Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

ஊடக அறிவித்தல்

(-Colombo, May 21, 2024-) பயங்கரமான ஹெலிகொப்டர் விபத்தில் கவலைக்கிடமாக உயிரிழந்த மாண்புமிகு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசி, வெளியுறவு அமைச்சர் ஹொசெயின் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளின் திடீர் மரணம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி என்றவகையிலும் இலங்கை மக்கள் என்றவகையிலும் நாங்கள் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம். கவலைக்கிடமான இத்தருணத்தில் இறந்த அனைவரதும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நாங்கள் எமது அனுதாபத்தை பகிர்ந்து கொள்கிறோம். ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசியின் மறைவு ஈரானிய மக்கள் […]

(-Colombo, May 21, 2024-)

Iran-President-Death

பயங்கரமான ஹெலிகொப்டர் விபத்தில் கவலைக்கிடமாக உயிரிழந்த மாண்புமிகு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசி, வெளியுறவு அமைச்சர் ஹொசெயின் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளின் திடீர் மரணம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி என்றவகையிலும் இலங்கை மக்கள் என்றவகையிலும் நாங்கள் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம். கவலைக்கிடமான இத்தருணத்தில் இறந்த அனைவரதும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நாங்கள் எமது அனுதாபத்தை பகிர்ந்து கொள்கிறோம்.

ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசியின் மறைவு ஈரானிய மக்கள் மற்றும் மத்தியகிழக்கு மக்களுக்கு மாத்திரமன்றி உலக மக்கள் அனைவருக்கும் நிவர்த்திசெய்ய இயலாத நட்டமாகும். இலங்கையை உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளுடன் ஜனாதிபதி ரயிசி நட்புறவையும் ஆதிக்கவாதமற்ற உறவினையும் பலப்படுத்திக் கொள்வதற்காக அயராது உழைத்தார். ஈரானிய மக்களின் நிதியங்களால் நிர்மாணிக்கப்பட்ட நீர்மின் நிலையங்களை அங்குரார்ப்பணம் செய்துவைப்பதற்காக அவர் அண்மையில் மேற்கொண்ட இலங்கை விஜயமானது சர்வதேச ஒத்துழைப்பிற்கும் நிலைபெறுதகு அபிவிருத்திக்குமான அவரது மாற்றமில்லாத அர்ப்பணிப்பிற்கான தக்க சான்றாகும். அத்துடன் அதனையொத்த கருத்திட்டமொன்றை அங்குரார்ப்பணம் செய்துவைப்பதற்காக சென்ற அவருடைய இறுதிப்பயணமும் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர சுபிட்சத்திற்கான அவரது திடமான அர்ப்பணிப்பினை வலியுறுத்துகின்றது.

ஒத்துழைப்பு, அபிவிருத்தி மற்றும் நட்புறவினை விருத்தி செய்வதற்கான அவரது முன்மாதிரியானது ஈரானுக்கு உள்ளேயும் பொதுவில் மத்தியகிழக்கு பூராவிலும் இடையறாத அபிவிருத்தி மற்றும் உறுதிநிலையை உறுதிப்படுத்தி அவரது நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக ஈரானிய மக்களுக்கு நிச்சயமாக புத்துணர்ச்சி அளிக்குமென்பது தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எமது நம்பிக்கையாகும்.

கவலைக்குரிய இத்தருணத்தில் ஈரானிய மக்களுக்கு நாங்கள் எமது தீவிரமான ஒத்துழைப்பினை தெரிவித்துக் கொள்கிறோம்.

அநுர குமார திசாநாயக்க
தலைவர்
தேசிய மக்கள் சக்தி
2024.05.21

Iran-President-Death

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசி, வெளியுறவு அமைச்சர் ஹொசெயின் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளின் திடீர் மரணம் தொடர்பில், இன்று (21) பிற்பகல் ஈரான் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்கள் இலங்கையர் சார்பிலும் தேசிய மக்கள் சக்தியின் சார்பிலும் அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார்.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் பிமல் ரத்நாயக்க அவர்களும் இணைந்துகொண்டார்.

Iran-President-Death
Show More

“இளைப்பாறிய சமுதாயத்தினர் சமூக மாற்றத்தின் கௌரவமான பங்காளிகள்”-தேசிய மக்கள் சக்தியின் தலைரவர் அநுர குமார திசாநாயக்க-

(-தேசிய மக்கள் சக்தி – 2024.05.19-) அரசாங்கம் என்பது மக்கள் வாக்களித்து நியமிக்கின்ற ஆட்சியாகும். ஆட்சியொன்றின் அடிப்படைப் பொறுப்பு அந்த நாட்டின் பிரஜைகளை கவனித்துக்கொள்வதாகும். அவர்களுக்கு பலம்பொருந்திய வருமான வழிவகை, பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி, சிறந்த சுகாதார முறைமை, சட்டத்தின் ஆட்சி நிலவுகின்ற நாட்டை உருவாக்குதல், மனநிம்மதியுடன் வாழக்கூடிய சமுதாயமொன்றை உருவாக்குதல், மகிழ்ச்சியுடன் சிரித்துவாழும் பிரஜைகளை கட்டியெழுப்புவதாகும். எமது பிரஜைகளில் ஒரு பகுதியினர் இந்த பொருளாதாரத்துடன் பின்னிப்பிணைந்து தமது வாழ்க்கைத் தொழிலை அமைத்துக் கொள்கிறார்கள். பிரஜைகளின் கணிசமான […]

(-தேசிய மக்கள் சக்தி – 2024.05.19-)

NPP-retirered

அரசாங்கம் என்பது மக்கள் வாக்களித்து நியமிக்கின்ற ஆட்சியாகும். ஆட்சியொன்றின் அடிப்படைப் பொறுப்பு அந்த நாட்டின் பிரஜைகளை கவனித்துக்கொள்வதாகும். அவர்களுக்கு பலம்பொருந்திய வருமான வழிவகை, பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி, சிறந்த சுகாதார முறைமை, சட்டத்தின் ஆட்சி நிலவுகின்ற நாட்டை உருவாக்குதல், மனநிம்மதியுடன் வாழக்கூடிய சமுதாயமொன்றை உருவாக்குதல், மகிழ்ச்சியுடன் சிரித்துவாழும் பிரஜைகளை கட்டியெழுப்புவதாகும். எமது பிரஜைகளில் ஒரு பகுதியினர் இந்த பொருளாதாரத்துடன் பின்னிப்பிணைந்து தமது வாழ்க்கைத் தொழிலை அமைத்துக் கொள்கிறார்கள். பிரஜைகளின் கணிசமான பகுதியினர் அன்றாடம் உழைப்பையும் நேரத்தையும் பொருளாதாரத்துடன் தொடர்புபடுத்த இயலாத, பொருளாதாரத்துடன் இணைந்தாலும் அதன் நன்மைகள் போதியளவில் கிடைக்காத மக்களாக இருக்கிறார்கள். அதாவது தொழிலொன்றைப் புரிந்தாலும் கிடைக்கின்ற வருமானம் உயிர்வாழ போதுமானதாக அமையாத மக்கள். வயது முதிர்வு காரணமாக வேலை செய்வதற்காக உழைப்பையும் நேரத்தையும் ஈடுபடுத்த இயலாத அதைப்போலவே பல்வேறு காரணங்களால் ஊனமுற்ற நிலையை அடைந்துள்ள மக்கள்.

பொருளாதாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள, அன்றாடம் உழைப்பையும் நேரத்தையும் பொருளாதாரத்துடன் இணைத்திராத மக்களால் கிராமிய வறுமைநிலை கட்டியெழுப்பப்பட்டுள்ளது. கிராமிய வறுமைநிலையை ஒழித்துக்கட்டுவதற்கான வேலைத்திட்டமொன்று எமக்கு அவசியமில்லையா? சரியான உணவவேளையொன்று கிடைக்காத குழுவினர் சனத்தொகையில் 68% என மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 34 இலட்சம் குடும்பங்களுக்கு அரிசி 10 கிலோ வீதம் பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டது. அதாவது மக்களில் நூற்றுக்கு 50% இற்கு அதிகமானோருக்கு 10 கிலோ அரிசியை வழங்க வேண்டி நேரிடும். அதாவது தமது வாழ்க்கையை ஒட்டிக்கொள்ள முடியாத மக்கள். அந்த மக்களுக்கான வேலைத்திட்டமொன்று எமக்கு இருக்கவேண்டும். உலகின் ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள மக்களை கவனிப்பதற்காக மானியம் வழங்குதல் இடம்பெறுகின்றது. எமது நாட்டில் கிராமிய வறுமையை ஒழித்துக்கட்டுவதற்காகவும் மானிய வேலைத்திட்டமொன்று அவசியமாகும். ஆனால் அவர்களை நீண்டகாலம் மானியத் திட்டத்தில் வைத்திராமல், படிப்படியாக அவர்களுக்கு உயிர்வாழ்வதற்கான வருமான வழிவகையொன்றை அமைத்துக் கொடுப்பதற்கான பொருளாதார வேலைத்திட்டத்துடன் இணைக்கவேண்டும். அதைப்போலவே ஊனமுற்றவர்களும் எவருடைய தயவுமற்ற முதியோரையும் நாங்கள் பேணிப்பாதுகாத்திட வேண்டும். தனியார் துறையைப் போன்றே அரசாங்கத் துறையிலும் பணியாற்றி, வயது காரணமாக வேலையைக் கைவிட்ட மக்களைப் பாதுகாப்பதற்கான கடப்பாடு அரசாங்கத்திற்கு உண்டு. ஒவ்வொரு பிரசைக்கும் உயிர்வாழ்வதற்கு சிறந்த வருமான வழிவகை, சிறந்த வீடு, ஆரோக்கியமான வாழ்க்கை, முறையான கல்வி, மன நிம்மதி, சிறந்த போக்குவரத்து, குறைந்தபட்ச வசதிகள் இருக்கவேண்டும். எமது நாட்டில் இளைப்பாறியவர்களில் பெரும்பாலானோருக்கு இவை கிடைப்பதில்லை.

எனினும் நாட்டின் பிரஜைகள் குழுவொன்றுக்கு சிறப்புரிமைகளும் பொதுப் பிரஜைகளுக்கு துணைநிலைத் தரமும் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் இளைப்பாறிய சனாதிபதிகளின் ஓய்வூதியம், படிகள், வீடுகள், வாகனங்கள் அனைத்துமே இல்லாதொழிக்கப்படுமென நாங்கள் உங்களுக்கு உறுதியாக கூறுகிறோம். அதைப்போலவே வாழ்க்கைச் செலவு வேகமாக அதிகரிக்கும்போது அவர்களின் ஒரே வாழ்வாதாரமாக அமைகின்ற ஓய்வூதியம் உயிர்வாழப் போதுமானதாக அமையமாட்டாது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்புடன் சார்புரீதியாக அவர்களின் ஓய்வூதியமும் படிகளும் அதிகரிக்கப்படல் வேண்டும். பல்வேறு குழுக்களின் அறிக்கைகள் மூலமாக அரசாங்க ஊழியரின் சம்பளம் 70% ஆல் அதிகரிக்கப்பட வேண்டுமென முன்மொழியப்பட்டுள்ளது. உங்களின் வாழக்கைச் செலவுக்கு எற்ற ஓய்வூதியத்தை வழங்குவதாக நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறோம். 2016 – 2019 இளைப்பாறியவர்களின் விசேட குழுவொன்று இருக்கின்றது. பொது நிருவாக செயலாளரால் கையொப்பமிடப்பட்ட கடிதத்தில் 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இளைப்பாறுகையில் ரூ. 10,000 அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்பட்டு வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நியாயமான அந்த சம்பளம் கிடைக்காத ஒரு பகுதியினர் இருக்கிறார்கள். தோழர் மகிந்தவும் தோழர் சரத் லாலும் ஒரு வழக்கினை தாக்கல் செய்திருக்கிறார்கள். அதன் தீர்ப்பு மே மாதம் 31 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. 1997 இல் இருந்து தோன்றியுள்ள அதிபர் ஆசிரியர்களின் சிக்கலொன்று தீர்க்கப்படவேண்டி உள்ளது. அக்ரஹார வழங்குகையில் 2016 இற்கு முன்னர் இளைப்பாறிய மற்றும் 2016 இன் பின்னர் இளைப்பாறிய என இரண்டு தொகுதிகளாக வகுத்துள்ளார்கள். அது எவ்விதத்திலும் நியாயமான பிரிகையிடல் அல்ல. அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமொன்று வகுக்கப்படல் வேண்டுமென நாங்கள் நம்புகிறோம்.

NPP-retirered

மூத்த பிரஜைகளின் கணக்குகளுக்காக 15% வட்டி செலுத்தப்பட்டது. பெரும்பாலான ஒய்வூதியம் பெறுனர்கள் தமக்கு கிடைத்த 15% வட்டியைக் கொண்டுதான் தமது மருந்துகளை வாங்கினார்கள், தண்ணீர் பில் – லயிற் பில் செலுத்தினார்கள்: உணவு பானவகைகளை கொள்வனவு செய்தார்கள். பொருளாதாரம் சரிந்துகொண்டிருந்தவேளையில் மூத்த பிரஜைகளுக்கு கிடைத்துக்கொண்டிருந்த பொருளாதார அநுகூலத்தை அரசாங்கம் அபகரித்துக் கொண்டது. அதனால் மீண்டும் விசேட வட்டி வீதத்தில் மூத்த பிரஜைகளின் கணக்குகள் வைக்கப்படல் வேண்டுமென்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். நீங்கள் கொள்வனவு செய்கின்ற பண்டங்களுக்கு மாத்திரமல்ல உங்களின் ஓய்வூதியத்தை அல்லது பணிக்கொடையை வங்கியில் வைப்புச் செய்கையில் பெறுகின்ற வட்டி மீதும் வரி விதிக்கப்படுகின்றது. அது கட்டாயமாக நீக்கப்படல் வேண்டும். அதன் மூலமாக இந்த சிக்கல் தீர்ந்துவிட மாட்டாதென்பதை நாங்கள் அறிவோம். மிகவும் பலம்பொருந்திய பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று அவசியமாகும்.

