(-தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.08.10-) இந்த ஊடகச் சந்திப்பினை ஏற்பாடு செய்ததற்கான காரணம் ரணில்-சஜித் கூட்டணி இலஞ்சம் கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களை கவர்ந்துகொள்ளும் வித்தையினை, நிர்வாணத்தை அம்பலப்படுத்துவதற்காகும். பணம் மாத்திரமல்ல, பார் லைசன்ஸ், காணிகள், வீதிகளை புனரமைப்பதற்கான கொந்தராத்து ஆகிய பல்வேறு விதமான இலஞ்சம் கொடுக்கப்படுகின்றது. இதுவரையில் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபையின் காணிகளில் பெரும் பகுதியை கொள்ளையடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. தனிநபர் 50 ஏக்கருக்கு அதிகமான காணியை வைத்துக்கொள்ள முடியாது என்ற […]
(-தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.08.10-)
இந்த ஊடகச் சந்திப்பினை ஏற்பாடு செய்ததற்கான காரணம் ரணில்-சஜித் கூட்டணி இலஞ்சம் கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களை கவர்ந்துகொள்ளும் வித்தையினை, நிர்வாணத்தை அம்பலப்படுத்துவதற்காகும். பணம் மாத்திரமல்ல, பார் லைசன்ஸ், காணிகள், வீதிகளை புனரமைப்பதற்கான கொந்தராத்து ஆகிய பல்வேறு விதமான இலஞ்சம் கொடுக்கப்படுகின்றது.
இதுவரையில் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபையின் காணிகளில் பெரும் பகுதியை கொள்ளையடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. தனிநபர் 50 ஏக்கருக்கு அதிகமான காணியை வைத்துக்கொள்ள முடியாது என்ற சட்டம் இருக்கிறது. ஜே.ஆர். ஜெயவர்த்தன இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி தமது நெருக்கமானவர்களின் காணிகளையும் அரசாங்கத்தின் பெறுமதிமிக்க வளங்களையும் கைமாற்றிக்கொண்டார். லக்ஷ்மன் கிரிஎல்லவின் மனைவிக்காக ஹந்தானையில் காணியைப் பெற்றது போல ரணில் விக்ரசிங்கவுடன் இணைந்து கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் கபீர் ஹாசிம் உடனான பேச்சுவார்த்தை அண்மையில் இடம்பெற்றது.
மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான ஹந்தான பெருந்தோட்டத்தில் 12 ஏக்கர் 03 றூட் 53 பர்ச்சஸ் அளவுடைய காணி தொடர்பான கள்ளவியாபாரமொன்று ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கும் சஜித் பிரேமதாசவின் எதிர்கட்சி குழுவிற்கும் இடையில் இடம்பெற்றுள்ளது. சஜித் பிரேமதாசவின் பாராளுமன்ற உறுப்பினர்களை ரணில் விக்ரமசிங்கவுடன் இணைத்துக் கொள்வதற்கான ஒரு கள்ளவியாபாரம் இந்தக் காணிப் பரிமாற்றம் ஊடாக வெளிப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதத்தில் கோப் குழுவில் விசாரணை முன்னெடுக்கப்படவிருந்தது. ஆனால், கோப் குழுவை செல்லுபடியற்றதாக்க இடமளித்து குறித்த அறிக்கையை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தக் கடிதங்கள் தேசிய மக்கள் சக்தியிடம் கிடைப்பதை யாராலும் தடுக்க முடியாது. கபீர் ஹாசிமின் மகனுக்கு ஹந்தானையில் 12 ஏக்கர் 03 றூட் 18.53 பர்ச்சஸ் அளவிலான காணியைக் கொடுக்கும்படி, காணிகள் மறுசீரமைப்பு ஆணைக்குழுவினால் ஜனவசம தலைவருக்கு எழுத்துமூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 பெப்ரவரி மாதத்தில் ஜனவசமவிடம் இருந்து குறித்த காணி வேறாக்கப்படுகின்றது. அத்துடன், அந்தக் காணியை பரிமாற்றிக் கொள்வது தொடர்பான விடயங்கள் அம்பலமானதால் கபீர் ஹாசிமிற்கு இந்தக் கொடுக்கல் வாங்கலை நிறைவசெய்துகொள்ள இயலாமல் போனது.
