Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

“இளைப்பாறிய முப்படை அங்கத்தவர்கள் தேசிய மக்கள் சக்தியுடன் நிலைதளராமல் முன்னோக்கிச் செல்வார்கள்”-இளைப்பாறிய மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர-

(இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவின் ஊடக சந்திப்பு – 2024.07.29) நாங்கள் பல வருடங்களாக சேவையில் ஈடுபட்டு இளைப்பாறிய பின்னர் நாடு அடைந்துள்ள கவலைக்கிடமான நிலைமையை தெளிவாக விளங்கிக்கொண்டோம். எங்களை இந்த நிலைமைக்கு கொண்டுவர இலங்கை தரைப்படை, இலங்கை வான்படை மற்றும் இலங்கை கடற்படை மேற்கொண்ட முயற்சியும் பிரயத்தனமும் சம்பந்தமாக எங்களுடைய மனங்களில் மதிப்பும் அபிமானமும் என்றென்றும் இருக்கிறது. நாடு அடைந்துள்ள நிலைமை பற்றி நீண்ட ஆய்வினை மேற்கொண்ட பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றுசோ்ந்து இரண்டாவது நடவடிக்கைக்கு […]

(இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவின் ஊடக சந்திப்பு – 2024.07.29)

NPP-Retired-Tri-Force-Press

நாங்கள் பல வருடங்களாக சேவையில் ஈடுபட்டு இளைப்பாறிய பின்னர் நாடு அடைந்துள்ள கவலைக்கிடமான நிலைமையை தெளிவாக விளங்கிக்கொண்டோம். எங்களை இந்த நிலைமைக்கு கொண்டுவர இலங்கை தரைப்படை, இலங்கை வான்படை மற்றும் இலங்கை கடற்படை மேற்கொண்ட முயற்சியும் பிரயத்தனமும் சம்பந்தமாக எங்களுடைய மனங்களில் மதிப்பும் அபிமானமும் என்றென்றும் இருக்கிறது. நாடு அடைந்துள்ள நிலைமை பற்றி நீண்ட ஆய்வினை மேற்கொண்ட பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றுசோ்ந்து இரண்டாவது நடவடிக்கைக்கு உயிர்கொடுக்க 2022 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஒரு சிறிய குழுவென்ற வகையில் பிள்ளையார்சுழி போட்டோம். இன்றளவில் இளைப்பாறிய முப்படை அங்கத்தவர்கள் ஏறக்குறைய 40 ஆயிரம் போ் எம்முடன் இணைந்திருக்கிறார்கள். வடக்கு – கிழக்கு தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கதக்க ‘அதிட்டன’ மாநாட்டினை நடாத்தி எங்களுக்கு இருக்கின்ற பொறுப்புக்களையும் கடமைகளையும் பற்றி இளைப்பாறிய முப்படை அங்கத்தவர்களுக்கு தெளிவுபடுத்திக் கூறினோம். அதனூடாக அவர்கள் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் முன்னோக்கிய பயணத்தில் இணைந்துள்ளார்கள். 2023 இல் நிலவிய பின்னணிக்கிணங்க தேசிய பாதுகாப்பு சம்பந்தமான அடிப்படைக் கொள்கை வெளியீட்டினை சமர்ப்பித்தாலும் நடப்பு நிலைமைக்கு இணங்க இற்றைப்படுத்தி மீண்டும் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

கடந்து சென்ற இந்தக் காலப்பகுதிக்குள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயலாற்றுதல் சம்பந்தமாக எம்மீது முன்வைக்கப்பட்ட சவால்களை வென்றெடுத்து திடசங்கற்பத்துடன் செயலாற்றி வருகிறோம். அனைவரும் நிலைதளராமல் ஒரே நோக்கத்திற்காக இளைப்பாறிய முப்படை அங்கத்தவர்கள் என்ற வகையில் தேசிய மக்கள் சக்தியுடன் முன்னோக்கி பயணிக்கிறோம். வாழ்க்கையின் எல்லாவற்றையும் அர்ப்பணித்து நாட்டுக்காக கடமை புரிந்தாலும் இறுதியில் பார்க்கும்போது கவலைக்கிடமான நிலைமைக்கு இழுத்துப்போடப்பட்டுள்ள நாட்டை விடுவித்துக் கொள்வதற்காக இரண்டாவது நடவடிக்கை என்ற வகையில் நாங்கள் முன்வந்திருக்கிறோம். இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவின் தேசிய மாபெரும் மாநாடு ஆகஸ்ட் 04 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு பொரல்ல கெம்பல் மைதானத்தில் நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முப்படையைச் சோ்ந்த இளைப்பாறிய ஊனமுற்றவர்கள், இறந்த அங்கத்தவர்களின் குடும்பங்களைச் சோ்ந்தவர்கள் சம்பந்தமான சிக்கல்களை உள்ளிட்ட ஒரு வெளியீட்டினை சமர்ப்பிக்க நாங்கள் தயாராகி வருகிறோம். இன்று நாடு அடைந்துள்ள நிலைமை மீது கவனம் செலுத்தி இதுவரை எம்முடன் இணைந்திராத அனைவரையும் இதில் சோ்ந்து கொள்ளுமாறு திறந்த அழைப்பினை முன்வைக்கிறோம். நாட்டுக்கு பயனுள்ள பணியை ஈடேற்ற சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட உத்தியோகத்தர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். இன்றளவில் தேசிய மக்கள் சக்திக்கு வெளிநாடுகளில் வசிக்கின்ற இலங்கை புத்திஜீவிகள், ஆராய்ச்சியாளர்கள், சிறப்பறிஞர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறைகளையும் சோ்ந்த புலமைசாலிகள் ஒன்று சோ்ந்து இருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப்பிடிப்புள்ளதன்மை காரணமாக நாட்டை கட்டியெழுப்புவதற்குள்ள ஒரே அரசியல் இயக்கம் என்ற வகையில் இதனைச் சுற்றி குழுமி வருகிறார்கள். தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்று சோ்வதற்காக 2022 இல் நாங்கள் எடுத்த தீர்மானம் தொடர்பில் மிகவும் பெருமைப்படுகிறோம்.

தேசிய மக்கள் சக்தியால் கட்டியெழுப்பப்படுகின்ற மக்கள் அரசாங்கத்தின் மூலமாக முப்படை அங்கத்தவர்களுக்கு கௌரவமாகவும் அபிமானத்துடனும் உயிர் வாழ்வதற்கான இடமளிப்பது இந்த அரசியல் இயக்கத்தின் கொள்கையாக அமைந்திருக்கிறது. இளைப்பாறிய முப்படை அங்கத்தவர்கள் அனுபவித்து வருகின்ற பொருளாதார அழுத்தத்தின் மத்தியில் ரஷ்யா, யுக்கிரேன் போன்ற நாடுகளில் மிகவும் அபாயகரமான தொழில்களில் கூட ஈடுபடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டுக்கு தனித்துவமான பங்களிப்பினை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவுள்ள ஒழுக்கம், ஒழுங்கமைந்ததன்மை, அர்ப்பணிப்பு ஆகிய பண்புகளைக் கொண்ட அவர்களை நாட்டுக்கான விசேட பணிகளில் ஈடுபடுத்த முடியும். படைகளை கைவிட்டுச் சென்றுள்ள எனினும் இற்றைவரை அதனை சட்டபூர்வமாக செய்து கொண்டிராதவர்களின் சிக்கல்கள் சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தி கௌரவமான பிரஜைகளாக வாழக்கூடிய சுற்றுச்சூழலை உருவாக்கிக் கொடுப்போம். ஒரு தேசம் என்ற வகையில் போதைப் பொருள் தீத்தொழில், உணவு பாதுகாப்பின்மை, நிதிசார் குற்றச் செயல்களுக்கு இடமளித்து சட்டத்தின் ஆட்சியை சிதைத்துள்ள நிலைமையிலிருந்து மீட்டெடுத்து நாட்டை கட்டியெழுப்ப எங்களுடைய தனித்துவமான திறமைகளை ஈடுபடுத்த மிகுந்த ஆர்வத்துடன் அணித்திரண்டிருக்கிறோம். ஆகஸ்ட் 04 ஆம் திகதி இளைப்பாறிய முப்படையினரின் தேசிய மாநாடு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலிலும் இருக்கின்ற இலங்கையர்களுக்கு ஒரு விசேட செய்தியை கொடுப்பதற்காகவே நடாத்தப்படுகின்றது. முதலாவது கோபுரமாக இளைப்பாறிய முப்படை கூட்டமைவும் அடுத்த கோபுரமாக இளைப்பாறிய பொலிஸ் கூட்டமைவும் உள்ளிடங்கியதாக அனைத்துத்துறைகளையும் சோ்ந்த தொழில்வாண்மையாளர்களையும் தலைசிறந்தவர்களையும் பங்கேற்க செய்வித்துக் கொண்ட மக்கள் ஆட்சியொன்றினை பெற்றுக் கொள்வதற்காக செப்டெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தோ்தலில் மகத்தான வெற்றியை அடைய நாம் அனைவரும் அணிதிரண்டிருக்கிறோம்.