உலகில் விருத்தியடைந்தவை என அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் பலம்பொருந்திய பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று இருக்கின்றது. பொருளாதாரத்தில் இருந்து வெளியேற்றப்படுகின்றவர்கள், பொருளாதாரத்தில் பங்கேற்காதவர்கள், முதியவர்கள், பல்வேறு வலதுகுறைந்த குழுவினர், தொழில்முயற்சிகள் சீரழிதல், திடீர் நெருக்கடிகளின்போது அவற்றை எதிர்கொள்வதற்காக பலம்பொருந்திய பாதுகாப்பு நிதியமொன்று அவசியமாகும். எமது பொருளாதாரத்திற்கு அத்தகைய நிலைமையை எதிர்கொள்ளக்கூட, தனித்துவமான ஆட்களை கவனிப்பதற்காகக்கூட பலம்பொருந்திய நிதியமொன்று கிடையாது. நாங்கள் கடைப்பிடிக்கின்ற பொருளாதார உபாயமார்க்கங்கள் வெற்றிகரமான பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதில் மாத்திரமே இவையனைத்தும் முடிச்சிப்போடப்பட்டுள்ளன. அதனால் இந்த பொருளாதாரத்தை புதிய சாதகமான திசையைநோக்கி ஆற்றுப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று எமக்கு அவசியமாகும். அதன்போது அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது தீர்மானகரமானதாகும்.

பாராளுமன்றத் தேர்தலையா சனாதிபதி தேர்தலையா நடாத்துவதென்பதே இத்தருணத்தில் தோன்றியுள்ள பிரச்சினையாகும். அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரமும் செத்தெம்பர் 16 இற்கும் ஒற்றோபர் 17 இற்கும் இடையில் சனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான அதிகாரமும் சனாதிபதிக்கு உண்டு. அப்படியானால் இன்றோ நாளையோ ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான தீர்மானத்தை எடுத்தால் அவரது அதிகாரம் இல்லாதொழியும். அவரால் மேலும் சில மாதங்கள் அதிகாரத்தில் இருக்க வாய்ப்பு நிலவுகையில் அவர் முன்கூட்டியே கதிரையில் இருந்து எழமாட்டார். பாராளுமன்றத்தைக் கலைத்தால் அவரைச் சுற்றி இருக்கின்ற மொட்டுக்கட்சிக் குழவைச் சேர்ந்த அனைவருமே தேர்தலில் போட்டியிடுவதற்காக மீண்டும் மொட்டுக்கட்சியில் சேர்வார்கள். பாராளுமன்றத்தைக் கலைத்து அதனால் கிடைக்கின்ற பெறுபேற்றுக்கிணங்க ரணில் விக்கிரமசிங்கவிற்கு சனாதிபதியல்ல சனாதிபதி வேட்பாளராகவும் ஆக முடியாது. கலைத்தால் ஐக்கிய தேசிய கட்சி முற்றுப்பெறும். அதன்படி கலைப்பதற்கான வாய்ப்பு அவருக்கு அரசியல்ரீதியாக பாதகமானதாகும். ஆனால் பாராளுமன்றத்தைக் கலைக்கவேண்டிய தேவை பசில் ராஜபக்ஷவிற்கு இருக்கிறது. ஒன்றில் அவர் ரணிலுக்கு ஆதரவு வழங்கவேண்டும். மக்களின் ஆதரவுடன் ரணில் சனாதிபதியாகினால் மொட்டின் பயணம் அத்துடன் நின்றுவிடும். ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் பிறிதோர் வேட்பாளரை நிறுத்தினால் மொட்டுக்கு இருக்கின்ற வாக்குகளும் இல்லாமல் போய்விடும். நிறுத்துவதற்கு வேறு வேட்பாளரும் இல்லை. சனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுபவர் எவராக இருந்தாலும் பாராளுமன்றத்தைக் கலைப்பார். சனாதிபதி தேர்தலின் பெறுபேறுகள் பொதுத்தேர்தலைப் பாதிக்கும். அதனால் அவர்களும் விரைவில் பாராளுமன்றத்தை எடுக்கவே முயற்சி செய்வார்கள். பாராளுமன்றத்தைக் கலைக்கவேண்டிய தேவை ஐ.ம.ச. உம் உண்டு. சனாதிபதி தேர்தல் ஆட்களை மையப்படுத்தியதாகும். சஜித்தைப் பார்க்கிலும் ஐ.ம.ச. ஐ பந்தயத்தில் இடுவது அவர்களுக்கு நன்மை பயக்கும். அதனால் அவர்களும் பாராளுமன்றம் கலைக்கப்படுவதை விரும்புகிறார்கள். தேசிய மக்கள் சக்தியாகிய நாங்கள் இந்த இரண்டுக்குமே தயார். அரசியலமைப்பிற்கு அமைவாக இவை இரண்டையுமே நடாத்த வாய்ப்பு நிலவியபோதிலும் அரசியல்ரீதியாக சனாதிபதி தேர்தல் நடாத்தப்பட உள்ளது.

NPP-retirered

எமது நாட்டில் அதிகாரம் பரிமாற்றப்படுகின்ற தீர்மானகரமான தேர்தலொன்று வருகின்றது. எமது சமூகம் திட்டவட்டமாக விழிப்படைய வேண்டும். அவர்களிடம் பாரிய ஊடக பலமொன்று இருக்கின்றது. முக்கியமான பிரச்சினைகளை மூடிமறைத்து மக்களை காட்டுப்பாதையில் வழிநடாத்த, குறுக்குப் பாதைகளில் வழிப்படுத்த அவர்களால் முடியும். உண்மையான பிரச்சினைகளை மூடிமறைத்து சமூகத்தை குழப்பியடிக்க அவர்களால் முடியும். உண்மையான பிரச்சினைக்குப் பதிலாக மீண்டும் மீண்டும் 88/89 பற்றிக் கூறுகிறார்கள். 88/89 இல் குற்றம் புரிந்தவர்கள் நாமெனில் ஏன் நந்தா எமக்காக பாடுகிறார்? அரச பயங்கரவாதத்தின் இயல்புதான் இங்கே பாடிய பாடலில் முழுமையாக இருந்தது. பிள்ளைகளை கடத்திய விதம். அமைச்சர்களின் வீடுகளில் சித்திரவதைக் கூடங்கள் இருந்தன. ஏ.எம்.எஸ். அதிகாரியின் வீட்டில், புத்தளத்தின் அமைச்சரது வீட்டில், திக்வெல்ல அமைச்சரின் வீட்டில், பதுளை அமைச்சரின் வீட்டில் சித்திரவதைக் கூடங்கள் இயங்கின. காடையர் படைகளை அமைத்துக் கொண்டிருந்தார்கள். அதனால்த்தான் நந்தா மாலினிக்கு இவ்வாறான பாடல்களை பாட நேர்ந்தது. ஆனால் மக்களை காட்டுவழியில் கொண்டுசெல்வதற்காக அரசியலால் இது பாரிய குழப்பநிலைக்கு மாற்றப்படுகின்றது, நாங்கள் திட்டவட்டமான பிரச்சினைக்கு எம்மை மையப்படுத்துவவோமென நான் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

சமூகத்தில் உண்மை மற்றும் பொய் என இரண்டு இருக்கின்றது. எமது ஒட்டுமொத்த அரசியலும் உண்மையை அடிப்படையாகக்கொண்ட அரசியலாகும். அவர்களின் ஒட்டுமொத்த அரசியலுமே பொய்யை அடிப்படையாகக்கொண்ட அரசியலாகும். அவர்கள் மக்களை உண்மையாகவே நேசிப்பதானால் இந்த தலைவர்களால் ஊசிமருந்தில் நஞ்சு கலக்க முடியுமா? மக்களை உண்மையாகவே நேசிக்கின்ற தலைவர்களால் மக்கள் பருகுகின்ற தேநீரில் கலக்கின்ற சீனிக்கு விதிக்கின்ற வரியில் இருந்து திருட முடியுமா? முழு நாட்டிலுமே வாகன பேர்மிற் நிறுத்திவைக்கப்பட்டிருக்கையில் 82 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு பேர்மிற் வாங்குவதற்காக கையொப்பமிடுகிறார்கள். இப்படியான ஒருநேரத்தில் அத்தகைய கடிதங்களில் கையொப்பமிட தலைவர்களால் முடியுமா? பேர்மிற் கோரியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை பகிரங்கப்படுத்துமாறு நாங்கள் சபாநாயகரிடம் கேட்கிறோம். நாங்கள் வாகன பேர்மிற் எடுப்பதுமில்லை. இதனை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். நாங்கள் உண்மையிலேயே இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த வாழ்க்கையையும் சாதகமான அரசினையும் எதிர்பார்ப்பவர்கள். நாங்கள் சமூகத்திற்கு உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான வித்தியாசத்தை வெளிப்படுத்த வேண்டும்.

எமது நாட்டில் பயணித்துக் கொண்டிருக்கின்ற பொருளாதார உபாயமார்க்கத்திற்கும் புதிய பொருளாதார உபாயமார்க்கத்திற்கும் இடையிலான உரையாடல் தோன்றவேண்டும். உண்மையான நிலைமை என்ன? இந்த பொருளாதாரப் பயணம் தவறானது. இந்த பொருளாதாரப் பயணம் சரியானதெனில் நாட்டுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கமாட்டாது. நாட்டை புதிய பொருளாதாரத்தில் பிரவேசிக்க வைக்கவேண்டும். 1948 இல் எமது நாடு சுதந்திரம் பெறுகையில் எமது நாட்டை எந்த திசையில் கொண்டுசெல்லவேண்டுமென்ற நோக்கு இருக்கவில்லை. அதன் விளைவாக இன்று சந்திரனுக்குச் செல்கின்ற, ஆசிய பிராந்தியத்திற்கு ஔடதங்களை வழங்குகின்ற, வாகனங்களை உற்பத்தி செய்கின்ற, உணவு வழங்குகின்ற, புடவைகளை உற்பத்தி செய்கின்ற, விதையினங்களை உற்பத்தி செய்கின்ற ஓர் இந்தியா உருவாகி இருக்கின்றது. 20 ஆம் நூற்றாண்டு மானிட வரலாற்றில் மிகப்பெரிய திருப்பங்கள் ஏற்பட்ட நூற்றாண்டாகும். தென் கொரியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா 20 ஆம் நூற்றாண்டிலேயே பலம்பொருந்திய பொருளாதார அத்திவாரத்தை அமைத்துக்கொண்டன. ஐரோப்பா 17 ஆம் நூற்றாண்டில் நாடுகளை ஆக்கிரமித்து பலம்பொருந்திய பொருளாதாரங்களை அமைத்துக்கொண்டன. நாங்கள் இருபதாம் நூற்றாண்டினை கைப்பற்றிக் கொள்வதற்குப் பதிலாக கைவிட்ட தேசமாவோம்.

NPP-retirered

20 ஆம் நூற்றாண்டில் நாட்டின் பயணப்பாதை பற்றிய உரையாடலொன்று வெளியில் நிலவியது.1918 இல் இலங்கை பொறியியலாளர் சங்கத்தைச் சேர்ந்த திரு. விமலசுரேந்திர லக்ஷபான மின்நிலையத்தை அமைக்கவும் அதிலிருந்து எஞ்சுகின்ற மின்சாரத்தைக்கொண்டு மின்சார புகையிரதத்தை ஓட்டுவிக்கவும் திட்டமொன்றை முன்வைத்தார். இலங்கையில் உள்ள கனியவளங்கள் பற்றி முற்றாய்வுசெய்து பொருளாதார நோக்கு ஒன்றை முன்வைத்தார். பேராசிரியர் சேனக்க பிபிலே சுகாதாரக் கொள்கை எந்த திசையை நோக்கிச் செல்லவேண்டுமென உரையாடினார். மார்ட்டின் விக்ரமசிங்க இலக்கியம் பயணிக்கவேண்டிய திசை, சரத்சந்திர அவர்கள் நாடகக்கலையின் திசை, கிளெரன்ஸ் இசையின் திசை இப்படிப்பட்ட புதிய தோற்றப்பாடுகள் பற்றி வெளியில் உரையாடினார்கள். எனினும் எமது அரசியல் அதிகாரிகள் எம்மை முற்றாகவே வரலாற்றில் சிறைப்படுத்தி வைத்தார்கள். நாங்கள் நவீனத்துவத்தின் வித்தியாசத்தைக் கைவிட்டுவிட்டோம். நாங்கள் இன்று உலகில் தனிமைப்படுத்தப்பட்ட இராச்சியமாக மாறிவிட்டோம். நாங்கள் வருடத்திற்கான ஏற்றுமதி வருமானமாக 12 பில்லியன் டொலர்களை ஈட்டுகையில் தென்கொரியா 685 பில்லியன் டொலர்களை ஈட்டுகின்றது.

