைக்கு முறையான கல்வியை வழங்க முடியாமல் தமது கண்ணெதிரில் நாசமாகின்ற விதத்தை கண்டு பெருமூச்சு விடவேண்டிய நிலை பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஊர்களின் குடும்பங்களில் தமது பிள்ளைகளை தவிக்கவிட்டு, கணவன்மார்களை கைவிட்டு எமது தாய்மார்கள் சகோதரிகள் மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப்பெண்களாக தொழில்களுக்கு போய் இருக்கிறார்கள் அல்லவா? அவற்றில் எத்தனை குடும்பங்கள் நாசமாகியிருக்கின்றன? மத்திய கிழக்கிற்கு சென்ற எமது தாய்மார்களும் அக்காமார்களும் பலவிதமான துன்பங்களை எதிர்நோக்கி வருகிறார்கள். நாங்கள் அவற்றையெல்லாம் கண்டிருக்கிறோம்.
இந்த அத்தனை பேருடைய வண்டவாளங்களையும் நான் அறிவேன்
எங்களுடைய ஊர் மக்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது? பிறக்கிறார்கள் ஏதாவது செய்கிறார்கள் செத்து மடிகிறார்கள். எங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையா தேவை? கிடையாது. எங்கள் மக்களுக்கு தமது வாழ்நாளில் மகிழ்ச்சியாக நல்ல உணவு வேளையொன்று, ஆரோக்கியமான வாழ்க்கை, பொழுதுபோக்கு, மகிழ்ச்சி தேவையில்லையா? அந்த வாழ்க்கை அந்த வர்க்கத்தை சோ்ந்தவர்களுக்கு மாத்திரம் தான் உரித்தானதா? எமது ஊரில் உள்ளவர்களுக்கு அந்த வாழ்க்கை உரித்தற்றதா? நீங்கள் இயலுமானவரை இந்த பெருநிலத்துடன் மல்லுகட்டுகிறீர்கள். விளைச்சலை விற்பனை செய்ய எவ்வளவோ கஷ்டப்படுகிறீர்கள்? எனினும் அவர்கள் மேலே இருந்துகொண்டு பொது திறைசேரியின் பணத்தை எப்படி திருடுவது? என திட்டம் தீட்டுகிறார்கள். நீங்கள் ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ள எவ்வளவோ பிரச்சினைகளை எதிர்நோக்குகிறீர்கள். அவர்கள் ஒரு டீல் மூலமாக கொழும்பில் மிகவும் சொகுசான அப்பாற்மண்ட் ஒன்றை கொள்வனவு செய்கிறார்கள். ஒரு கொடுக்கல் வாங்கலில் துபாயில் இங்கிலாந்தில் அவுஸ்ரேலியாவில் வீடுகளை வாங்குகிறார்கள். அமெரிக்காவில் வீடுகளை வாங்குகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு அதிகாரத்தை கொடுக்கிறீர்கள். உங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறார்கள். அவர்கள் நாட்டின் செல்வத்தை வாரிச்சுருட்டிக் கொள்கிறார்கள். அது தான் இந்த முறைமை. நாங்கள் சிறுபராயத்தில் இதனை அவ்வளவு ஆழமாக காணவில்லை. ஆனால் இந்த அரசியலை மாற்ற வேண்டுமென எமக்கொரு ஆசை இருந்தது. அத்தகைய அரசியலில் தொடர்ச்சியாக ஈடுபடுகையில் இவர்கள் எவ்வளவு வெட்கமில்லாத மனிதர்கள் என்பதை நாங்கள் கண்டோம். நான் 24 வருடங்களாக பாராளுமன்றத்தில் இருக்கிறேன். இந்த அத்தனை பேருடைய வண்டவாளங்களையும் நான் அறிவேன். அவர்கள் எப்படி தமக்கும் தமது குடும்பத்திற்கும் வழிசமைத்துக்கொள்வது எனப்பார்ப்பார்கள். மக்களுக்கு குழிதோண்டி அவர்களின் எதிர்காலத்திற்கான பாதையை அமைத்துக் கொள்கிறார்கள். அன்று தபால் நயின்டீனில் பயணித்த அவர்கள் இன்று பாரிய மாளிகைகளை அமைத்துக் கொள்கிறார்கள். ஏழு எட்டு வாகனங்களை கொள்வனவு செய்கிறார்கள். நாங்கள் கண்கூடாகவே பார்த்திருக்கிறோம். சாரதியாக தொழில் புரிந்த ஒரு சிலர் அரசியலுக்கு வந்து கலாவெவில், கொழும்பு, நுவரெலியாவில் பாரியளவிலான காணிகளை எவ்வாறு வாங்கினார்கள் என்று எங்களுக்கு தெரியும். தேயிலை கொழுந்தை போக்குவரத்துச் செய்தவர்கள் அரசியலுக்கு வந்து எப்படி தேயிலைத்தோட்ட சொந்தக்காரர்களாக மாறினார்கள் என எங்களுக்கு தெரியும்.
இந்த நாட்டை செல்வந்த நாடாக மாற்ற எங்களுக்கு உரிமை கிடையாதா?
ரணில் விக்கிரமசிங்க 2015 ஜனவரி 08 ஆம் திகதி ஊழல் மோசடியை இல்லாதொழிப்பதாக கூறியே அதிகாரத்திற்கு வந்தார். பெப்ருவரி மாதம் 28 ஆம் திகதி மத்திய வங்கியை கொள்ளையடித்தார்கள். அதிகாரத்தை எடுத்துக்கொண்டது கொள்ளையடிப்பதற்காகத்தான். விரயம் செய்வதற்காகத்தான் அதன் பின்னர் என்ன நடந்தது? நாடு சீரழிந்தது. பிள்ளை கல்வியை இழந்தது. வைத்தியசாலைகளில் மருந்து இல்லாமல் போயிற்று. திரையரங்குகள் மூடப்பட்டன. பொதுமக்கள் பொழுதுபோக்கினை இழந்தார்கள். இவை நாங்கள் கண்கூடாக கண்டவை. எங்களுடன் நண்பர்களின் வாழ்க்கை எவ்வாறு முற்றுப்பெற்றது என்பதனை எங்கள் கண்ணெதிரில் கண்டோம். எங்களுக்கு விளங்குமாயின், எங்களால் உணரமுடியுமாயின், நாங்கள் மனிதாபிமானம் கொண்டவர்களாயின், எங்களுக்கு மனசாட்சி இருக்குமாயின் இதனை மாற்றியமைப்பதற்காக உயிரை பணயம் வைத்து போராட, அரசியல் இயக்கமொன்றின் பங்காளிகளாக எங்களுக்கு உரிமை கிடையாதா? நான் அவ்வாறு போராடுகின்ற அரசியல் இயக்கமொன்றின் பங்காளி. இந்த நாட்டை செல்வந்த நாடாக மாற்ற எங்களுக்கு உரிமை கிடையாதா? அண்டை நாடான இந்தியா பழைய புகையிரத எஞ்சின்களை கழற்றி மின்சார புகையிரத கருத்திட்டத்தை அமுலாக்கி வருகிறது. இந்த ஆட்சியாளர்கள் போய் அந்த பழைய எஞ்சின்களை பரிசுப் பொருட்களாக சேகரித்துக் கொண்டு வருகிறார்கள்.
இந்தியா கைத்தொழில்களை உருவாக்கி வருகிறது. நாங்கள் தொழிற்சாலைகளை மூடிவருகிறோம்.