NPP-Retired-Tri-Force-Press

“ஊழலற்றத்தன்மையை நிரூபித்துள்ள தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே நாட்டை மீட்டெடுக்க முடியும்”
-இளைப்பாறிய றியர் அத்மிரால் பிரெடி செனவிரத்ன-

நாங்கள் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்று சோ்ந்து செயலாற்றுதல் சம்பந்தமாக எம்முடன் இருந்த ஒரு சிறிய குழுவினர் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்கள். அனைவரும் அறிந்தவாறே இளைப்பாறிய முப்படை அங்கத்தவர்களும் தாம் விரும்பிய அரசியல் கட்சியுடன் இணைந்து செயலாற்றுவதற்கான உரிமையை கொண்டிருக்கிறார்கள். வேறு அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயலாற்றுபவர்கள் தொடர்பில் எங்களுக்கு எந்த விதமான விமர்சனமும் கிடையாது. எனினும் அதிட்டனவுடன் இணைந்துள்ள நாம் எவரும் முனைப்பான சேவையின் போது அரசியலுடன் தொடர்புபட்டிருந்தவர்களல்ல. இடம்பெறுகின்ற சமூக அநீதி தொடர்பிலே சமூகத்திற்காக ஆற்றுகின்ற அரும்பணி என்ற வகையிலேயே நாங்கள் இளைப்பாறி பல வருடங்களுக்கு பின்னர் இந்த அரசியல் இயக்கத்துடன் இணைந்திருக்கிறோம். இந்த நாட்டை இதுவரை ஆட்சி செய்த இரண்டு கட்சிகளும் மரமும் பட்டையும்போல் பிணைந்து ஊழல் மிக்க அரசியல் கலாச்சாரத்தை பேணி வந்தார்கள். இந்த நிலைமையிலிருந்து ஊழலற்றத் தன்மையை நிரூபித்துள்ள தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே நாட்டை மீட்டெடுக்க முடியும். நடப்பு தேவை என்ற வகையிலும் தேசிய அரும்பணி என்ற வகையிலும் இளைப்பாறிய முப்படை கூட்டமைவினை நிறுவி தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம்.

NPP-Retired-Tri-Force-Press

“அரசியலுக்கு நன்மதிப்பினை கொண்டுவரக்கூடிய ஒரே அரசியல் இயக்கம் திசைக்காட்டி மாத்திரமே”
-இளைப்பாறிய எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்த்தா-

நான் இளைப்பாறிய வான்படை உத்தியோகத்தராக முன்னர் முப்பது வருடகால யுத்தத்திற்கு முடிவுகாண்பதற்காக முனைப்பாக பங்களித்த ஒருவனாவேன். எனது சமக்காலத்தவர் அனைவரும் உயர்ந்த அர்ப்பணிப்புடன் உயிரை பணயம் வைத்து தாய் நாட்டு அவசியமான சமாதானத்தை பெற்றுக்கொடுக்க பங்களிப்புச் செய்தார்கள் முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் குடிமக்களை உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோருக்கு உயிர்களை இழக்கச் செய்வித்த பெருந்தொகையான வளங்களை அர்ப்பணித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இயலுமாற்று. நாங்கள் அதற்காக உன்னதமான நோக்கத்தை மனதில் வைத்துக்கொண்டே செயலாற்றினோம். நாட்டின் அபிவிருத்திக்கு அவசியமான அமைதியான சுற்றுச்சூழலையும் முன்னேற்றத்தையும் பெற்றுக்கொள்ள கடந்த 15 வருடங்களில் செயலாற்றுவதற்கு பதிலாக கடன்களை மீளச்செலுத்த முடியாத வங்குரோத்து நாடாக எமது நாடு மாற்றப்பட்டுள்ளது. நிகழ்காலத்தில் கூட ஜனநாயகத்தை ஒருபுறம் ஒதுக்கித்தள்ளிவிட்டு மேற்கொண்டு வருகின்ற அரசியல், சட்டவிரோதமான செல்வத்தை திரட்டுகின்ற வியாபாரமாக மாற்றப்பட்டுள்ளது. நாங்கள் எவருமே அருவருக்கின்ற இந்த அரசியல் முறைமையை மாற்றியமைத்து கௌரவமான அரசியலைப் போன்றே அரசியல்வாதிகளுக்கு நன்மதிப்பினை ஏற்படுத்தக்கூடிய ஒரே அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும். நாங்கள் தற்போது இரண்டு வருடங்களுக்கு மேலாக தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம். எங்களுடைய இரண்டாவது தேசிய மாநாட்டில் பங்கேற்குமாறு இளைப்பாறிய வான்படை அங்கத்தவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

NPP-Retired-Tri-Force-Press
Show More

“நாட்டை நாசமாக்கிய அரசியல் வைரஸ் நோயை முற்றாக குணப்படுத்தக்கூடிய மருந்தினை வழங்க வேண்டும்”-தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(-அகில இலங்கை தாதியர் சங்கம் – தேசிய தாதியர் மாநாடு – 2024.07.28 – இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர்கூடம்-) ஜனாதிபதித் தோ்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் நடாத்தப்படுகின்ற முதலாவது மாநாடு தான் அகில இலங்கை தாதியர் சங்கத்தின் மாநாடு. நீங்கள் எங்களுக்கு பாரிய நம்பிக்கையையும் தெம்பினையையும் வெற்றி பற்றிய உறுதிப்பாட்டினையும் கொடுத்திருக்கிறீர்கள். நாங்கள் அனைவரும் பொதுவில் எல்லா விதத்திலும் நோய்வாய்ப்பட்டே இருக்கிறோம். எங்களுடைய பொருளாதாரம் எல்லா விதத்திலும் நோய்வாய்பட்டே இருக்கிறது. எங்களுடைய பொருளாதாரம் ஆரோக்கியமான நிலையில் […]

(-அகில இலங்கை தாதியர் சங்கம் – தேசிய தாதியர் மாநாடு – 2024.07.28 – இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர்கூடம்-)

National-Nurses-Meeting

ஜனாதிபதித் தோ்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் நடாத்தப்படுகின்ற முதலாவது மாநாடு தான் அகில இலங்கை தாதியர் சங்கத்தின் மாநாடு. நீங்கள் எங்களுக்கு பாரிய நம்பிக்கையையும் தெம்பினையையும் வெற்றி பற்றிய உறுதிப்பாட்டினையும் கொடுத்திருக்கிறீர்கள். நாங்கள் அனைவரும் பொதுவில் எல்லா விதத்திலும் நோய்வாய்ப்பட்டே இருக்கிறோம். எங்களுடைய பொருளாதாரம் எல்லா விதத்திலும் நோய்வாய்பட்டே இருக்கிறது. எங்களுடைய பொருளாதாரம் ஆரோக்கியமான நிலையில் இருக்கிறதா? பொருளாதார சீரழிவு எல்லாத்துறைக்கும் பாய்ந்து சென்றுள்ளது. பொருளாதாரம் மாத்திரமன்றி தேசமும் நோயுற்ற தேசமாகவே மாறியிருக்கிறது. கடந்த வருடத்தில் ஒரு இலட்சத்து முப்பத்தேழாயிரமாக அமைந்த இறப்புகளின் எண்ணிக்கையில் அதாவது 80 வீதம் தொற்றா நோய்களாலேயே ஏற்பட்டிருக்கிறது. முப்பத்தைந்து வயதினைவிட குறைந்தவர்களில் 15 வீதமானவர்கள் நீரிழிவு நோயினாலும் 35 வீதத்திற்கு கிட்டிய எண்ணிக்கையுடையோர் இதய நோய்களினாலும் பீடிக்கப்பட்டுள்ளார்கள். அதாவது எங்களுடைய நாடு நோயுற்றுள்ளது. இளைஞர் தலைமுறையினர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள். எல்லா விதத்திலும் நோய்வாய்ப்பட்ட நாடு, நோய்வாய்ப்பட்ட தேசம், நோய்வாய்ப்பட்ட பொருளாதாரமே இருக்கின்றது. இந்த நோயை குணப்படுத்த நீண்ட காலமாக பல்வேறு பரீட்சித்துப் பார்த்தல் வேலைகளை செய்து எமது நாட்டின் மக்கள் முயற்சிகளை செய்திருக்கிறார்கள். 76 வருடங்களாக இந்த நாடு அடைந்திருந்த நோய் நிலைமைக்கான மருந்தாக கெஹெலியவின் மருந்தே தெரிவு செய்யப்பட்டுள்ளது. குணமாவதற்கு பதிலாக நோயை அதிகரிக்கின்ற மருந்தாகும். கண்ணில் ஏதாவது கோளாறு இருக்குமானால் அதற்காக அனுமதிக்கப்படுகின்ற ஒருவர் மருந்து அடிக்கப்பட்ட பின்னர் முழுமையாக பார்வையை இழக்கிறார். அதுதான் கெஹெலியவின் மருந்து. இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக புதிய மருந்தொன்று எங்கள் நாட்டுக்கு அவசியமாகின்றது. உங்களுக்கு தெரியும் ஒரே மருந்தை நீண்ட காலமாக பாவித்தால் நோய் குணமாக மாட்டாது. அந்த மருந்து நோய்க்கு பழக்கப்பட்டதாக அமைந்து விடுகிறது. இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான புதிய மருந்தொன்று எமது நாட்டுக்கு அவசியமாகிறது. அதனால் புதிய திசையை நோக்கி இந்த நாட்டை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. அந்த பாதையில் பயணிப்போம் என்ற முன்மொழிவினை செய்யவே நாங்கள் உங்களை அழைத்திருக்கிறோம்.