பயணித்துக் கொண்டிருக்கின்ற பொருளாதாரப் பாதைக்குப் பதிலாக உற்பத்தியை மையப்படுத்திய புதிய பொருளாதாரப் பாதையில் பிரவேசிக்க வேண்டும். அனைத்தையும் விற்பதே அவர்களின் பாதை. ரெலிகொம் நிறுவனத்தின் அரைவாசியை ஏற்கெனவே விற்றுவிட்டார்கள். ஐ.ரீ. இல் எமக்கு 15 பில்லியன் டொலர்களை ஈட்டக்கூடிய இயலுமை நிலவுகின்றது. ஐ.ரீ. தொழிற்றுறைக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ரெலிகொம் நிறுவனமே அமைக்க வேண்டும். அரசாங்கம் ரெலிகொம்மை விற்கத் தயாராகிவிட்டது. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், கேஸ் கம்பெனி, மின்சார சபை, மின்நிலையங்களை விற்கத் தயாராகி இருக்கின்றது. அது சரியெனக்கூறி ஹர்ஷ த சில்வா கைதட்டுகிறார். புதிய உற்பத்தியை மையப்படுத்திய பொருளாதாரத்தை நோக்கி எமது நாட்டை திசைப்படுத்தவேண்டும். ஐ.ரீ. தொழிற்றுறை, சுற்றுலாக் கைத்தொழில் சேவைகள், நாட்டின் கனியவளங்களைப் பாவித்து புதிய கைத்தொழில் கட்டத்தில் பிரவேசிக்கவேண்டும். எமது நாட்டின் கனிய வளங்கள் பற்றிய முற்றாய்வினை மேற்கொண்ட பேராசிரியர் இலேபெரும தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்திருப்பதாக என்னிடம் கூறினார்.

எமது நாட்டில் மிக அதிகமாக மல்லுக்கட்டுகின்ற அமைச்சுகள் பெருந்தெருக்கள், துறைமுகங்கள் ( மிக அதிகமான கொள்வனவு), எயார் லங்கா (மிக அதிகமான கொள்வனவு), மின்சக்தி (மிக அதிகமான பிஸ்னஸ்), பெற்றோலியம் (மிக அதிகமான ஏற்றுமதிச் செலவு) இங்கு கூறப்படுவது என்னவென்றால் எமது அமைச்சர்கள் பிஸ்னஸ் பண்ணுவதற்காகவே தோன்றினார்கள். இந்த நாட்டை தரமான மாற்றத்திற்கு உட்படுத்த அவசியமான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு பொருட்படுத்தாமல் விடப்படுகின்ற அமைச்சாக மாறிவிட்டது. உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றுகின்ற பெருந்தொகையானோரை நாங்கள் சேர்த்துவருகிறோம். உலகில் புற்றுநோய்த் தடுப்பிற்கான மருந்தினை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அது மிகவும் முன்னேற்றகரமான மட்டத்தில் நிலவுகின்றது. அங்கே இருக்கின்ற இலங்கையர் எம்மோடு செயலாற்றி வருகிறார்கள். உலகில் உள்ள அறிவு, தொழில்நுட்பம் என்பவற்றை சேகரிக்கின்ற திட்டமொன்றை நாங்கள் வகுத்துக் கொண்டிருக்கிறோம். ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி விஞ்ஞானிகளின் சந்திப்பொன்றினை நடாத்த நாங்கள் தயாராகி வருகிறோம். அதன் ஊடாகத்தான் இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

NPP-retirered

எமது நாட்டின் காடைத்தனமான அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும். எமது நாட்டின் மையப் பிரச்சினை பொலிட்டிகல் கலாச்சாரமாகும். “பாராளுமன்ற உறுப்பினர்கள் திருடுவதை நிறுத்தவேண்டுமானால், சம்பளம் அதிகரிக்கப்படல் வேண்டும், மேலும் வசதிகள் வழங்கப்படல் வேண்டும்” என ஹர்ஷ த சில்வா கூறுகிறார். இதன் எல்லை எங்கே? அரசியலுக்கு வருவதே அதிலிருந்து கிடைக்கின்ற அதிகாரத்தையும் அவாநிறைவுகளையும் சிறப்புரிமைகளையும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரத்தினூடாக செல்வத்தை திரட்டிக் கொள்ளவும் ஆகும். ஹினிதும பிரதேசத்தில் கென்டர் ஒன்றில் தேயிலைக் கொழுந்து ஏற்றிய கென்டர் பியசேன அந்த பிரதேசத்தின் பிரதானமான தேயிலைத் தோட்ட உரிமையாளராகி இருக்கிறார். தற்போது அமைச்சர் பியசேன. தபால் நயின்டியில் பயணித்த எஸ்.பீ. திசாநாயக்க எப்படி ஹங்குரன்கெத்தவில் மாளிகையை அமைத்தார்? இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்திட வேண்டும். ஊடகவியலாளர் கேட்கிறார் ” உங்களுக்கு சேர்ட் வாங்கித் தந்தவர் யார்?” என. ஆனால் “அந்த இடத்தில் எப்படி ஹோட்டலொன்றை அமைத்தீர்கள்? “என அவர்களிடம் கேட்க அவர்களால் முடியாமல் போயுள்ளது.

2016 இல் 540 பிறாடோ ஊர்திகளைக் கொண்டுவந்திருந்தார்கள். வரி மோசடியொன்று இடம்பெற்றது. விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டு வந்தது. ரவி கருணாநாயக்க 540 பிறாடோ ஊர்திகளை விடுவித்தார். ஏன் மோட்டார் வாகனங்களை விடுவித்தீர்கள் என ரவி கருணாநாயக்கவிடம் கேட்க வேண்டும். அவர் நிதி அமைச்சர் காலத்தில் அவருடைய கம்பெனிக்கு அரசாங்க குதங்கள் வாங்கப்பட்டன. அதனை அவரிடம் கேட்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் மத்திய வங்கியில் மோசடியொன்று இடம்பெறவில்லையா? இடம்பெற்றிராவிட்டால் அர்ஜுன் அலோசியஸின் 800 கோடி பணம் ஏன் சென்ரல் பேங்கில் தடுத்துவைக்கப்பட்டது? களவு இடம்பெற்றிராவிட்டால் அதனைக் கொடுக்கவேண்டுமல்லவா. “களவு இடம்பெற்றாலும் நட்டம் ஏற்படவில்லையே” என ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்கள் அந்நாட்களில் கூறினார்கள். நாமல் ராஜபக்ஷ வந்தால் ” இன்னமும் நீங்கள் எப்படி அரசாங்க வீட்டில் இருப்பது? நீங்கள் அமைச்சரல்ல” எனக் கேட்க வேண்டும். அவையல்லவா கேள்வி. இன்று ஊடகத்தின் முன்னால் தோற்றுபவர் யார் என்று கூறினால் அவர்களிடம் கேட்கவேண்டிய கேள்விகளை நாங்கள் தருகிறோம். ஆனால் நாங்கள் போனதும் கேட்பதோ “உங்களின் சேர்ட் எங்கிருந்து?” என்றுதான். நாங்கள் அதனையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். இந்த அரசியல் கலாசாரத்தில் இருந்து வித்தியாசமான அரசியல் கலாசாரத்தை தேசிய மக்கள் சக்தி மாத்திரமே உருவாக்கும்.

உங்களுக்கு நான் உத்தரவாதமென்றை அளிக்கிறேன். நானோ தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ குழுக்களில் இருக்கின்ற எவருமோ பிஸ்னஸ்பண்ண வரப்போவதில்லை. நாங்கள் இந்த நாட்டில் நல்லவழியில் தொழில்முயற்சிகளை மேற்கொள்கின்ற தொழில்முனைவோருக்கு கைத்தொழிலதிபர்களுக்கு அவசியமான சுற்றுச்சூழலை அமைத்துக்கொடுப்போம். நீங்கள் இந்த நாட்டில் செல்வத்தைப் பிறப்பியுங்கள். செல்வத்தை பிறப்பிப்பவர் தனிப்பட்ட தொழில்முனைபவராவார். ஈட்டுகின்ற செல்வத்தில் ஒரு பகுதியை எடுப்பதையே அரசாங்கம் செய்துவருகின்றது. திறைசேரியை நிரப்பவேண்டுமானால் வெளியில் செல்வம் அதிகமாக உருவாகவேண்டும். எமது நாட்டில் வெளியில் செல்வம் உருவாவதில் உள்ள மிகப்பெரிய தடை இந்த அரசியல் கலாசாரமாகும். அமைச்சருக்கு அறிமுகமானவராக இல்லாவிட்டால் ச.தொ.ச. விற்கு பொருட்களைப் போட, தொழில்முனைவோர் காணியொன்றைக் கொள்வனவுசெய்ய, ஹோட்டலுக்கு உரிமமொன்றைப் பெற முடியாது. இந்த பொலிட்டிகல் கல்ச்சரில் சிறிய கும்பலொன்றின் கையில், பொருளாதாரத்தை நெறிப்படுத்துகின்ற அதிகாரம் சுருங்கி இருக்கின்றது. எமது நாட்டுக்கு நேரடியான வெளிநாட்டு முதலீடுகள் பாய்ந்து வருவதில்லை. 1978 இல் இருந்து 2022 வரை வந்துள்ள வெளிநாட்டு முதலீடுகள் 22 பில்லியன் டொலர்களாகும். 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் வியட்நாமிற்கு 23 பில்லியன் டொலர் வந்துள்ளது. நாங்கள் இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்திடுவோம். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பேர்மிற் கிடையாது. உறுப்பினர் பதவியை வகிக்கின்ற காலத்திற்கு வாகனமொன்று வழங்கப்படும். சேவைக்காலம் முடிவடைகையில் அவர் வாகனத்தை ஒப்படைத்துவிட்டு வீடுசெல்ல வேண்டும். வீடு வழங்குதல், சனாதிபதி மாளிகைகளை பராமரித்தல், இளைப்பாறிய சனாதிபதிகளை பராமரித்தல் நிறுத்தப்படல் வேண்டும். இந்த அரசியல் கலாசாரத்தை நிறுத்துவது எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பாகும். அரசியல்வாதி சட்டத்திற்கும் பிரஜைக்கும் மேலாக இருக்கின்ற ஒருவராக அமையமுடியாது. மனிதர்கள் தவறிழைக்கலாம். புரிகின்ற தவறுகளுக்கு தராதாரம் பாராமல் சட்டம் அமுலாக்கப்படவேண்டும்.

நாங்கள் சரியாக மையத்தை கேள்விக்குட்படுத்த வேண்டும். உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான பிரச்சினை, ஊழல் மற்றும் விரயத்தை எதிர்ப்பதற்கு இடையிலான பிரச்சினை, கடைப்பிடிக்கின்ற பழைய பொருளாதாரக் கொள்கைக்கும் புதிய பொருளாதாரக் கொள்கைக்கும் இடையிலான பிரச்சினை என்பவற்றை மையப்படுத்த வேண்டும். பாரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் எம்மைக் குழப்பியடிக்க இடமளிக்கவேண்டாம். உங்களிடம் பாரிய செயற்பொறுப்பு இருக்கின்றது. நீங்கள் கூறுவதை செவிமடுக்க பாரிய குழுவொன்று இருக்கிறது. உங்களுக்கு சமூகத்தில் பாரிய பலம், பொறுப்பு, நன்மதிப்பு இருக்கின்றது. இந்த அரசியலை மாற்றியமைப்பதற்காக உங்களிடம் இருக்கின்ற பலத்தை பயன்படுத்திக் கொள்வோம். இந்த மாற்றத்தின் முனைப்பான பங்காளியாக, முன்னணி பங்காளியாக அமையுமாறு நாங்கள் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். இந்த நாட்டை இதைவிட சிறந்த நாடாக மாற்றியமைக்க, இந்த பிரஜைகளுக்கு இதைவிட சிறந்த வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க முடியும். அதற்காக நாங்கள் ஒன்றுசேர்வோம். சாதகமானதா, பாதகமானதா, உண்மையா, பொய்யா, நேர்மையா, போலித்தனமா என்பதை தெரிவுசெய்யவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. சரியான தெரிவுக்காக நாங்கள் ஒன்றிணைவோம்.