உலகம் முன்னேறி வருகிறது. நாங்கள் பிச்சை ஏந்திக் கொண்டிருக்கிறோம். குறைந்த பட்சம் 60 -70 தசாப்தத்தில் சிறிய கைத்தொழில் முறைமையொன்று கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருந்தது. அவை அனைத்தையுமே இந்த ஆட்சியாளர்கள் நாசமாக்கி விட்டார்கள். எல்லாவற்றையும் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரத் தொடங்கினார்கள். இந்தியா கைத்தொழில்களை உருவாக்கி வருகிறது. நாங்கள் தொழிற்சாலைகளை மூடிவருகிறோம். ஒருபோதுமே எங்களுடைய உற்பத்திகளை அதிகரிக்க வேண்டிய தேவை இந்த ஆட்சியாளர்களுக்கு இருக்கவில்லை. மூடிவிடுவது மாத்திரமல்ல இருக்கின்றவற்றையும் விற்றுத்தீர்க்கிறார்கள். ஒரே முயற்சி விற்றுத்தீர்ப்பதுதான். அமைக்கும்போதும் சூறையாடுகிறார்கள். விற்கும்போதும் பைக்குள் போட்டுக்கொள்கிறார்கள். வழக்குத் தீர்ப்பின் மறைவிலிருந்து கொண்டு பொஸ்பேட் படிவின் மண்ணை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இந்தியா பசளை தயாரிக்கின்றது. நாங்கள் அதனை இறக்குமதி செய்கிறோம்.
நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை கடுகளவேனும் சிதைவடைய நாங்கள் இடமளிக்கமாட்டோம்
மாவிலாறு அணையை மூடியவேளையில் வயல்கள் பாழடைந்தன. இழப்பீடு செலுத்த அரசாங்கம் தீர்மானித்தது. அதிகமாக இழப்பீடு பெற்றவர் எஸ்.எம். சந்திரசேன. என்னிடம் இருக்கிறது கொழும்பு திமிபிரிகஸ்யாய கொமர்ஷல் வங்கி கிளையிலிருந்து அநுராதபுரம் கிளைக்கு பணத்தை வைப்பு செய்தார். எஸ்.எம். சந்திரசேனவினதும் அவருடைய மனைவியினதும் இணைந்த கணக்கிற்கே. காசோலைகளின் பிரதிகள் என்னிடம் இருக்கின்றன. எங்களுடைய ஊர் மக்களுடன் எங்களுக்கு உண்மையான ஈடுபாடு இருக்குமாயின், உண்மையான நேசம் இருக்குமாயின் இந்த நிலைமையை மாற்றியமைக்க நாங்கள் மல்லுக்கட்ட வேண்டாமா? தற்போது எங்களுக்கு தீர்மானகரமான வாய்ப்பு ஒன்று வந்திருக்கிறது. இந்த நாட்டுக்கு கேடு விளைவித்த, நாட்டை நாசமாக்கிய இந்த ஆட்சிக்குழுக்களை நிச்சயமாக விரட்டியடித்து மக்கள் ஆட்சியை மலரச்செய்விக்க வேண்டும். நாங்கள் நிச்சயமாக அப்படிப்பட்ட அரசாங்கமொன்றை நிறுவுவோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் எல்லா பக்கங்களிலிருந்தும் எதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்? நீங்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். எம்மீது நேசம் வைத்திருக்கிறீர்கள். எம்முடன் ஈடுபாடு கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்கு ஒரு உத்தரவாதத்தை தருகிறேன். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை கடுகளவேனும் சிதைவடைய நாங்கள் இடமளிக்கமாட்டோம்.
(-தேசிய மக்கள் சக்தி கலைஞர்களின் தேசிய மாநாடு – 2024.09.08 – காசல் வீதி தெப்ரொபேன் மண்டபம்-) எங்களுடைய சமூகம் ஒருவருக்கொருவர் பாதுகாப்பற்ற நாடாக மாறியிருக்கிறது. பெண்களுக்கு சிறுமிகளுக்கு பாதுகாப்பற்று இருக்கிறது. பிறரின் வேதனையின்போது அதிர்ச்சியற்ற சமூகமாக மாறியிருக்கிறது. சிரிப்பு இல்லாத வறண்ட ஒரு சமூகம் எம்மெதிரில் இருக்கிறது. ஏனைய எல்லாத்துறைகளும் போன்றே இந்த சமூகத்தையும் குணப்படுத்துகின்ற பொறுப்பு அரசாங்கம் என்ற வகையில் எமக்கும் அதன் முனைப்பான ஒரு பங்கு உங்களுக்கும் கையளிக்கப்பட்டுள்ளதென நாங்கள் நம்புகிறோம். சமூகத்திற்கு […]
(-தேசிய மக்கள் சக்தி கலைஞர்களின் தேசிய மாநாடு – 2024.09.08 – காசல் வீதி தெப்ரொபேன் மண்டபம்-)
எங்களுடைய சமூகம் ஒருவருக்கொருவர் பாதுகாப்பற்ற நாடாக மாறியிருக்கிறது. பெண்களுக்கு சிறுமிகளுக்கு பாதுகாப்பற்று இருக்கிறது. பிறரின் வேதனையின்போது அதிர்ச்சியற்ற சமூகமாக மாறியிருக்கிறது. சிரிப்பு இல்லாத வறண்ட ஒரு சமூகம் எம்மெதிரில் இருக்கிறது. ஏனைய எல்லாத்துறைகளும் போன்றே இந்த சமூகத்தையும் குணப்படுத்துகின்ற பொறுப்பு அரசாங்கம் என்ற வகையில் எமக்கும் அதன் முனைப்பான ஒரு பங்கு உங்களுக்கும் கையளிக்கப்பட்டுள்ளதென நாங்கள் நம்புகிறோம். சமூகத்திற்கு மீண்டும் அன்பையும், நேசத்தையும், ஒத்துணர்வையும் கொண்டுவர வேண்டும். அதற்காக பல துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டியது அவசியமாகும். அதன் ஒரு பகுதி கல்வித்துறையிடம் கையளிக்கப்படுவதோடு நீங்கள் ஈடுபட்டுள்ள கலைத்துறைக்கும் பாரிய செயற்பொறுப்பு இருக்கின்றது. அதனால் உங்களுடைய சுதந்திரமான சிந்தனைகளை சமூகத்திற்கு விடுவிப்பதற்கான வசதிகளை வழங்குவதை நாங்கள் எங்களுடைய பொறுப்பாக கருதுகிறோம்.
வறண்டு போன மனித சமூகமொன்றை எம்மெதிரில் இருக்கின்றது.
நீங்கள் எவ்வளவுதான் உயர் படைப்புக்களை செய்தாலும் அதனை சமூகத்திடம் கொண்டு செல்ல முடியுமா எனும் கேள்வி எழுகிறது. குடும்பத்தவர்களுடன் இறுதியாக திரைப்படமொன்றை பார்க்க, மேடை நாடகமொன்றை கண்டுகளிக்க அரங்கிற்கு எப்போது சென்றீர்கள் என ஊரில் போய் கேட்டு பாருங்கள். பெரும்பான்மையினருக்கு அப்படிப்பட்ட அனுபவமொன்று கிடையாது. புதிதாக வெளியான நாவலொன்றை வாசித்தீர்களா, புதிதாக வெளியாகிய கவிதை நூல் ஒன்றின் கவிதையை ரசித்தீர்களா எனக்கேட்டுப் பாருங்கள். அவையொன்றுமே கிடையாது. வறண்டு போன மனித சமூகமொன்றை எம்மெதிரில் இருக்கின்றது. நாடக அரங்குகள், சினிமா கொட்டகைகள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்ற ஒரு நாடு உருவாகி வருகின்றது. எனக்கு ஞாபகமிருக்கிறது நான் சிறு பராயத்தில் முதல் முதலில் பார்த்த திரைப்படம் தான் “சிங் சிங் நோனா.” அதனை எங்களுடைய பிரதேசத்தில் உள்ள தம்புத்தேகம ஈகள் தியேட்டரில் தான் பார்த்தேன். இப்போது அந்த சினிமா தியேட்டர் ஒரு நெற் களஞ்சியமாகும். மாத்தறை புரோட்வே சினிமா தியேட்டர் இப்போது ஒரு சுப்பர் மார்க்கட். ஒரு சில சினிமா மண்டபங்களில் ரியூஷன் வகுப்புகள் நடைபெறுகின்றன. இவை எதை எடுத்துக்காட்டுகின்றன? எமது நாடு எந்த திசையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை அல்லவா?