1972 காணிகள் மறுசீரமைப்பு ஆணைக்குழுச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு முன்பிருந்த நிலைமையை முன்வைத்து கபீர் ஹாசிம் இந்த டீலை பேசியுள்ளார். தனக்கு கிடைக்க வேண்டிய காணியின் ஒரு பகுதியை மகனுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். காணிகள் மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்குச் சொந்தமான மிகமுக்கியமான கடிதங்கள் தற்போது காணாமல் போயிருப்பதாக கூறப்படுகிறது. கபீர் ஹாசிம் மூலமாக தனது மகனான எம்.எச்.எம். கபீரின் பெயருக்கு காணியை மாற்றித் தருமாறு கேட்டுக்கொண்ட எல்லா விபரங்களும் எங்களிடம் உள்ளது.
இந்த இடத்தில் இருப்பது நிர்ணயித்துக்கொள்வதைப் போல் பாசாங்கு செய்து ஜனவசமவிற்கு சொந்தமான காணிகளை அரசியல்வாதியொருவர் கொள்ளையடித்தமையாகும். கடந்த காலத்தில் அரசாங்கத்தின் நண்பர்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்க்பட்டன. இப்போது இடம்பெறுவது அரசாங்கமும் எதிர்கட்சியின் ஐக்கிய மக்கள் சக்தி பிரிவும் ஒன்றுசேர்ந்து காணிகளை கொள்ளையடிப்பதாகும். கடந்த காலத்தில் பார் லைசன் பகிர்ந்துகொள்ளல், ஷெட் பகிர்ந்துகொள்ளல், பஸ் பேர்மிட் பகிர்ந்துகொள்ளல் மேற்கொள்ளப்பட்ட விதத்திலேயே இந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஹந்தானையில் ஜனவசமவிற்கு சொந்தமான தோட்டத்தின் நடுவில் 45 ஏக்கர்களை தனியார் கம்பனியொன்றுக்கு கொடுக்க தயார் நிலை காணப்படுகிறது.
ஹந்தான தோட்டத்தின் நடுவில் தோட்டமொன்று தனியார் கம்பனியொன்றுக்கு உரித்தாகியுள்ளது எனக் கூறி இந்த கள்ளவியாபாரத்தை மேற்கொள்ள தயாராகி வருகிறார்கள். அதைப்போலவே, பலவிதமான மாதிரிகளை கடைப்பிடித்து இப்பொழுது அவர்கள் இரண்டாக பிரித்துக்கொண்டிருக்கிறார்கள். தேர்தலுக்கு பணம் தேடிக்கொள்வதற்காக ஹில்டன் ஹோட்டல், போகம்பர சிறைச்சாலை இருந்த காணி என்பற்றை விற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
அரசாங்கம் மாத்திரமல்ல, தாம் எதிர்கட்சியினரே எனக் கூறிக்கொண்டு இதுவரை முன்னெடுத்துவந்த கள்ளவியாபாரங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தலை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மேற்கொள்ள வேண்டும். நாங்கள் அம்பலப்படுத்திய இந்த தகவல்கள் சம்பந்தமாக சீக்கிரமாக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதைப்போலவே, இந்த ஊழல்பேர்வழிகளை ஒரே வரிசையில் வைத்து தோற்கடிக்க தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்துக்கொள்ளுமாறு ஊழலுக்கு எதிரான முற்போக்கான மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
(-Colombo, August 08, 2024-) நேற்று (08) இரவு கம்பஹா – மல்வானையில் இடம்பெற்ற “முஸ்லிம் சகோதரத்துவ சந்திப்பு” நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்ட போது…
(-Colombo, August 08, 2024-)
நேற்று (08) இரவு கம்பஹா – மல்வானையில் இடம்பெற்ற “முஸ்லிம் சகோதரத்துவ சந்திப்பு” நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்ட போது…
(-Colombo, August 08, 2024-) நேற்று (08) முற்பகல் மவிமு தலைமை அலுவலகத்தில் இலங்கையின் எல்லா மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வேலையற்ற பட்டதாரிகள் சிலர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களை சந்தித்தனர். இதன்போது வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது. அதைப்போலவே, இதுவரையில் வேலையில்லாத பட்டதாரிகள் எதிர்கொள்கின்ற சிக்கல்கள் குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
(-Colombo, August 08, 2024-)
நேற்று (08) முற்பகல் மவிமு தலைமை அலுவலகத்தில் இலங்கையின் எல்லா மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வேலையற்ற பட்டதாரிகள் சிலர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களை சந்தித்தனர்.