Show More

“ஊர்மக்களின் பிரச்சினைகளை எளிமையாக தீர்த்துக்கொள்வதற்கான வழிமுறை இருப்பின் அதனை ஆராய்ந்து ஊர் மக்களுக்கு நியாயமான, பொருத்தமான வழிமுறையொன்றை நாங்கள் அமைத்துக் கொடுப்போம்…”-சட்டத்தரணி சுனில் வட்டகல-

(தேசிய மக்கள் சக்தி சட்டத்தரணிகளின் ஊடக சந்திப்பு – 2024.05.10) இந்த தருணம் தேசிய மக்கள் சக்திக்கும் அதன் தலைமைத்துவத்திற்கும் கணிசமான அளவிலான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற தருணமாகும். ரணிலை முதன்மையாகக்கொண்ட ஐக்கிய தேசிய கட்சித் தலைவர்கள், மொட்டு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தரப்பினர்கள் ஒன்றுசேர்ந்து எமது தலைவர்கள் பிரயோகிக்கின்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்திற்குப் பதிலாக திரிபான அர்த்தத்தை முன்வைத்து தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த தினமொன்றில் தேசிய மக்கள் சக்தியின் தோழர் லால் காந்த […]

(தேசிய மக்கள் சக்தி சட்டத்தரணிகளின் ஊடக சந்திப்பு – 2024.05.10)

pressnppl

இந்த தருணம் தேசிய மக்கள் சக்திக்கும் அதன் தலைமைத்துவத்திற்கும் கணிசமான அளவிலான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற தருணமாகும். ரணிலை முதன்மையாகக்கொண்ட ஐக்கிய தேசிய கட்சித் தலைவர்கள், மொட்டு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தரப்பினர்கள் ஒன்றுசேர்ந்து எமது தலைவர்கள் பிரயோகிக்கின்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்திற்குப் பதிலாக திரிபான அர்த்தத்தை முன்வைத்து தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த தினமொன்றில் தேசிய மக்கள் சக்தியின் தோழர் லால் காந்த மே தினத்தில் கூறிய கூற்றினை தொடர்புபடுத்திக்கொண்டு சேறு பூசுகின்ற தாக்குதல் நடாத்தப்பட்டு வருகின்றது. ஒட்டுமொத்த கதையினதும் அர்த்தத்திற்குப் பதிலாக பிரித்தடுத்த ஒருசில பகுதிகளை மேற்கோள் காட்டி உண்மையான அர்த்தத்தை மூடிமறைக்க முயற்சிசெய்து வருகிறார்கள். தோழர் லால் காந்த “ஊருக்கு நீதித்துறை தத்துவத்தை வழங்குவோம். நீதி நிருவாகத்திற்கான உரிமையை ஊருக்கு வழங்குவோம்” எனக் கூறியதாக குற்றச்சாட்டுசார்ந்த அபிப்பிராயமொன்றை முன்வைக்கிறார்கள். மேடையில் ஆற்றிய ஒட்டுமொத்த உரையின் கருப்பொருளை முன்வைக்காமல் எதிரான அரசியல் குழுக்கள் திரிபுநிலையுற்ற அபிப்பிராயமொன்றை சமூகமயப்படுத்த விளைகிறார்கள்.

தேசிய மக்கள் சக்தி என்றவகையில் நிலவுகின்ற இந்த சட்டக்கட்டமைப்பு மாற்றமடைய வேண்டுமென நாங்கள் நினைக்கிறோம். அதுமாத்திரமல்ல எமது ஆட்சியின்கீழ் புதிய அரசியலமைப்பு ஒன்றினையும் வகுப்போம். நாங்கள் அதிகாரத்திற்கு வந்ததும் உடனடியாக அரசியலமைப்பு ஒன்றினை முன்வைப்பது சிரமமானதாகும். அதனால் நிலவுகின்ற அரசியலமைப்பிற்குள்ளே சிறிது தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அவ்வாறு பயணிக்கையில் இந்த அரசியலமைப்பில் மக்களுக்கு சாதகமான வழிமுறை இருப்பின் அதனை தேசிய மக்கள் சக்தி கடைப்பிடிக்கும். ஊர்மக்களின் பி்ரச்சினைகளை எளிமையாக தீர்த்துக்கொள்கின்ற வழிமுறையொன்று இருப்பின் அந்த வழிமுறையை ஆராய்ந்து ஊர் மக்களுக்கு நியாயமான வழிமுறையொன்றை நாங்கள் அமைத்திடுவோம். அது இடம்பெற வேண்டும். தோழர் லால் காந்தவின் உரையின் ஒட்டுமொத்த அர்த்தத்தை எடுத்துக்கொண்டால் அது மிகவும் நன்றாக தெளிவாகின்றது.

அரசியலமைப்பின் 3 வது அத்தியாயத்தில் மக்களின் இறைமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் காட்டப்பட்டுள்ளவாறு ” இலங்கை குடியரசின் இறைமைத் தத்துவம் மக்களுக்குரியதாகும். இறைமைத் தத்துவத்தை பாராதீனப்படுத்த முடியாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இறைமைத் தத்துவம் சனநாயக நாடுகளில் ஆட்சியின் வசதிகருதி நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை, நீதித்துறை என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. “நீதிமன்றம்” அரசியலமைப்பின் மூன்றாவது பிரிவுக்கிணங்க அமுலாக்கப்படுகின்ற நிறுவனமாகும். மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக ஆட்சியின் வசதிகருதி பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதியுர் நிலையில் உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் என கீழ்நோக்கி முறைமையொன்று வியாபித்துச் செல்லக்கூடியவகையில் அமைந்துள்ளது. நீதிவான் நீதிமன்றத்திற்குக் கீழாக அமுலாகின்ற நீதிமன்றத்திற்கு உதவி புரிகின்ற ஒருசில கூறுகள் நிலவுகின்றன.

உதாரணமாக கமநல சேவைகள் சட்டம் நீதவான் நீதிமன்றத்தில் அமுலாக்கப்படுவதில்லை. கமக்காரனின் “வாய்க்கால்” பிரச்சினை கிராமத்திலுள்ள கமக்காரர் சங்கத்தினாலேயே தீர்க்கப்படுகின்றது. அதற்கான அதிகாரம் ஊரிலுள்ள கமக்காரர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை சம்பந்தமான சிக்கல் தோன்றியவிடத்து அறுதியிடுகின்ற வாக்கெடுப்பினை நடாத்தி அந்த சிக்கலைத் தீர்த்துக்கொள்ள கூட்டுறவுத்துறை சட்டத்திற்குள்ளே ஏற்பாடுகள் நிலவுகின்றன. அதைப்போலவே மத்தியஸ்த சபைகள் ஊடாகவும் சிக்கலுக்குத் தீர்வுகாண்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தினால் மத்தியஸ்த சபையின் சான்றிதழ் கோரப்படுகின்றது. ஒருசில சிக்கல்கள் நீதிமன்றத்தைப் போன்றே பொலீஸாலும் மத்தியஸ்த சபைக்கு ஆற்றுப்படுத்தப்படுகின்றது. அதன்போது மத்தியஸ்த சபைக்கு” தீர்க்கப்படாமைக்கான சான்றிதழை” வழங்குவதற்கான அதிகாரம் இருக்கின்றது. “நடுத்தீர்ப்பு” என்பதும் அத்தகைய ஒரு செயற்பாடாகும். கீழ் மட்டத்தில் உள்ள பொலீஸின் தரத்தை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கான இயலுமை நிலவுமாயின் அதனை எவருமே விரும்பாதிருக்கப் போவதில்லை. அதோ அந்த கருத்தில் எதேனுமொரு கட்டமைப்பினை உருவாக்கி அதற்கு அதிகாரத்தை வழங்குவதையே தோழர் லால் காந்த குறிப்பிட்டார். தேசிய மக்கள் சக்தியின் அங்கத்தவர்களுக்கு அதிகாரத்தை வழங்க மேற்கொள்ளப்படுகின்ற முயற்சி என எதிரிகள் அதற்கு பொருள்கொடுக்க தாழ்ந்த மட்டத்திலான முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.

தேசிய மக்கள் சக்தி எந்த இடத்தில் இருக்கின்றதென அனைவரும் அறிவார்கள். எதிரிகள் மிகவும் பதற்றமடைந்துள்ளார்கள். அதனாலேயே எமது வார்த்தைகளை திரிபுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். எதிரியின் இந்த குறைகூறல்களை நாங்கள் புறந்தள்ளுகிறோம். அதைப்போலவே தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்றவகையில் எமது ஆட்சியின்கீழ் முறையான சட்டமுறைமையொன்றை எவ்வாறு கொண்டுவருவது எனும் விடயம் பற்றி ஆராய்ந்து வருகின்றது. சனாதிபதி தேர்தல் அண்மிக்கையில் எமது கொள்கை வெளியீட்டினை முன்வைப்போம் அதனை வாசித்துப் பார்க்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.

pressnppl

“”உண்மையின் பயணத்தை தொடர தயாரகும்வேளையில், பொய் உலகத்தைச் சுற்றி மூன்று தடவைகள் அலைந்துவந்து வீட்டுக்கும் வந்துவிட்டது” என ஒரு கூற்று இருக்கின்றது.”
-சட்டத்தரணி ஹர்ஷண நானாயக்கார-

ஒரு கூற்று இருக்கின்றது “உண்மையின் பயணத்தை தொடர தயாரகும்வேளையில், பொய் உலகத்தைச் சுற்றி மூன்று தடவைகள் அலைந்துவந்து வீட்டுக்கும் வந்துவிட்டது” என. தற்போது திசைகாட்டிக்கு எதிரான எதி்ரிகள் பொய்களை சமூகமயப்படுத்தப்படுகின்ற வேகம் அதிகரித்துள்ளது.

லால் காந்தவின் உரையை தொடக்கத்தில் இருந்தே கேட்குமாறு நான் முதலில் கூறுகிறேன். ஒட்டுமொத்த உரை 42 நிமிடங்களாகும். வகுத்த தொகுத்தமைத்த உரையின் ஒன்றரை நிமிட பகுதியையே நீங்கள் கேட்டிருப்பீர்கள். லால் காந்த முன்வைப்பது மிகவும் முன்னேற்றகரமான பிரதிநிதித்துவ சனநாயக பண்பினையாகும். அதிகாரம் என்பதால் மக்களை எவ்வாறு பலப்படுத்துவது எனும் விடயத்தையாகும். அதிகாரம் கீழ்நோக்கி பகிர்ந்து செல்வதன் கருத்து ஊரிலுள்ள ஐந்துபேர் மதகொன்றின்மீது அமர்ந்து வழக்கு விசாரிப்பதல்ல. எனினும் எதிரானவர்கள் ஊடகத்திற்கு வந்து கூற முயற்சிசெய்வது அதைத்தான். சட்டத்தின் ஆட்சியில் உள்ள பிரதான அம்சம்தான் நீதிக்கான அணுகலுக்கு இருக்கின்ற வாய்ப்பு (Access to Justice). ஆளொருவர் அரசாங்கத்திற்கோ அல்லது பொலீஸிற்கோ எதிராக தனது சட்டமுறையான உரிமையை உறுதிப்படுத்துகின்ற நிலைமையை எற்படுத்துதல். நீதியை அணுக முயற்சிசெய்கின்றபோது தோன்றுகின்ற பிரதானமான தடைதான் அதற்கான மிகையான செலவும் காலமும். அதனால் ஆட்கள் தமது உரிமைகள் மீறப்பட்டால் தீர்வு காண்பதற்காக நீதிமன்றம் செல்ல முனைவதில்லை. யாழ்ப்பாணத்தில், அம்பாந்தோட்டையில், அநுராதபுரத்தில் ஆட்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு ஆஜராக கட்டாயமாக கொழும்பிற்கு வரவேண்டும். அது மிகவும் சிரமமான நிலைமையாகும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் மக்களிடம் நீதியை எடுத்துச்செல்வதற்காக எம்மால் மாகாணத்திற்கும் ஓர் சுப்ரீம் கோர்ட்டினை பெற்றுக்கொடுக்கமுடியுமா எனும் உரையாடலுக்குச் செல்லமுடியும்.

இந்த வழிமுறையை இந்த நாடு பயணித்த பாதையை மாற்றியமைத்திட வேண்டுமென்பதை தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகளாகிய நாங்கள் அறிவோம். அதன் பிரதானமான பகுதிதான் சட்டத்தின் ஆட்சி. சட்டத்திலும் நீதிமன்றங்களிலும் பலவீனங்கள் நிலவுமாயின் அவற்றை மாற்றியமைத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும். தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் எந்தவொரு சட்டத்தையும் ஒருதலைப்பட்சமாக தீர்மானித்து அமுலாக்க எத்தனிக்கமாட்டோம். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுடனும் கலந்துபேசியதன் பின்னரே தீர்மானிப்போம். இந்தியாவிலும் பங்களாதேஷிலும் நீதிக்கான அணுகலை வசதிப்படுத்துவதற்காக கிராமங்களில் நீதிமன்றம் (Village Courts) இருக்கின்றது. இவற்றில் சட்டமுறையான பயிற்சியைப் பெறுகின்ற உத்தியோகத்தர்கள் ஊடாக ஊரில் இடம்பெறுகின்ற சிறியஅளவிலான குற்றச்செயல்களை தீர்த்துக்கொள்கிறார்கள். அத்தகைய நீதிவழங்குவதை கீழ்நோக்கி கொண்டுசெல்வதைத்தான் தோழர் லால் காந்த அன்று தெளிவுபடுத்தினார். அதனால் ஆகின்ற செலவு குறைவடைதல், பிரதான நீதிமன்றங்களில் வழக்குகள் குவிவதற்கான போக்கு குறைவடைதல் போன்ற சாதகமான நிலைமைகள் உருவாகும். நீதிக்கான அணுகல் என்பது இந்த நன்மைகள் மாத்திரமல்ல. மக்களை வலுவூட்டுவதற்கான சட்ட உதவிகளின் அளவினை அதிகரிக்க வேண்டியநிலை ஒருசிலவேளைகளில் இடம்பெறும். சட்டத்தின் உதவி நீதவான் நீதிமன்றத்திற்கு கட்டாயமானதல்ல. மக்களை வலுவூட்டுவதற்கு அவசியமான நிருவாகக் கட்டமைப்புகளை உருவாக்கிக்கொள்ள நாங்கள் முயற்சி செய்கிறோம். எனினும் ஐமச உள்ளிட்ட அரசியல் எதி்ரிகள் அதனை திரிபுபடுத்தி வருகிறார்கள். அதைப்போலவே நேர்காணலொன்றின்போது சட்டத்தரணிகளை நீதிமன்றத்தை அவமதித்ததாக கதையொன்றை புனைந்து வருகிறார்கள். ஒருசில சட்டத்தரணிகளின் கூற்றுகளை அவர் விமர்சித்தார். அவர்கள் அரசியல் இலாபத்திற்காக உண்மைகளை திரிபுபடுத்தி வருகிறார்கள்.