எங்களுக்கு நல்ல மருந்துகள் இருந்தாலும் தீயமருந்தினை ஏன் தெரிவு செய்ய நேரிட்டது? அது தான் அந்தத்தருணத்தின் நிலைமை. எங்களுக்கு விருப்பமிருந்தாலும் எவ்வளவுதான் தேவை இருந்தாலும் அவ்வாறான வெற்றிக்கு அவசியமான சமூக சுற்றுச்சுழல் உருவாக்கப்பட்டிருக்கவில்லை. எங்களுடைய விருப்பத்திற்காக இவ்வாறான மாற்றம் ஏற்படப்போவதில்லை. சமூக மாற்றத்திற்காக மேலே இருக்கின்ற நெருக்கடியும் கீழேயிருக்கின்ற நெருக்கடியும் முதிர்ச்சியடைய வேண்டும். மேலே உள்ள நெருக்கடி என்பது ஆட்சிக்குழுக்கள் தொடர்ந்தும் வழமையான வகையில் தமது ஆட்சியதிகாரத்தை பேணிவர முடியாமல் போனதேயாகும். தோ்தல் வரலாற்றில் இன்றளவிலே ஐக்கிய தேசிய கட்சி வாக்குச் சீட்டில் கிடையாது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கீழே உருவாகியுள்ள நெருக்கடி என்னவென்றால் மக்களால் தொடர்ந்தும் வழமைபோல் தமது வாழ்க்கையை தொடர முடியாமையாகும். அவர்களுக்கு வழமைபோல் உணவைப் பெற்றுக்கொள்ள, மருந்தினை கொள்வனவு செய்ய முடியாது. பிள்ளைக்கு கல்வியை வழங்க முடியாதுள்ளது. அதாவது சமூக புரட்சியொன்றுக்கு யுகமாற்றமொன்றுக்கு அவசியமான சுற்றுச்சூழல் உருவாகியிருக்கிறது.

National-Nurses-Meeting

அந்தச் சுற்றுச்சூழலை மிகவும் சிறப்பாக முகாமை செய்து எம்மால் அதிகாரத்தை கையிலெடுக்க முடியுமா? முடியாதா? என்கின்ற பிரச்சினை தோன்றியுள்ளது. நோயுற்ற இந்த தேசத்தை நோயுற்ற இந்த நாட்டை நாங்கள் மீட்டெடுக்க வேண்டும். அதற்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும். இவ்வாறான கவலைக்கிடமான நிலைமைக்கு தள்ளிவிட்டதற்கும், எமது பொருளாதாரத்தை நோய்க் கட்டிலில் தள்ளிவிட்டதற்கும், எமது தேசத்தை குற்றச் செயல்களும் போதைப்பொருட்களும் மலிந்து போயுள்ள நாடாக மாறியதற்கும் சட்டத்தின் ஆட்சி சீரழிந்த நாடாக மாறியதற்கும் பொருளாதாரம் சீரழிந்தற்கும் காரணமாக அமைந்தது ஒரு வைரஸ் ஆகும். எங்களுடைய அரசியல் மீது பரவிய அழிவுமிக்க அரசியல் வைரஸ் ஒன்று இருக்கிறது. ஊழல், மோசடி, விரயம், குற்றச் செயல்கள் சட்டத்திற்கு மேலாக இருத்தல் போன்ற விடயங்களால் நிரம்பிய அரசியல் வைரஸ் ஒன்று இருக்கிறது. இந்த அரசியல் வைரஸை முற்றாகவே ஒழித்துக் கட்டக்கூடிய மருந்தினைக் கொடுக்க வேண்டும். அதைபோலவே பொருளாதாரத்துறையில் பரவியுள்ள ஒரு விதமான வைரசும் இருக்கிறது. கடன் எடுத்தல், விற்பனை செய்தல், தூரநோக்குடனான பொருளாதாரத்தை நெறிப்படுத்த தவறியமை முதலியவை காரணமாக பொருளாதாரம் நோய்வாய்ப்பட்டுள்ளது. இவை இரண்டையும் குணப்படுத்தக்கூடிய மருந்தினை நாங்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

தமது கைக்கு கிடைக்கின்ற அதிகாரத்தை செல்வத்தை திரட்டுவதற்கான ஒரே குறிக்கோளாக மாற்றிக் கொண்ட கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டும். இந்த அரசியல் கலாச்சாரத்திற்கு பதிலாக புதிய அரசியல் கலாச்சாரமொன்றை உருவாக்கி அரசியல் துறையை முற்றாகவே குணப்படுத்துவோம் என்பதை நாங்கள் உங்களுக்கு உறுதியாகக் கூறுகிறோம். சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமானவர்கள் எனில் குற்றச் செயல் புரிந்து தூக்குத்தண்டனைக்கு இலக்காக்கப்பட்ட ஒருவர் பாராளுமன்றத்தில் அமைச்சர் பதவியை வகிக்க முடியாது. அதைப்போலவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவியை வகிக்க முடியாது. எமது நாட்டில் பணமும் பலமும் படைத்தவருக்கு ஒரு சட்டமும் வறிய பலவீனமானவர்களுக்கு இன்னுமொரு சட்டமும் அமுலில் இருக்கிறது. தேசிய மக்கள் சக்தியை சோ்ந்த நாங்கள் சட்டத்திற்கு மேலாக இருப்பவர்களல்ல. நாங்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்களே. அதைபோலவே எமது முன்னிலையில் இருப்பது பிளவுபட்ட ஒரு நாடாகும். முரண்பாடுகள் ஏற்பட்ட ஒரு நாடாகும். அதற்கு பதிலாக இலங்கையில் தேசிய ஒற்றுமையின் தேசமொன்றை உருவாக்க வேண்டும். அது ஒரு அரசியல் பணியாகும். தேசிய மக்கள் சக்தி அந்தப் பணியை செய்யும். அரசியல் அதிகாரத்தை நெறிப்படுத்துகின்ற கேந்திர நிலையம்தான் பாராளுமன்றம். சட்டத்தையும் சம்பிரதாயத்தையும் தனது நோக்கங்களுக்காக பாவிக்கின்ற சபாநாயகர் ஒருவர். ஆபாசமான வார்த்தைகளை கூறி மகிழ்ச்சியடைகின்ற சிறுப்பிள்ளைத்தனமான மனநிலையைக் கொண்ட பாராளுமன்றமாகும். நாங்கள் இந்த சேற்றுக்குழியை சுத்தம் செய்வோம். கட்சி தாவினால் உறுப்பினர் பதவி பறிபோகின்ற நெறிமுறைகளுக்கு கட்டுப்படுகின்ற சட்டங்களை உருவாக்குவோம். எமது பொருளாதாரத்தில் எமக்கு புலப்படுகின்ற நோய் அறிகுறிகள் வைத்தியசாலைகளில் மருந்து கிடையாது, அவசியமான பணியாளர்கள் இல்லை, தொழில்வாண்மையாளர்கள் நாட்டை விட்டு வெளியே போகிறார்கள். இது நாங்கள் நோயைக் காண்கின்ற விதம். நோய்க்கான காரணம் தான் உலகில் ஏற்படுகின்ற நிலைமைக்கு நேரொத்ததாக அமையத்தக்க பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள நாங்கள் தவறியமையாகும்.

National-Nurses-Meeting

நாங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றில் உலகில் ஏற்படுகின்ற மாற்றங்களை நன்கு உறிஞ்சி எடுத்து முன்னேற்றமடைந்த பண்டங்கள் மற்றும் சேவை உற்பத்திகளால் உலக சந்தையில் ஒரு பங்கினை அடைந்து கொள்வதற்கான திட்டமொன்றை வகுத்திருக்கிறோம். எங்களுக்கு பல துறைகள் இருக்கின்றன. அதற்கு மிகவும் அவசியமான விடயம் தான் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினை முன்னேற்றுவது. எதிர்காலத்தில் உலகத்தை ஆளப்போவது மிக அதிகமான தொழில்நுட்பத்தின் சொந்தக்காராவார். ஒரு காலத்திலே மிக அதிகமான கப்பற்துறை அதிகாரத்தை கொண்டிருந்தவர் உலகத்தை ஆட்சி செய்தார். அவர்தான் யுத்த பலம் கொண்டிருந்தவர். மற்றுமொரு காலத்தில் அதிக பண பலம் படைத்தவர் ஆட்சி செய்தார்கள். இன்று உலகத்தை ஆட்சி செய்பவர்கள் அதிக தொழில்நுட்ப பலத்தை கொண்டவர்களாவர்.