நாங்கள் சினிமா கொட்டகைகளில் வரிசைகளை காண விரும்புகிறோம்.
மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்ட சினிமா மண்டபங்களே எஞ்சியுள்ளன. ஏனையவை மூடப்பட்டு விட்டன. இப்பொழுது கேஸ் வரிசைகள் கிடையாது, எண்ணெய் வரிசைகள் கிடையாது போன்ற கதைகளை நாங்கள் கேட்கிறோம். ஆனால் நாங்கள் சினிமா கொட்டகைகளில் வரிசைகளை காண விரும்புகிறோம். நாடக அரங்கொன்றின் முன்னால் வரிசையைக் காண விரும்புகிறோம். எனவே நாங்கள் எமது ஆட்சியின் கீழ் கலைக்கு உரிய இடம் கொடுத்து உயர்த்தி வைக்க நடவடிக்கை எடுப்போம். நாங்கள் தொடக்கத்திலேயே ஆச்சரியத்தை படைத்துவிடமாட்டோம். மீண்டும் மக்களை சினிமா தியேட்டர்களை நோக்கி அழைப்பிக்கின்ற, நாடக அரங்குகளை நோக்கி அழைப்பிக்கின்ற, மீண்டும் இலக்கிய நூல்களை வாசிக்கின்ற இடத்திற்கு அழைப்பிக்கின்ற எமது நாட்டு பிரஜையின் இரசனையை முன்னேற்றுவதற்காக கட்டம் கட்டமான நடவடிக்கைகளை எமது ஆட்சியின் கீழ் நாங்கள் மேற்கொள்வோம்.
மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலில் எமது மக்கள் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.
எமது நாட்டின் பொருளாதாரம் இருக்கின்ற இடம் பற்றி எங்களுக்கு தெரியும். அதனால் இன்று எங்களுடைய நாட்டு மக்களில் ஒரு சிறு பகுதியினர் தான் சினிமா, இலக்கியம் போன்ற துறைகளில் இரசிக்க தூண்டப்பட்டிருக்கிறார்கள். அதற்கான இயலுமை மிகச் சிறிய குழுவினரிடமே இருக்கின்றது. மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலில் எமது மக்கள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற டெலி நாடகமொன்றை சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்புகின்ற ஏதாவதொரு கலைப்பிரிவை மாத்திரம் கண்டுகளிக்குமளவிற்கு தற்போது மக்களின் கலை இரசனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொலைக்காட்சியின் டெலி நாடகத்திற்கு, சமூக வலைத்தளங்களின் சிறிய வீடியோ கிளிப்பொன்றுக்கு அது சுருக்கப்பட்டுள்ளது. நாங்கள் அதற்கு அப்பால் உயிர்ப்பூட்டலை நோக்கி இந்த மனித சமூகத்தை அழைப்பிக்க வேண்டும். வெறுமனே புத்தகமொன்றை வாசிப்பதல்ல. தனிமையாக திரைப்படமொன்றை பார்ப்பதல்ல. அந்த அனுபவத்தை சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள, சமூகத்துடன் விரிவான உரையாடலில் ஈடுபட, சமூக ரீதியாக கட்டி வளர்க்கப்படுகின்ற, அனுபவங்களை ஒருவருக்கொருவர் இடையில் பகிர்ந்து கொள்கின்ற இலக்கிய ரீதியான மற்றும் கலாச்சார ரீதியான சமூகமொன்று இலங்கையில் உருவாக வேண்டுமென்ற நிலையான திடசங்கற்பத்துடன் நாங்கள் இருக்கிறோம்.
கலாச்சார படைப்புகளை எமக்கு வெளியில் உள்ள உலகத்திற்கு எவ்வாறு எடுத்துச் செல்வது என்பதை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
எங்களுக்கு தெரியும் இனிமேலும் சினிமா, இலக்கியம், இசை தீவுகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த யுகம் தற்போது முடிவடைந்து விட்டது என்பது எங்களுக்கு தெரியும். அந்த யுகம் இற்றைக்கு பல தசாப்தங்கள் அல்லது நூற்றாண்டுகளுக்கே சொந்தமானதாக இருந்தது. இன்று உலகத்தையும் தொழில்நுட்பத்தையும் பரிமாற்றிக் கொண்டு ஒவ்வொருவரும் அனுபவிப்பதை போன்றே சுகாதார முன்னேற்றத்தின் அனுபவங்களை உறிஞ்சியெடுத்து ஒருவரையொருவர் கட்டி வளர்ப்பதை போன்றே உலகில் இசையும், சினிமாவும் பரிமாற்றிக் கொள்ளப்படுகிறது. நாங்கள் ஒரு சிறிய தீவுக்கு வரையறுக்கப்பட்டிருப்பது எமது துர்ப்பாக்கியமாகும். அதனால் எமது நாட்டின் இசை, திரைப்படம் மற்றும் ஏனைய கலாச்சார படைப்புகளை எமக்கு வெளியில் உள்ள உலகத்திற்கு எவ்வாறு எடுத்துச் செல்வது என்பதை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். நாங்கள் இது பற்றி ஏற்கெனவே கலந்துரையாடலுக்கு இலக்காகியிருக்கிறோம். எம்மை விட பல காத தூரம் பின்னால் இருந்த தென்கொரியா அவர்களுக்கே தனித்துவமான இசையொன்றை படைப்பதில் வெற்றிக்கண்டது. நீங்கள் யூடியூப்பிற்கு சென்றால் தென்கொரியாவின் பிரீஎஸ் இசைக்குழுவின் காணொளியை தற்போது 1800 மில்லியன் கண்டுகளித்துள்ளார்கள். தென்கொரியாவின் சனத்தொகை 50 மில்லியன் ஆகும். அவர்கள் இசையை தமது நாட்டுக்கு அப்பால் கொண்டு செல்வதில் வெற்றியடைந்துள்ளார்கள். அவர்களுக்கே தனித்துவமான இசையொன்றை அமைத்துக் கொள்வதில் வெற்றிபெற்றுள்ளார்கள். நீங்கள் உலகின் எந்தவொரு வானூர்தியில் பயணித்தாலும் அந்த ஊர்தியின் தொலைக்காட்சி திரையின் மீது கொரியன் திரைப்படங்களில் சோ்க்கையொன்றை காண முடியும். எனினும் இலங்கையை பயண முடிவிடமாக கொண்டுள்ள விமானத்தில் உச்சஅளவில் 04 திரைப்படங்களே இருக்கின்றன.
எங்களிடமும் திறமையான படைப்பாளிகள் இருக்கிறார்கள் என்பது எமக்கு தெரியும்.