இதன்போது வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதைப்போலவே, இதுவரையில் வேலையில்லாத பட்டதாரிகள் எதிர்கொள்கின்ற சிக்கல்கள் குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
(-ஹோமாகம கஹதுடுவ மக்கள் சந்திப்பு – 2024.08.06-) 76 வருடகாலமாக துன்பங்களை அனுபவித்து நாடு எதிர்பார்க்கின்ற வெற்றியை பெற்றுக்கொள்வதற்காக நாமனைவரும் எதிர்காலத்தில் வெற்றிகரமாக உழைப்போமென முதலில் கேட்டுக்கொள்கிறேன். இந்த சனாதிபதி தேர்தலைத் தடுக்க ரணில், ராஜபக்ஷாக்கள் அமைத்த பாதுகாப்பு வளையங்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்து செப்டெம்பர் 21 ஆந் திகதி பொதுமக்களின் உண்மையான ஆட்சியை அமைக்கப்போகிறோம். இதுவரை யார்யாருக்கோ அரசாங்கங்களை அமைத்துக்கொடுத்தது போதும். இப்போது பொதுமக்களுக்காக அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்ள வேண்டும். அந்த வெற்றிக்குப் பின்னர் மக்கள் பங்கேற்புடனான அபிவிருத்திக்கான […]
(-ஹோமாகம கஹதுடுவ மக்கள் சந்திப்பு – 2024.08.06-)
76 வருடகாலமாக துன்பங்களை அனுபவித்து நாடு எதிர்பார்க்கின்ற வெற்றியை பெற்றுக்கொள்வதற்காக நாமனைவரும் எதிர்காலத்தில் வெற்றிகரமாக உழைப்போமென முதலில் கேட்டுக்கொள்கிறேன். இந்த சனாதிபதி தேர்தலைத் தடுக்க ரணில், ராஜபக்ஷாக்கள் அமைத்த பாதுகாப்பு வளையங்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்து செப்டெம்பர் 21 ஆந் திகதி பொதுமக்களின் உண்மையான ஆட்சியை அமைக்கப்போகிறோம். இதுவரை யார்யாருக்கோ அரசாங்கங்களை அமைத்துக்கொடுத்தது போதும். இப்போது பொதுமக்களுக்காக அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்ள வேண்டும். அந்த வெற்றிக்குப் பின்னர் மக்கள் பங்கேற்புடனான அபிவிருத்திக்கான பிள்ளையார் சுழி போடப்படுகின்றது. இந்த நாட்டை நாசமாக்கிய கட்சிகளைப்போன்றே தலைவர்களும் துண்டுதுண்டாகப் பிரிந்து கதிகலங்கிப் போயிருக்கிறார்கள்.
சஜித்தின் கட்சியின் தவிசாளர் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் கொஞ்சநஞ்சமல்ல. அதைப்போலவே ரணில் விக்கிரமசிங்கவும் பொன்சேகா முன்வைத்த குற்றச்சாட்டுகள் பற்றி மாத்திரமே கேள்விக்குட்படுத்துகிறார். எங்கள் தலைவருக்கு வாயும் வயிறும் மாத்திரமே இருக்கின்றது; நாட்டை ஆள முடியாது என ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். அதேவேளையில் நாடு முழுவதிலும் மகா சங்கத்தினரை முதன்மையாகக்கொண்ட பெண்கள், இளைஞர் போன்றே தொழில்வாண்மையாளர்களையும் ஒழுங்கமைத்து மக்களைச் சந்தித்து அரசியல் புரிந்துணர்வினை பெற்றுக்கொடுத்து தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறது. ஆசிரியர் மாநாடு, தாதியர் மாநாடு போன்றே இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவின் மாநாடு என்பவற்றை வெற்றிகரமாக நடத்தியமை தொடர்பில் எதிரிகள் பதற்றமடைந்துள்ளார்கள். தாதியர் மாநாட்டுக்காக சீருடையில் வருகைதந்தமை பற்றி எதிரி பலவிதமான பிரச்சாரங்களை அனுப்பிக்கொண்டிருந்தாலும் தேர்தல்கள் ஆணைக்குழு தொழில்சார் மாநாடுகளுக்கு சீருடையில் வருகைதருகின்றமை சட்டவிரோதமானதல்ல எனக் கூறியது. அவர்கள் சீருடையில் வந்திராவிட்டால் அவர்கள் தாதியரே அல்லவென எதிரிகள் கூறுவார்கள். சமன் ரத்தப்பிரியவின் தொழிற்சங்களம் முடிந்துவிட்டது.