நாங்கள் ஊரில் உள்ள மீனவர் சங்கமொன்றை உதாரணமாக கொள்வோம். மீனவர்களின் சிக்கல்களை அவர்களின் மீனவர் சங்கங்கள் ஊடாக நீதிமன்றமல்லாத கட்டமைப்பு ஊடாக தீர்த்துக்கொள்ள முடியும். அது நீதிமன்ற முறைமையைவிட வித்தியாசமானது. கிராமம் வரை வியாபித்துச்சென்ற மக்களுக்கு வலுவூட்டுகின்ற நிருவாக மாதிரியொன்றே அவசியமாகின்றது. புதிய மாதிரிகள் பற்றி நாங்கள் கலந்துரையாடிக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் நீதி நிருவாக வழிமுறைகள் எவ்வாறானதாக அமையவேண்டுமென கலந்துரையாடிப் பார்ப்போம்.

pressnppl

“பிரதேசவாரியாக சட்டத்தை அமுலாக்குவது தவறானதெனில் முதலில் இவர்கள் மாகாண மேல்நீதிமன்றங்களை நிறுவுகையில் எதிர்த்திருக்கவேண்டும்.”
-சட்டத்தரணி ஹேமக்க சேனாநாயக்க – தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் கொழும்பு மாவட்டத் தலைவர்-

அதிகாரப் பகிர்வு எண்ணக்கருவின் ஆழமான நிலைமையையே தோழர் லால் காந்த விளக்க முற்பட்டார். இலங்கையில் அதிகாரப் பகிர்வு பற்றி நீதிமன்றம் பற்றி மாத்திரமல்ல நாங்கள் பல தசாப்தங்காளக கலந்தரையாடி வருகிறோம். தோழர் விஜேவீர வடக்கு கிழக்கில் நிலவுகின்ற சிக்கலுக்கான தீர்வு என்னவென்பது பற்றி “ஈழப் போராட்டத்திற்கான தீர்வுகள்” எனும் நூலில் விடயங்களை முன்வைத்துள்ளார். அதிகாரப் பகிர்வு பற்றி 1988 இல் இருந்தே பேசப்பட்டு வருகின்றது. அதற்கான தீர்வு என்றவகையிலேயே மாகாணசபைகள் அறிமுகஞ் செய்யப்பட்டன. நாட்டு மக்களின் இறைமைத் தத்துவம் மக்களிடமே இருக்கின்றது. அதனைப் பாராதீனப்படுத்த முடியாது. இறைமைத் தத்துவம் நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை ஊடாக அமுலாக்கப்படுகின்றது.

நீதிமன்றங்களில் நீதி நிருவாகத்திற்காக கழிகின்ற காலம் மற்றும் அதற்காக செலவாகின்ற நிதிசார் செலவுகள் சம்பந்தமாக தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்றவகையில் நாங்கள் கவனஞ்செலுத்தி இருக்கிறோம். எமது நாட்டில் பிரிகையிடல் வழக்கொன்று காணி வழக்கொன்று தொடரப்பட்டால் முழுப்பரம்பரையுமே வழக்காடவேண்டிய நிலையேற்படும். ஏன் இவ்வளவு காலம் எடுக்கின்றது? இது சம்பந்தமாக வழக்காடுகின்ற பணிகளை மிகவும் வினைத்திறனுடையதாக்குவதற்காக முன்மொழிவுகளை சமர்ப்பிக்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். நீதிமன்றங்களில் அலுவலக வசதிகள் கிடையாது, ஊழியர்களின் வசதிகள் பற்றிய சிக்கல் நிலவுகின்றது. சுருக்கெழுத்தாளர்களின் பிசுக்கல்மார்களின் பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது. பல தசாப்தங்கள் பழமையான 1977 இல் ஆக்கப்பட்ட பிரிகையிடல் வழக்குச் சட்டங்களுடன் 2024 இலும் செயலாற்றி வருகிறோம். பிரிகையிடல் வழக்குகளில் தம்பட்டமடித்தல் இடம்பெறுகின்றது. இயந்திரங்கள் பல மாதங்களாக உடைந்துபோயுள்ளன. இதனால் பணம் செலவாகின்றமையும் காலம் விரயமாதலும் இடம்பெறுகின்றது. ஒருசில வழக்குகளும் ஒருசில சட்ட நிலைமைகளும் கொழும்பில் மாத்திரமே விசாரிக்கப்படுகின்ற நிலைமையின் காரணமாக ஆட்களுக்கு ஏற்படுகின்ற நட்டமும் காலம் விரயமாதலும் கடுமையாக அதிகரித்துள்ளது. மாகாண மேல் நீதிமன்றங்கள் நிறுவப்படமுன்னர் மாவட்ட நீதிமன்றங்களுக்கும் நீதவான் நீதிமன்றங்களுக்குமே அதிகாரம் இருந்தது. மேன்முறையீடு செய்கின்ற அதிகாரம் நீதிமன்றத்திற்கும் அதற்கு மேலாக உயர்நீதிமன்றத்திற்கும் அதிகாரம் இருந்தது. வழக்குகளிலான தாமதம் ஒருசில சந்தர்ப்பங்களில் பத்து வருடங்கள், பன்னிரண்டு வருடங்கள் வரை நீண்டுசெல்லத் தொடங்கின. இதனைக் கண்ட சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் சட்டமும் நீதியும் நிலைநாட்டப்படுகின்ற முறையியல் ஊருக்கு கொண்டுசெல்லப்பட வேண்டுமென தீர்மானித்தார்கள்.

தோழர் லால் காந்த மேடையில் முன்வைத்ததது நீண்டகாலமாக இந்த நாட்டில் இடம்பெற்ற விடயத்தையாகும். பிரதேசரீதியாக வழக்காடுவது தவறானதெனில் மாகாண மேல்நீதிமன்றம் நிறுவப்படுகையிலேயே இவர்கள் எதிர்ப்பினைத் தெரிவித்திருக்க வேண்டும். நீதிமன்றமொன்றில் சட்டம் அமுலாக்கப்படுதல் தாமதிக்கின்ற அளவுக்கு நீதி நிலைநாட்டப்படுவதும் தாமதமாகின்றது. அதனால் மாகாண மேல்நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. மாகாண மேல்நீதிமன்றங்கள் நிறுவப்பட்டமையால் வழக்கு விசாரிப்பதிலான தாமதங்கள் பாரியளவில் குறைவடைந்தன. அத்துடன் மாகாண மேல் நீதிமன்றங்களில் சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டமையால் அதிகாரமளித்தல் மேற்கொள்ளப்பட்டது. கொழும்பில் குவிந்திருந்த அதிகாரம் ஊருக்குச் செல்லத் தொடங்கியது. அதனால் மேன்முறையீட்டு விசாரணைக்காக அநுராதபுரத்தில் இருந்து வந்தவர் ஹோட்டலில் தங்கியிருந்து பலநாட்களைக் கழித்து திரும்பிச் செல்வது நின்றுவிட்டது. இதுபோன்ற செயற்பாங்கே மத்தியஸ்த சபை ஊடாகவும் இடம்பெறுகின்றது.

இந்தியாவில் பஞ்சாயத்து முறையியல் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனால் பிரதேசரீதியாக நீதியை நிலைநாட்டுவதற்கான மிகவும் முக்கியமான தெளிவான முறையியலுக்கு செல்லவேண்டுமென நாங்கள் நம்புகிறோம். அடிப்படை உரிமைகள் பற்றிய வழக்கினை விசாரிப்பதற்கான அதிகாரம் கொழும்பிற்கு மாத்திரமே இருக்கின்றது. இந்த அதிகாரம் மாகாணங்களுக்குச் செல்லவேண்டுமென்ற உரையாடல் நிலவிவருகின்றது. பண்டையகாலத்தில் உயர்நீதிமன்றம் பிரதேசரீதியாக செயலாற்றியது. இந்த நீதியை நிலைநாட்டுதல் பிரதேரரீதியாக பயணித்தல் ஊடாகவும் அவர்களுக்கு நன்மை விளைகின்றது. வழக்கொன்றின்போது பொலீஸ் முறைப்பாட்டினை எடுக்க வழியில்லை, திட்டமொன்றை எடுப்பதற்கான விளக்கம் கிடையாது. வழக்காடச் சென்றதும் ஆட்கள் பாரிய துன்பங்களை அனுபவிக்கிறார்கள். அதனாலேயே மக்கள் நீதிமன்றத்திற்குச் செல்வதிலான சிக்கலொன்று தோன்றியுள்ளது. இதற்கிணங்க அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டும்.

தற்போது விசாரிக்கவேண்டியது இவ்வாறான பிரச்சினைளையல்ல. டயனாவின் வழக்கு தொடர்பான தீர்ப்பினை வழங்க எவ்வளவு காலம் சென்றது? அவர் எவ்வாறு தேசிய பட்டியலில் விழுந்தார்? சனாதிபதி வெளிநாட்டுப் பெண்ணெருவரை எவ்வாறு இராஜாங்க அமைச்சராக்கினார்? அவர் எவ்வாறு கட்சியொன்றின் செயலாளர் ஆகினார்? அவர் இ்ந்த நாட்டில் இருக்கின்ற பாராளுமன்ற சிறப்புரிமைகள், அமைச்சரின் சிறப்புரிமைகளை எவ்வாறு அனுபவித்தார்? இவைதான் பாரதூரமான பிரச்சினைகள். “வேலியில் சென்ற ஓணானை பிடித்து வேட்டிக்குள் போட்டதைப்போல்” சம்பவங்கள் இடம்பெறக் கூடாது. ஐக்கிய மக்கள் சக்தி அவர் ஒரு வெளிநாட்டுப் பெண்மணி என்பதை அறிந்திருந்தும் பாராளுமன்ற ஆசனமொன்றை எவ்வாறு வழங்கியது? நாட்டுக்கு உல்லாசப் பயணத்திற்காக வந்த ஒரு பெண்ணை சனாதிபதி இராஜாங்க அமைச்சராக நியமித்துள்ளார். இது மிகவம் பாரதூரமான மிகவும் பயங்கரமான அத்துடன் கண்டனம் தெரிவிக்கப்படவேண்டிய நிலைமையாகும். இது உங்களதும் எனதும் வாழ்க்கை பற்றிய பிரச்சினையாகும். தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்றவகையில் இத்தகைய விடயங்கள் பற்றிக் கவனஞ் செலுத்தப்படவேண்டுமென்பது எனது முன்மொழிவாகும்.

pressnppl

“நீதித்துறை தத்துவத்தை பன்முகப்படுத்துவது தொடர்பில் பயப்படவேண்டிய காரணம் என்ன?”
-சட்டத்தரணி அகலங்க உக்வத்த-

அதிகாரம் ஓரிடத்தில் குவியாமல் பன்முக்கப்படத்தப்படவேண்டுமென மே தினத்தன்று ஒட்டுமொத்த உரையில் தோழர் லால் காந்த கூறுகையில் 1600 – 1700 களில் இருந்த சார்ள்ஸ் மொன்டெஸ்கியு நீதி சுதந்திரமானதாக அமையவேண்டுமாயின் ஓரிடத்தில் குவிந்துவிடக்கூடாது எனக் கூறியுள்ளார். 2024 இல் அதிகாரம் பன்முகப்படுத்தப்பட வேண்டுமெனக் கூறும்போது அதற்கெதிராக கூற்றுகளை வெளியிடுகிறார்கள், பொய்யான பயத்தை உருவாக்குகிறார்கள். பிரதிநிதித்துவ சனநாயகத்தை நாங்கள் எவ்வாறு உயர்த்திப்பிடிப்பது மற்றும் எவ்வாறு வலுப்படுத்துவது எனும் விடயம் ஒட்டுமொத்த உரையிலுமே பொதிந்திருந்தது. நேரடி சனநாயகத்தை எவ்வாறு நிலைநாட்டுவதென்பது. நிலைநாட்டப்பட்டிராத விடயமொன்றைப் பற்றியும் கூறினார். பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறவேண்டிய பிரதமரொருவரை நியமித்துக்கொள்ள வேண்டுமெனக் கூறினார். இது சீனாவோ கியுபாவோ அல்ல, அது பலகட்சி முறையை ஏற்றுக்கொள்கிறது, இது தொடர்ந்தும் இந்த நாட்டில் இருக்கவேண்டுமெனக் கூறினார். இவை எல்லாவற்றையும் கூறி, நீதித்துறை தத்துவத்தை பன்முகப்படுத்த வேண்டுமெனக் கூறியதும் அதனைப் பிடித்துக்கொண்டு அல்லோலகல்லோலப் படுத்துகிறார்கள். சமூகத்தில் எம்மைப் பற்றிய பயத்தை உருவாக்குகிறார்கள்.

