(-Colombo, November 8, 2024-) மாத்தறை நில்வலா ஆற்றில் கட்டப்பட்டுள்ள உப்பு நீர் தடுப்பு, அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பதற்கு காரணமாக இருப்பதாகவும், விளைச்சல் நிலங்களுக்குள் கடல்நீர் வருவதால், பயிர்கள் சேதமடைவதாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து, உடனடித் தீர்வுகளை வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று , ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல் சபை அதிகாரிகளுக்கு இடையில் இன்று (08) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. […]
(-Colombo, November 8, 2024-)
மாத்தறை நில்வலா ஆற்றில் கட்டப்பட்டுள்ள உப்பு நீர் தடுப்பு, அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பதற்கு காரணமாக இருப்பதாகவும், விளைச்சல் நிலங்களுக்குள் கடல்நீர் வருவதால், பயிர்கள் சேதமடைவதாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து, உடனடித் தீர்வுகளை வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று , ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல் சபை அதிகாரிகளுக்கு இடையில் இன்று (08) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
அங்கு, உப்பு நீர் தடுப்பு கட்டப்பட்டதால், வெள்ள நிலைமை மற்றும் விவசாய நிலங்களுக்கு உப்பு நீர் வரும் நிலை ஏற்படுகின்றதா என்பதையும் அதற்கான நிரந்தரத் தீர்வுகளை வழங்குவது முறையான ஆய்வுக்குப் பின்னரே செய்யப்பட வேண்டும் என்றும் அந்த நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த பொறியாளர்கள் தீர்மானித்த்துடன், இது தொடர்பில் ஆராய்ந்து தீர்வுகளை முன்வைப்பதற்காக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவின் ஆதரவைப் பெறுவதற்கு முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஜனாதிபதியின் செயலாளர் ஒப்புதல் வழங்கினார்.
அத்துடன், இதற்கான பரிந்துரைகளை தயாரிக்குமாறு ஆலோசனை வழங்கிய கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவினால் மேற்கொள்ளப்படும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் அதற்கான தீர்வை வழங்குமாறும், அந்தப் பணிகளை திட்டத்தின் இரண்டாம் கட்டமாக நடைமுறைப்படுத்துமாறும் மேலும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டுக் கோரிக்கையை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கினார்.
மாத்தறை மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும், அந்த வேலைத்திட்டத்தை நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழங்கல் சபை இணைந்து நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதியின் செயலாளர் இதன்போது வலியுறுத்தினார்.
உப்பு நீர் தடுப்பினால் நில்வலா ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்கள் தமது விளைநிலங்களை இழத்தல் உட்பட வாழ்வாதாரத்தில் பாதகமான விளைவுகள் ஏற்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதியின் செயலாளர், அந்த நிலைமையை விரைவாக மாற்ற வேண்டியது அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினா்.
மேலும், மாத்தறை பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு இதன்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(-Colombo, November 1, 2024-) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் (MASOOD IMAD) ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. மாலைதீவு ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும், மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியின் செயலாளரிடம் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், மாலைதீவு மற்றும் இலங்கையின் சுற்றுலா, […]
(-Colombo, November 1, 2024-)
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் (MASOOD IMAD) ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
மாலைதீவு ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும், மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியின் செயலாளரிடம் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், மாலைதீவு மற்றும் இலங்கையின் சுற்றுலா, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளை முன்னேற்றுவது குறித்தும் கலந்துரையாடபட்டது.
மாலைதீவு பிரதி உயர்ஸ்தானிகர் பாத்திமத் கினாவும்(fathimath Ghina)இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.
(-Colombo, November 1, 2024-) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரியவை நியமித்துள்ளார். பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், தேசிய போட்டித்தன்மை மற்றும் அனைத்து பிரஜைகளுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் எதிர்பார்ப்புடன், பிராந்தியத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளுக்கு இணையாக இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தமது தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் […]
(-Colombo, November 1, 2024-)
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரியவை நியமித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், தேசிய போட்டித்தன்மை மற்றும் அனைத்து பிரஜைகளுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் எதிர்பார்ப்புடன், பிராந்தியத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளுக்கு இணையாக இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தமது தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய துறைகளை உலகத் தரத்திற்கு மேம்படுத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். பிரஜைகளை வலுவூட்டுவதற்காக டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் (DPI) நிறுவுவதன் மூலம் பல்துறை டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு அரசாங்கம் உறுதியான அர்ப்பணிப்புடன் உள்ளது.