வெளிநாடு சென்றுள்ள இலங்கையர் இன்றளவில் தேர்தலில் முனைப்பாக பங்களிப்பதற்காக மீண்டும் வந்துகொண்டிருக்கிறார்கள். 2019 இல் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களித்த எண்ணிக்கையைவிட அதிகமான எண்ணிக்கையுடையோர் வருவது நம்பிக்கையாகும். இங்கே வருகைதந்துள்ளவர்களைவிட அதிகமானோர் வெளியில் இருந்துகொண்டு இந்த தருணத்திலும் திசைகாட்டியை வெற்றிபெறச் செய்விப்பதற்காக செயலாற்றி வருகிறார்கள். இந்த தடவை கிடைப்பது இலங்கையின் வரலாற்றினை தலைகீழாக மாற்றுகின்ற மகத்தான வெற்றியாகும். கோல்பேஸ் போராட்டம் நடத்தப்படுவது ரணிலை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்காக அல்ல.போராட்டத்திற்குச் சென்ற இலட்சக்கணக்கான மக்கள் ஆழமான கட்டமைப்பு சார்ந்த மாற்றமொன்றை செய்வதற்காக அதாவது சிஸ்டம் சேன்ஞ் ஒன்றை செய்ய பொருத்தமான ஒரே இயக்கமாக தேசிய மக்கள் சக்தியயை தெரிவு செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை ஆட்சியாளர்கள் தாய் நாட்டுக்கு தோல்விகண்ட பெறுபேறுகளை பெற்றுக்கொடுத்து கவலைக்கிடமான நிலைமைக்கு மாற்றியிருக்கிறார்கள். கவலைக்கிடமான நிலையில் இருக்கின்ற தாயகத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு தேசிய மக்கள் சக்தியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்றளவில் மக்கள் பிரதிநிதிகள் சார்பில் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதாகக்கூறுகின்ற, உன்னதமானதென கூறுகின்ற பாராளுமன்றம் பாடசாலை மாணவர்களால் அமர்ந்திருந்து கேட்டுக்கொண்டிருக்க முடியாத தகாத வார்த்தைகள் பிரயோகிக்கப்படுகின்ற இடமாக மாறியுள்ளது. நான் பாராளுமன்றத்தில் இருந்த காலத்தில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் 196 போ் சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்களாவர்.
தோழர் அநுர ஜனாதிபதியாகினால் மாத்திரம் போதாது. மக்களுக்கு இல்லாத சிறப்புரிமைகளை அரசியல்வாதிகளுக்கும் இல்லாதொழிப்பதற்கான பிரேரணை முதலாவது அமைச்சரவைக்கே சமர்ப்பிக்கப்படும். இந்த வேலையை சஜித்தால் செய்ய முடியாது. வேறு எவரும் செய்யவும் மாட்டார்கள். அவர்கள் சுகம் அனுபவிப்பதற்காக அமைத்துக்கொண்டுள்ள அத்தனை சட்டங்களையும் இல்லாதொழிப்போம். இவை மூலமாக இளைப்பாறிய ஜனாதிபதிமார்களுக்கு மாத்திரம் செலவிடப்படுகின்ற தொகையான 1100 இலட்ச ரூபாய்களை சேமித்துக்கொள்ளலாம். இந்த நாட்டில் நிலவும் அசிங்கமான அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைத்து நாட்டை கட்டியெழுப்புவதை ஆரம்பிப்போம்.