இதன் இறுதி விளைவாக அமைய வேண்டியது என்ன? பிரஜைக்கு நல்லதொரு வாழ்க்கையை பெற்றுக்கொடுப்பதாகும். ஒவ்வொரு பிரஜைக்கும் அறிவினைக் கொண்ட கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கையை கொண்ட சுகாதாரம், மனநிம்மதி, கலையும் இலக்கியமும், தாக்குப்பிடிக்கக்கூடிய பலத்தை பெற்றுக்கொடுக்கின்ற விளையாட்டுத்துறையை கொண்ட புதிய மானிட பரம்பரையொன்று எமக்கு அவசியமாகும். அதைபோலவே எந்தவொரு தொழிலிலும் ஈடுபடுபவர்களுக்கு தான் புரிகின்ற தொழிலுக்கு உரிய பெறுமதியை வழங்கி தொழில் புரிபவருக்கு புதிய வாழ்க்கையொன்றை வழங்கி அனுபவிப்பதற்கான இடவசதியை பெற்றுக்கொடுப்போம். எமது நாட்டின் பெருந்தொகையானோர் மன அழுத்தத்தினால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். ஒரு நாடு என்ற வகையில் முன்னேறிச் செல்வதற்கான தொழில்வாண்மையாளர்கள் அவசியமாகின்றனர். அவர்களின் கல்வி மட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டும். உலகின் மிகவும் உயர்ந்த மட்டத்தில் நிலவிய ஆரம்ப பட்டப்படிப்பு இன்று சாதாரண கல்வி மட்டம்வரை வந்து விட்டது. இன்று கல்வியின் அதியுயர் மட்டத்திலிருந்திருப்பது பட்டப்பின்படிப்பாகும். புதிய ஆராய்ச்சிகள் பட்டப்பின்படிப்புக்குள்ளே இடம்பெறுகின்றன. ஆரம்ப பட்டம் என்பது அடிப்படை கோட்பாடுகளாகும். அந்த கோட்பாடுகளை பாவனைக்கு எடுக்கும்போது புதிய திசைக்கு ஆற்றுப்படுத்தப்படுவது பட்டப்பின்னிலை மட்டத்திலாகும். எமது நாட்டில் கல்வி மட்டம் ஆரம்ப பட்டப்படிப்பு மட்டத்திலிருந்து பட்டப்பின் படிப்பு மட்டம்வரை விருத்தி செய்யப்பட வேண்டும். தாதியர் சேவைக்கு ஆரம்ப பட்டமொன்றுக்கூட இல்லாத நிலைக்குள் நாங்கள் அதற்கு அப்பால் உயர் கல்விக்கு வழிப்படுத்துகின்ற புதிய தாதியர் சேவையை ஆரம்பிப்போம். உலகம் புதிய கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலேயே முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அவை எல்லாமே பட்டப்பின்படிப்பு நிறுவனங்களிலேயே இடம்பெறுகிறது. அப்படியில்லாமல் ஆரம்ப பட்டப்படிப்பில் புதியவை இடம்பெறுவதில்லை. எங்களுடைய நாட்டில் முழு நேர பட்டப்பின்படிப்பு நிறுவனமொன்று கிடையாது. தேசிய மக்கள் சக்தியைச் சோ்ந்த நாங்கள் இந்த கல்வி அடுக்கினை மேலும் உயர்வான மட்டத்திற்கு கொண்டுவரவேண்டுமானால் முழுநேர பட்டப்பின்படிப்பு நிறுவனங்கள் உருவாக்கப்படவேண்டுமென எதிர்பார்க்கிறோம். நாங்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தியிருக்கிறோம்.

National-Nurses-Meeting

அதைப்போலவே பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான மிகப்பெரிய வணிக வளங்கள் எம்மிடம் கிடையாது. எனினும் எமக்கு மீளப்புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தியில் மிகப்பெரிய தோற்றுவாய் இருக்கிறது. 2030 அளவில் உலகில் எண்ணெய்க்கான கேள்வி உச்சகட்டத்தை அடையுமென புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 2030 இன் பின்னர் கேள்வி குறையத்தொடங்கும். 2050 அளவில் உலகின் வலுச்சக்திகளின் வழங்கலில் 65 வீதம் தொடக்கம் 85 வீதம் மீளப்புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி துறையிலிருந்து வழங்கப்படும். எங்களுக்கு அந்த இடத்தில் சாத்திய வளமொன்று நிலவுகின்றது. எமது நாட்டின் இடஅமைவு, வளங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட்ட பொருளாதாரத் திட்டமொன்று எம்மிடம் இருக்கவேண்டும். அதைப்போலவே எமது நாட்டில் பாரிய சனத்தொகை அடர்த்தி நிலவுகிறது. ஒரு சதுர கிலோ மீற்றரில் அண்ணளவாக 343 போ் இருக்கிறார்கள். எமது மனித வளத்தை நாட்டின் வளமாக மாற்றிக்கொள்ள வேண்டும். உலகில் இரண்டு விதமான சந்தைகள் இருக்கின்றன. ஒன்று பண்டங்கள் சந்தை. இரண்டாவது உழைப்புச் சந்தை. நாங்கள் உலகின் உழைப்புச் சந்தையில் மிகவும் ஆரம்ப மட்ட உழைப்புச் சந்தையையே கைப்பற்றியிருக்கிறோம். 2017 இல் 303,000 போ் வெளிநாட்டுத் தொழில்களுக்காக சென்றுள்ளபோதிலும் தொழில்சார் வேலைகளுக்காக 6000 போ் மாத்திரமே சென்றிருக்கிறார்கள். நாங்கள் உலகில் முன்னேறிச் செல்லவேண்டுமானால் முன்னேற்றமடைந்த உழைப்புச் சந்தையில் ஒரு பங்கினை கைப்பற்றிக் கொள்ள வேண்டும். அதன்போது தாதியர் தொழிற்துறையானது உலகில் மிகவும் முன்னேற்றமடைந்த சந்தையில் ஒரு பங்கினை கைப்பற்றிக்கொள்ளக்கூடிய துறையாகும். அது எங்களுடைய பொருளாதார வளர்ச்சியின் பாதையாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழில்வாண்மையாளர்களின் சிறப்புரிமை, தொழில்களின் பாதுகாப்பு பற்றி சிந்திக்கவேண்டும். இன்று உலகில் 10,000 பேருக்கு 37 தாதியர்கள் இருக்கிறார்கள். இலங்கையில் 10,000 பேருக்கு 17 தாதியர்தான் இருக்கிறார்கள். நாங்கள் மேலும் முன்னேற வேண்டியிருக்கிறது. தற்போது 32,000 போ் வரை வேலை செய்கிறார்கள். பெருந்தொகையான வெற்றிடங்கள் நிலவுகின்றன. எங்களுடைய கல்வித்துறையிலும் சுகாதாரத்துறையின் வெற்றிடங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்யவும் புதிய பதவியணியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். புதிய நிலமைகளுக்கு ஒத்துவரக்கூடிய வகையில் பதவியணியை சீராக்கவேண்டும். எந்தவொரு தொழிலும் ஈடுபடுபவருக்கு தொழிலில் மனநிறைவு இருக்க வேண்டும். ஒன்று சட்டபூர்வமாகவும் மற்றையது வேலை செய்வதாகவும் அமையவேண்டும். சட்டரீதியான மனநிறைவு சேவை பிரமாணத்திலிருந்தே கிடைக்கின்றது. நாங்கள் உங்களுடன் கலந்து பேசி சேவைப்பிரமாணக் குறிப்பில் உள்ள சிக்கல்களை தீர்த்து வைப்போம். கிடைக்கின்ற சம்பளம் தமது வாழ்க்கையை கொண்டு நடாத்த போதுமானதாக அமையவேண்டும். 2021 உடன் ஒப்பிடுகையில் இன்றைய சம்பளம் 30 வீதத்தால் குறைவடைந்துள்ளது. அதிகரித்து வருகின்ற வாழ்க்கைச் செலவுப் புள்ளிக்கிணங்க சம்பளம் சீராக்கப்படல் வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றின் கீழ் நாங்கள் அதனை ஈடேற்றுவோம். சுகாதார சேவை அல்லது தாதியர் சேவை இருக்கின்றதென்பதால் மாத்திரம் சுகாதாரத்துறை வெற்றிகரமானதாக அமைய மாட்டாது. ஏனைய எல்லாத்துறையையும் விட சுகாதாரத்துறை கூட்டு முயற்சியை வேண்டி நிற்கிறது. ஒவ்வொரு துறையிலும் ஈடுபட்டுள்ள தொழில் புரிவோருக்கு மக்களை குணப்படுத்துகின்ற பணியே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எமது நாட்டை ஆரோக்கியமான தேசமாக மாற்றுவதற்கு கூட்டு மனப்பான்மையுடன் ஒன்று சோ்ந்து உழைப்போம்.
வரலாற்றில் நாடு தவறிழைத்த பல இடங்கள் இருக்கின்றன. அந்த இடங்களை நன்றாக கற்றாராய்ந்து வெகுவேகமாக மாற்றியமைத்து இந்த நாட்டை புதிய மாற்றத்தை நோக்கி வழிப்படுத்துவோம். அதற்காக நாம் அனைவரும் ஒன்று சோ்வோம்.

