Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

“எமது அரசாங்கத்தில் மக்களின் தரமான சுகாதார சேவைக்கான உரிமையை உறுதிசெய்வோம் – பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்காக எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வது பொறுப்புடன் செயலாற்றுகின்ற அரசாங்கமொன்றின் செயற்பொறுப்பாகும்” -ஜனாதிபதி, அநுர குமார திசாநாயக்க-

(-பொதுத்தேர்தல் – புத்தளம் மாவட்டக் கூட்டம் – 2024.10.24-) கடந்த ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் பல தொகுதிகளில் எமக்கு வெற்றியைப் பெற்றுத்தந்ததைப்போன்றே பொதுத்தேர்தலிலும் இந்த மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறுவதை இந்த பெருந்திரளான மக்கள் கூட்டம் உறுதிசெய்கின்றது. புத்தளம் மாவட்டத்தில் இருந்து இதுவரை தெரிவுசெய்து அனுப்பிய உறுப்பினர்கள் மக்களுக்கு துரோகமிழைக்கும் செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள். பலவந்தமாக காணிகளை கைப்பற்றுதல், போதைத்தூள் வியாபாரம் செய்தல், கள்வர்கள் தங்கக் கடத்தலில் ஈடுபடுதல், கப்பம் பெறுதல், பலவந்தமாக இறால் பண்ணைகளை கைப்பற்றுதல் […]

(-பொதுத்தேர்தல் – புத்தளம் மாவட்டக் கூட்டம் – 2024.10.24-)

The President Anura Kumara Dissanayake Addressing At The Victory Rally Of Puttalam Crowd

கடந்த ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் பல தொகுதிகளில் எமக்கு வெற்றியைப் பெற்றுத்தந்ததைப்போன்றே பொதுத்தேர்தலிலும் இந்த மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறுவதை இந்த பெருந்திரளான மக்கள் கூட்டம் உறுதிசெய்கின்றது. புத்தளம் மாவட்டத்தில் இருந்து இதுவரை தெரிவுசெய்து அனுப்பிய உறுப்பினர்கள் மக்களுக்கு துரோகமிழைக்கும் செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள். பலவந்தமாக காணிகளை கைப்பற்றுதல், போதைத்தூள் வியாபாரம் செய்தல், கள்வர்கள் தங்கக் கடத்தலில் ஈடுபடுதல், கப்பம் பெறுதல், பலவந்தமாக இறால் பண்ணைகளை கைப்பற்றுதல் போன்ற மக்களை அல்லற்படுத்துகின்ற உறுப்பினர்களுக்குப் பதிலாக மக்களுடன் தோள்கொடுத்து நாட்டைக் கட்டியெழுப்பகின்ற புதிய கலாச்சாரத்தைக்கொண்ட உறுப்பினர்களை புத்தளம் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிவையுங்கள். அதற்காக இருப்பது தேசிய மக்கள் சக்தியின் அணி மாத்திரமே. பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது பொதுவில் நிலவுகின்ற எதிர்ப்பினை முடிவுறுத்தி பாராளுமன்றத்தை துப்பரவாக்குகின்ற பாரிய சிரமதானத்திற்காக திசைகாட்டியிலிருந்து அதிகமான எண்ணிக்கைகொண்ட உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கவேண்டும். நாங்கள் அவ்வாறு கூறும்போது திசைகாட்டி வேட்பாளர்களின் முகங்கள்கூட தெரியாதென ஒருசிலர் கூறுகிறார்கள். எனினும் பலவிதமான குற்றச்செயல்களில் ஈடுபட்டு முழுநாட்டிலுமே பிரபல்யமடைந்துள்ள குற்றச்செயல் புரிபவர்களுக்குப் பதிலாக இந்த நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய திசைகாட்டியின் பலம்பொருந்திய அரசாங்கமொன்றை உருவாக்க செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் உலகில் இருக்கின்ற மிகச்சிறிய அமைச்சரவையை முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகளை உணர்கிறீர்களா? அவ்வாறான குறைபாடு கிடையாது. ஒரு பட்டாசுகூட கொளுத்தாமல் வெற்றியைக் கொண்டாடியதன் மூலமாக வெளிப்படுத்திய எடுத்துக்காட்டினை இந்த பொதுத்தேர்தலிலும் தேர்தல் இயக்கத்தில் பாதுகாத்து வருகிறோம். குறிப்பாக புத்தளம் மாவட்டம் என்பது தேர்தல் பீதிநிலையை பரப்பிய மாவட்டமாகும். எனினும் இந்த தேர்தல் காலத்தில் அமைதியான தேர்தலொன்றை நடாத்துதல் தொடர்பில் வரலாறு படைத்துள்ளோம். ஐரோப்பாவில் நிலவுகின்ற முன்னேற்றமடைந்த அரசியல் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புகின்ற தேர்தல் இயக்கமொன்றை தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்து வருகின்றது. பொதுத்தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றியின் பின்னரும் இந்த நிலைமையைப் பாதுகாக்கின்ற அரசியல் கலாச்சாரத்தை உறுதிசெய்கிறோம்.