நாங்கள் இவையனைத்தையும் செய்வது நாங்கள் அதிகாரத்திற்கு வந்து அடுத்த நாளிலேயே அல்ல, புதிய அரசியலமைப்பின் ஊடாகவே இது சாதிக்கப்படும். புதிய அரசியலமைப்பினை ஆக்கும்போது எம்மால் ஏதேனும் முன்மொழிவு செய்யப்படுமாயின் அதற்காக நிபுணத்துவ ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வோம். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்ற சட்டங்கள் ஊடாக மாத்திரமே இவை இடம்பெறும். அதனால் நாங்கள் பிரதிநிதித்துவ சனநாயகத்தை வலுப்படுத்த வேண்டுமென்பதை ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் பலகட்சி முறைமையை எற்றுக்கொள்கிறோம். பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறுகின்ற பிரதமரை ஏற்றுக்கொள்கிறோம். அதனால் சமூகத்தில் எந்தவிதமான பீதியையும் ஏற்படுத்தவேண்டாம். பாராளுமன்றத்திற்கு மக்களின் விருப்பத்தினால் தெரிவுசெய்யப்பட்டு வருகின்ற எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் நாங்கள் சமர்ப்பிக்கின்ற சட்டத்திற்கு சார்பாகவோ எதிராகவோ வாதங்களை முன்வைத்து ஆதரவு வழங்கவோ எதிர்ப்பு தெரிவிக்கவோ வாய்ப்பு உண்டு. இவை பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படுகின்ற சட்டங்கள். இங்கு நேரடி சனநாயகம் பற்றி கூறப்படுகின்றது. ஒருசில விடயங்களுக்காக மக்களின் விருப்பத்தை நேரடியாக பெறமுடிகின்றது. தோழர் லால் காந்தவின் ஒட்டுமொத்த உரை பற்றியும் கலந்துரையாடலுக்கு இலக்காக்குங்கள். அதில் சிறியதொரு துண்டினை எடுத்துக்கொண்டு காலவதியான பழைய கீழ்த்தரமான அரசியல் பிரயோகங்களை பாவிக்க வேண்டாம்.

யூத் ஃபோ ஜஸ்டிஸ் எனப்படுகின்ற அரசசார்பற்ற அமைப்பொன்றின் சட்டத்தரணியொருவர், நானறிந்தவகையில் அவர் அரச தலைவரின் ஆலோசகர் கூறுகிறார் அவருக்கு புலனாகியதாம் இது 88 – 89 காலத்தில் போன்ற ஒன்றை செய்யப்போவதாம். அவர் பயந்துபோய் இருந்தாராம். அவருக்கு அப்போது நடந்தவை ஞாபகமிருக்கிறதாம். என்னைவிட அவருக்கு நான்கு வயது குறைவு. அக்காலத்தில் எனக்கும் வயது ஒன்பது. இ்ந்தக் காலத்தில் அவருக்கு ஞாபகம் இருக்கிறதாம். என்ன கேலிக்கூத்துகள் இவை. போராட்டத்தில் நடந்தவற்றை இலத்திரனியல் ஊடகங்கள் இருந்தமையால் நாங்கள் கண்டோம். 88 – 89 இல் இந்த இலத்திரனியல் ஊடகங்கள் இருக்கவில்லை. அன்று இடம்பெற்ற உண்மைச் சம்பவங்கள் எமக்குத் தெரியாது. நாங்கள் சனநாயக வழியில் 40 வருட காலத்தில் எம்மில் எந்தவிதமான தவறுமே கிடையாது என்பதை சமூகம் அறியும். நிரூபித்திருக்கிறோம். ஆனால் அவர்களின் தவறுகளை இந்த ஒட்டுமொத்த சமூகமுமே கண்டிருக்கிறது.

நாட்டின் சட்டத்தில் நீதி நிருவாகத் திட்டம் நிலவிய காலத்தில் “சூல நீதிமன்றம்” “முதனிலை நீதிமன்றம்” கொண்டிருந்த அதிகாரத்தை அதன் பின்னர் நீதவான் நீதிமன்றத்திற்கு கொடுத்தார்கள். 1992 இல் மாகாண நீதி மன்றங்கள் வந்தன. அந்த மாகாண நீதிமன்றங்கள் வரும்போது ஒருசிலர் எதிர்த்தார்கள். எனினும் வழங்குக் காலம் நீடிக்கின்றமை, மேன்முறையீடுகள் தாமதிக்கின்றமை ஓரளவுக்கு குறைந்திருந்தது. மத்தியஸ்த சபைகளுக்கு இருந்த நிதி அளவு 25000 வரை அதிகரிக்கப்பட்டது. நாங்கள் கூறுவது அத்தகைய ஒரு முறையியலையாகும். மத்தயஸ்த சபைகளுக்கு, கமநல சபைகளுக்கு, கிராமோதய சபைகளுக்கு, கூட்டுறவுச் சங்கத்திற்கு நாங்கள் அதிகமாக அதிகாரங்களை வழங்குவோம். நீதிமன்ற வளாகத்திற்குள் தீர்க்கப்பட வேண்டியதல்லாத சிறிய சிறிய விடயங்களுக்காக அந்தந்த இடங்களில் தீர்ப்பளித்து அகற்றிக்கொள்வோம்.

pressnppl

“யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல்செய்ய கொழும்பிற்கு வரவேண்டும்…”
-சட்டத்தரணி உபுல் குமரப்பெரும-

மாகாண சபை முறை வந்த பின்னர் நாட்டின் நிருவாகம் எவ்வாறு பன்முகப்படுத்தபட்டது எனும் விடயத்துடன் மற்றமொரு விடயத்தையும் சேர்க்கிறேன். கொழும்பில் குவிந்திருந்த அதிகாரம் மாகாண சபை முறைமை ஊடாக மற்றமொரு அடுக்கில் கொழும்பிற்கு வெளியில் சென்றது. அரசியலமைப்பிற்கான 13 வது திருத்தத்தின்படி மூன்று நிரல்கள் இருக்கின்றன. மூடப்பட்ட நிரல், மாகாணசபை நிரல், ஒருங்கிணை நிரல். மாகாண சபையுடன் தொடர்புடைய விடயங்கள், மத்திய அரசாங்கத்துடன் தொடர்புடைய விடயங்கள் மற்றும் மாகாண சபைகளுடனும் மத்திய அரசாங்கத்தடனும் தொடர்புடைய விடயங்கள். கொழும்பில் குவிந்திருந்த அதிகாரம் மாகாண சபைகளுக்கு கொண்டுசெல்லப்பட்ட விதம் அதில் சுட்டிக்காட்டப்படுகின்றது. தோழர் லால் காந்த கூறுவதன்படி அதிகாரத்தை எவ்வாறு கீழ்நோக்கி கொண்டுசெல்வது என்கின்ற விடயத்தில் ” நீதித்துறை தத்துவத்தை கீழ்மட்டத்தில் ஊரில் உள்ளவர்களுக்கு கொடுத்தால் என்ன நேரிடும்” எனும் விடயத்தை தான் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற குழுவினர் முதன்மையாகக் கொண்டுள்ளார்கள். இவர்கள் இதனை 88 – 89 உடன் இணைக்க முயற்சிசெய்து வருகிறார்கள்.

அமெரிக்காவில் யூரர் சபை முறைமை இருக்கின்றது. குற்றவியல் வழக்கொன்றுக்காக நீதி மன்றத்திற்கு வருகின்ற பிரஜையின் தலைவிதியை தன்னைப்போன்ற வேறுசில பிரஜைகளே தீர்மானிக்கிறார்கள். இலங்கையிலும் யூரர் சபை முறைமை இருக்கின்றது. இலங்கையில் யூரர் சபை என்பது சட்டமுறைக் கல்வியைப் பெற்றிராத, சட்டத்தரணிகள் அல்லாத, சாதாரண பிரஜைகள் ஏழு போ் முறைப்பாட்டாளர் நெறிப்படுத்துகின்ற சாட்சிகள், பிரதிவாதி நெறிப்படுத்துகின்ற சாட்சி மற்றும் அந்த சாட்சிகள் சம்பந்தமாக நீதிபதி வழங்குகின்ற கருத்தினை எடுத்துக்கொண்டு தமது தீர்ப்பினைக் கொடுப்பதாகும். அந்த ஏழு பேராலும் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்க இயலும் இன்றேல் விடுதலைசெய்ய இயலும். பிரஜைகளால் தீர்ப்பளிக்கப்படுதல் (kaudge by pierce) என்பது உலகில் உள்ள ஒர் எண்ணக்கருவாகும். தோழர் லால் காந்த திட்டவட்டமாகக் கூறுகிறார் ஒருசில விடயங்களை ஊரிலேயே தீர்த்துக்கொள்ள முடியுமென. இவை ஏற்கெனவே சட்டத்தில் இருக்கின்ற விடயங்களாகும். உதாரணமாக கமநல அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் “கமக்காரர் பிணக்குகள்” கமநல சேவைகள் நிலையத்தில் உத்தியோகத்தர்களால் சமரசத்திற்கு கொண்டுவர சட்டத்திலேயே ஏற்பாடுகள் நிலவுகின்றன. கூட்டுறவுடன் நாட்டின் பிரஜைகள் பிணக்குகளை ஏற்படுத்திக்கொண்டால் கூட்டுறவுச் சட்டத்தின் பிரகாரம் அதனை நடுத்தீர்ப்பாளர் ஒருவரிடம் ஆற்றுப்படுத்த இயலுமை இருக்கின்றது. மேற்படி தீர்ப்பிற்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்க நீதிமன்றத்திடம் ஆற்றுப்படுத்த முடியாது. “கஸ்டம்ஸில்” சுங்கக் கட்டளைச் சட்டத்தின்கீழ் சுங்கம்சார்ந்த தவறொன்று சம்பந்தமாக சுங்க அதிகாரிகளின் தலைமையில் விசாரணைகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுடுபடைக்கலன் கட்டளைச் சட்டத்தின்கீழ் துப்பாக்கியொன்றின் உரிமத்தை இற்றைப்படுத்தாவிட்டால் பாதுகாப்பு செயலாளரிடம் மேன்முறையீடு செய்யலாம். பாதுகாப்புச் செயலாளர் மூவரைக்கொண்ட சபையொன்றை அதனை பரிசீலனை செய்வதற்காக நியமிப்பார். அந்த தீர்மானத்தின்படிதான் மேன்முறையீட்டினை சமர்ப்பிக்கலாம். அதைப்போலவே சூழல் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் உரிமமமொன்று மறுக்கப்பட்டால் அதன் மேற்முறையீடு செயலாளருக்கே உண்டு. அந்த தீர்மானத்தின் பேரில்தான் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கோ அல்லது உயர்நீதிமன்றத்திற்கோ வழக்குத் தொடருவதற்கான இயலுமை கிடைக்கின்றது. இந்த விடயத்தை முன்வைத்து தோழர் லால் காந்த அது மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டுமெனவே கூறுகிறார். நான் இண்டுமூன்று வருடங்களுக்கு முன்னர் பிரிகையிடல் வழக்கொன்றை முடிவுக்கு கொண்டுவந்தேன். 1971 மே மாதத்திலேயே இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. நான் பிறந்தது 1971 இல். வழக்கு நிறைவடையும்போது 49 வருடங்கள் கழிந்திருந்தன. எனக்கும் வயது 49 ஆகும்.

அதைப்போலவே யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற ஒருவர் கொழும்பிற்கு வந்து உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் வழக்கொன்றை தாக்கல்செய்ய அல்லது மேன்றையீடொன்றை சமர்ப்பிக்க அதிக செலவாகின்றது. இறுதி மேன்முறையீட்டு நீதிமன்றத் தத்துவம் உயர்நீதிமன்றத்திற்கே உண்டு. யாழ்ப்பாணத்தில் இருந்து வருகின்ற ஒவ்வாரு மேன்முறையீடும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அவற்றின் சாட்சிக் குறிப்புகள் தமிழ் மொழியிலேயே இருக்கின்றன. இந்த ஏற்புடைய உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்புக் குறிப்புகளைப் பெற்றுக்கொள்ள ஒருவடத்திற்கு மேற்பட்ட காலம் எடுக்கும். தொலைதூரப் பிரதேசத்தைச்சேர்ந்த ஒருவர் பெறுமதி ஒரு இலட்சத்திற்கு குறைவான காணிக்காக கொழும்பிற்கு வந்து வழக்காடுவது நீதியானதா, அநீதியானதா என்பது எமக்கு விளங்குகின்றது. இது சட்டத்தரணிகள் சமூகம் அறியாத விடயமல்ல. தோழர் லால் காந்த கூறுவது இந்த விடயத்தைதான். அது பயப்படவேண்டிய ஒரு விடயமல்ல. தாக்குபவர்கள் நல்லெண்ணத்துடன் கூறுகின்ற கதையல்ல இது. இத்தருணத்தில் தேசிய மக்கள் சக்தி இருக்கின்ற இடம் பற்றிய புரிந்துணர்வுடன் அத்துடன் அந்த இடத்தில் இருந்து கீழே இழுத்துப்போடுவதற்கான தேவையுடன் புரிந்த சதிவேலைதான் இது.