உலகில் ஒரு சில நாடுகள் விருத்தியடைந்த விதத்தைப் பார்க்கும்போது எங்களுக்கு வியப்பாக இருக்கிறது. எமது நாட்டில் இருக்கின்ற அளவிற்கு வளங்கள் கிடையாது. ஜப்பானில் எரிமலைகள் காணப்படுகின்றன. நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. சுனாமி பேரலை வருகின்றது. இரண்டாவது உலக மகா யுத்தத்தில் முற்றாகவே நாசமடைந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் பாலைவனங்கள் முன்னேற்றமடைந்த நாடுகளாக மாற்றப்பட்டுள்ளன. எனினும் எமது நாட்டிலே இவ்வளவு வளங்கள் இருந்தும் ஏன் விருத்தி செய்துகொள்ள முடியவில்லை? எமது நாட்டு மக்களின் வாக்குகளைக் கொண்டு கள்வர்கள் ஆட்சிக்கு வந்து மன்னர்களாகினர். பொருத்தமற்றவர்கள் மக்கள் பிரநிதிகளாக நியமிக்கப்பட்டார்கள். எனினும் கவலைப்படவேண்டாம். உண்மைக்கு மதிப்பளித்து உங்களிடமிருந்த முன்னேற்றகரமான நோக்கங்களுக்காக செயலாற்றுவதற்கான வாய்ப்பு 21 ஆம் திகதி பிறந்துள்ளது. உங்களிடம் நாட்டை முன்னேற்றுவதற்கான நோக்கம், இனவாதம், மதவாதம் இல்லாத நாட்டை உருவாக்குவதற்கான நோக்கம், திருட்டுக்கள் மோசடிகள் ஊழல்களை தடுப்பதற்கான நோக்கமே இருந்தது. எனினும் ஆட்சியாளர்களிடம் அதற்கு எதிர்மாறான நோக்கங்களே இருந்தன. எனினும் ஆட்சியாளர்கள் சுபீட்சத்தின் நோக்கம், வளமான எதிர்காலம், ஆசியாவின் ஆச்சரியம் போன்ற தொனிப்பொருள் வாசகங்களை முன்வைத்து உங்களை ஏமாற்றினார்கள். அது மாத்திரமல்ல தார்மீக சமுதாயமொன்றை உருவாக்குவதாகக்கூறி போதைப்பொருள் பெருந்தொற்றுக்கு நாட்டை பலிகடாவாக்கி குற்றச்செயல் நிறைந்த இராச்சியமொன்றை உருவாக்கினார்கள். எனினும் 2024 இல் உங்களுடைய நோக்கமும் தேசிய மக்கள் சக்தியின் நோக்கமும் இணையானதாக அமைந்து புதிய ஆட்சியொன்று உருவாக்கப்படும்.
எமது நாட்டில் ஆரம்ப கைத்தொழில்கள் மக்களின் இடையீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஆரம்ப கைத்தொழில்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை பெற்றுக்கொடுத்து முன்னேற்றுவதையே விருத்தியடைந்த நாடுகள் செய்தன. எனினும் எமது நாட்டின் அரசாங்கங்கள் இருந்த கைத்தொழில்களையும் சீர்குலைக்கின்ற மட்டத்திற்கு எல்லாவற்றையும் இறக்குமதி செய்தன. புதியவற்றை உற்பத்தி செய்யாவிட்டால் அந்த நாடு விருத்தியடைய மாட்டாது. பட்டங்கள், வெசாக் கூடுகள் கூட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுமளவுக்கு எமது நாடு வீழ்த்தப்பட்டது. இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவேண்டுமானால் பாரிய மறுமலர்ச்சி யுகமொன்று உருவாக்கப்படவேண்டும். கைத்தொழில் மற்றும் விவசாயத்துறையின் அபிவிருத்திக்காக விசேட அபிவிருத்தி வங்கியொன்றை தாபிப்பதற்கான திட்டம் ஏற்கெனவே இருக்கிறது. அதைப்போலவே கைத்தொழில்களை ஆரம்பிக்க அவசியமான வேறு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கி இந்நாட்டுக்குள்ளே அல்லது உலக சந்தையில் கேள்வி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். எமது நாட்டில் 45 இலட்சம் பாடசாலை சிறார்கள் இருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு எத்தனை சோடி சப்பாத்துக்கள் தேவை? எத்தனை உபகரணப் பெட்டிகள் தேவை, எத்தனை புத்தகங்கள் தேவை, இவற்றை இலங்கையில் உற்பத்தி செய்ய முடியாதா? பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சுங்க தீர்வையற்ற வரிச்சலுகையை நிறுத்துவதன் மூலமாகவே இவை எல்லாவற்றுக்கும் பிள்ளையார் சுழி போடப்படும். எனினும் கைத்தொழில் துறைக்கு மெஷின் ஒன்று தேவையானால் வரிச்சலுகைகளை வழங்கி அவசியமான ஏனைய வசதிகளை வழங்குவோம். அதைப்போலவே கைத்தொழில்களை உள்ளிட்ட உற்பத்திகளுக்கான வினைத்திறன் மிக்க அரச சேவையொன்றின் வசதிகளை வழங்குவோம். இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய மரக்கறிகள் மற்றும் பழவகைகளில் எவ்வளவு தொகையினை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம்? எமது நாட்டில் விவசாயத்திற்கு தொழில்நுட்பத்தையும் நவீனத்துவத்தினையும் அறிமுகம் செய்து மறுமலர்ச்சி யுகமொன்றை உருவாக்குவோம்.