The Victory Rally Of Puttalam Crowd People

அரசியலை வெறுத்திருந்த இளைஞர் தலைமுறையினரை முதன்மையாகக்கொண்ட மக்கள் புதிய உணர்வுடன் நாடு பூராவிலும் அரசியலில் ஒன்றுசேர்ந்து வருகிறார்கள். தேர்தலின் பின்னர் விஞ்ஞானரீதியான அடிப்படையில் இருபத்தைந்து பேருக்கு குறைவான அமைச்சரவையை நியமித்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை அமுலாக்குவோம். “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்பதைக் கட்டியெழுப்புகின்ற வேலைத்திட்டம் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எமது திட்டங்களை அமுலாக்கி வருகின்ற அதேவேளையில், குறிப்பாக மத்தியக் கிழக்கில் உருவாகியுள்ள யுத்த முரண்பாட்டின் தாக்கம் உலகம் பூராவிலும் பரவிவருவதோடு இலங்கை மீதும் ஒருசில அபாயநேர்வுமிக்க நிலைமைகள் வந்துள்ளன. அவற்றில் ஏதேனுமொரு சம்பவம் இலங்கையிலும் ஏற்படக்கூடுமென்ற தகவல் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர் எமக்கு கிடைத்தது. நாங்கள் சம்பந்தப்பட்ட இடங்களின் பாதுகாப்பினை வேகமாக உறுதிசெய்தோம். உளவுப் பிரிவுத் தகவல்கள் பதிவாகின்றபோது நாங்கள் ஊடக கலந்துரையாடல்களை நடாத்துவதில்லை. அந்த தகவல்களுக்கு நேரொத்தவகையில் பொறுப்புடன் செயலாற்றுவோம். பொறுப்புடைமயவர்களாக பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வோம். அதைப்போலவே உளவுப்பிரிவுத் தகவல்களின் அடிப்படையில் புலனாய்வுகளை துரிதமாக நடாத்தி ஒருசில சந்தேக நபர்களைக் கைதுசெய்தோம். எனினும் செய்திகளை வெளியிடுவதையோ ஊடக கலந்துரையாடல்களை நடாத்துவதையோ செய்யவில்லை. ஒரு அரசாங்கம் என்றவகையில் எமது பொறுப்பு அவ்வாறான சம்பவங்களை தடுப்பதாகும். முன்னர் செய்தது அவ்வாறான உளவுத் தகவல்களை பொருட்படுத்தாமல் விடுவது அல்லது ஊடகங்களுக்கு அறிவித்து பதற்றத்தை உருவாக்குவதாகும். மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பொலீஸாருடனும் பாதுகாப்பு பிரிவுகளுடனும் மிகவும் நெருக்கமாக கவனஞ்செலுத்தி மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். அது சம்பந்தமாகவும் ஒருசிலர் கலவரமடைந்திருக்கிறார்கள். பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது பொறுப்புடன் இயங்கிவருகின்ற அரசாங்கமொன்றின் செயற்பொறுப்பாகும். பொருளாதாரரீதியாக, பாதுகாப்புரீதியாக, தொழில்முயற்சிகளை முன்னேற்றுகின்ற பக்கத்தில், பிள்ளைகளின் கல்விப் பக்கத்தில் போன்றே உழைக்கும் மக்களின் பக்கத்தில் அனைவரையும் பேணிப்பாதுகாக்கவேண்டியது ஓர் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதனை நாங்கள் ஈடேற்றிக்கொண்டிருக்கிறோம்.

Gayan Janaka With President Waving At The Crowd At The Victory Rally Of Puttalam

வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு துறைக்குமான நிதி ஒதுக்கப்படுகின்றது. அவ்வாறின்றேல் குறைநிரப்பு மதிப்பீடு மூலமாக சம்பந்தப்பட்ட செலவினை ஏற்பதற்கான அங்கீகாரம் பெறப்படல் வேண்டும். அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பணத்தை ஒதுக்கியதாக முன்னாள் ஜனாதிபதி கூறுகிறார். அவர் ஒதுக்கியிராவிட்டாலும் எதிர்வரும் வரவுசெலவில் நாங்கள் அதற்கு அவசியமான நிதியை ஒதுக்கீடுசெய்வோம். முன்னாள் ஜனாதிபதி தோல்விகண்ட பின்னர் எம்மை அங்குமிங்கும் கிள்ளிக்கொண்டிருக்காமல் வீட்டில் இருக்கவேண்டுமென நாங்கள் ஞாபகப்படுத்துகிறோம். ஆனால் அவர்கள் ஏதாவது பிரச்சினையையோ அல்லது புனைகதையையோ உருவாக்கி மீண்டும் அதிகாரத்தைக் கையகப்படுத்திக்கொள்ள முயற்சிசெய்து வருகிறார்கள். எங்கள் அரசாங்கம் மூன்றே மாதங்களில், ஆறே மாதங்களில் வீழ்ந்துவிடுமென கூறவும்தொடங்கி இருக்கிறார்கள். நாங்கள் இந்த நாட்டை சீராக்கியே தீருவோமென்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். அதனை சாதிக்காமல் தேசிய மக்கள் சக்தி நின்றுவிடப் போவதில்லை. பொருளாதாரரீதியாக முன்னேற்றமடைந்த ஒரு நாடு, சுத்தத்தினால் முன்னேற்றமடைந்த ஒரு நாடு, மனிதர்களின் நடத்தைகளால் முன்னேற்றமடைந்த ஒரு நாடு, சட்டத்தின் ஆதிக்கத்தினால் முன்னேற்றமடைந்த ஒரு நாடு போன்றே சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களிடையே தேசிய ஒற்றுமை பாதுகாக்கப்படுகின்ற ஒரு நாட்டை நாங்கள் உருவாக்குவோம். அதற்கு மேலதிகமாக தேசிய பாதகாப்பினை உறுதிசெய்து, சுற்றாடலை நேசித்து, பாசத்துடன் பாதுகாக்கின்ற முன்னேற்றமடைந்த நாடாக இலங்கையை மாற்றியமைப்போம். எவருக்காவது இதனைப் பார்த்துப் பொறுத்துக்கொண்டிருக்க முடியாவிட்டால் ஒருபுறம் ஒதுங்கி அழுதுபுலம்பிக் கொண்டிருக்கவே நேரிடும். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எமக்கெதிரான அனைத்துவிதமான பிரச்சாரங்களையும் அவர்கள் மேற்கொண்டார்கள். எமக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் கிடையாதென அவர்கள் ஒரு பீதியைக் கிளப்பினார்கள். ஏற்கெனவே மத்தியவங்கி உத்தியோகத்தர்கள், நிதி அமைச்சின் உத்தியோகத்தர்கள், பொருளாதார ஆலோசகர்கள் அமெரிக்காவிற்குச் சென்று சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருகிறார்கள். அதைப்போலவே உலகின் அனைத்து நாடுகளுடனும் நெருக்கமான உறவுகளை இராஜதந்திரரீதியாக உறுதிசெய்து கொண்டிருக்கிறோம். அதனால் இன்று அவர்களால் கூட்டமொன்றுக்கு வந்து கூறுவதற்கு ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. அதனால் ஊடக சந்திப்புகளை நடாத்தி மீண்டும் மீண்டும் அவதூறான கதைகளைக் கூற, பொய்ப்பிரசாரங்களை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். எனினும் தேசிய மக்கள் சக்தி எல்லாவேளைகளிலும் உண்மையை அடிப்படையாகக்கொண்டு அரசியலில் ஈடுபடுகின்ற இயக்கமென்பதை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். பாராளுமன்றத்திலும் காலில் இழுக்க இடமளிக்காத, பிரச்சினையை ஏற்படுத்த முடியாத பலம்பொருந்திய அதிகாரத்தை தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக்கொடுங்கள். உங்கள் அனைவரதும் பொறுப்பினை ஏற்கின்ற அரசாங்கமொன்றை நாங்கள் நிறுவுவோம். ஏதேனும் சந்தேகத்தை மனதில் வைத்துக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் எமக்கு வாக்குகளை அளித்திராதவர்கள் இந்த தேர்தலில் எமக்காக ஒன்றுசேர்ந்து வருகிறார்கள்.