Show More

“மின்சக்தியானது கேள்வி – வழங்கலின் அடிப்படையில் இலாபம் தீர்மானிக்கப்படுகின்ற ஒன்றல்ல : பொருளாதாரத்தின் உயிர்நிலையாகும்” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி-

(-தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.05.09-) எமது நாட்டின் வலுச்சக்தி துறை விரிவாகி புதிய பிறப்பாக்கத் தேவைகள், புதிய கொண்டுசெல்லல் தேவைகள் மற்றும் விநியோகத் தேவைகள் ஊடாக மின்சக்தி துறையில் புதிய மறுசீரமைப்புகள் அவசியமென்பதை நாங்கள் ஒருபோதுமே புறந்தள்ளப்போவதில்லை. நாட்டினதும் மக்களினதும் எதிர்கால தலைமுறையினரதும் உரிமையென்றவகையில் பாதுகாத்து புதிய தொழில்நுட்பம் மற்றும் பாவனையாளர் அவசியப்பாடுகளுக்காக விருத்திசெய்து முன்நோக்கி நகர்வதற்காக மறுசீரமைப்புகள் அவசியமாகும். இன்னும் சில மாதங்களில் எமது நாட்டின் சனாதிபதியொருவரை தெரிவுசெய்ய வேண்டும். தற்போது […]

(-தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.05.09-)

எமது நாட்டின் வலுச்சக்தி துறை விரிவாகி புதிய பிறப்பாக்கத் தேவைகள், புதிய கொண்டுசெல்லல் தேவைகள் மற்றும் விநியோகத் தேவைகள் ஊடாக மின்சக்தி துறையில் புதிய மறுசீரமைப்புகள் அவசியமென்பதை நாங்கள் ஒருபோதுமே புறந்தள்ளப்போவதில்லை. நாட்டினதும் மக்களினதும் எதிர்கால தலைமுறையினரதும் உரிமையென்றவகையில் பாதுகாத்து புதிய தொழில்நுட்பம் மற்றும் பாவனையாளர் அவசியப்பாடுகளுக்காக விருத்திசெய்து முன்நோக்கி நகர்வதற்காக மறுசீரமைப்புகள் அவசியமாகும். இன்னும் சில மாதங்களில் எமது நாட்டின் சனாதிபதியொருவரை தெரிவுசெய்ய வேண்டும். தற்போது நிலவுவது மக்கள் ஆணையற்ற ஓர் ஆட்சியாகும். நிலவிய கோட்டாபய ராஜபக்ஷ மக்களால் விரட்டியடிக்கப்பட்டு இன்றளவில் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. தற்போது இருப்பது அதற்குப் பின்னர் நியமித்துக்கொண்ட மக்கள் ஆணையற்ற அமைச்சரவையும் சனாதிபதியுமாகும். எதிர்கால சந்தியினரை பாதிக்கின்ற மின்சக்தி சட்டமொன்றை பலவந்தமாகக் கொண்டுவந்து நிறைவேற்றிக்கொள்ள இந்த அமைச்சரவையில் மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சருக்கு இயலுமை இருக்கின்றதா?

மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள புதிய மின்சக்தி சட்டத்திற்கு ஒட்டுமொத்த மின்சார சபை ஊழியர்களுமே எதிர்த்தாலும் அதனை நிறைவேற்றிக் கொள்வதாக கூறுகிறார். இலங்கை வரலாற்றில் முதல்த்தடவையாக மின்சக்தி தொடர்பான மொத்த சந்தையாக மாற்றுகின்ற முயற்சி இந்த சட்டத்தில் இருக்கின்றது. மின்சக்தி என்பது கொள்வனவுசெய்து வைத்துக்கொண்டிருந்து பாவிக்கக்கூடிய ஒன்றல்ல. அதைப்போலவே மின்சக்தி தொடர்பிலான இலாபம் அல்லது நட்டம் தீர்மானிக்கப்படுவது பாவிக்கப்படுகின்ற தருணத்தில் மாத்திரமல்ல. மின் சக்தி வைத்தியசாலையில், இராணுவத்தில், பொலீஸில், தொழிற்சாலையில், ஆய்வுகூடத்தில் பாவிக்கப்படுகின்ற அளவுக்கிணங்க இலாபம் பெறக்கூடிய ஒரு துறையல்ல. மக்கள் பாவிக்கின்ற சந்தர்ப்பத்திற்கிணங்க தேசிய இலாபத்தில் சேர்கின்றது. இத்தகைய அத்தியாவசிய சேவையொன்றில் இலாபம் என்பது கேள்வி – வழங்கலின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்ற ஒன்றல்ல: பொருளாதாரத்தின் உயிர்நிலையொன்றாகும்.

மின்சார சபை நேரடியாகவே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் முடிச்சிபோடப்பட்டுள்ளது. மின்சாரத்தின் விலையைத் தீர்மானிப்பதற்காக பாதகம் அல்து சாதகம் சம்பந்தமாக மக்களின் பக்கத்தில் இருந்து பார்ப்பது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவாகும். எனினும் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் விதப்புரைகளைக்கூட பொருட்படுத்தாமல் “போகின்ற பேய் கூரையையும் பிய்த்துக்கொண்டு போகின்ற ” விதத்தில் இந்த சட்டம் அவசரமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நாட்டின் பொதுமக்களோ அல்லது தொழிற்சங்கங்களோ மின்சக்தி மொத்தச் சந்தையொன்றைக் கோரி எந்தஇடத்திலும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. தங்குதடையின்றி மின்சாரத்தை வழங்குதல், நியாயமான விலைக்கு வழங்குதல் சம்பந்தமாக மாத்திரமே வேண்டுகோள் விடுக்கப்பட்டது. சனாதிபதி தேர்தலொன்றை அருகில் வைத்துக்கொண்டு இந்த சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமென நாங்கள் நம்பப்போவதில்லை. மின்சார பிறப்பாக்கம், கொண்டுசெல்லல் மற்றும் விநியோக முறைமையின் மறுசீரமைப்பினை விரிவாக மக்களின் பக்கத்தில் இருந்து சிந்தித்துப் பார்த்து மேற்கொள்ள வேண்டும். நெருக்கடிகளுக்கு தீர்வுகாண்கின்ற முற்றாய்வு மேற்கொள்ளப்படல் வேண்டும். ஆனால் தற்போது முனைவதோ சொச்சத்தொகைக்கு மின்சார சபையை விற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதையாகும்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அதிகாரத்தில் இருந்த 2002 இல் உள்நாட்டு இறைவரி, சுங்கம் மற்றும் மதுவரி திணைக்களம் என்பவற்றை ஒருங்கிணைத்து அதிகாரசபையொன்றை நிறுவுவதற்கான சட்டமொன்றை நிறைவேற்றிக் கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதைப்போலவே பெற்றோலியம், மின் சக்தியை விற்பனை செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2003 இல் மின்சார சபையை எட்டு துண்டுகளாக உடைத்து விற்றுத்தீர்ப்பதற்கான சட்டமொன்றைக் கொண்டுவந்தார்கள். மக்கள் ஆர்ப்பாட்டங்கள், தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு மற்றும் குறிப்பாக பாராளுமன்றத்தில் நாங்கள் எழுப்பிய குரல் காரணமாக அந்த முயற்சிகளை கைவிடவேண்டிய நிலையேற்பட்டது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மின்சாரசபை சட்டமூலத்தை தோற்கடிப்பதற்காக மக்களை விழிப்பூட்டும் பொருட்டு இந்த ஊடக சந்திப்பு நடாத்தப்படுகின்றது.

வலுச்சக்தித் துறையென்பது தேசிய பாதுகாப்புடன் பின்னிப்பிணைந்துள்ள ஒரு செயற்பாங்காகும். அதற்காக கிடைக்கின்ற முதலீடுகள் அமைச்சரின் சட்டைப்பை ஊடாக வருமாயின் அதன் நன்மைகள் அதிகமாக கிடைப்பதும் அமைச்சருக்கு மாத்திரமாகும். அதனால் நாட்டின் தன்னாதிக்கமும் மின்சக்தி துறையும் சம்பந்தமாக தாக்கமேற்படுத்துகின்ற இந்த சட்டத்தை பாராளுமன்றத்தின் மண்டைகளால் நிறைவேற்றிக்கொள்ள வேண்டாமென நாங்கள் வலியுறுத்துகிறோம். ஏற்கெனவே தேசிய மக்கள் சக்தியின் வலுச்சக்திக் குழுவின் புத்திஜீவிகள் நீதிமன்றம் சென்றுள்ளார்கள். மேலும் பல்வேறு தரப்பினர் நீதிமன்றம் சென்றுள்ளார்கள். இறுதியாக எல்லா முடிவுகளையும் எடுப்பது மக்களே. மக்கள் அபிப்பிராயத்தினால் அல்லது மக்கள் பலத்தினால் இவ்வாறான அழிவுமிக்க சட்டங்களைத் தோற்கடிக்க ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

“மின்சாரம் சம்பந்தமான தனிப்பட்ட ஏகபோகஉரிமையை அமுலாக்குகின்ற இயலுமை அமைச்சருக்கு கிடைப்பது பயங்கரமானது”
-தேசிய மக்கள் சக்தியின் வலுச்சக்திக் குழுவின் அங்கத்தவர் மின் பொறியியலாளர் புபுது நிரோஷண-

இரண்டு அடிப்படை விடயங்களை தெளிவுபடுத்த எதிர்பார்க்கிறேன். இத்தகைய சட்டமொன்றைக் கொண்டுவருகையில் அதனால் என்ன நேரிடுமென்பது பற்றிய சமூக அரசியல் புரிந்துணர்வினை நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். 2022 யூலை மாதத்தில் மறுசீமைப்பு முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழு 2022 ஒற்றோபர் மாதத்தில் விதப்புரைகளை சமர்ப்பித்தது. அந்த குழுவில் 10 பேர் இயங்கினாலும் தொழிற்சங்கங்கள் மற்றும் பாவனையாளர்களை உள்ளிட்ட சிவில் அமைப்புகள் மேலும் பல முன்மொழிவுகளை சமர்ப்பித்தன. சம்பந்தப்பட்ட குழு முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை கவனத்திற் கொண்டது. 2023 ஏப்பிறல் மாதமளவில் குழுவிலிருந்து வெளியில் வந்த அங்கத்தவர்கள் 2022 ஒற்றோபர் மாதமளவில் அவர்கள் முன்வைத்திருந்த விதப்புரைகளைக்கூட இந்த சட்டம் கவனத்திற் கொள்ளவில்லை எனக் கூறினார்கள். அமைச்சரோ அல்லது சட்டமூலத்தின் வரைவினைத் தயாரித்தவர்களோ மேற்படி குழுவின் விதப்புரைகளைக்கூட கவனத்திற்கொள்ளாமல் செயலாற்றி மின்சார சபையுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் விஷமத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பாராளுமன்றத்தில் கூறினார். நீங்களே நியமித்த குழுவின் விதப்புரைகளைக்கூட ஏன் கவனத்திற்கொள்ளவில்லையென நாங்கள் அமைச்சரி்டம் கேட்கிறோம். உதாரணமாக இதில் முன்மொழியப்பட்டுள்ள ” நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர்” எனும் பதவி சுயாதீனமானதாக அமையவேண்டுமென்ற குழுவின் விதப்புரைக்கிணங்க காட்டப்பட்டிருப்பினும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில் அந்த பதவி அமைச்சருக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதைப்போலவே இலங்கை பொறியியலாளர் நிறுவனம் 2022 செத்தெம்பர் மாதத்தில் இந்த தேசிய மக்கியத்துவம் வாய்ந்த சட்டமூலம் சம்பந்தமான விதப்புரைகளை முன்வைத்திருந்தது. அதைப்போலவே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் பொறியியலாளர் குழு 2023 செத்தெம்பர் மாதத்தில் கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புகளைக் கோரியது. எனினும் ஒருதலைப்பட்சமாக தெரிவுசெய்யப்பட்ட ஒரு குழுமத்திற்கு மாத்திரம் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. 2022 செத்தெம்பர், நவெம்பர், 2023 சனவரி மாதங்களில் இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் கருத்துக்கள் இது சம்பந்தமாக முன்வைக்கப்பட்டன. அதற்கு மேலதிகமாக மொறட்டுவ பல்கலைக்கழக பொறியியலாளர் சங்கத்தினால் எழுத்திலான நீண்ட கருத்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 2024 ஏப்பிறல் வரை நாங்கள் இந்த மறுசீரமைப்பு சம்பந்தமாக கருத்துக்களை முன்வைக்க முயற்சி செய்தோம். அரசியலுடன் தொடர்புபடாத பொறியியலாளர் நிறுவனமான மொறட்டுவ பல்கலைக்கழக பொறியியலாளர் ஒன்றியம் கருத்துக்களை முன்வைப்பதற்காக விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

ஒட்டுமொத்தமாக இந்த சட்டத்திற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டுமென நான் விடயங்களை முன்வைக்கிறேன். எந்தவொரு வலுச்சக்தித் துறையிலும் பிறப்பாக்கம், கொண்டுசெல்லல் மற்றும் விநியோகித்தலை அரசாங்கத்தினாலும் தனியார் துறையினாலும் உலகத்தின் ஏனைய நாடுகள் வகிக்கலாம். இந்த செயற்பாங்கு ஊடாக அத்தியாவசிய சேவையொன்று வழங்கப்படுவதோடு அதற்காக செலவிடப்படுகின்ற பணம் நியாயமான பணத்தொகை மூலமாக தீர்க்கப்படல் வேண்டும். மின்சாரம் சம்பந்தமாக மொத்த சந்தைக்குச் செல்லுமாறு இந்த சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. ஏறக்குறைய 150 பக்கங்களைக்கொண்ட இந்த சட்டமூலத்தின் பிரிவுகளால் எமது மின்சார வழங்கல் முதிர்ச்சியடைவதற்கான ஏற்புடைய காலத்தை 5 தொடக்கம் 10 வருடங்கள் வரை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதிக்குள் மொத்த சந்தையை நிறுவ முடியாமல் போனால் இயல்பாகவே தனியார்மயமாக்கலுக்குச் செல்வதற்கான இயலமை வழங்கப்பட்டுள்ளது. 1996 இற்கு முன்னர் அரசாங்கத்திடம் நிலவிய ஏகபோகஉரிமையை தனியார் துறைக்கு கட்டியெழுப்புவதற்கான அபாயநிலை காணப்படுகின்றது. மின்சாரம் சம்பந்தமாக தனியார்துறையின் ஏகபோக உரிமையை வலுவுடையதாக்க அமைச்சரின் தனி அபிப்பிராயத்திற்கு அமைவாக செயலாற்றுவதற்காக இயலுமை இதன் மூலமாக கிடைக்கின்றது.