பல தசாப்தங்களாக உலகில் இசையில், சினிமாவில், இலக்கியத்தில் பாரிய மாற்றங்களும் திறந்து விடல்களும் இடம்பெற்று வந்தபோதிலும் நாங்கள் அந்த திறந்து விடப்பட்ட உலகத்தை கையகப்படுத்திக் கொள்வதில் தோல்விகண்ட ஒரு நாடாவோம். அது தான் உண்மை. நாங்கள் சில நேரங்களில் வரலாற்றில் சிறைப்பட்டும் சில நேரங்களில் எமக்கே உரித்தான காரணிகளிலும் சிறைப்பட்ட தேசமாவோம். எத்தகைய தடைகளின் மத்தியிலும் இன்றைய ஈரான் எந்தளவிற்கு உலகத்தில் பிரவேசித்துள்ளது? எங்களிடமும் திறமையான படைப்பாளிகள் இருக்கிறார்கள் என்பது எமக்கு தெரியும். பல்வேறு சந்தர்ப்பங்களில் உலகின் பிரதான திரைப்பட விழாக்களில் பாரிய வெற்றிகளை பெற்ற திரைப்பட இயக்குனர்கள் எமக்கிருக்கிறார்கள். எனினும் எங்களால் உலக சினிமாவின் ஒரு பங்கினை கையகப்படுத்திக் கொள்ள இயலாமல் போயுள்ளது. கடந்த காலத்தில் உலகில் பல்வேறு புத்திஜீவிகள் உலகம் எத்திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என்பது பற்றிய எதிர்வுகூறல்களை முன்வைத்தார்கள். அங்கு பாரிய பரப்பு சினிமாக்கலையின் திசையை நோக்கியும் திறந்து விடப்படுகிறது. அது அவ்வாறு இருந்தபோதிலும் அந்த புதிய உலகில் ஒரு பங்கினை கையகப்படுத்திக் கொள்வதில் நாங்கள் தோல்வி கண்டுள்ளோம்.
நாங்கள் மலையகத்தில் வசிக்கின்ற கவிஞர் ஒருவரைப் பற்றியோ கவிதையொன்றை பற்றியோ யாழ்ப்பாண இலக்கியவாதிகள் பற்றியோ பேசுகின்றோமா?
நான் உங்களுக்கு ஒரு சில விடயங்களை சுட்டிக்காட்டுகிறேன். இசையானது ஒரு தொழிற்துறை என்ற வகையில் உலகில் வேகமாக வியாபித்துக் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் இசை சந்தை 2024 ஆம் ஆண்டில் 24.5 பில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளது. அதைபோலவே 2022 இல் உலக சினிமா மற்றும் களியாட்டச் சந்தை 94 பில்லியன் டொலர்களை உருவாக்கியிருக்கிறது. 2031 அளவில் அது 192 பில்லியன் டொலர் வரை வளர்ச்சியடைவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 7 வீத வளர்ச்சி வேகம் அந்த துறையில் எதிர்வுகூறப்பட்டிருக்கிறது. நாங்கள் ஒரு புறத்தில் சமூக வாழ்க்கை பற்றி சிந்திப்பதை போலவே மறுபுறத்தில் பொருளாதார ரீதியாக உலகில் எதிர்வுகூறப்பட்ட இந்த துறைகளிலான பங்கினை கையகப்படுத்தி கொள்ள திட்டமிடல் வேண்டும். 2031 இல் 192 பில்லியன் டொலர் உருவாக்கப்படுகின்ற உலகில் நாங்கள் எந்த அளவினை பற்றிப்பிடிக்க திட்டமிடவேண்டும்? நாங்கள் அதில் ஒரு சிறிய துளியையேனும் கையகப்படுத்திக் கொள்ள வேண்டும். அது பற்றிய திட்டங்களை நாங்கள் முன்வைப்போம். ஒரு நேரத்தில் நாங்கள் உலக சினிமா பற்றி, உலக இலக்கியம் பற்றி, அவற்றின் வளர்ச்சி பற்றி பேசுகிறோம். எனினும் நாங்கள் மலையகத்தில் வசிக்கின்ற கவிஞர் ஒருவரைப் பற்றியோ கவிதையொன்றை பற்றியோ பேசுகின்றோமா? நாங்கள் ஹொலிவுட், பொலிவுட் சினிமா பற்றி பேசுகின்றோம். எனினும் யாழ்ப்பாணத்தின் தமிழ் இலக்கியவாதிகள் பற்றி தமிழ் நாவலாசிரியர்கள் பற்றி பேசுகின்றோமா? நாங்கள் உலகில் பெரும்பாலான கலைப்படைப்புக்கள் பற்றிய திறனாய்வில் ஈடுபட்டு வருகிறோம். எனினும் நாங்கள் தமிழ் இலக்கியம் பற்றியோ இலக்கியவாதிகள் பற்றியோ திறனாய்வில் ஈடுபட்டிருக்கிறோமா? நாங்கள் எந்தளவுக்கு குறுகிய தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் தான் வசிக்கிறோம். உலகத்திற்கல்ல குறைந்தபட்சம் மலையகத்திற்கேனும் எம்மால் திறந்த நிலையில் இருக்க முடியாதுள்ளது. எம்மால் வடக்கிற்கும் திறந்த நிலையில் இருக்க முடியாதுள்ளது. வடக்கை தெற்கிற்கு திறந்து வைக்க முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம். அது தான் உண்மை. அதனால் நாங்கள் நினைக்கிறோம் எமது நாட்டுக்கே தனித்துவமான கலாச்சாரங்கள் இருக்கின்றன. தனித்துவமான கலை நுணுக்கங்கள் இருக்கின்றன. இவையனைத்தையும் திரட்டிய தனித்துவமான இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பாகும்.
சிங்கள கலாச்சாரத்திற்கு தமிழ் கலாச்சாரம் எதிரானதென நினைக்கிறோம்.
பிறரை பொருட்படுத்தாமல் விட்டு பிறருடைய அடையாளங்களை தாழ்வாக கருதி பிறருடைய அடையாளங்களை கொச்சைப்படுத்திக் கொண்டு இருக்கின்றோமேயொழிய சில வேளைகளில் பிறரின் அடையாளம் எமக்கு எதிரானவை என நினைக்கிறோம். தமிழ்க் கவிதை சிங்களத்தின் எதிரியென நினைக்கிறோம். சிங்கள கலாச்சாரத்திற்கு தமிழ் கலாச்சாரம் எதிரானதென நினைக்கிறோம். பிறருடைய படைப்புக்களை பாராட்டுக்கின்ற கண்ணோட்டத்தில் நாங்கள் அவற்றை பார்ப்பதில்லை. பகைமை உணர்வு கொண்ட பார்வை கோணத்திலாகும். இத்தகைய சமூகமொன்றுக்கு எதிர்காலப்பயணமொன்று இருக்குமா? அதனால் பிறருடைய அடையாளங்களை மதித்து அவற்றை பொறுத்துக் கொள்ளக்கூடிய அவற்றுக்கு மதிப்பளிக்கின்ற அவற்றை ரசிக்கக்கூடிய புதிய சமூகமொன்றை உருவாக்குவதே எங்களுடைய எதிர்பார்ப்பாக அமையும்.
உங்கள் சிந்தனையின் நோக்கங்களை யதார்த்தமாக மாற்றக்கூடிய ஒரு தேசத்தை நாங்கள் உருவாக்குவோம்.