இதற்கான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கையை வெளியிட்டோம். எமது நாட்டில் இருக்கின்ற அதைபோலவே வெளிநாடுகளில் உள்ள இலங்கை விஞ்ஞானிகளும் சிறப்பறிஞர்களும் இந்தக் கொள்கையை தயாரித்தல் மற்றும் அமுலாக்குதல் தொடர்பில் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி வருகிறார்கள். சிறிய விளைநிலங்களில் அலுவல்களுக்காக உலகத்தில் மிகவும் சிறிய இரண்டு சக்கர உழவு இயந்திரத்தை பேராதனை பல்கலைக்கழகத்தின் திரு.ரே. விஜேவர்தனவே கண்டு பிடித்தார். அவருடைய உற்பத்தி தொடர்பில் அப்போது இருந்த பிரதம அமைச்சருக்கு கமத்தொழில் அமைச்சர் அறிமுகம் செய்தாலும் எந்த விதமான பயனும் விளையவில்லை. கிரயமொன்றை ஏற்க வேண்டிய மெஷின் ஒன்றுக்கு பதிலாக கிரயமே இல்லாத எருதுகளைக் கொண்டு விவசாயம் சார்ந்த வேலைகளை செய்து கொள்ள முடியுமென அப்போதிருந்த ஆட்சியாளர்கள் ரே.விஜேவர்தனவிடம் கூறினார்கள். இதனால் வேதனையுற்ற திரு.ரே. விஜேவர்தன இங்கிலாந்திலும், ஜப்பானிலும் இரண்டு சக்கர உழவு இயந்திரத்தை அறிமுகம் செய்தார். இன்றளவில் உலகம் பூராவிலும் கோடிக்கணக்கான இரண்டு சக்கர உழவு இயந்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதென்பதை நாங்கள் அறிவோம். இலங்கைக்கு டொலர்களை ஈட்டிக்கொள்ளவிருந்த வாய்ப்பினை நாங்கள் இழந்தோம். அது மாத்திரமல்ல எங்களுடைய விளைநிலங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து இரண்டு சக்கர உழவு இயந்திரங்களை இறக்குமதி செய்கிறோம். எமது ஆட்சியின் கீழ் எமது நாட்டின் உற்பத்தியாளர்களுக்கு உச்ச வாய்ப்பினை வழங்கி உலகத்திற்கு அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுப்போம்.
வருடந்தோறும் புத்தாக்குனர்களின் போட்டிகள் தேசிய மட்டத்தில் நடத்தப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். முழு உலகத்திலும் அவ்வாறு செய்யப்படுகின்றன. அமெரிக்காவில் வருடந்தோறும் புத்தாக்க கண்காட்சி நடத்தப்படுகின்றது. அமெரிக்காவின் நாசா நிறுவனம் இந்த புத்தாக்கங்கள் தொடர்பான போட்டியை நடாத்தி மிகச் சிறந்த ஆக்கங்களை தெரிவு செய்கிறது. அநுராதபுரத்தின் கலென்பிந்துனு வெவ எனும் இடத்தை சோ்ந்த கப்புகே எனும் இளைஞன் வரம்புகளை கட்டுவதற்காக நிர்மாணித்த உபகரணம் முழு உலகுமே ஏற்றுக்கொண்ட புத்தாக்கமாக நாசா நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்டது. அதனை நிர்மாணித்த இளைஞரின் பெயர் கோள் மண்டலத்தின் நட்சத்திரமொன்றுக்கு “கப்புகே” என பெயர் சூட்டப்பட்டது. ஆனால் அந்த இளைஞன் இப்போது ஒரு கராஜில் வேலை செய்து கொண்டிருக்கிறான். ஒரு நாட்டை எப்படி கட்டியெழுப்புவது? இந்த ஆட்சியாளர்களுக்கு எந்தவிதமான நோக்கும் கிடையாது.