Crowd At The Victory Rally Of Puttalam Crowd

அரசாங்கமென்பது தனக்கு வாக்குகளை அளித்திராதவர்களினதும் நம்பிக்கையை வென்றெடுத்த சக்தியாகும். கழிகின்ற ஒவ்வொரு தருணத்திலும் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை அதிகரித்து வருகின்றது. அதனால் எமது அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியுமென நினைத்துக்கூட பார்க்கவேண்டாமென அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். அவர்களின் பல தலைமுறையினர் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற நிலைமை முற்றுப்பெற்றுள்ளதால் வேதனையின் ஓலக்குரல்கள் பல ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்த எவையுமே எமது அரசாங்கத்திற்கு சிறிதளவிலேனும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாதென்பதை ஞாபகப்படுத்துகிறேன். ஒருசில அரசியல் கட்சிகள் இறுதித்தருணத்திலும் அரசியல் இலாபத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பிரச்சாரங்களை மேற்கொண்டு, தேர்தலின்பின்னர் எம்மோடு இணைவதாக கூறிவருகின்றன. அங்குமிங்கும் தாவுதல் தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு நிலவுகின்றது. சந்தர்ப்பவாதிகளாக தாவுகின்ற தரகர்கள், கொந்துராத்துக்காரர்கள் இல்லாத ஒரேயோர் அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தியாகும். எதிர்காலத்திலும் எமது நிலைப்பாட்டினை அவ்விதமாகவே பாதுகாத்து, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய மகத்தான வெற்றியைப் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். வளமான நாட்டைக் கட்டியெழுப்பி அழகான வாழ்க்கையை உருவாக்கிக் கொடுப்பதற்காக அனைவரையும் அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Dr Chandarana Abeysinghe Addressing The Crowd At The Victory Rally Of Puttalam

Sunimal Jayakodi Addressing At The Victory Rally Of Puttalam

Anton Jayakodi Addressing At The Victory Rally Of Puttalam

Hiruni Wijesinghe Addressing At The Victory Rally Of Puttalam.jpg

Show More

“நவம்பர் 14 என்பது இலங்கை பாராளுமன்றத்தை சுத்தம் செய்வதற்கான சிரமதானம் நடத்தப்படுகின்ற நாளாகும்.” -ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க-

(-பாராளுமன்றத் தேர்தல் – பொலநறுவை கூட்டம் – 2024.10.23-) பல்லாயிரக்கணக்கான மக்கள் அடைமழையில் நனைந்துகொண்டு பொலநறுவையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்கான கூட்டத்தை நடத்துகிறார்கள். மக்களிடமிருந்து பிரதிபலிக்கின்ற எதிர்பார்ப்பு, நோக்கம் மற்றும் திடசங்கற்பம் நவம்பர் 14 ஆம் திகதி தனிச்சிறப்பு வாய்ந்த வெற்றியை பொலநறுவையில் இருந்து பெற்றுக்கொடுப்பதையே வெளிக்காட்டுகிறது. பொலநறுவை மாவட்டத்தை உள்ளிட் இந்நாட்டு மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டை புதிய திசைக்கு அனுப்பி வைப்பதற்காக தேசிய மக்கள் சக்திக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்கள். நாட்டில் இயல்புநிலையை […]

(-பாராளுமன்றத் தேர்தல் – பொலநறுவை கூட்டம் – 2024.10.23-)

President Anura Kumara Dissanayake Addressing The Crowd At The Victory Rally Of Polonnaruwa