இந்த துறை பற்றி என்னைவிட சிறப்பறிஞர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் நீண்டகாலமாக இந்த துறையிலான புத்தாக்கங்கள் பற்றி போராடிய, எழுதிய, விமர்சனம்செய்த கருத்தியல்களை படைத்தவர்களாவர். அத்தகைய பெருந்தொகையானோர் இங்கே இருக்கிறார்கள். நான் இந்த துறையில் சிறப்பறிஞர் அல்ல. நான் அந்த துறையை வெளியில் இருந்து பார்ப்பவன். நீங்கள் இந்த துறைக்குள்ளே வாழ்பவர்கள். போராட்டத்தில் ஈடுபட்ட அத்துடன் புதிய படைப்புகளை பரீட்சித்துப் பார்த்தவர்கள். அதற்குள்ளேயே புதிய உலகம் பற்றி சிந்திப்பவர்கள். அதனால் நான் உங்களுக்கு ஓர் உத்தரவாதம் அளிக்கிறேன். உங்கள் படைப்புகளை நீங்கள் முன்வைக்கையில் ஏதேனும் தயக்கம் இருந்திருப்பின் அதனை முற்றாகவே நீக்குகின்ற சமூகமொன்றை எமது ஆட்சியின்கீழ் நாங்கள் கட்டியெழுப்புவோம். நீங்கள் இந்த சமூகத்தின் முன்னேற்றப்பாதையை எதிர்பார்த்து பலவற்றை எழுதினீர்கள்: கூறினீர்கள்: பல்வேறு படைப்புக்களை செய்தீர்கள். எனினும் இந்த முறையியலின்கீழ் அவற்றை வெற்றியீட்டச் செய்விக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. உங்கள் உள்ளத்தை வதைத்துக்கொண்டிருந்த அந்த தேவை, நீங்கள் உங்கள் படைப்புக்களில் கண்ட புதிய உலகத்தை நிர்மாணிக்க மேற்கொள்கின்ற முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவது எமது கடமையாகும். நீங்கள் மென்மேலும் எழுதுங்கள். நாவல்களை படையுங்கள். படைப்பாக்கத்தில் ஈடுபடுங்கள். நாங்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற தரப்பினர்களாக மாறுவோம். உங்கள் சிந்தனையின் நோக்கங்களை யதார்த்தமாக மாற்றக்கூடிய ஒரு தேசத்தை நாங்கள் உருவாக்குவோம். இந்த முயற்சியை வெற்றியீட்டச் செய்விப்பதற்காக நாங்கள் ஒன்றுசேர்ந்து சிறகடிப்போம்.
(-தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 20224.09.09-) தற்போது எமது அரசாங்கம் ஒரு பாஸ்போர்ட்கூட வழங்கமுடியாத நிலைமையை அடைந்துள்ளது. ஒருபுறத்தில் பாஸ்போர்ட் வரிசை நீண்டுகொண்டிருப்பதோடு மறுபுறத்தில் இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டவர்களைக்கூட அலைக்கழித்து வீசா வரிசை நீண்டுள்ளது. கடந்த காலத்தில் சாதாரண பாஸ்போர்ட் வழங்கலுக்குப் பதிலாக ‘இ – பாஸ்போர்ட்’ சேவையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியதன் பின்னணியில் நிலவிய கொமிஸ்பெறல் தீத்தொழில் காரணமாக அனைத்துமே செயலிழந்தன. ரணில் விக்கிரமசிங்கவின் நண்பரொருவரான ஜித் வர்ணகுலசூரியவின் ஜஸ்ட் இன் டைம் கம்பெனிக்கு […]
(-தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 20224.09.09-)
தற்போது எமது அரசாங்கம் ஒரு பாஸ்போர்ட்கூட வழங்கமுடியாத நிலைமையை அடைந்துள்ளது. ஒருபுறத்தில் பாஸ்போர்ட் வரிசை நீண்டுகொண்டிருப்பதோடு மறுபுறத்தில் இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டவர்களைக்கூட அலைக்கழித்து வீசா வரிசை நீண்டுள்ளது. கடந்த காலத்தில் சாதாரண பாஸ்போர்ட் வழங்கலுக்குப் பதிலாக ‘இ – பாஸ்போர்ட்’ சேவையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியதன் பின்னணியில் நிலவிய கொமிஸ்பெறல் தீத்தொழில் காரணமாக அனைத்துமே செயலிழந்தன. ரணில் விக்கிரமசிங்கவின் நண்பரொருவரான ஜித் வர்ணகுலசூரியவின் ஜஸ்ட் இன் டைம் கம்பெனிக்கு அது சம்பந்தமான டெண்டர் வழங்கப்பட்டிருந்தது. உடன்படிக்கையின்படி கடந்த ஜுன் மாதத்தில் இருந்து இ – பாஸ்போர்ட் சேவையை வழங்க கம்பெனி தவறியமையால் வரிசைகள் உருவாகின. நாட்டை வெறுத்து ஏறக்குறைய 3000 பேர்வரை நாளொன்றில் கடவுச்சீட்டு பெறவருகிறார்கள். எனினும் டெண்டர் தில்லுமுல்லுடன் “ஒன்லயின்” முறைக்கிணங்க பாஸ்போர்ட் வழங்க அரசாங்கம் தீர்மானித்தது. அதற்படி நாளொன்றில் 250 – 300 வரையான அளவே விநியோகிக்கப்படுகின்றது. நிலைமை அவ்வாறு இருக்கையில் ‘இ – பாஸ்போர்ட்’ வழங்குவதற்கான டெண்டரைப் பெற்றுக்கொண்ட கம்பெனிக்கு சாதாரண திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் வழங்குவதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கான கடந்த வாரத்தில் அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டு அதன் விதப்புரையின் பேரிலெனக்கூறி, பழைய முறையின்படியே பாஸ்போர்ட் வழங்க அனுமதி கோரப்பட்டிருந்தது. அந்த அமைச்சரவை பத்திரத்தில் 48 பக்கங்களைக் கொண்ட பாஸ்போர்ட் வழங்குவதல் பற்றியே குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் தொடக்கத்தில் 64 பக்கங்களை கொண்ட பாஸ்போர்ட்டே இருந்தது.
ஆரம்பத்தில் பாஸ்போர்ட் வழங்கிய கம்பெனி ஏழரை இலட்சம் பாஸ்போர்ட்டை துரிதமாக வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டார். ஆனால் முன்னர் பெற்றுக்கொண்ட கம்பெனிக்கு டெண்டர் வழங்கப்பட்டிருப்பின் தாமதம் ஏற்பட்டிருக்கமாட்டாது. எனினும் 64 பக்கங்களைக் கொண்ட பாஸ்போர்ட்டை 48 பக்கங்களாக குறைத்தல் பற்றி வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஊடாக உலகின் 192 நாடுகளுக்கு உத்தியோகபூர்வ ரீதியாக அறிவித்தல் வழங்கப்படவேண்டும். அதற்கிணங்க அந்த நாடுகளின் அங்கீகாரத்தை பெற மேலும் இரண்டு மாதங்கள் வரை கழியும். அமைச்சரவை பத்திரத்திற்கிணங்க 48 பக்கங்களை கொண்ட பாஸ்போர்ட்டுக்காக 7.98 டொலர் செலவாவதாக குறிப்பிடப்படுகிறது. ரூபாவில் எடுத்துக்கொண்டால் ஒரு பக்கத்திற்கு 31.00 ரூபா செலவாகின்றது. ஆனால் முன்னர் இருந்த விலை மட்டங்களுக்கிணங்க ரூபா 5.99 மாத்திரமே செலவாகிறது. இந்த தில்லுமுல்லு காரணமாகவே ஆயிரக்கணக்கில் வரிசையில் அலைந்து திரிகிறார்கள். இன்று இந்த நாட்டிலே இருக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ள அதேவேளையில் நாட்டை விட்டு வெளியேற இடமளிக்காமல் சிறைப்படுத்தியும் வைத்திருக்கிறார்கள். இந்த நிலைமையை சீக்கிரமாக மாற்றியமைத்து இதுவரை சாதாரண கடவுச்சீட்டு வழங்கிய விதத்திலேயே அவற்றை வழங்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். அதன்படி 192 நாடுகளிடமிருந்து புதிதாக அங்கீகாரம் பெறப்படவேண்டியதில்லை. அமைச்சர்களின் ஜனாதிபதிமார்களின் நட்புக்காக சூறையாட இடமளிப்பதன் மூலமாக இலங்கைக்கு வரவிருக்கின்ற இலங்கையர்களுக்கு வாய்ப்புக்கிடைக்க மாட்டாது. குறிப்பாக இந்த தோ்தல் காலத்தில் கடவுச்சீட்டு கலாவதியாவதால் இலங்கைக்கு வரமுடியாத நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பழைய வெப்தளத்தை திறந்து அவசியமான வசதிகளை வழங்காதிருக்கிறார்கள். இந்த நிலைமையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவருமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம்.