அதைபோலவே இந்த நாட்டில் முரண்பாடுகள் அற்ற தேசிய ஒற்றுமையையும் மதம் சார் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டும். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு பௌதீக அபிவிருத்தியைப் போன்றே ஆன்மீக அபிவிருத்தியும் அவசியமாகும். வீதிகள், கட்டிடங்கள், நீர்தேக்கங்கள், கால்வாய்கள், மின்சாரம் வழங்குதல், தொலை தொடர்புகள் போன்றவை பௌதீக அபிவிருத்திக்கு அவசியமாகின்றன. சனநாயகம், தேசிய ஒற்றுமை, மதம்சார் நல்லிணக்கம், கருணை, பரிவிரக்கம் போன்றே மனிதமும் ஏற்புடையதாகும். இவற்றை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியுமா? இந்த பண்புகளை ஆட்சியாளர் மனதில் கொள்ளல் வேண்டும். ஆன்மீக ரீதியாக கட்டியெழுப்புவதற்கான அடிப்படை அத்திவாரம் கல்வியினூடாகவே இடப்படுகிறது. விடயஅறிவு மாத்திரமன்றி கலை, இலக்கியம், வெகுசன ஊடகம் பயன்படுத்தப்படல் வேண்டும். தேசிய மக்கள் சக்தி இதோ இந்த இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகள் ஊடாகவே நாட்டை கட்டியெழுப்புவதற்காக அதிகாரத்தை வேண்டி நிற்கிறது. எனினும் சஜித்திடமிருந்தோ ரணிலிடமிருந்தோ தீர்வுகளை பெற்றுக்கொள்ள முயற்சிப்பீர்களேயானால் எமது தாய் நாட்டை மோச்சரியாக மாற்ற வேண்டி வருமென்பதை மனதிற்கொள்ள வேண்டும். அவர்கள் அரிசி, பணம், போத்தல்களை கூட பங்கிட்டு வருகிறார்கள். நாங்கள் எங்களுடைய அறிவினை பகிர்ந்து மக்களை விழிப்புணர்வூட்டி வருகிறோம். அவர்களிடம் ஊடகப்பலம் இருக்கிறது. எனினும் நாங்கள் எங்களுடைய வாய்ப்பலத்தை பயன்படுத்திக் கொண்டு நாடுபூராவும் சென்று வருகிறோம். நீங்களும் உங்களுடைய வாயை பயன்படுத்தி மென்மேலும் மக்கள் பலத்தை கட்டியெழுப்ப ஒன்றுசேருங்கள். இலங்கையில் எங்கேயாவது ஒரு இடத்திலிருந்து 10 வாக்குகளையேனும் பெற்றக்கொடுக்கின்ற இலக்கிற்காக ஒவ்வொருவரும் ஒன்றுசேருங்கள். இவை அனைத்தின் மூலமாகவும் தெளிவாகின்ற விடயம் ஏனைய எந்தவொரு பலத்தையும் விட மக்களின் பலம் சக்திவாய்ந்தது என்பதாகும். அந்த மக்கள் பலத்தை பிரயோகித்து புதிய மறுமலர்ச்சி யுகமொன்றை ஆரம்பிக்க தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்கவை அமோக வெற்றியீட்ட செய்விப்போம்.
(-Colombo, August 06, 2024-) இன்று (06) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) தலைவர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் குழுவிற்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இற்றைவரை இலங்கையில் மருத்துவர்கள் எதிர்கொள்கின்ற சிக்கலான நிலைமைகள் மற்றும் அந்த நிலைமைகளை மாற்றியமைப்பதற்கான அச்சங்கத்தின் ஆலோசனைகள் இதன்போது அநுரவிடம் கையளிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டாக்டர் நிஹால் அபேசிங்க […]
(-Colombo, August 06, 2024-)
இன்று (06) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) தலைவர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் குழுவிற்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இற்றைவரை இலங்கையில் மருத்துவர்கள் எதிர்கொள்கின்ற சிக்கலான நிலைமைகள் மற்றும் அந்த நிலைமைகளை மாற்றியமைப்பதற்கான அச்சங்கத்தின் ஆலோசனைகள் இதன்போது அநுரவிடம் கையளிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டாக்டர் நிஹால் அபேசிங்க மற்றும் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பேராசிரியர் கிறிஷாந்த அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
(-2024-08-06 – தோ்தல்கள் செயலகம், ஜனாதிபதி தோ்தலுக்கான கட்டுப்பணம் வைப்புச் செய்யப்பட்ட வேளையில்-) எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆந் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிடுகின்ற தோழர் அநுர குமார திசாநாயக்கவிற்காக கட்டுப்பணம் வைப்புச்செய்தல் இன்று (06) முற்பகல் இராஜகிரிய தேர்தல்கள் அலுவலகத்தில் இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தியின் சார்பில் இத்தருணத்திற்காக பொதுச்செயலாளர் டாக்டர் நிஹால் அபேசிங்க, தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் […]
(-2024-08-06 – தோ்தல்கள் செயலகம், ஜனாதிபதி தோ்தலுக்கான கட்டுப்பணம் வைப்புச் செய்யப்பட்ட வேளையில்-)
எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆந் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிடுகின்ற தோழர் அநுர குமார திசாநாயக்கவிற்காக கட்டுப்பணம் வைப்புச்செய்தல் இன்று (06) முற்பகல் இராஜகிரிய தேர்தல்கள் அலுவலகத்தில் இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் இத்தருணத்திற்காக பொதுச்செயலாளர் டாக்டர் நிஹால் அபேசிங்க, தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் ஹரினி அமரசூரிய, தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் முனீர் முளப்பர், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் ஹினிதும சுனில் செனெவி, தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் மஹிந்த ரத்நாயக்க, தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விறாய் கெலீ பல்தசார், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் எரங்க குணசேகர, சனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும, சட்டத்தரணி சுனில் வட்டகல உள்ளிட்ட குழுவினர் சமுகமளித்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமர சூரிய, தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் மௌலவி முனீர் முலபர் மற்றும் சோசியலிச இளைஞர் சங்கத்தின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் சதீஷ் செல்வராஜ் அத்தருணத்தில் கருத்து தெரிவித்தனர்.