மன்னாரில் காற்றுவிசை மின்நிலையம் சம்பந்தமான உரையாடல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 100% மின்சார சபைக்குச் சொந்தமான 100 மெகாவொற் மின் நிலையமொன்று இருக்கின்றது. இந்த சட்டத்தின் ஊடாக அந்த மின்நிலையம்கூட 100% தனியார்மயமாக்கலுக்கு இலக்காகின்றது. மின்சார சபைக்கு எஞ்சுவது நீர் மின் நிலையங்கள் மாத்திரமே. தனியார் துறையினரிடம் கையளித்த பின்னர் விலையைத் தீர்மானிக்கின்ற அதிகாரம்கூட அமைச்சருக்கே கிடைக்கின்றது. நாங்கள் இங்கு எதிர்ப்பது தனியார் முதலீடுகளுக்காகவன்றி தனியார் ஏகபோக உரிமையை நிலைநாட்டுதல் தொடர்பாகவே. முதலீடுகள் கிடைப்பதென்பது நிலவுகின்றவற்றை விற்றுத் தீர்ப்பதல்ல. மக்கள், கைத்தொழிலதிபர்கள் மிகுந்த கூருணர்வுடன் இந்த விடயங்கள் பற்றி கவனஞ்செலுத்த வேண்டியுள்ளது. புதிய மின் பிறப்பாக்கத்திற்காக தனியார் முதலீடு அத்தியாவசியமாகும். அந்த முதலீடு போட்டியடிப்படையிலேயே கிடைக்கவேண்டும். அமைச்சருக்கோ அல்லது அமைச்சரவையின் ஒருசிலருக்கோ அவசியமான வகையில் கொடுக்கக்கூடாது. தற்போது இந்தியாவின் தனியார் கம்பெனி 0.35 டொலருக்கு உற்பத்தி செய்கின்ற காற்று மின்சார அலகொன்றை எமது நாட்டின் 0.85 டொலருக்கு உற்பத்தி செய்யப்போகின்றது. போட்டியடிப்படையிலான டெண்டர் ஊடாக கொடுத்திருப்பின் குறைந்த பட்டச் 0.5 டொலருக்கு எடுக்கலாம். இவ்விதமாக உயர்ந்த விலைக்கு 30 வருடங்கள் கழியும்வரை கொடுக்கத் தயாராகி வருகிறார்கள். இந்த ஐந்து மாதங்களில் அரசாங்கத்தை கவிழ்க்க முன்னர் இவ்விதமாக மக்களைப் பழிவாங்கவே தயாராகி வருகிறார்கள். பாராளுமன்றத்தில் இருக்கின்ற மண்டைகளின் எண்ணிக்கையால் இதனை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிசெய்தால் அதனை அமுலாக்கும்போது நாங்கள் அதனை தோற்கடிப்போம் என்பதை வலியுறுத்துகிறோம்.

“மக்கள் வலுச்சக்திக்கான தமது உரிமையை உறுதிசெய்து கொள்வதற்காக அணிதிரள வேண்டும்”
-தேசிய மக்கள் சக்தியின் வலுச்சக்திக் குழுவின் அங்கத்தவர் கலாநிதி மயுர நெத்தி குமார-

இந்த ஊழல்மிக்க முறையியலும் இலஞ்சம் பெறுகின்ற கொடுக்கல் வாங்கலும் தவறு என்பதையே நாங்கள் இங்கு வலியுறுத்துகிறோம். நியாயமான வலுச்சக்தி சந்தைக்குப் பதிலாக வரிசை அமைச்சரின் ஆதிக்கத்தை விரிவாக்குகின்ற சந்தையை நீங்கள் விரும்புகிறீர்களா என நாம் அனைவரிடமும் கேட்கிறோம். இந்த சந்தையில் தனியார் முதலீட்டாளர்களாலும் அரசாங்கத்தாலும் ஆற்றக்கூடிய செயற்பொறுப்புகள் தனித்தனியாக நிலவுகின்றன. தனிப்பட்ட தொழில்முயற்சியாளர்களின் பக்கத்தில் நோக்கினால் “நாங்கள் சம்பாதித்தால் நாங்கள் சாப்பிடுவோம்” என நிலவிய எண்ணக்கரு நடைமுறையில் உண்மையல்ல என்பது கடந்த காலத்தில் உறுதிசெய்யப்பட்டது. நாட்டில் ஊழலற்ற கொள்கைகள் நிலவுமாயின் , நாட்டின் வர்த்தக நாமம் சிறந்ததெனில் உலகம் ஏற்றுக்கொண்ட போட்டித்தன்மைமிக்க முதலீட்டாளர்கள் வருவார்கள்.

தம்மை புத்திஜீவிகள் எனக் கூறிக்கொள்கின்ற ஒருசிலர் தேசிய மக்கள் சக்தி முதலீடுகளுக்கு எதிரானதென கூறிவருகிறார்கள். முதலீடுகள் என அவர்கள் அழைக்கின்றவற்றினால் மக்களுக்கு, நாட்டுக்கு, இந்நாட்டின் தொழில்முயற்சியாளர்களுக்கு பெறுபேறுகள் கிடைக்காவிட்டால் அவற்றினால் கிடைக்கின்ற பயன் என்ன? என நாங்கள் அவர்களிடம் கேட்கிறோம். இவற்றை முதலீடுகள் என அழைப்பதில்லை. விற்றுத் தின்னுதல் அல்லது கையிலுள்ள பணத்தைச் செலவிட்டு மாடு மேய்த்தல் என்றே இதனைக் கூறுவார்கள். நாட்டுக்கு முதலீடு வருமாயின் அதன் நன்மைகள் மக்களுக்கு கிடைக்கவேண்டும். இந்த மின் சக்தி சட்டமூலம் ஊடாக அத்தகையதொன்று இடம்பெறுவதில்லை. ஒருசிலர் தமது செல்வத்தை அதிகரித்துக் கொள்ளக்கூடிய முறையியலே இதன் மூலமாக வகுக்கப்பட்டுள்ளது. இந்த மின் சக்தி சட்டத்தைப் போலவே “ஆண்டி அரசனான விதம்” எனும் நூலை வாசித்துப் பாருங்கள் என நான் திறந்த அழைப்பு விடுக்கிறேன். ஏறக்குறைய நூறு வருடங்களாக ஒரு கும்பலால் மக்களுக்கு கிடைக்கவேண்டிய நன்மைகளை அவர்கள் பெற்றுக்கொண்ட விதத்திலிருந்து உங்களுக்கு தெளிவாகும். அந்த செயற்பாங்கினையே நாங்கள் எதிர்க்கிறோம். மிகவும் சிறியதொரு கும்பலின் கைகளை நன்மைகள் சென்றடைய இடமளிப்பதே இந்த சட்டத்தினால் எதிர்பார்க்கப்படுகின்றது.

மின் சக்தி துறையை விருத்திசெய்ய முதலீடுகளைக் கொண்டுவர வேண்டுமாயின் செய்யவேண்டியது தற்போது இருக்கின்றவற்றை விற்றுத் தீர்ப்பதல்ல. புதிய விருத்திகளுக்கான முதலீடுகளை அழைப்பிப்பதாகும். கைக்கெட்டியதூரத்தில் தேர்தலை வைத்துக்கொண்டு அவர்களின் அன்பர்கள் சிலருக்காக கொண்டுவருகின்ற இந்த சட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி மாத்திரமன்றி ஒட்டுமொத்த மக்களும் கவனஞ்செலுத்த வேண்டும். வலுச்சக்தி சம்பந்தமாக மக்கள் கொண்டுள்ள உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மக்கள் முன்னணிக்கு வரவேண்டும். இதனை ஒரு கட்சியின் வேலையாக கருதக்கூடாது.

ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளி்கையில்

கேள்வி :

நீங்கள் தெளிவுபடுத்துகின்ற விதத்தில் இந்த சட்டம் அவ்வளவு பயங்கரமானதெனில் அது தொடர்பில் சனாதிபதியால் இடையீடு செய்யமுடியாதா? அதைப்போலவே நீதிமன்றத்திற்கு சென்றிருப்பின் இதனை நிறைவேற்றிக்கொள்ளும் இயலுமை நிலவுகின்றதா?

பதில் :

சனாதிபதி அறிந்திராதவகையில், அவருடைய ஆதரவின்றி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இவ்வாறான சட்டமொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டுவர மாட்டார். அமைச்சரவையில் அங்கீகரித்துக்கொள்ளவும் முடியாது. அத்தகைய அமைச்சரவை முன்மொழிவினை சனாதிபதி விரும்பாவிட்டால் நீக்கிவிடுவார். அதைப்போலவே இதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள பொதுஜன ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவம் செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கட்டாயமாக அவசியமாகும். ஐக்கிய மக்கள் சக்தியின் ஒருசில உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்கள். நாங்கள் இங்கு கூறுவது மறுசீரமைப்பிற்கு எதிராகவல்ல. தேசிய அவசியப்பாடு பற்றிக் கூறினாலும் இதன் பின்னால் பணம் சுழன்றுகொண்டிருக்கின்றது. நீதிமன்றம் அளிக்கின்ற தீர்ப்பு கட்டாயமாக பாராளுமன்றத்தை பாதிக்கும். நீதிமன்றம் விதிக்கின்ற நிபந்தனைகளுக்குக்கூட அகப்படாமல் பயணித்து நிறைவேற்றிக்கொண்ட விதத்தை நாங்கள் கடந்த காலத்தில் கண்டோம். அவ்வாறான சந்தேகம் நிலவுகின்றபோதுகூட இதற்காக செல்லக்கூடிய அனைத்து இடங்களுக்கும் நாங்கள் செல்வோம். இது இறுதியாக நிலவுவது மக்களின் தீர்ப்பளிப்பின் மத்தியிலாகும்.

Show More

ஐக்கிய இராச்சியத்தின் இந்து பசுபிக் பிராந்திய பணிப்பாளர் மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு இடையிலான சந்திப்பு…

(-Colombo, May 06, 2024-) ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்து பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெலர் (Ben Mellor) அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) பிற்பகல் ம.வி.மு. தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இலங்கைப் பிரதானி ஹுமைரா ஹாசியா ( Humairaa Hatia) அவர்கள், இலங்கைக்கான […]

(-Colombo, May 06, 2024-)

Indo-Pacific-Regional-Director-of-the-UK

ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்து பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெலர் (Ben Mellor) அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) பிற்பகல் ம.வி.மு. தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இலங்கைப் பிரதானி ஹுமைரா ஹாசியா ( Humairaa Hatia) அவர்கள், இலங்கைக்கான பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் என்ருவ் பெட்றிக் (Andrew Patrick) அவர்கள் மற்றும் முதலாவது செயலாளர் டொம் சொப்பர் (Tom Soper) அவர்களும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கையின் நடப்பு பொருளாதார, அரசியல் நிலைமைகள், பிராந்திய புவி அரசியலில் நிலவும் சவால்கள் மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

Indo-Pacific-Regional-Director-of-the-UK
Indo-Pacific-Regional-Director-of-the-UK
Show More

நோர்வே தூதுவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு

(-Colombo, May 02, 2024-) புதுடில்லியிலுள்ள நோர்வே தூதுவர் திருமதி May-Elin Stener அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (02) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் திரு. John Bjerkem அவர்களும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் […]

(-Colombo, May 02, 2024-)

புதுடில்லியிலுள்ள நோர்வே தூதுவர் திருமதி May-Elin Stener அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (02) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் திரு. John Bjerkem அவர்களும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத் அவர்களும் பங்கேற்றனர்.

இன்றளவில் இலங்கை முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை இருதரப்பினரதும் நீண்ட உரையாடலுக்கு இலக்காகியது. தேசிய சிக்கலின் நிகழ்கால வளர்ச்சிப்போக்குகள் பற்றியும் இவ்வருடத்தில் நடாத்தப்படவுள்ள தேர்தல்கள் பற்றியும் கவனஞ் செலுத்தப்பட்டது. நோர்வே அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் பற்றியும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் இத்தடவை இலங்கைக்கு வந்தபின்னர் மேற்கொள்ளப்படுகின்ற முதலாவது சந்திப்பு எனவும் நோர்வே தூதுவர் சுட்டிக்காட்டினார்.

Norway-Embassador
Norway-Embassador
Norway-Embassador
Norway-Embassador
Show More