அதைப்போலவே தோ்தல் காலத்தில் மக்களை ஏமாற்ற பலவிதமான அரசியல் வாக்குறுதிகளை வழங்கியதோடு நகர்சார் மாடிவீடுகளில் இருக்கின்ற மக்களுக்கு உறுதிகளை வழங்குவதாக கூறினார்கள். எனினும் வழங்கப்பட்டுள்ள உறுதிகளில் சட்டபூர்வமாக இடம்பெறவேண்டிய உறுதி இலக்கம் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதைப்போலவே உறுதியில் இரண்டு சாட்சிக்காரர்கள் கையொப்பம் இடவேண்டும். எனினும் இந்த உறுதிகளில் சாட்சிக்காரர்களைப் போன்று சான்றுப்படுத்தலும் மேற்கொள்ளப்படாத ஒரு கடதாசித் துண்டு வழங்கப்பட்டுள்ளது. உறுதியொன்று சட்டபூர்வமானதாக அமையவேண்டுமானால் உறுதி இலக்கம் கட்டாயமாக குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். மக்களின் பணத்தை விரயமாக்கி விழாக்களை நடாத்தி அந்த சுமையையும் மக்கள் மீது சுமத்தி முன்னெடுத்து வருகின்ற தில்லுமுல்லு வேலைகளையும் நிறுத்த வேண்டும். குறிப்பாக நகர்சார் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு கடந்த காலத்தில் வழங்கிய கடதாசித் துண்டை உறுதியெனக்கூறி வாக்குகளை அபகரிக்க மேற்கொள்ளப்படுகின்ற முயற்சியைக் கண்டு ஏமாந்துவிடவேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறான கூட்டங்களுடன் மாத்திரம் நின்று விடாமல் ரணில் விக்கிரமசிங்க மேடைகளில் கபடத்தனமான கதைகளையும் கூற பழகியுள்ளார். ஏனைய மேடைகளில் முட்டாள் தனமான கதைகளைக்கூறுகின்ற அதேவேளையில் ரணில் விக்கிரமசிங்க கபடத்தனமான கதைகளையும் கூறிவருகிறார். மாத்தறை மொரவக்க கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க அநுர திசாநாயக்கவின் கொள்கைப் பிரகடனத்தை ஒரே இரவில் வாசித்து முடித்ததாகக்கூறினார். இது அப்பட்டமான பொய்யாகும். தேசிய மக்கள் சக்தி சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகளை ஒழிப்பதாக அவர் கூறினார். இவ்வாறான ஒரு குறிப்பீடு எங்களுடைய கொள்கை வெளியீட்டில் எந்த பக்கத்தில் எந்த பிரிவில் இருக்கிறதென சுட்டிக்காட்டுமாறு சவால் விடுகிறேன். சுற்றியிருக்கின்ற துதிபாடுபவர்கள் கூறுகின்றவற்றை கேட்டு மேடைகளில் இவ்விதமான அப்பட்டமான பொய்களை கட்டவிழ்த்து விடவேண்டாம். ஒரு இரவு மாத்திரமல்ல ஒரு மாதமேனும் விழித்திருந்து மீண்டும் வாசிக்குமாறு சவால் விடுக்கிறேன். எமது கொள்கைப் பிரகடனத்தில் 151 வது பக்கத்தில் “சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தையை விரிவுபடுத்துதலும் வினைத்திறனும்” என்ற தலைப்பின் கீழ் நாங்கள் “நிலவுகின்ற சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை இற்றைப்படுத்துதலும் புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளில் பிரவேசித்தலும்” என்றே வலியுறுத்தியிருக்கிறோம்.
ரணில் நீங்கள் வாசித்தது எதனை? பார்க்காமலா சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகளை இல்லாதொழிப்பதாக கூறினீர்கள்? அல்லது வேண்டுமென்றே தவிர்த்துச் சென்றீர்களா? நாட்டில் பொறுப்புக்கூறவேண்டிய ஜனாதிபதி ஒருவர் என்ற வகையில் அறிந்திருந்தும் பொய் கூறவேண்டாம். நீங்கள் வெறுமனே ஒரு வேட்பாளர் மாத்திரமல்ல. நீங்கள் இப்போது இந்த நாட்டின் ஜனாதிபதி பதவியை வகிக்கின்ற வேட்பாளர். மக்களை ஏமாற்ற வேண்டாம். சர்வதேச சமூகத்தை ஏமாற்ற வேண்டாம். நிலவுகின்ற வர்த்தக உடன்படிக்கைகளை நடப்பு நிலைமைக்கு இணங்க இற்றைப்படுத்துவது மாத்திரமன்றி புதிய வர்த்தக உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்பில் பக்கம் 84 இல் அது பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நாளில் விளங்காவிட்டால் ஒரு வாரமேனும் கண்விழித்து ரணில் நீங்கள் இதனை மீண்டும் வாசியுங்கள். தோழர் அநுர திசாநாயக்கவை மன்னிப்பு கோருமாறு ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். ரணில் விக்கிரமசிங்க நீங்கள்தான் இப்போது மன்னிப்புக்கோர வேண்டும். இந்த கொள்கைப் பிரகடனத்தை கபடத்தனமான முறையில் மாற்றியமைத்து பொய்கூறுதல் சம்பந்தமாக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். நாடு மாத்திரமல்ல சர்வதேச சமூகமும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக அவரையே நியமித்துக் கொண்டுள்ளது.