பல்லாயிரக்கணக்கான மக்கள் அடைமழையில் நனைந்துகொண்டு பொலநறுவையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்கான கூட்டத்தை நடத்துகிறார்கள். மக்களிடமிருந்து பிரதிபலிக்கின்ற எதிர்பார்ப்பு, நோக்கம் மற்றும் திடசங்கற்பம் நவம்பர் 14 ஆம் திகதி தனிச்சிறப்பு வாய்ந்த வெற்றியை பொலநறுவையில் இருந்து பெற்றுக்கொடுப்பதையே வெளிக்காட்டுகிறது. பொலநறுவை மாவட்டத்தை உள்ளிட் இந்நாட்டு மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டை புதிய திசைக்கு அனுப்பி வைப்பதற்காக தேசிய மக்கள் சக்திக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்கள். நாட்டில் இயல்புநிலையை பேணிவந்து மக்களுக்கு அவசியமான நிவாரணங்களையும் நாட்டைக் கட்டியெழுப்ப அவசியமான திட்டங்களையும் வகுத்துக்கொண்டு மூவரைக் கொண்ட அமைச்சரவை இயங்கிவருகிறது. நவம்பர் 14 ஆம் திகதிய வெற்றிக்குப் பின்னர் படிப்படியாக நாட்டைக் கட்டியெழுப்ப தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள கொள்கை வெளியீட்டை நடைமுறைப்படுத்துவோம் என்பதை நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம். ஜனாதிபதித் தேர்தல் மேடையில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இருந்த பாசறையில் இருந்து என்ன கோரினார்கள்? பௌத்த பிக்குமார்களுக்கு அன்னதானம் கிடைக்கமாட்டாது, பௌர்ணமி தினத்தை இல்லாதொழிப்பதை உள்ளிட்ட பல விடயங்களை கூறினார்கள். அவையனைத்துமே பொய்யான புனைகதைகள் என்பது கடந்த ஒரு மாத காலத்துக்குள் நிரூபிக்கப்பட்டுவிட்டது. தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு தற்போது ஒரு கூட்டத்தைக் கூட நடத்த முடியாமல் போயுள்ளது. மக்கள் பொய்யை கேட்டுக்கொண்டிருக்க தயாரில்லை என்பதால் அவர்களின் கூறைகூறல்களுக்குள்ளேயே அவர்கள் சிறைf; கைதிகளாக மாறியுள்ளார்கள்.

இந்த பொதுத் தேர்தல் எந்தவிதமான போட்டியும் இல்லாமல் சோர்ந்துபோன ஒரு தேர்தல் என சிலர் கூறுகிறார்கள். எனினும், இந்த தேர்தலில் இலங்கை வரலாற்றின் மிகவும் தனித்துவமான வெற்றியை தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக்கொடுப்பது உறுதியானதாகும். கடந்த பாராளுமன்றம் பற்றி மக்கள் மத்தியில் எதிர்ப்பே நிலவியது. தங்கக் கட்டிகளை கடத்தி வந்து சுங்கத்தில் அகப்பட்டவர்கள் அண்மையில் பாராளுமன்றத்திற்கு வந்து கையை உயர்த்தினார்கள். அதைப்போலவே, அங்குமிங்கும் கட்சிதாவி இறுதியில் எங்கே இருக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ள முடியாத திரிபு நிலை உருவாகியிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக பள்ளிப்பிள்ளைகள் பாராளுமன்றம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தளவிற்கு அருவருப்பு நிலைக்கு உள்ளாகியிருந்த பாராளுமன்றத்தைக் கலைத்து மக்களுக்கு வாய்ப்பினை வழங்கியிருக்கின்றோம். நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறப்போவது ஒரு தேர்தல் அல்ல, சுத்தம் செய்வதற்கான பாரிய சிரமதானமாகும். நவம்பர் 14 ஆம் திகதி என்பது இலங்கையில் பாராளுமன்றத்தை சுத்தம் செய்தவற்கான சிரமதானம் நடத்தப்படுகின்ற நாளாகும். பொலநறுவையிலும் தன்னிச்சையாகவே சுத்தம் செய்துகொள்ள விரும்பியவர்கள் தேர்தலில் போட்டியிடுவதில்லை. எஞ்சியுள்ளவர்களை சுத்தம் செய்வதற்காக பொலநறுவை மாவட்ட மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ள கடமைப் பங்கினை தன்னிச்சையாகவே பொறுப்பேற்க வேண்டும். பொலநறுவைக்கு தலைமைத்துவம் வழங்கக் கூடிய, ஊழலற்ற, நேர்மையான குழுவினரை நாங்கள் முன்வைத்திருக்கிறோம். அதைப்போலவே, அங்குமிங்கும் கட்சித்தாவாத, விலைபோகாத குழுவினரை நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.