National-Nurses-Meeting
National-Nurses-Meeting
Show More

“கல்வி, சுகாதாரம் மற்றும் உணவு ஆகியவற்றை வெட் வரியில் இருந்து விடுவிப்போம்.” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(-சியத்த டிவியில் ஒளிபரப்பாகிய TV Turning Point நிகழ்ச்சி – 29.07.2024-) நேர்கண்டவரின் கேள்வி:நாட்டு மக்கள் மீது அதிக வரிச்சுமை இருக்கிறது. நேரில் வரி, நேர் வரி இரண்டுமே அதிகரித்துள்ளது. இந்த வரியை நீங்கள் குறைக்கப் போகிறீர்களா? நீக்கப் போகிறீர்களா? நிவாரணம் வழங்கப் போகிறீர்களா? உங்களுடைய வேலைத்திட்டம் என்ன? தோழர் அநுரவின் பதில்:நாம் இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள்ளே இருக்கிறோம். 2025 ஆம் ஆண்டாகும் போது எமது முதனிலை கணக்கின் மிகைநிலை 2.3 சதவீதமாக […]

(-சியத்த டிவியில் ஒளிபரப்பாகிய TV Turning Point நிகழ்ச்சி – 29.07.2024-)

Turning-Point-AKD

நேர்கண்டவரின் கேள்வி:
நாட்டு மக்கள் மீது அதிக வரிச்சுமை இருக்கிறது. நேரில் வரி, நேர் வரி இரண்டுமே அதிகரித்துள்ளது. இந்த வரியை நீங்கள் குறைக்கப் போகிறீர்களா? நீக்கப் போகிறீர்களா? நிவாரணம் வழங்கப் போகிறீர்களா? உங்களுடைய வேலைத்திட்டம் என்ன?

தோழர் அநுரவின் பதில்:
நாம் இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள்ளே இருக்கிறோம். 2025 ஆம் ஆண்டாகும் போது எமது முதனிலை கணக்கின் மிகைநிலை 2.3 சதவீதமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவே, இந்த நிகழ்ச்சி நிரல் ஓடிக்கொண்டிருக்கும் ஆட்சிதான் எங்களுக்குக் கிடைக்கும். ஆகவே, முதலாவதாக நாங்கள் முதனிலை கணக்கின் மிகைநிலையை 2.3 சதவீதமாக வைத்துக்கொள்வோம். அதற்காக, எமது வருமானத்தை அதிகரித்து செலவினை குறைக்க முடியும் அல்லது செலவினை அவ்வாறே வைத்துக்கொண்டு வருமானத்தை அதிகரிக்க முடியும்.

எங்களுடைய பிரதான இலக்கு வருமானத்தை அதிகரித்துக் கொள்வதாகும். இப்பொழுதும் திறைசேரிக்கு வந்து செரவேண்டிய பணம் திறைசேரிக்கு வராமல் வேறு பாதையில் சிலரின் வீடுகளுக்குச் சென்றுக்கொண்டிருக்கிறது. ஆகவே, இந்தப் பணத்தை நாங்கள் முழுமையாக திறைசேரிக்கு கொண்டு வருவோம்.

இரண்டாவது, திறைசேரியில் இருக்கும் பணத்தை நாங்கள் இந்த நாட்டு மக்களின் தெய்வீக உடைமைகளைப் போல பேணிப் பாதுகாப்போம். ஒரு ரூபாவைக் கூட வீணாக்க இடமளிக்கமாட்டோம்.

மூன்றாவது, நமக்கிருக்கும் வருமான சாத்தியவளங்களை நோக்குகையில, சுங்கவரித் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், குடிவரவு, குடியகல்வு திணைக்களம், மதுவரித் திணைக்களம் என்பன இருக்கின்றன. இவை தான் பிரதானமான வருவமான சாத்திய வளங்கள் ஆகும்.

நாங்கள் தொலைவில் இருக்கும் பாடசாலை ஒன்றிற்குச் சென்று நூலகம் இருக்கிறதா என்று பார்க்கப் போவதில்லை. நூலகத்தில் புத்தகங்கள் இருக்கிறதாக என்று பார்க்கப் போதவில்லை. அந்தக் கிராமத்தில் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கிறதா என்று நாங்கள் விசாரிக்கப் போவதில்லை. அதற்குப் பொறுப்பான அரசு இயந்திரமொன்று இருக்கிறது.

கிராம பாடசாலைகளுக்குச் சென்று விளையாட்டு மைதானம் இருக்கின்றதாக என்று பார்க்க வேண்டுமா? இசுருபாயவில் எல்லா பாடசாலைகள் பற்றிய விபரங்களும் இருக்கின்றன. ஆகவே, அரச உத்தியோகத்தர்களை வாரக்கணக்கில் நிறுத்தி வைத்து நாங்கள் வேலை செய்யப்போவதில்லை.

நாங்கள் இந்த நாட்டில் இருக்கின்ற வருமான சாத்திய வளங்களை, அதாவது சுங்கவரித் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் மதுவரித்திணைக்களத்தை வினைத்திறனுடையதாக்கி, நெருங்கிய அரசியல் தலைமைத்துவத்தை அவற்றுக்கு வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடி, இந்த வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.

இப்பொழுதும் சுங்கவரித் திணைக்களத்தின் உள்ளே இருக்கும் உத்தியோகத்தர்களுடன் நாங்கள் ஆழமாக கலந்துரையாடியிருக்கிறோம். அவர்கள் இரண்டு, மூன்று மாதங்களுக்கான கணக்குகளை கணக்கிட்டு தந்திருக்கிறார்கள். வருமானத்தை அதிகரித்துக் கொள்வது தொடர்பான இலக்கை எட்டக்கூடிய வகையில் அந்தக் கணக்குகளை கணக்கிட்டு தந்திருக்கிறார்கள். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பற்றியும் நாங்கள் பேசியிருக்கிறோம்.

ஆகவே, நாங்கள் வருமானத்தை ஈட்டக்கூடிய மார்க்கங்களை உருவாக்கி, அதுப்போல வீண்விரயத்தை குறைத்து, 2.3 சதவீத முதனிலை கணக்கின் மிகைநிலையையும் வைத்துக்கொண்டு, நாட்டின் பிரஜைகளின் வரிச்சுமையையும் குறைத்து மற்றும் மக்களுக்கு நிவாரணத்தையும் வழங்கி எம்மால் இதனை முகாமைத்துவம் செய்துகொள்ள முடியும்.

நேர்கண்டவரின் கேள்வி:
18 சதவீத வெட் வரி பாரதூரமான பிரச்சினையாக இருக்கிறது. இதனை குறைப்பீர்களா?

தோழர் அநுரவின் பதில்:
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு சுமையாக மாறியுள்ள வெட் வரியை நிச்சயமாகக் குறைப்போம். குறிப்பாக, எமது நாட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் உணவுக்கு வெட் வரி அறவிடப்பட்டிருக்கவில்லை. அதனால், நாங்கள் ஆரம்பக் கட்டத்திலேயே இம்மூன்றையும் வெட் வரியில் இருந்து விடுவிப்போம். இதுவரை வெட் வரி அறவிடப்பட்ட விசேட பிரிவுகளை விடுவிப்போம்.

நோய்வாய்ப்பட்டால் வைத்தியம் பார்க்க வேண்டும். அதற்கு அரசாங்கம் பணத்தை அறவிடு வேண்டுமா? பிள்ளைகள் கல்வி கற்க புத்தகங்கள் வேண்டும். அந்தப் புத்தகங்களுக்கு வரி அறவிட வேண்டுமா? பசியைப் போக்கிக்கொள்ள மரக்கறி வாங்கச் செல்லும்போது அதற்கும் வரி அறவிடு வேண்டுமா? இது நெறிமுறைக்கு புறம்பானது. ஒருவர் நோய்வாய்ப்பட்டால் வீட்டுக்குத் தொல்லையாகியிருக்கிறது. அவரின் மருத்துச் செலவுகளுக்கும் வரி அறவிட வேண்டுமா? மரத்தில் இருந்து விழுந்தவரை மாடு முட்டிய கதைதான் இது. ஆகவே, இவ்வாறு அறவிடப்படுகின்ற வரி நியாயமானதல்ல.

நாங்கள் சரியாக வருமான இலக்குகளை முழுமைப்படுத்தி, மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமையை குறைப்பதற்கான வேலைத்திட்டத்தை நிச்சயம் முன்னெடுப்போம்.

Show More

மாத்தறையில் நடைபெற்ற ‘முஸ்லிம் சகோதரத்துவ கூட்டம்’

(-Matara, July 27, 2024-) இன்று (27) மாத்தறை வெலிகம பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “முஸ்லிம் சகோதரத்துவ சந்திப்பு” நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.