தோழர் அநுர வடக்கிற்கு சென்று மக்களிடம் மிகவும் தெளிவாக முழு நாடுமே ஒன்றுசோ்ந்து நாட்டை கட்டியெழுப்புகின்ற கொள்கையை வெற்றியீட்டச் செய்விக்க ஒன்று சேருமாறே கேட்டுக்கொண்டார். தெற்கில் உள்ள மக்கள் வெற்றிக்காக அணிதிரண்டுள்ள நேரத்தில் அந்த வாய்ப்பினை வடக்கிலுள்ள மக்கள் கைவிடவேண்டாம் என்றே அவர் வலியுறுத்தினார். தெற்கில் உள்ள மக்களின் ஒத்துழைப்பு மாத்திரம் போதாது. வடக்கு, கிழக்கு சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலாயர் ஆகிய அனைத்து இனங்களினதும் ஒத்துழைப்பு நாட்டை கட்டியெழுப்ப அவசியமெனவும் ஒற்றுமை நிறைந்த ஒரு நாட்டை கட்டியெழுப்ப ஒற்றுமை நிறைந்த அரசாங்கமொன்று அவசியமெனவும் வலியுறுத்தினார். எனினும் ரணில் வேண்டுமென்றே அதனை திரிபுபடுத்தி இனவாதக் கூற்றொன்றை வெளியிட்டுள்ளார். 1981 அபிவிருத்திச் சபை தோ்தலின்போது சிறில் மத்தியு, காமினி ஜயவிக்கிரம பெரேரா, காமினி திஸாநாயக்க ஆகியோர் காடையர்களை நெறிப்படுத்தி குருணாகலில் இருந்து அனுப்பிவைத்த காடையர்கள் வாக்குப்பெட்டிகளை கொள்ளையடித்து, அழித்து, தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகத்தை தீக்கிரையாக்கிய வரலாறுதான் இருக்கிறது. குருணாகலிலிருந்து புகையிரதத்தில் சென்று இந்துக்கல்லூரியில் தங்கியிருந்து இரவு 10.00 மணிக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தல் வழங்கியமை பற்றிய நேரடியான சான்றுகள் இன்னமும் இருக்கிறன. அன்று யாழ் நூலகத்திற்கு தீமூட்டி வாக்குகளை கொள்ளையடித்ததால் தான் யுத்தத்திற்கு வழிசமைக்கப்பட்டது. நாட்டை தீக்கிரையாக்குகின்ற இனவாதத்திற்கு வழிசமைத்தது 81 இல் மேற்கொண்ட இந்த நாசகார செயலாகும். அவ்வாறு நடந்து கொண்ட ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஆட்சியாளர்கள் இன்று அநுர தோழரின் உரையினை திரிபுபடுத்தி வேறு கூற்றுக்களை மேற்கொண்டு வருகிறார்கள். எங்களுடைய கொள்கை பிரகடனத்தை கருத்தோன்றிய வகையில் திரிபுபடுத்துதல் மற்றும் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கான கூற்றுக்களை மேற்கொள்ளல் சம்பந்தமாக ரணில் விக்கிரமசிங்க மன்னிப்புக்கோர வேண்டும். நெறிமுறைசார்ந்த அரசியல் நடைமுறை இருக்குமாயின் அதனை நீங்கள் நாட்டுக்கு வெளிப்படுத்திக்காட்ட வேண்டும்.
(-தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் மாநாடு – 2024.09.08 – சுகததாச உள்ளக விளையாட்டரங்கு-) எமது எதிரி எமக்கெதிராக என்னதான் செய்தாலும் எமது வெற்றியை நிறுத்திவிட முடியாது இந்த செப்டெம்பர் 21 ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியால் வெற்றிபெற இயலுமென எம்மனைவருக்கும் பாரிய நம்பிக்கை இருக்கின்றது. தற்போது எமது எதிர்த்தரப்பினர் அவர்கள் ஒருபோதுமே எதிர்பார்த்திராத தலைவிதியை எதிர்நோக்கி இருக்கிறார்கள். அவர்கள் அவர்களுக்கிடையில் மாத்திரம் அதிகாரத்தை கைமாற்றிக்கொள்வதை நீண்டகாலமாக செய்துவர முடியுமென நினைத்தார்கள். எனினும் எதிர்வரும் செப்டெம்பர் […]
(-தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் மாநாடு – 2024.09.08 – சுகததாச உள்ளக விளையாட்டரங்கு-)
எமது எதிரி எமக்கெதிராக என்னதான் செய்தாலும் எமது வெற்றியை நிறுத்திவிட முடியாது
இந்த செப்டெம்பர் 21 ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியால் வெற்றிபெற இயலுமென எம்மனைவருக்கும் பாரிய நம்பிக்கை இருக்கின்றது. தற்போது எமது எதிர்த்தரப்பினர் அவர்கள் ஒருபோதுமே எதிர்பார்த்திராத தலைவிதியை எதிர்நோக்கி இருக்கிறார்கள். அவர்கள் அவர்களுக்கிடையில் மாத்திரம் அதிகாரத்தை கைமாற்றிக்கொள்வதை நீண்டகாலமாக செய்துவர முடியுமென நினைத்தார்கள். எனினும் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆந் திகதி நிச்சயமாக அந்த மரபுரீதியான அதிகாரப் பரிமாற்றம் முற்றுப்பெறும். தற்போது அவர்கள் மிகவும் அசிங்கமான, அவலட்சணமான. காட்டுமிராண்டித்தனமான அரசியலில் பிரவேசித்துள்ளார்கள். பொய்கள், சேறுபூசல்கள, குறைகூறல்கள், அத்துடன் குரோதம், பகைமை என்பவற்றை எமக்கெதிரா பரப்பி வருகிறார்கள். எதிர்வரும் சில தினங்களில் மேலும் அதனை தீவிரப்படுத்துவார்களென நினைக்கிறோம். நாங்கள் ஒரேயொரு விடயத்தைதான் கூறவேண்டியுள்ளது. அது எமது எதிரி எமக்கெதிராக என்னதான் செய்தாலும் எமது வெற்றியை நிறுத்திவிட முடியாது என்பதாகும். நான் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஒரு கூற்றினை வெளியிட்டதாக அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஒரு கூற்றினை வெளியிட்டார். அவர் தனது கூற்றினை சரி செய்து கவலையை தெரிவிக்க அவருக்கு வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு செய்யாவிட்டால் நாங்கள் வழக்கு போடுவோம். நாங்கள் வந்ததும் கண்டி பெரஹெராவை நிறுத்திவிடுவதாக திஸ்ஸ அத்தநாயக்க கூறியிருந்தார். இப்போது அவர்கள் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிட முயற்சி செய்கிறார்கள். திஸ்ஸ அத்தநாயக்க கவலையை தெரிவித்தாலும் நாங்கள் அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அவர் போலி ஆவணம் புனைவதில் கிண்ணத்தை வென்றெடுத்தவர். அவ்வாறு செய்து விளக்கமறியலில் இருந்த ஒருவராவார். இற்றைக்கு சில தினங்களுக்கு முன்னர் எங்களுடைய தோழர் வசந்தவை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதாக பாரிய சேறுபூசினார். அது பற்றியும் கட்டாயமாக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம். இந்த அசிங்கமான அரசியல் விளையாட்டை இப்போதாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் இந்த நிலைமைக்கு எதிராக எடுக்க வேண்டிய எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம்.
அண்மையில் ரணில் விக்கிரமசிங்க “எனது நண்பர் அநுர, எனது கூட்டாளி” எனக்கூறிக் கொண்டிருப்பதை நான் கண்டேன். அவர் “ஷேப் ஆகவே வருகிறார்.” நண்பன் எனக்கூறிக்கொண்டு எவ்வளவு தான் ஷேப் ஆக வந்தாலும் எமது ஆட்சியின் கீழ் மத்திய வங்கி மோசடிக்கு எதிராக அவசியமான சட்ட நடவடிக்கைகளை எடுத்தே தீருவோம். கடந்த காலத்தில் அவர் பார் லைசன் வழங்கியமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. “கூட்டாளி”, “கூட்டாளி” எனக்கூறிக்கொண்டு எவ்வளவு தான் எங்கள் பின்னால் வந்தாலும் எல்.ஆர்.சி. இன் காணிகளை பகிர்ந்தளித்த விதம் பற்றி நாங்கள் கட்டாயமாக விசாரணைகளை மேற்கொள்வோம். அதைபோலவே அவர் எமது நாட்டின் மோசடிப்போ்வழிகளை பாதுகாக்க மேற்கொள்கின்ற முயற்சிகள் பற்றியும் நாங்கள் கட்டாயமாக விசாரணைகளை மேற்கொள்வோம். ரணில், செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் உங்களுடைய கூட்டாளியை பற்றி விளங்கிக் கொள்வீர்.