அதன்படி, வேகமான டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மற்றும் அனைத்து பிரஜைகளினதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் வழிவகுக்கும் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி தொடர்பான பாரம்பரிய அபிவிருத்தி வாய்ப்புகளை உள்வாங்கக் கூடிய வகையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கலாநிதி ஹான்ஸ் விஜயசூரியவின் நியமனம் மேலே குறிப்பிட்ட தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கான ஒரு முக்கிய படியாகும்.
சர்வதேச தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் பிரபலமானவரான கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, தற்போது ஆசியாடா நிறுவனத்தின் (Axiata Group Bhd) தொலைத்தொடர்பு வணிகத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி மற்றும் குழும நிறைவேற்றுப் பணிப்பாளராக பணியாற்றுவதுடன், அவர் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்த காலகட்டத்தில், கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய நிறைவேற்று அல்லாத தலைவராக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபைக்கு தலைமை வகிப்பார். இதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் டிஜிட்டல் பரிமாற்றத்திற்கான குறித்த வேலைத்திட்டங்களைத் திட்டமிடல் மற்றும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
குறித்த நியமனத்தின் பின்னர் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான நிறுவன கட்டமைப்பிற்குள் பல நிறைவேற்றுத் தலைமைப் பாத்திரங்களை அவர் வகிக்க உள்ளார். இதற்கு மேலதிகமாக, ஜனாதிபதியின் விடயப்பரப்பின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சான டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேற்பார்வையிடும் உயர்மட்ட நிறுவனமான டிஜிட்டல் பொருளாதார அதிகார சபையின் தலைவர் ஆகிய இரண்டு பதவிகளையும் அவர் வகிப்பார்.
(-Colombo, November 1, 2024-) இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரிப் பலன்களை வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. அரிசி விலையை ஸ்திரப்படுத்தல் மற்றும் அரிசி தட்டுப்பாட்டுக்கு நீண்ட கால தீர்வு காண்பதற்கு நெல் களஞ்சிய கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதன் முக்கியத்துவம் மற்றும் அஸ்வெசும மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக நலன்புரித் திட்டங்கள் உள்ளிட்ட சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் […]
(-Colombo, November 1, 2024-)
இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரிப் பலன்களை வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
அரிசி விலையை ஸ்திரப்படுத்தல் மற்றும் அரிசி தட்டுப்பாட்டுக்கு நீண்ட கால தீர்வு காண்பதற்கு நெல் களஞ்சிய கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதன் முக்கியத்துவம் மற்றும் அஸ்வெசும மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக நலன்புரித் திட்டங்கள் உள்ளிட்ட சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
எதிர்வரும் புதிய பாடசாலை தவணையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படவுள்ள நிவாரண விநியோகத் திட்டம் மற்றும் உர மானியத் திட்டம் என்பவற்றை டிஜிட்டல் மயமாக்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
டயலொக் ஆசியாடா தனியார் நிறுவனத்தின் குழும பிரதான நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க, மிலேனியம் IT நிறுவனத்தின் பிரதம தொழில்நுட்ப அதிகாரி மகேஷ் விஜேநாயக்க உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் குழுவும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
(-Colombo, October 31, 2024-) சுதந்திரத்திற்கு பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தை தேடிவந்த இலங்கை மக்கள் தற்போது புதிய எதிர்பார்ப்புக்களை சுமந்துக்கொண்டிருக்கின்றனர். இது மக்களின் பல வருட எதிர்பார்ப்பாகும். இத்தனை நாட்களாக இலங்கையை ஆட்சி செய்தவர்களால் முடக்கி வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை மலரச் செய்யும் மாற்றத்துக்கான யுகத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு பல காரணங்கள் உள்ளன. 14 வருட வனவாசத்தின் பின்னர் இராமர், இலட்சுமனர், சீதை பிராட்டி மீண்டும் அயோத்திக்கு வருகை தந்தமை மற்றும் கிருஷ்ண பகவான் […]
(-Colombo, October 31, 2024-)
சுதந்திரத்திற்கு பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தை தேடிவந்த இலங்கை மக்கள் தற்போது புதிய எதிர்பார்ப்புக்களை சுமந்துக்கொண்டிருக்கின்றனர். இது மக்களின் பல வருட எதிர்பார்ப்பாகும். இத்தனை நாட்களாக இலங்கையை ஆட்சி செய்தவர்களால் முடக்கி வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை மலரச் செய்யும் மாற்றத்துக்கான யுகத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.
தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு பல காரணங்கள் உள்ளன. 14 வருட வனவாசத்தின் பின்னர் இராமர், இலட்சுமனர், சீதை பிராட்டி மீண்டும் அயோத்திக்கு வருகை தந்தமை மற்றும் கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்தமையை நினைவுகூறும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அஞ்ஞானத்தின் இருளை போக்க மெய்ஞானத்தின் ஔியினால் மட்டுமே முடியும் என்ற தொனியில் தீபங்களை ஏற்றி இலங்கையர்களாக புதிய புரட்சிக்கு வழிவகுப்பதாக இம்முறை தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம் என மக்களிடம் கேட்டுகொள்கிறேன்.
கலாசார பல்வகைத்தன்மையின் அழகை மெருகூட்டும் வகையில், ஒருவருக்கொருவர் கௌரவம்,ஏற்றுக்கொள்ளல் மற்றும் சகோதரத்துவம் என்பவற்றுக்காக கரங்களை நீட்டுவோம்.
பிரித்து வலுவிழக்கச் செய்யப்பட்ட இலங்கை தேசத்தை பிளவுபடாமல் வலுவாக முன்னோக்கிக் கொண்டுச் செல்ல வேண்டிய காலம் உதயமாகியுள்ளது. அநீதி,வேறுபாடுகள், பிளவுபடுத்தல், வெறுப்புப் பேச்சுகள், வன்முறைகள் என்பதை முழுமையாக துடைத்தெறிந்து சமூகத்தில் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்வோர் மற்றும் வரப்பிரசாதங்கள் கிடைக்காதவர்கள் என்ற வேறுபாடுகளை முழுமையாக இல்லாது செய்ய முன்வருவோம்.
அவ்வறான, இரக்கம் கொண்ட ஒரு புதிய கலாசார இருப்பை உருவாக்க முன்வருமாறு அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். இந்தத் தீபாவளியில், வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை என்ற நமது எதிர்பார்ப்பு நனவாக வேண்டுமானால், அதற்கான கலாசார, அரசியல் ரீதியான மனப்பாங்கு மாற்றமும் அவசியமாகும்.
தீபாவளி தினத்தில் அனைத்து வீடுகளிலும் ஏற்றப்படும் ஆயிரக்கணக்கிலான விளக்கு ஔிகள் அனைவரினதும் மனங்களில் நட்புறவு மற்றும் ஞானத்தின் ஔியை பரவச் செய்வதாக அமையட்டும் என பிரார்த்திப்பதோடு இலங்கைவாழ் இந்து பக்தர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
அநுரகுமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2024 ஒக்டோபர் 30
(-“நாட்டைக் கட்டியெழுப்பும் நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு” வெற்றிக்கான காலி பொதுக் கூட்டம் – 2024.10.27-) இந்த தேர்தலில் மக்களுக்கு கூறுவதற்கு விடயங்கள் இல்லாதவர்கள் பழைய கதைகளையே மீண்டும் கூறத்தொடங்கி இருக்கிறார்கள். புதியவர்களுக்கு அனுபவம் கிடையாதெனவும், பழக்கப்பட்டவர்களையே அனுப்பிவைக்குமாறும் அவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் கூறுகின்ற பழையவர்கள் திருட்டுகளுக்கு பழக்கப்பட்ட, சட்டத்தை முற்றாகவே மதிக்காமல் செயலாற்றுபவர்கள் என்பது ஏற்கெனவே அம்பலமாகி உள்ளது. சாதாரண மனிதர் ஒருவரின் வாகன இலக்கத்தகடு விழுந்திருந்தால், வீதியில் மிகவும் விழிப்புடன் கவனமாகவே பயணிப்பார்கள். ஆனால் அரசியல்வாதிகள் […]
(-“நாட்டைக் கட்டியெழுப்பும் நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு” வெற்றிக்கான காலி பொதுக் கூட்டம் – 2024.10.27-)