(-Matara, July 27, 2024-)

இன்று (27) மாத்தறை வெலிகம பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “முஸ்லிம் சகோதரத்துவ சந்திப்பு” நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.

Show More

“எல்லாத்துறையிலும் வளமிக்க நாடொன்றை உருவாக்குவதே எமது நோக்கமாகும்” -தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க-

(-தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி ஒன்றியத்தின் மாத்தறை மாவட்ட கருத்தரங்கு – 2024-07-27- மாத்தறை பர்ள் பெலஸ் ஹோட்டல்-) நாங்கள் நீண்ட காலமாக வாக்குகளை அளித்திருக்கிறோம். வாக்குகளை அளிக்கும்போது அரசாங்கமொன்றை அமைக்கும்போது பிரஜைகளிடம் நிலவிய எதிர்பார்ப்புகள் ஈடேறியுள்ளனவா? எமது நாட்டில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடியை நோக்கினாலும், அரச மற்றும் ஏனைய ஒவ்வொரு துறையிலும் தோன்றியுள்ள சீர்குலைவுகளை நோக்கினாலும் நிகழ்ந்திருப்பது முன்னேற்றமல்ல. பின்னடைவுதான். நாங்கள் இந்த தலைவிதியிலிருந்து மீட்பு பெறவேண்டும். மீட்பு பெறவேண்டுமானால் முதலில் ஊழல் […]

(-தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி ஒன்றியத்தின் மாத்தறை மாவட்ட கருத்தரங்கு – 2024-07-27- மாத்தறை பர்ள் பெலஸ் ஹோட்டல்-)

Bank-And-Finance-Matara

நாங்கள் நீண்ட காலமாக வாக்குகளை அளித்திருக்கிறோம். வாக்குகளை அளிக்கும்போது அரசாங்கமொன்றை அமைக்கும்போது பிரஜைகளிடம் நிலவிய எதிர்பார்ப்புகள் ஈடேறியுள்ளனவா? எமது நாட்டில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடியை நோக்கினாலும், அரச மற்றும் ஏனைய ஒவ்வொரு துறையிலும் தோன்றியுள்ள சீர்குலைவுகளை நோக்கினாலும் நிகழ்ந்திருப்பது முன்னேற்றமல்ல. பின்னடைவுதான். நாங்கள் இந்த தலைவிதியிலிருந்து மீட்பு பெறவேண்டும். மீட்பு பெறவேண்டுமானால் முதலில் ஊழல் மிக்க, அழிவுமிக்க, தூரநோக்கற்ற ஆளும் கும்பலை விரட்டியடிக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வந்தது 1970 இல். 54 வருடங்களாக பாராளுமன்றத்தில். ரணில் வந்தது 1977 இல். 47 வருடங்கள் பாராளுமன்றத்தில். தினேஷ் வந்தது 1983 இல். 41 வருடங்கள் பாராளுமன்றத்தில். பாராளுமன்றத்தில் உறுப்பினர், அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி பதவிகளை வகித்தவர்கள். அவர்களை மேலும் பரீட்சித்து பார்க்கவேண்டியதில்லை. நாங்கள் பல தசாப்தங்களாக அந்த மூடைகளை அவிழ்த்துப் பார்த்திருக்கிறோம். நாங்கள் அந்த வழமையான அரசியல் பாசறையிலிருந்து நவீன அரசியல் இயக்கமொன்றின் கையில் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான மிகச்சிறந்த வாய்ப்பு செப்டெம்பர் 21 ஆம் திகதி உருவாகியிருக்கிறது.

நாங்கள் இந்த அழிவுகளை எங்கள் கண்ணெதிரே காண்கிறோம். தென்கொரியாவின் வளர்ச்சிகள், வியட்நாமின் வளர்ச்சிகள், இந்தியாவின் வளர்ச்சிகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் 80 ஆம் தசாப்தத்தில் குடை உற்பத்தியும் சவர்க்கார உற்பத்தியும் இருக்கவில்லை. அப்படி இருந்த இந்தியாவையும் இன்று சந்திரனுக்கு செல்கின்ற இந்தியாவையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த பிராந்தியத்திற்கு மோட்டார் வாகனங்கள், ஔடதங்கள், உணவு, விதையின உற்பத்தியை செய்துவருகின்ற இந்தியாவை இப்போது நாங்கள் காண்கிறோம். இந்த அரசுகள் 20 ஆம் நூற்றாண்டில் உருவாகிய தொழில்நுட்பத்தை நன்றாக உறிஞ்சி எடுத்து திட்டங்களை வகுத்து அமுலாக்கிக் கொண்டிருக்கின்றன. அதேபோலவே நாங்கள் அறிந்த காலத்திற்குள் எமது நாட்டுக்கு ஏற்பட்ட அழிவுகளை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். அதன் ஆரம்ப படிமுறைதான் இந்த ஜனாதிபதி தோ்தலில் தேசிய மக்கள் சக்தியின் கைக்கு அதிகாரத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்விதமாக எங்கள் பிள்ளைகள் வாழக்கூடாது. உலகின் முன்னிலையில் அபகீர்த்திக்கு இலக்காகிய நாடாக மாறக்கூடாது. அனைவரும் ஒன்றுசோ்ந்து புதிய அரசியல் பயணமொன்றில் எமது நாட்டை பிரவேசிக்கச் செய்ய வேண்டும்.

முதலில் இந்த நாட்டை நாகரிகமான ஒரு நாடாக மாற்றியமைக்க வேண்டும். மானிட கூர்ப்பின் தொடக்க நிலையில் எங்களுடைய மானுடன் மரத்திலிருந்து கீழே இறங்கிய பின்னர் நிர்க்கதியான விலங்காக மாறினான். அந்த நிர்க்கதி நிலைமை எம்மை கூட்டான வாழ்க்கையின் பால் தூண்டியது. ஒரு கூட்டமாகவே வேட்டையாடச் சென்றார்கள். வேட்டையை கூட்டமாகவே அனுபவித்தார்கள். பின்னர் பலம்பொருந்திய ஆள் தலைவனானான். அந்தக் கூட்டத்தில் தலைவனே அனைத்துத் தீர்மானங்களையும் எடுத்தான். நீண்டகாலமாக மனிதனின் போராட்டங்கள் எழுச்சிகள் மூலமாக அவை நிறுவனமென்ற வகையில் கட்டியெழுப்புதல் தொடங்கியது. சட்டங்களை வகுப்பதற்காக பாராளுமன்றமும் சட்டத்தை அமுலாக்குவதற்காக நிறைவேற்றுத்துறையை உள்ளிட்ட அமைச்சரவையையும் சட்டம் அமுலாக்கப்படுவது சரியான முறையிலா என்பதை பார்ப்பதற்காக நீதித்துறையும் உருவாகியது. சட்டங்களை வகுப்பதற்காக பாராளுமன்றம் மக்களாலேயே நியமிக்கப்படுகிறது. நீதிமன்ற முறைமைக்கு பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படுகின்ற சட்டங்கள் ஊடாகவே அதிகாரம் கிடைக்கிறது. சமூகம் நாகரிகமடைந்த நிறுவனங்கள் மூலமாக நிறுவகிக்கப்பட ஆரம்பித்தது.

Bank-And-Finance-Matara

எமது நாட்டில் இந்த நிறுவனங்கள் சீர்குலைதலுக்கு இலக்காகின. மக்கள் எதிர்பார்த்த நாகரிகமடைந்த பாராளுமன்றமொன்றாக மாறியுள்ளதா? இன்று இந்த நிறுவனங்கள் அநாகரிகத்தின் பிரதிபிம்பங்களாக மாறியுள்ளன. பாராளுமன்றத்தில் இருக்கின்ற பெரும்பாலானவர்கள் இன்று பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படுகின்ற சட்டம் என்னவென்று அறியாதவர்களாவர். அவை அவர்களுக்கு ஏற்புடையதுமல்ல. ஆனால் அதிகாரம் இருப்பது அந்த இடத்தில் தான். மீண்டும் நாகரிகத்தை அழைப்பித்துவர வேண்டுமானால் இந்த பாராளுமன்றம் மாற்றமடைய வேண்டும். 17 வது திருத்தம் மிகவும் ஜனநாயக ரீதியான புதிய திருத்தமாகும். 17 ஐ முழுமையாக அகற்றி மஹிந்த ராஜபக்ஷ 18 ஐ கொண்டு வந்தார். 17 இற்கு கையை உயர்த்தியவர்கள் 18 இற்கும் கையை உயர்த்தினார்கள். 19,20,21 இந்த அனைத்துவிதமான அரசியலமைப்புத் திருத்தங்களுக்கும் அவர்கள் கையை உயர்த்தினார்கள். இத்தகைய அநாகரிகமான நிறுவனத்துடன் முன்னோக்கி பயணிக்க முடியுமா? அநாகரிகத்திலிருந்து நாகரிகத்திற்கு கொண்டு வருகின்ற பாராளுமன்றமாக இந்த பாராளுமன்றத்தை மாற்றியமைக்க வேண்டும். மக்கள் எதிர்பார்த்த தேவைகள் ஈடேடுகின்ற பாராளுமன்றமொன்றை நியமிக்க வேண்டும். நாங்கள் சட்டவாக்க அதிகாரம் உரியவகையில் பிரதிபலிக்கப்படுகின்ற பாராளுமன்றமாக மாற்றியமைப்போம்.

நிறைவேற்று அதிகாரம் மாற்றப்படவேண்டும். தனியாள் ஒருவரிடம் மட்டற்ற அதிகாரம் குவிந்திருக்கிறது. இருக்கின்ற சட்டத்திற்கு பொருள்கோடல் வழங்கி தண்டனை வழங்குவதே நீதிமன்றத்தின் கடமையாகும். ஊழல், மோசடி, விரயத்தை தடுப்பதற்கான பல சட்டங்களை நாங்கள் கொண்டுவருவோம். பாராளுமன்றத்தையும் நிறைவேற்றுத்துறையையும் நீதித்துறையையும் திட்டவட்டமான சமூக தேவைகளுக்கான பணியாற்றி வருகின்ற நிறுவனமாக மாற்றியமைக்க வேண்டும். தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டமை தவறானதென நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நியமன அதிகாரி ஜனாதிபதியாவார். ஒருவரின் பெயரை ஜனாதிபதி அரசியலமைப்பு சபைக்கு அனுப்பி வைக்கிறார். அரசியலமைப்புச் சபை அதனை அங்கீகரித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கிறது. ஜனாதிபதி நியமனத்தை செய்கிறார். பாராளுமன்றத்தின் தீர்ப்பின் மீது நீதிமன்றத்தால் கைவைக்க முடியாது என்கின்ற அபிப்பிராயமொன்று இப்போது முன்வைக்கப்படுகிறது. அரசியலமைப்பு சபைக்கு அவ்வாறான அதிகாரம் வழங்கப்படவில்லை. பாராளுமன்ற செயலாளர் நாயகம், தோ்தல்கள் ஆணைக்குழு, அரசாங்க சேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, பொலிஸ் மா அதிபர் ஆகிய பல்வேறு முக்கியமான நிறுவனங்களுக்கு அரசியலமைப்புச் சபையினால் பதவிகள் வழங்கப்படுகின்றன. எந்த ஒரு பிரஜையும் மேற்படி நியமன முறையியல் முறைப்படி கடைப்பிடிக்கப்படவில்லை என்றுகூறி அடிப்படை உரிமைகள் வழக்கொன்றை தாக்கல் செய்வதற்கான உரிமையை கொண்டிருக்கிறார்.

அரசியலமைப்பு சபையில் ஒன்பது போ் இருக்கிறார்கள். பொலிஸ் மா அதிபரின் பதவியை அரசியலமைப்புச் சபையின் ஐந்து போ் அங்கீகரிக்க வேண்டும். ஒன்பது பேரில் சபாநாயகரும் ஒருவராவார். அன்று நான்கு போ் பொலிஸ் மா அதிபருக்கு சார்பாக வாக்குகளை அளித்தார்கள். இருவர் அமைதியாக இருந்ததோடு இரண்டு போ் எதிர்த்தார்கள். அரசிலமைப்பு சபைக்கு வாய்ப்பொன்று இருக்கின்றது. வாக்குகள் சமமான எண்ணிக்கைக் கொண்டதாக இருந்தால் அறுதியிடும் வாக்கினை சபாநாயகரால் பாவிக்க முடியும். சபாநாயகர் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்புகிறார். ‘நான்கு போ் சார்பாக இருக்கிறார்கள். இரண்டு போ் எதிராக இருக்கிறார்கள். மேலும் இரண்டு போ் மௌனமாக இருக்கிறார்கள். மௌனமாக இருக்கின்ற இருவரும் எதிரானவர்கள் என கருதப்படுமாயின் எனது வாக்கினை சார்பாக வழங்குவேன்’ என்று. இதற்கெதிராக சபாநாயகருக்கு ஒரு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. உயர்நீதிமன்றம் இங்கு ஒரு சிக்கல் இருக்கிறதெனக் கண்டு பொலிஸ் மா அதிபரின் சேவையை இடைநிறுத்துகிறது.

Bank-And-Finance-Matara

தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் கூறுகிறார். “அந்த வழக்குத்தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என்று. நான் கூறுகிறேன் “தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் கூறிய கதையை இயலுமாயின் வெளியில் வந்து கூறுங்கள்” என்று. ஒரு கடிதத்திற்கு பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் கையொப்பத்தை இடுவதற்காக. அந்த நிறுவனங்களின் நாகரிகத்தையும் கௌரவத்தையும் இந்த ஆட்சியாளர்கள் பாதுகாக்கிறார்களா? ஒட்டுமொத்த சமூகமுமே சீர்குலைவிற்கு இலக்காகியுள்ளது. ஒட்டுமொத்த அரசாங்கமும் ஒரு திணைக்களத்தின் பிரதானிக்காக தோற்றுவதன் மூலம் வெளிக்காட்டப்படுவது என்ன? நிறுவனம் தங்கியிருப்பது ஓர் ஆளிடம் என்றால் அந்த நிறுவனத்தின் வழியுரிமை இல்லாதொழிந்துவிடும். அரசாங்கம் ஏன் அப்படி சிந்திக்கிறது? தமக்கு அவசியமான முறையற்ற செயல்களில் ஈடுபடுவதற்காகவே. நாட்டின் பொலிஸ் திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டுள்ள சட்டபூர்வமான பணிகளைச் செய்து கொள்ள வேண்டிய தேவையிருக்குமாயின் வேறொரு பொருத்தமான உத்தியோகத்தரை நியமித்துக்கொள்ள முடியும். இந்த அநாகரிகத்தை தோற்கடிக்க வேண்டும். எங்கள் அரசியலில் முதலாவதாக நாங்கள் ஏற்றுக்கொள்கின்ற பொறுப்புத்தான் இந்த நிறுவனங்களுக்கு முறைப்படி கையளிக்கப்பட்டுள்ள பணிகளையும் பொறுப்புகளையும் ஈடேற்றுவதற்காக அவசியமான ஒத்துழைப்பினையும் அதிகாரத்தையும் பெற்றுக்கொடுத்தலாகும்.

அடுத்ததாக எமது பொருளாதாரத்தில் பாரிய மாற்றமொன்றை அடையவேண்டும். பொருளாதார மாற்றத்திற்காக எமக்கு தொழில்சார் உழைப்பு அவசியமாகும். எங்களுடைய உழைப்புப் படையணியில் 15% மான தொழில்சார் உழைப்புத்தான் இருக்கிறது. 85% பயிற்றப்பட்ட, பயிற்றப்படாத, பகுதியளவில் பயிற்றப்பட்டதாகவே இருக்கின்றது. உதாரணமாக வங்கியை நெறிப்படுத்துவதற்காக அந்தத்துறையின் தோ்ச்சி பெற்ற முகாமையாளர் ஒருவர் இல்லாவிட்டால் சாதாரண ஊழியர்களைக் கொண்டு வங்கியை நடாத்திச் செல்ல முடியாது. தொழில்சார் உழைப்பினால் தான் ஏனையவர்களின் சேவை உறிஞ்சப்படுகிறது. மருத்துவர், பொறியியலாளர் போன்ற தொழில்வாண்மையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அதனால் நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் தொழில்சார் உழைப்பு நாட்டை விட்டுச் செல்வதற்காக அழுத்தம் கொடுக்கப்படுகின்ற காரணிகளை நீக்க வேண்டும். நாட்டை நெறிப்படுத்துவது குற்றச் செயல் புரிபவர்கள் என்றால் தொழில்சார் ஊழியரில் பலனில்லை என்ற உணர்வு தோன்றுகிறது. அதனால் “நாங்கள் இந்த நாட்டுக்கு அவசியமான மனிதன்” என்ற மனோபாவத்தை உருவாக்கவேண்டும். நாட்டை விட்டுச் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வயதைச் சோ்ந்தவர்களாவர். தமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இல்லாமையினாலே அவர்கள் போகிறார்கள். நாங்கள் அவர்களிடம் கூறுவது “உங்களின் பிள்ளைகளுக்கு இந்த நாட்டை நம்பிக்கையான நாடாக மாற்றுவோம்” என்ற நம்பிக்கையை உருவாக்குவோம். மூன்றாவதாக அந்த தொழில்வாண்மையாளர்கள் தமது அறிவையும், பணியையும், முறைப்படி ஈடேற்றிக் கொள்வதற்கான மதிப்பீடு நிலவவேண்டும்.