Crowd At The Victory Rally Of Polonnaruwa

அப்படியானால் நவம்பர் 14 ஆம் திகதி திசைகாட்டியின் குழுவினரைக் கொண்டு பாராளுமன்றத்தை நிரப்ப வேண்டும். நாங்கள் அவ்வாறு கூறும்போது மற்றுமொரு கும்பல் பலம்பொருந்திய எதிர்க்கட்சியை அமைத்துக்கொள்வதற்காக அழைப்பு விடுக்கிறார்கள். அது அப்படியல்ல. இந்த நேரத்தில் பலம்பொருந்திய அரசாங்கமொன்றே இருக்க வேண்டும். அதற்கான பணியை நாங்கள் ஆற்றவேண்டும். கட்டம் கட்டமாக நாட்டை உறுதிநிலைப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து அமுலாக்க வேண்டும். அதன்பொருட்டு குறிப்பாக பொலநறுவை மாவட்டத்துடன் சம்பந்தப்பட்ட அரிசியாலை உரிமையாளர்களுடன் புரிந்துணர்வுடன் செயலாற்ற நாங்கள் தயார் என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தோம். அதற்கு உடன்படாவிட்டால் சட்டப்படி செயலாற்றவும் தயார் என்பதையும் கூறியிருக்கிறோம். சுற்றுலா தொழில்துறைக்கு அவசியமான அரிசியைத் தவிர ஒரு அரிசி மணியைக் கூட நாங்கள் இறக்குமதி செய்யமாட்டோம். கமக்காரர்களுக்கு பலம்பொருந்திய வறுமான வழிவகை கிடைக்கின்ற வகையில் விவசாயத்துறையில் நிலைமாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். அதைப்போலவே, ஓய்வூதியம் பெறுநர்களுக்கு அஸ்வெசும பயனாளிகளுக்கு, பாடசாலை பிள்ளைகளுக்கு கொடுப்பனவினை பெற்றுக்கொடுப்பதற்கான திட்டங்களை வகுத்து அரச சேவையை வினைத்திறன் கொண்டதாக மாற்றியமைக்க இலங்கையில் முதல் தடவையாக கட்டியெழுப்பப்பட்டுள்ள மக்கள் நேயமுள்ள அரசாங்கம் செயலாற்றி வருகின்றது. இந்த நாட்டையும் மக்களையும் முதன்மைப்படுத்தி வைத்துக்கொள்வதற்காகவே நாங்கள் எந்தவொரு தீர்மானத்தையும் எடுப்போம். எங்களுடைய தனிப்பட்ட தேவைக்காக எந்தவிதமான தீர்மானத்தையும் எடுக்க மாட்டோம். அதனால், தோல்விகண்ட கும்பல்கள் கலவரமடைந்து அவர்களின் ஒட்டுமொத்த அரசியலையுமே கொழும்பில் நடாத்தப்படுகின்ற ஊடக சந்திப்புகளுக்கு மட்டுப்படுத்தி இருக்கிறார்கள். அந்த கதைகள் அனைத்துமே மனவேதனைகளின் வெளிப்பாடு ஆகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எங்களுக்கு வாக்குகளை அளித்தவர்களைவிட அதிகமான எண்ணிக்கை கொண்டவர்கள் பொதுத் தேர்தலில் வாக்குகளை அளிக்க அணிதிரண்டு இருக்கிறார்கள். நாள்தோறும் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி மீண்டும் மீண்டும் நம்பிக்கை வைத்து மக்கள் குழுமி வருகிறார்கள். தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக முன்வைத்த காலை பின்வைக்க மாட்டாது என்பதை வலியுறுத்துகிறேன். வறுமையின், நிர்க்கதி நிலையின் அடித்தளத்திற்கே வீழ்ந்துள்ள நாட்டை அதிலிருந்து மீட்டெடுத்து முன்நோக்கி நகர்த்துவதற்காக புத்திஜீவிகளும் தொழில்வாண்மையாளர்களும் பெருமளவில் தன்னிச்சையாக செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமது பணிகளை ஈடேற்றிக் கொள்வதற்காக அரசாங்க அலுவலகங்களில் வரிசைகளில் காத்துக்கொண்டிராமல் அனைத்தையும் டிஜிட்டல்மயமாக்கி வினைத்திறனுடன் ஈடேற்றிக் கொடுப்போம். வெளிநாடொன்றில் கோடிக்கணக்கான ரூபா சம்பளம் பெற்ற டிஜிட்டல் துறையைச் சேர்ந்த முதன்மை புத்திஜீவியொருவர் தன்னிச்சையாகவே நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு பங்களிப்புச் செய்வதற்கான இன்னும் சில வாரங்களில் நாட்டுக்கு வருகைத்தரவுள்ளார்.

President Anura Kumara Dissanayake Waving At The Crowd At The Victory Rally Of Polonnaruwa.jpeg

ஊழல்பேர்வழிகளுக்கு, மோசடிப்பேர்வழிகளுக்கு தண்டனை வழங்குவது ஒரு ‘வொய்ஸ் கற்’ நாடகமல்ல. இப்பொழுது பல வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. என்றாலும் “வொய்ஸ் கற்” கிடைக்காது. மூடப்பட்டிருந்த பல கோப்புகள் திறக்கப்பட்டு விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. கள்வர்களைப் போல் சம்பந்தபட்டவர்கள் பதற்றமடைந்திருக்கிறார்கள். அதற்காக மேலும் வலிமையும் பலமும் கொண்ட பாராளுமன்றத்தை தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். மக்களின் பக்கத்தில் உழைத்த பொலநறுவை மாட்டத்தின் மக்களுக்கு அறிமுகமான ஒரு குழுவினரை நாங்கள் முன்வைத்திருக்கிறோம். ஔடத தீத்தொழில் சம்பந்தமாக கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட வேளையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கெஹெலிய ரம்புக்வெல்லவை பாதுகாப்பதற்காக வாக்களித்தார்கள். பிணைமுறி மோசடி சம்பந்தமாக அப்போதிருந்த நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட வேளையிலும் அந்த நிதியமைச்சரை பாதுகாத்துக் கொள்வதற்காக வாக்குகளை அளித்தார்கள். கடந்த பாராளுமன்றத்தில் எல்லா சந்தர்ப்பத்திலும் மக்களுக்கு எதிராகவே கையை உயர்த்தியிருக்கிறார்கள். இரசாயன உரம் தடைசெய்யப்பட்டதை நிறுத்துமாறு கமக்காரர்கள் குரலெழுப்பிய வேளையில் அமைச்சரவையும் பாராளுமன்றத்தின் ஆளுந்தரப்பு பிரதிநிதிகளும் மக்களுக்கு எதிராகவே செயற்பட்டார்கள். இந்த தேர்தல் சற்று சோர்வானது போல இருந்தாலும் அனைவரும் நவம்பர் 14 ஆம் திகதி வரை வீடு வீடாகச் சென்று பலம்பொருந்திய பாராளுமன்றமொன்றை தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக்கொடுக்க அயராது உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