இந்த தேர்தலில் மக்களுக்கு கூறுவதற்கு விடயங்கள் இல்லாதவர்கள் பழைய கதைகளையே மீண்டும் கூறத்தொடங்கி இருக்கிறார்கள். புதியவர்களுக்கு அனுபவம் கிடையாதெனவும், பழக்கப்பட்டவர்களையே அனுப்பிவைக்குமாறும் அவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் கூறுகின்ற பழையவர்கள் திருட்டுகளுக்கு பழக்கப்பட்ட, சட்டத்தை முற்றாகவே மதிக்காமல் செயலாற்றுபவர்கள் என்பது ஏற்கெனவே அம்பலமாகி உள்ளது. சாதாரண மனிதர் ஒருவரின் வாகன இலக்கத்தகடு விழுந்திருந்தால், வீதியில் மிகவும் விழிப்புடன் கவனமாகவே பயணிப்பார்கள். ஆனால் அரசியல்வாதிகள் இங்கிலாந்தில் இருந்து கள்ளத்தனமாக கொண்டுவந்து திருட்டு இலக்கத் தகடுகளுடன் வாகனங்கள் ஓட்டப்பட்டமை அம்பலமாகி உள்ளது. அதைப்போலவே கோடிக்கணக்கான பெறுமதிவாய்ந்த வாகனங்களை இனந்தெரியாதவர்கள் கொண்டுவந்து முற்றத்தில் வைத்துவிட்டுச்செல்வது இடம்பெற்று வருகின்றது. அவர்கள் இதுவரை சட்டத்துடன் தொடர்பு இல்லாதவர்களைப்போன்றே செயற்பட்டிருக்கிறார்கள். பொதுமக்கள் வாகனங்களை பதிவுசெய்துகொள்ள வேண்டும். ஆனால் அவர்களுக்கோ கள்ளத்தனமாக ஓட்டுவதற்கான ஆற்றல் இருக்கின்றது. அவர்கள் தற்போது மேடைகளில் கூறுகின்ற அனுபவம் அதுபோன்ற விடயங்களுக்கே இருக்கின்றது. குற்றச்செயல்களைப் புரிந்து தலைமறைவாக இருப்பதற்கான, திருடி தப்பித்துக்கொள்வதற்கான, பொதுமக்களுக்கு மேலானவர்களாக இருப்பதற்கான அனுபவம் அவர்களிடம் இருக்கின்றது. இப்படிப்பட்டவர்கள் இருந்த பாராளுமன்றத்தையே மக்கள் வெறுக்கிறார்கள். பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்கிறவர்களை நன்றாக பரிசோதிக்கிறார்கள். ஆனால் கள்ளத்தனமாக கத்திகள், மிளகாய்த்தூள் கொண்டுவரமுடியும். பாராளுமன்றத்தில் கதிரைகளைத் தூக்கி அடிக்கலாம். மக்களுக்கெதிரான சட்டங்களுக்காக கைகளை உயர்த்தலாம். இவ்வாறான செயல்களுக்கே அவர்கள் பழகி இருக்கிறார்கள். சட்டத்திற்கு மேலாக இருந்துகொண்டு, பொதுப்பணத்தைக் கோடிக்கணக்கில் மோசடி செய்யவும் மக்களைவிட அதிகமான சிறப்புரிமைகளை அனுபவிக்கவும் அவர்கள் அனுபவம் பெற்றிருக்கிறார்கள். அத்தகைய பழக்கங்களைக் கொண்டுள்ளவர்களை மக்கள் அறவே வெறுத்திருக்கிறார்கள். பழக்கப்பட்டவர்களை பாராளுமன்றம் அனுப்பிவைக்குமாறு முன்னாள் சனாதிபதி இன்றும் கூறியிருக்கிறார். நல்லவர்களால் பாராளுமன்றத்தை நிரப்புமாறே நாங்கள் கூறுகிறோம்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பாக முன்வந்துள்ளவர்கள் பாராளுமன்றத்திற்கு புதியவர்களாக இருந்தபோதிலும் அரசியலுக்கு புதியவர்கள் அல்ல. எந்தவொரு நேரத்திலும் நாடு அனர்த்தமொன்றை சந்திக்க நேரிட்டால் அதற்காக முன்நிற்பவர்கள். மக்களின் பணத்தை திருடியதற்கு எதிராக குரலெழுப்பியவர்களே இருக்கிறார்கள். இந்த நாட்டின் வளங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக அவற்றை பாதுகாத்துக் கொள்வதற்காக எந்தவொரு தருணத்திலும் முன்வந்தவர்களே இருக்கிறார்கள். இந்த நாட்டில் எங்கேயாவது ஓரிடத்தில் அநீதி ஏற்படுமானால் அதனை எதிர்த்து அரசியல் புரிந்தவர்களே இருக்கிறார்கள். அதைப்போலவே வெள்ளப்பெருக்கு அனர்த்தம், சுனாமி போன்ற பேரிடர்களின் மத்தியில் மக்களுக்காக உச்சஅளவில் அர்ப்பணிப்புச் செய்தவர்களே இருக்கிறார்கள். எம்மைக் குறைகூறுபவர்கள் தீயசெயல்களைப் புரிவதில் கைதேர்ந்தவர்களாவர். ஆனால் எம்மவர்களோ நல்ல செயல்களைப் புரிவதில் கைதேர்ந்தவர்கள். எதிர்வரும் தேர்தலில் புதியவர்களைக்கொண்டு எனினும் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்களைக்கொண்டே நிரப்பவேண்டும். திசைகாட்டியை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் அத்தகையவர்களே. இளைஞர்களுக்கு வெறுப்புத்தட்டிய அரசியல் சமர்க்களத்தை சுத்தஞ்செய்வதற்காக பாராளுமன்றத்தை திசைகாட்டியால் நிரப்பி சாதகமான அரசியலை உருவாக்கவேண்டும். அவர்களுக்கோ அரசியல் என்பது பணத்தை ஈட்டுவதற்கான மார்க்கமாகும். தேசிய மக்கள் சக்திக்கோ அரசியல் என்பது மக்கள் சேவையாகும். ஒரு பிஸ்னஸாக மாற்றிக்கொண்டிருக்கின்ற அரசியலை படிப்படியாக மக்கள் சேவையாக, மக்களுக்காக செயலாற்றுகின்ற அரசியலாக மாற்றியமைத்திடுவோம். அவர்கள் ஏதேனும் கருத்திட்டம் நாட்டுக்கு நல்லதா எனப் பார்ப்பதில்லை. அதனால் பரிசுத்தமான முதலீட்டாளர்கள் இந்த நாட்டுக்கு இதுவரை வரவில்லை. அரசியலை வியாபாரமாக கொண்டிருந்தவர்களே மருந்திலிருந்தும் திருடினார்கள். அரசியல் பிஸ்னல் மூலமாக தரமற்ற பசளையைக் கொண்டுவருகிறார்கள். இதனை மக்கள் சேவையாக மாற்றுவதற்கான ஆரம்ப நடவடிக்கைளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடேற்றிவருகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளைக் குறைத்து அவர்களுக்கான செலவுச்சுமையினைக் குறைக்கவேண்டும். சனாதிபதிக்கு, முன்னாள் சனாதிபதிகளுக்கு செலவிடுகின்ற செலவுச்சுமையினைக் குறைக்கவேண்டும். முன்னாள் சனாதிபதிமார்களுக்கான செலவுச்சுமையினைக் குறைக்க நாங்கள் ஏற்கெனவே ஒரு குழுவினை நியமித்திருக்கிறோம். இது ஒரு பழிவாங்கல் அல்ல. அரசியலை மக்கள் சேவையாக மாற்றியமைப்பதாகும். எமது நாட்டில் நிலவுகின்ற பழைய அரச பொறியமைப்பு காரணமாக அரசாங்க அலுவலகங்களில் பொது உதவியைப் பெற்றுக்கொள்ளவும் வேறு எந்த சேவையையும் ஈடேற்றிக்கொள்ள வரிசையில் காத்திருக்கவும் அத்துடன் தாமதங்கள் ஏற்படவும் நேரிடுகின்றது. இந்த நிலைமையை முற்றாக மாற்றியமைத்து அரசசேவையை டிஜிட்டல்மயமாக்கி வினைத்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவோம். இந்தியாவில் ஒரு கிவ்ஆர் கோட் மூலமாக வடை விற்பனை செய்யும்போது எமது மக்கள் ஐயாயிரம் ரூபாவை வாங்கவும், பத்து கிலோ அரிசியை வாங்கவும், அஸ்வெசும பெற்றுக்கொள்ளவும், காணிக்கான உறுதியை தயாரித்துக்கொள்ளவும் வரிசைகளில் அலைக்கழிய நேரிடுகின்றது. குறுகிய காலத்திற்குள் இவையனைத்தையும் முற்றாகவே மாற்றியமைத்து பிரஜைகளுக்கு நெருக்கமான, வினைத்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவோம். நாட்டை சீராக்குவது எப்படி, யார் என்பதை நாங்கள் காட்டுகிறோம். ஒருசிலர் ஊழல், மோசடி பயில் எங்கே எனக் கேட்கிறார்கள். அதற்கான விசாரணைகளை மேற்கொள்ளக்கூடிய பொருத்தமான உத்தியோகத்தர்களை நியமித்து அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய ஒத்துழைப்பினை வழங்கி முறைப்படி சட்ட நடவடிக்கைகளுக்கு இடவசதியை ஏற்படுத்திக் கொடுப்போம். நாடகபாணியிலான அல்லது காட்சிப்படுத்துகின்ற எந்தவொரு வேலையும் கிடையாது. படிப்படியாக சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவோம்.