எமது நாட்டின் இளைஞர் தலைமுறையினர் நீண்டகாலமாக சமூக மாற்றமொன்றுக்காக மல்லுக்கட்டினார்கள். சிலவேளைகளில் போராளிகளாகவும் சிலவேளைகளில் கருத்தியல் சார்ந்தவர்களாகவும் மல்லுக்கட்டினார்கள். எனினும் இறுதி வெற்றியை பெற்றுக்கொள்ள தவறினார்கள். நீங்கள் புரிந்த இந்த போராட்டத்திற்குள் இருந்த ஒவ்வொரு எதிர்பார்ப்பையும் குறிக்கோளையும் ஈடேற்றுகின்ற பொறுப்பினை செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். எமது நாட்டின் அரசியலுக்கு வருவதற்குள்ள கதவுகளை பழைய ஆட்சியாளர்கள் மூடியிருந்தார்கள். ஆதனங்களை ஒரு பரம்பரையிலிருந்து மற்றொரு பரம்பரைக்கு கையளிப்பதைப்போல் எமது நாட்டின் அரசியலும் ஒரு பரம்பரையிலிருந்து அடுத்த பரம்பரையை நோக்கியே பாய்ந்து சென்றது. அந்த பரம்பரையினரின் அரசியல் பற்றி இளைஞர் தலைமுறையினர் வெறுப்பையும் அருவருப்பையுமே கொண்டிருக்கிறார்கள். புதிய பரம்பரைக்கு அரசியலை ஒரு கௌரவமான இடமாகவும் பெறுமதியுள்ள இடமாகவும் எடுத்துக்காட்ட அவசியமான மாற்றத்தை தேசிய மக்கள் சக்தியை சோ்ந்த நாங்கள் செய்து காட்டுவோம்.
இந்த நாட்டின் தேசிய அரசியல் நான்கு அல்லது ஐந்து குடும்பங்களின் கைகளிலேயே குவிந்துள்ளது.
சஜித் கூறுகின்ற விகாரமடைந்த விடங்களை நோக்கும்போது அவர் ஒரு பிரதேச சபை உறுப்பினராவதற்கான தகைமையையேனும் கொண்டிருக்கிறாரா என நீங்களே சிந்தித்து பாருங்கள். தகப்பன் ஜனாதிபதி இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காகவே அவர் ஜனாதிபதி வேட்பாளராக மாறியிருக்கிறார். இந்த நாட்டின் தேசிய அரசியல் நான்கு அல்லது ஐந்து குடும்பங்களின் கைகளிலேயே குவிந்துள்ளது. உங்கள் மாவட்டத்தில் உங்கள் தோ்தல் தொகுதியில் மாத்திரமல்ல பிரதேச சபை ஆளுகை பிரதேசத்தின் அரசியல் நிலைமையும் அதுவல்லவா? ஒரு சில குடும்பங்கள் இருக்கின்றன தகப்பன் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கிறார். மூத்த மகன் மாகாண சபையை பிரதிநிதித்துவம் செய்கிறார். சின்ன மகன் பிரதேச சபையை பிரதிநிதித்துவம் செய்கிறார். அரசியல் குடும்ப படிக்கட்டு வரிசையில் வைத்ததுபோல். அப்பா ஒரு படிக்கட்டிலிருந்து விலகும்போது மகன் அந்த படிக்கட்டில் ஏறுகிறார். இந்த பரம்பரைவழி அரசியல் குடும்பங்கள் எமது நாட்டுக்கு பாரிய அழிவினை ஏற்படுத்தியுள்ளன. இந்த குடும்பத் தலைமுறையினருக்கிடையில் கைமாறுகின்ற அரசியல் பெட்டனை தற்காலிகமாக நாங்கள் கையிலெடுத்து இளைஞர்களாகிய உங்களின் கைகளில் ஒப்படைப்பதை நாங்கள் ஒரு பொறுப்பாக கையிலெடுத்திருக்கிறோம்.
எமது வறிய மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சோ்ந்த இளைஞர் தலைமுறையினர் கரைசோ்வதற்குள்ள ஒரே பாதை கல்வியாகும்
அந்த அரசியல் பெட்டனை நாங்கள் ஒரு பரம்பரையிடமிருந்து இன்னொரு பரம்பரைக்கு ஒப்படைக்க மாட்டோம். அதைப்போலவே கிடைக்கின்ற இந்த பெட்டனை உயிர் பிரியும்வரை எங்களுடைய கைகளில் வைத்துக்கொள்ளவும் மாட்டோம். நாங்கள் அதனை ஒரு குறுகிய காலத்திற்கே வைத்திருப்போம். எங்களுடைய பொறுப்பினை ஈடேற்றிய பின்னர் நாங்கள் அதனை நாட்டின் இளைஞர் தலைமுறையினரிடம் ஒப்படைத்து நீங்கள் நாட்டை ஆட்சி செய்கின்ற விதத்தை நிம்மதியாக பார்த்துக்கொண்டிருப்போம். நாங்கள் பேராசைக்காரர்கள் அல்ல. கைவிட பழகிய மனிதர்கள். செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறுவது வெறுமனே அரசியல் கைமாறுதல் அல்ல. இதுவரை எமது நாட்டுக்கு உரித்தாக்கிக் கொடுத்திருந்த அயோக்கியமான அரசியலுக்குப் பதிலாக முற்றாகவே நிலைமாற்ற யுகமொன்றுக்கு ஆற்றுப்படுத்துகின்ற அரசியலை செப்டெம்பர் 21 ஆம் திகதி உருவாக்குவோம். அதனாலேயே நீங்கள் எங்களுடன் இந்த சில நாட்களில் இணைந்து செயற்பட வேண்டும். எமது வறிய மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சோ்ந்த இளைஞர் தலைமுறையினர் கரைசோ்வதற்குள்ள ஒரே பாதை கல்வியாகும். எமது நாட்டில் இலவசக் கல்வி இருந்திராவிட்டால் தனிப்பட்ட முறையில் நானும் நீங்களும் இந்த இடத்தில் இல்லாதிருந்திருக்கலாம். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த நாட்டின் இளைஞர் தலைமுறையினர் மற்றும் பிள்ளைகளுக்காக நாங்கள் ஏற்படுத்துவோம்.
மிகவும் குறுகிய வரையறைக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது நாட்டின் விளையாட்டுத்துறையை நாங்கள் உங்களுக்கு ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் கொண்டு வருகின்ற துறையாக மாற்றுவோம். சுற்றுலாத் தொழிற்துறையை நாட்டுக்கு வருமானம் கொண்டுவருகின்ற மற்றும் தொழில்களை பிறப்பிக்கின்ற முன்னேற்றமடைந்த தொழிற்துறையாக மாற்றியமைப்போம். இந்த நாட்டை எல்லா பக்கங்களிலும் சுத்தம் செய்து உங்களின் கனவுகளை நனவாக்குகின்ற அழகான வாழ்க்கையை அனுபவிக்க உங்களுக்கு கிடைக்கின்ற வளமான இலங்கையை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் நாங்கள் கட்டியெழுப்புவோம்.