T B Sarath Addressing The Crowd At The Victory Rally Of Polonnaruwa

The Crowd At The Victory Rally Of Polonnaruwa
The Victory Rally Of Polonnaruwa Crowd
Show More

“அனைவருக்கும் “நான் இலங்கையன்” எனும் உணர்வு இருக்கின்ற ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம்”-ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க-

(-நாட்டைக் கட்டியெழுப்பும் நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு வெற்றிக்கான திருகோணமலை பொதுக் கூட்டம் – 2024.10.23-) இலங்கையில் பலம்பொருந்திய மாற்றத்தை மேற்கொள்வதற்காக தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றோம். அதன் பின்னர் மிகக் குறுகிய காலத்தில் பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய ஆட்சியொன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பினை மக்களுக்கு பெற்றுக்கொடுத்தோம். பொதுத் தேர்தலின் பின்னர் அரசாங்க அதிகாரத்தை நிறுவுதல் வரை இலங்கையிலும் உலகத்திலும் வரலாறு படைத்த மூவரை கொண்ட அரசாங்கமொன்றை நாங்கள் பேணிவருகிறோம். பொதுத் தேர்தல் […]

(-நாட்டைக் கட்டியெழுப்பும் நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு வெற்றிக்கான திருகோணமலை பொதுக் கூட்டம் – 2024.10.23-)

President Anura Kumara Dissanayake Speaking At The Victory Rally Of Trincomalee

இலங்கையில் பலம்பொருந்திய மாற்றத்தை மேற்கொள்வதற்காக தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றோம். அதன் பின்னர் மிகக் குறுகிய காலத்தில் பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய ஆட்சியொன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பினை மக்களுக்கு பெற்றுக்கொடுத்தோம். பொதுத் தேர்தலின் பின்னர் அரசாங்க அதிகாரத்தை நிறுவுதல் வரை இலங்கையிலும் உலகத்திலும் வரலாறு படைத்த மூவரை கொண்ட அரசாங்கமொன்றை நாங்கள் பேணிவருகிறோம். பொதுத் தேர்தல் நிறைவடையும் வரை மக்களின் அத்தியாவசிய சேவைகள் சீர்குலையாமல், பொருளாதாரம் சீர்குலையாமல், நாட்டின் பாதுகாப்பு சீர்குலையாமல் பேணி வரவேண்டிய பொறுப்பு எம்மூவருக்கும் கையளிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர 14 ஆம் திகதிக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த பெருமளவிலான உறுப்பினர்கள் மத்தியில் இருந்து இருபத்து ஐந்து பேருக்கு குறைவான அமைச்சரவையொன்றை அமைத்துக் கொள்வோம். இராஜாங்க அமைச்சர் பதவிகள் கிடையாது. அமைச்சுப் பதவிகளுக்கு ஒத்துவரக்கூடியதாக பிரதியமைச்சர் பதவிகள் இருக்கும். அது முதல் படிப்படியாக நாட்டைக் கட்டியெழுப்பி இந்தப் பயணத்தை தொடருவோம். நிலவிய பாராளுமன்றம் மக்கள் அனைவரினதும் எதிர்ப்பிற்கு அருவருப்பிற்கு இலக்காகியிருந்தது. கொவிட் பெருந்தொற்றின் போது வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்களின் போது கூட அந்த எதிர்ப்பு மக்களிடமிருந்து தோன்றியது. ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு கத்திகள், மிளகாய்த்தூளை எடுத்து வந்தார்கள். ஒருசிலர் புத்தகங்களை எறிந்து சண்டைப்பிடித்த விதத்தை நாங்கள் கண்டோம். எமது நாட்டில் மிருகக்காட்சிசாலை மக்களுக்கு தடைசெய்யப்படவில்லை. எனினும் பாராளுமன்றம் தடைசெய்யப்பட்டது. அந்தப் பாராளுமன்றம் மக்களுக்கு பொருத்தமற்ற பாராளுமன்றமொன்று அல்லவென்பது அதன் மூலமாக வெளிப்பட்டது. அந்தப் பாராளுமன்றத்தை சுத்தம் செய்து புதுப்பிக்க அணித்திரளுகின்ற வேளையில் முன்னாள் பாராளுமன்றத்திலிருந்த அறுபத்தியிரண்டு பேர் தன்னிச்சையாகவே நீங்கிச் சென்றிருக்கிறார்கள். திசைகாட்டியின் நேர்மையான, ஊழலற்ற, அதைப்போலவே மக்களுக்காக எந்தவொரு சவாலையும் வெற்றிக்கொள்ளக்கூடியவர்களைக் கொண்டு பாராளுமன்றத்தை நிரப்புங்கள். அதற்காக திருகோணமலை மாவட்டத்திலிருந்து மிகச்சிறந்த பங்களிப்பினை பெற்றுக்கொடுங்கள்.