நாட்டின் எதிர்காலத்தை நிர்மாணிக்கின்ற பிள்ளைகளின் கல்விக்காக முன்னுரிமையளித்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கின்ற அரசாங்கமொன்று இலங்கையில் முதல்த்தடவையாக வேலைகளைத் தொடங்கியுள்ளது. அதைப்போலவே பெற்றோர்களை உள்ளிட்ட முதியவர்களைப் பராமரித்து நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பணியை முன்னெடுத்துச் செல்லாமல் தேசிய மக்கள் சக்தி மீளத்திரும்ப மாட்டாது. அவர்களின் சோகக் கதைகளை பிதற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் மனதை அசுவாசப்படுத்திக் கொள்வதற்கான கதைகளை தேவையான அளவில் கூறிக்கொள்ளலாம். எனினும் மக்கள் நேயமுள்ள பணிகளை பாராளுமன்றத்தில் நடைமுறைப்படுத்துகையில் தடையேற்படுத்தாத உறுதியான அரசாங்கமொன்று தேவை. அதற்காக அதிகமான எண்ணிக்கை கொண்டவர்களை நவெம்பர் 14 ஆந் திகதி பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுங்கள். என்றாலும் இந்த தடவை தேர்தல் சோர்வடைந்து விட்டதைப்போல் உணர்வதாக ஒருசிலர் கூறுகிறார்கள். இதுவரை காலமும் தேர்தலை நடாத்தியவர்கள் முன்னாள் ஆட்சியாளர்களின் சண்டியர்களே. சமுர்த்தியை வெட்டிவிடுவதாக அச்சுறுத்துதல், அலங்கரிப்புக் கொடிகளை அறுத்தல், அலுவலகங்களைத் தாக்குதல் போன்றே அரசாங்கத்தின் அதிகாரத்தைக் கையிலெடுத்து பலவிதமான அப்ளிகேஷன் பகிர்ந்தளித்தல், அரிசி பங்கிடுதல், தகடுகளைப் பகிர்ந்தளித்தல் போன்ற எத்தனை செயல்கள் இடம்பெற்றன? தற்போது அவையெதுவுமே கிடையாது. அதாவது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் இலங்கையில் முதல்த்தடவையாக சுதந்திரமான தேர்தலுக்கு முழுமையாகவே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட தேர்தல் நல்லதில்லையா? மக்களிடம்சென்று சுதந்திரமாக கருத்துக்களை எடுத்துரைத்து அந்த மக்கள் வாக்களிக்கின்ற ஒரு தேர்தலே எமக்குத் தேவை. அத்தகைய தேர்தலை தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் இந்த நாட்டுக்கு பெற்றுக்கொடுத்திருக்கிறோம். நாங்கள் கடமைகளைப் பொறுப்பேற்றல், அமைச்சரவையை நியமித்தல் போன்றே பொதுத்தேர்தல்வரை புதிய மாற்றங்களைக் குறுகிய காலப்பகுதிக்குள் அறிமுகஞ் செய்துள்ளோம். எமது ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டை நல்லதொரு திசையைநோக்கி நிச்சயமாக மாற்றிடுவோம். அதற்காக அனைவரும் அணிதிரள்வோம். முன்நின்று உழைப்போம் என அழைப்பு விடுக்கிறோம்.