“நாட்டை நாகரிகமடைந்த நிலைமைக்கு உயர்த்தி வைக்கக்கூடிய”தலைவர் ஒருவரை நியமித்துக் கொள்வதற்கான வாய்ப்பு பிறந்துள்ளது”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹிரினி அமரசூரிய-
நாங்கள் நீண்டகாலமாக உழைத்ததும் நீண்டகாலமாக காத்திருந்ததும் இந்த தருணம் வரும்வரையே. இலங்கைக்கு சமூக நீதியை ஏற்படுத்துகின்ற, தெளிவான தூரநோக்கினைக் கொண்ட, நாகரிகமான தலைவர் ஒருவரை தெரிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு வரும்வரை நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்தோம். வரலாற்று ரீதியான மாற்றமொன்றை ஏற்படுத்தி நாட்டை நாகரிகமடைந்த நிலைமைக்கு உயர்த்தி வைக்கக்கூடிய தலைவர் ஒருவரை நியமித்துக் கொள்வதற்கான வாய்ப்பு நாளுக்கு நாள் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது.
எமது கட்சியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவின் வேட்பு மனுக்காக நாங்கள் இன்று கட்டுப்பணத்தை வைப்புச் செய்தோம். இன்னும் 48 நாட்களில் நாட்டு மக்களை உயர்த்தி வைக்கக்கூடிய அந்த தோழரை, அந்த தலைவரை நியமித்துக் கொள்வதற்கான வாய்ப்பு வருகிறது. இன்று இந்த தருணத்தில் அந்த வரலாற்று ரீதியான சந்தர்ப்பத்தின் பங்காளிகளாக அமையக்கிடைத்ததையிட்டு நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.
“நாட்டை அநுரவிடம் ஒப்படைக்க மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்-
ஜனாதிபதி தோ்தலுக்காக எமது கட்சியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவிற்காக நாம் அனைவரும் வந்து கட்டுப்பணத்தை வைப்புச் செய்தோம். 15 ஆம் திகதி வேட்பு மனுவை ஒப்படைப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.
எமது நாட்டை பொருளாதார ரீதியாக சீரழித்து ஊழல்மிக்க, கீழ்த்தரமான, அசிங்கமான அரசிலை முன்னெடுத்து வந்த யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டமொன்றை கொண்ட அரசியலை வெற்றிபெற செய்விக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாட்டின் பெரும்பான்மை மக்கள் இந்த தினம் வரும்வரை வழிமேல் விழிவைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிலவுகின்ற அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைத்து நாட்டை அதலபாதாளத்திலிருந்து மீட்டெடுக்கின்ற வேலைத்திட்டத்தை கொண்டுள்ள அநுரவிடம் நாட்டை ஒப்படைக்க தயாராக இருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்களின் வாக்குகளால் அநுரவிடம் நாட்டை ஒப்படைக்கத் தயார். இந்த செய்தியை நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொடுக்கிறோம்.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் மௌலவி முனீர் முளப்பர்
சோஷலிச இளைஞர் சங்கத்தின் தேசியக்குழு உறுப்பினர் சதீஸ் செல்வராஜ்