Crowd At The Victory Rally Of Trincomalee

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அதற்காக திருகோணமலை மாவட்டத்திலிருந்து பாரிய சக்தி வழங்கப்பட்டது. 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஐயாயிரத்திற்கு குறைவான வாக்குகளே திசைகாட்டிக்கு கிடைத்திருந்தது. இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐம்பதாயிரத்தை விட அதிகமானதாகும். அப்படியானால் பொதுத் தேர்தலில் என்ன நடக்கும்? ஏனைய கட்சிகள் தேர்தல் இயக்கத்தை தொடங்கும்போதே தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டன. எமது நாட்டில் நிலவுகின்ற பல பிரதான சவால்களை வெற்றிக்கொள்ள திருகோணமலை மாவட்டத்திலிருந்து திசைகாட்டிக்கு பலம்பொருந்திய வெற்றி தேவை. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் நீண்டகாலமாக சந்தேகம், பகைமை, குரோதம், அவநம்பிக்கை பரப்பப்பட்டிருந்தது. அந்த நிலையில் தமிழ் மக்கள் தமிழ் கட்சிகளை நோக்கியும் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் கட்சிகளை நோக்கியும் தள்ளப்பட்டார்கள். அதன்பின்னர் அந்தக் கட்சிகளின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு அரசாங்கத்தின் அதிகாரத்தை உறுதிசெய்துகொள்வதற்கான அரசியலை அவர்கள் முன்னெடுத்துவந்தார்கள். திருகோணமலை நகரமும் மாவட்டமும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வசிக்கின்ற நிலைமைக்குப் பதிலாக மக்களை பிரித்து மோதல்களை ஏற்படுத்தி அவர்களின் ஆட்சியை கொண்டு நடத்தினார்கள். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்கான கட்சிதான் தேசிய மக்கள் சக்தி. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நாம் வெற்றிபெறுவோம் என நம்பவில்லை. அதனால் நாங்கள் பொதுத் தேர்தலுக்கு பிரவேசிப்பது நாங்கள் வெற்றிபெற்றுள்ள ஒரு பின்புலத்துடன்தான். அனைத்து மக்களும் ஒற்றுமைக்கான ஒரே குடையின் கீழ் வந்து நிழல் பெறவேண்டும். தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே அதனை சாதிக்க முடியும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் நம்புகின்ற அனைத்து மக்களினதும் நல்லாசி கிடைக்கின்ற அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே நிறுவ முடியும்.

The Victory Rally Of Trincomalee Crowd

ஜனாதிபதித் தேர்தலின் வெற்றிக்குப் பின்னர் வடக்கிலுள்ள மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தி மீதான பாரிய எழுச்சி தோன்றியுள்ளது. நம்பிக்கை வளர்ந்துள்ளது. பிரிந்து ஒதுங்கியிருந்த யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஒற்றுமையைக் கொண்ட அரசாங்கத்தை நிறுவ வேண்டிய விசேட பொறுப்பு திருகோணமலை மாவட்ட மக்களுக்கு இருக்கின்றது. சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவருக்கும் சமமாக அமுலாக்கப்படுகின்ற சட்டத்தைக் கொண்ட ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புகிறோம். ஒரு சில தடையேற்படுத்தும் சட்டங்கள் இருக்குமாயின் அவற்றை மாற்றியமைத்து மக்களின் நன்மைக்காக ‘நான் இலங்கையன்” என்கின்ற உணர்வை கொண்ட ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம். ‘நான் இலங்கையன்” என பெருமையுடன் கூறிக்கொள்ளக் கூடிய பின்புலத்தை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் உருவாக்கிக்கொடுக்கும்.

நாங்கள் நாட்டை அந்த நிலைமைக்கு கொண்டுவருகின்ற வேலைத்திட்டத்தை அமுலாக்குகையில் திருகோணமலையின் கனிய மணல் படிவை முறைப்படி பாவனைக்கு எடுத்து பெறுமதி சேர்க்கின்ற கைத்தொழிலாக மாற்றுவோம். அதைப்போலவே, எமது கண்ணெதிரே இற்றுப்போகின்ற எண்ணெய்க் குதங்களை புனரமைத்து தேசிய பொருளாதாரத்திற்கு பலம் சேர்க்கின்ற நிலைமைக்கு கட்டியெழுப்புவோம். அதைப்போலவே இந்த எண்ணெய்க் குதங்களை சார்ந்ததாக தூய்மையகமொன்றை நிர்மாணிப்பதற்கான வாய்ப்பு வழிவகைகள் பற்றியும் ஆராய்ந்து வருகிறோம். மரபார்ந்த மீன்பிடித் தொழில்துறையை ஆக்கவிளைவுமிக்க தொழிலாக மாற்றும்பொருட்டு ஏற்கெனவே எரிபொருள் மானியம் வழங்கியிருக்கிறோம். அதைப்போலவே, கால்நடை வளங்களை விருத்தி செய்தவற்கான பாரிய வாய்ப்பு வளம் திருகோணமலை மாவட்டத்தில் நிலவுகின்றது.

அதற்கு மேலதிகமாக 23 ஆயிரம் ஏக்கர் கரும்பு செய்கையைக் கொண்டதாக கந்தளாய் சீனித் தொழிற்சாலை நிலவியது. அந்த இயந்திர சாதனங்கள் அழிவடைந்து வருகின்றன. கரும்பு விளைநிலங்கள் யானைகளின் வாழிடங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இந்தக் காணிகளில் இருந்து 11 ஆயிரம் ஏக்கர்களை தற்காலிகமாக விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தோம். கரும்புச் செய்கையை மீண்டும் ஆரம்பித்து தொழில்சாலையை இயங்கும் நிலைக்கு கொண்டுவரும் வரை விவசாயிகள் இந்தக் காணிகளில் பயிர் செய்வார்கள்.

Arun Hemachandra Translate The Speach Of President Anura Kumara Dissanayake

அதைப்போலவே, அரிசி ஆலை உரிமையாளர்களை சந்தித்த வேளையில் அரிசித் தட்டுப்பாடு நிலவுவதில்லை என எமக்கு தெளிவாகியது. எமக்கும் அவர்களுக்கும் இடையில் புரிந்துணர்வுடன் செயலாற்ற நாங்கள் அடிப்படை அணுகுமுறையை தொடங்கினோம். சட்டத்தை அமுலாக்குவதைப் பார்க்கிலும் புரிந்துணர்வு முக்கியமானது. நாட்டில் அரிசி தட்டுப்பாடு கிடையாதென்பதால் சுற்றுலாத் தொழில்துறைக்கு அவசியமான அரிசியை தவிர்ந்த வேறு அரிசி மணி ஒன்றைக் கூட இறக்குமதி செய்ய நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ரூபா 15 ஆயிரமாக நிலவிய உரமானியத்தை ரூபா 25 ஆயிரமாக அதிகரித்தது அதற்காகத்தான். அடுத்த வருடத்தின் பெப்ரவரி மாதமளவில் எங்களுடைய முதலாவது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து மக்களுக்கு குறுங்கால ரீதியாக மானியங்களை வழங்குவோம். அதன் பின்னர் நீண்டகால ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்பிய பின்னர் மக்களை சுயசக்தியுடன் நிமிர்ந்து நிற்கும் ஆற்றல் படைத்தவர்களாக மாற்றுவோம். உலகில் விசேடமான ஒரு நிலைமை உருவாகாவிட்டால் 2025 ஆம் ஆண்டை இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிக அதிகமாக வருகை தந்த நாடாக மாற்றுவோம்.

அதேவேளையில் எதிரிகள் அரசாங்கம் மூன்று மாதங்களில், ஆறு மாதங்களில் வீழ்ந்து விடுவதாக சோகக் கதைகளை பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் குடும்ப ஆட்சி சிதைவடைந்து இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாத அளவிற்கு வங்குரோத்து அடைந்திருக்கிறார்கள். மக்கள் அரசியல்வாதிகளுக்கு பின்னால் சென்ற யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து சட்டத்தின் முன் சமமானவர்களாக மாற்றுவோம். 2015 நல்லாட்சி அரசாங்கம் மோசடிப்பேர்வழிகள், ஊழல்பேர்வழிகள் சம்பந்தமாக செயலாற்றுவதற்கு பதிலாக வெறும் காட்சிக்காக மாத்திரம் செயலாற்றி வந்தது. அந்த நிலைமையை மாற்றியமைத்து எல்லா விதத்திலும் நிறைவான ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம். அதற்காக இந்தப் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தை திசைகாட்டியின் பிரதிநிதிகளால் நிரப்புங்கள். திருகோணமலை மாவட்டத்திலிருந்து தமிழ் தோழர் ஒருவரை, முஸ்லிம் தோழர் ஒருவரை, சிங்கள தோழர் ஒருவரை என்ற வகையில் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற தோழர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள். ஒரே கொடியின் நிழலில் அனைத்து மக்களையும் பிரதிநிதித்தும் செய்கின்ற அரசாங்கமொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம்.

Arun Hemachandra Speaking At The Victory Rally Of Trincomalee

Indika Paranavithana Speaking At The Victory Rally Of Trincomalee

Buddadasa Withanarachchi Speaking At The Victory Rally Of Trincomalee

Show More

சீனத் தூதுக்குழுவின் பிரதிப் பிரதானிக்கும் ஜனாதிபதி செயலாளருக்கும் இடையே சந்திப்பு

(-Colombo, October 22, 2024-) சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei), ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். சீனா-இலங்கை இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளில் மேலும் விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர மரியாதை என்பன குறித்து இதன் போது நினைவுகூரப்பட்டதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார […]

(-Colombo, October 22, 2024-)

சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei), ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

சீனா-இலங்கை இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளில் மேலும் விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர மரியாதை என்பன குறித்து இதன் போது நினைவுகூரப்பட்டதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

Show More

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ஜனாதிபதி செயலாளருக்குமிடையில் சந்திப்பு – வடக்குக் கடலில் மீன்பிடி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இந்திய திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்

(-Colombo, October 22, 2024-) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha)ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். வடக்குக் கடலில் தற்போது நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி, ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். மேலும், இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்க […]

(-Colombo, October 22, 2024-)

President Secretary Meets Indian Embassador

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha)ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

வடக்குக் கடலில் தற்போது நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்படி, ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

மேலும், இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இச்சந்திப்பில் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய திட்டங்கள் தொடர்பிலும் மீளாய்வு நடத்தப்பட்டது.

இந்தியக் கடன்உதவிகள் மூலம் நிதியளிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து மேலும் ஆராயப்பட்டதுடன், திட்டப்பணிகளை உரிய நேரத்தில் நிறைவுசெய்வதற்காக அந்தப் பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆராயப்பட்டது.

Indian Embassador Meets President Secretary
Show More

அவசர வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து இலங்கைக்கு 30 மில்லியன் ரூபா உதவி

(-Colombo, October 22, 2024-) அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹொங்( Qi Zhenhong) இந்த உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்தார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதற்கும் வெள்ளத்தடுப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக எடுக்க வேண்டிய […]

(-Colombo, October 22, 2024-)

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹொங்( Qi Zhenhong) இந்த உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்தார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதற்கும் வெள்ளத்தடுப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக எடுக்க வேண்டிய நீண்டகால உத்திகள் குறித்தும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டது.

மேலும், எதிர்கால வெள்ள நிலைமைகளைத் தடுப்பதற்கும், அவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவதற்கும் பின்பற்றக்கூடிய நிலையான தீர்வுகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அண்மையில் பெய்த கடும்மழையால், பல மாவட்டங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்ததோடு உட்கட்டமைப்பு மற்றும் விவசாயத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டதாக அறிக்கைகள் தெரிவித்தன.

The Chinese Ambassador to Sri Lanka, Qi Zhenhong, met with President Anura Kumara Dissanayake
Show More