தொழில்வாண்மையாளர்களின் சம்பளத்திலிருந்து 36% வரியும் எஞ்சிய பணத்தொகைக்காக சாமான்களை வாங்கும்போது மீண்டும் 18% வரியும் விதிக்கப்படுகிறது. மாதத்தின் இறுதியில் வேலை செய்திருப்பது எங்களுக்காக அல்ல என எண்ணத்தோன்றுகிறது. அப்படி எடுத்தால் பரவாயில்லை. ஆனால் அவ்வாறு எடுக்கின்ற பணத்திற்கு என்ன நடக்கிறது? ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு செல்வதற்காக வரவு செலவில் ஒதுக்கிக் கொண்ட பணத்தொகை போதாதென மேலும் 2000 இலட்சம் ரூபாவை ஒருக்கிக் கொள்கிறார்கள். இந்த இரண்டு மாதங்களுக்காக குறைநிறப்பு மதிப்பீடொன்றினைக் கொண்டு வந்து தோ்தலுக்காக 875 கோடி ரூபாவை ஒதுக்கிக் கொள்கிறார். இளைஞர் சேவைகள் மன்றத்திடமிருந்து 400 மில்லியன் ரூபாவை அமைச்சரவை கேட்டது. இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். தமது சம்பளத்திலிருந்து வெட்டிக்கொள்கின்ற பணத்தை விரயமாக்குகிறார்கள், திருடுகிறார்கள். அமைச்சர்களின் வீடுகளில் லயிற் பில் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாவாகும். டீசல் விலை அதிகரித்த வேளையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் டீசல் கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவை அதிகரித்துக்கொண்டார்கள். தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அந்த ஒரு இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ளவில்லை. பிரஜைகள் மீது சுமை வருகின்றது. தமது வரிப்பணத்திற்கு என்ன நடக்கின்றதென்பதை பிரஜைகள் கண் கூடாகவே பார்க்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியை சோ்ந்த நாங்கள் அந்த வரித்தொகையை முறைப்படி செலவிடுதல் பற்றிய வெளிப்படைத்தன்மையை பிரஜைகளுக்கு காட்டுவோம். அதைப்போலவே இந்த வரிகளை கட்டாயமாக குறைப்போம்.

எங்களுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக நாம் கொண்டுள்ள சாத்திய வளங்களை கண்டறிய வேண்டும். எங்களிடம் கனிய வளங்கள் இருக்கின்றன. மூலதனம் இல்லாவிட்டால் நாங்கள் மூலதனத்திற்காக அழைப்பு விடுப்போம். தொழில்நுட்பம் இல்லாவிட்டால் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைப்பிக்க தயார். நாங்கள் இயற்கை வளங்களின் அடிப்படையில் பொருளாதாரத்தை திட்டமிட வேண்டும். கிராமிய மக்களின் வறுமையை ஒழித்துக்கட்டுவதற்காக கிராமத்தில் இருக்கின்ற சாத்திய வளங்களை இனங்காண வேண்டும். எமது நாட்டின் இடஅமைவின் பேரில் எங்களுக்கு சிறந்ததொரு பொருளாதாரத்திற்கு செல்வதற்கான இயலுமை நிலவுகின்றது. கப்பற்துறை கைத்தொழில் மற்றும் கப்பற் போக்குவரத்து பற்றி கவனம் செலுத்தியிருக்கிறோம். சுற்றுலாத் தொழிற்றுறையில் பாரிய சாத்தியவளம் நிலவுகிறது. அதைப்போலவே எமது மனித பலத்தை முன்னேற்றக்கூடியதாக இருக்கின்றது. 2030 இல் உலகிற்கு 45 மில்லியன் மென்பொருள் பொறியிலாளர்கள் அவசியமாகின்றனர். அந்த உலகில் கேள்வி உருவாகின்ற 45 மில்லியன் ஒரு சதவீதத்தை நாங்கள் கைப்பற்றிக்கொள்வது என்பதன் அடிப்படையிலேயே இந்த மனித வளத்தை முன்னேற்ற வேண்டியுள்ளது. முன்னேற்றமடைந்த மனித உழைப்புச் சந்தையை கைப்பற்றிக் கொள்வது பற்றி கவனம் செலுத்தி திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறோம். உணவு பாதுகாப்பில் விவசாயத்துறை மீது பாரிய கவனம் செலுத்தப்பட முடியும். இந்த பக்கங்கள் பற்றி நன்றாக சிந்தித்து மிகவும் சிறப்பாக முகாமை செய்து நெறிப்படுத்தினால் சிறந்த பொருளாதார நன்மைகளை அடைவதற்கான இயலுமை நிலவுகிறது. எல்லா விதத்திலும் வளம் நிறைந்த நாட்டை, உலகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்டை, சமூக மனோபாவங்களில் வளமான நாட்டை உருவாக்குவது தான் எங்களுடைய எதிர்பார்ப்பு. அதற்காக ஒன்றாக மல்லுக்கட்டினால் ஒன்றாக இடையீடு செய்தால் எம்மால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். எமக்கு மிகச் சிறந்த வாய்ப்பொன்று உருவாகியிருக்கிறது. அதற்கான பாதையை திறந்துகொள்ள வேண்டும். பிற்போக்குவாத பாசறையை தோற்கடிக்க வேண்டும். முற்போக்கான பாசறையை வென்றெடுக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுசோ்வோம்.

Bank-And-Finance-Matara

“சஜித் பிரேமதாசவிடம் இருப்பதாகக்கூறுகின்ற பொருளாதார ஒஸ்தார்கள் அனைவருமே அன்று ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் இருந்தார்கள்.”
-வங்கி மற்றும் நிதியொன்றியத்தின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் தில்ஷான் ஷாமிகர-

ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்ததாகக்கூறுகின்ற இயலுமையும் அறிவும் 2015 – 2019 காலத்தில் இருந்திருப்பின் நாடு இந்த நிலமைக்கு வீழ்ந்திருக்க மாட்டாது. வெளிநாட்டுக்கடன் பிணைமுறிகளை பாரியளவில் எடுத்தவர் அவரே. தூரநோக்கற்ற வகையில் செயலாற்றி நாட்டை இந்த நிலைமைக்கு இழுத்துப்போட்டவரும் அவரே. ராஜபக்ஷாக்களும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்று சோ்ந்து அரச நிறுவனங்கள் அனைத்திலும் உறவினர்களை நிரப்பி நட்டம் அடைகின்ற நிறுவனங்களாக மாற்றியவரும் அவர்களே. ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாசவிடம் இருப்பதாகக்கூறுகின்ற பொருளாதார ஒஸ்தார்கள் அனைவரும் அன்று ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து இந்த நிலைமைக்கு இழுத்துப்போட்டு 2048 இல் நாட்டை அபிவிருத்தி செய்வதாக இப்போது கூறுகிறார்கள்.

2016 இல் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரை திவயின செய்திதாளில் பிரதான செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. 2020 இல் நாட்டை கடன் சுமையிலிருந்து விடுவிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் கூறுகின்ற கற்பனை கதைகள் இந்த நாட்டின் தொழில்வாண்மையாளர்கள் இனிமேலும் நம்பபோவதில்லை. அவர்களால் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. பொதுமக்கள் அவர்களை நிராகரித்துவிட்டார்கள். இந்த நாட்டுக்கு சுதந்திரமாக முதலீட்டாளர்களை வரவழைத்துக்கொள்ளக்கூடிய அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்ள நாங்கள் அனைவரும் அணிதிரண்டு விட்டோம். அது வேறு எவருமல்ல. செப்டெம்பர் 21 ஆம் திகதி நிச்சயமாக அதிகாரத்திற்கு கொண்டு வருகின்ற அநுர திசாநாயக்காவை முதன்மையாக கொண்ட தேசிய மக்கள் சக்தியாகும்.

Bank-And-Finance-Matara

“பொருளாதாரத்தின் குருதிச் சுற்றோட்டத் தொகுதியாக திசைகாட்டின் வங்கி மற்றும் நிதி ஒன்றியம் முன்னணி வகித்து செயலாற்றும்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி-

இதுவரை நிலவிய அரசாங்கங்களின் ஒட்டுமொத்த செயற்பாங்கு காரணமாக இன்றளவில் ஏறக்குறைய இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் தொழில்முயற்சிகள் மூடப்பட்டுள்ளன. அந்த தொழில் முயற்சியாளர்கள் பற்றிய விரிவான புரிந்துணர்வும் வங்கி மற்றும் நிதித்துறையைச் சோ்ந்த உங்கள் அனைவருக்குமே இருக்கிறன்றது. நீங்கள் இதுவரைகாலமும் தொழில் முயற்சியாளர்கள் போன்றே கிராமப்புற வறிய மக்களுடனும் நிதிசார் துறையில் பெற்ற அனுபவங்கள் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் நாட்டைக் கட்டியெழுப்ப அத்தியாவசியமானவையாகும். அமைச்சரின் வாயிலிருந்து வெளிப்படுகின்ற வசனத்தை சுற்றறிக்கைகளாக கருதி செயலாற்ற வேண்டிய நிலை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அரச வங்கிகளுக்கு ஏற்பட்டது. எனினும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் அத்தியாவசியமான துறைகளுக்கு முதன்மையான நிதிசார் வசதிகள் வழங்கப்படும். தோழர் லால்காந்த அமைச்சர் என்ற வகையிலும் நான் பிரதியமைச்சர் என்ற வகையிலும் குறுகிய காலத்திற்கு செயலாற்றிய சிறு கைத்தொழில்கள் அமைச்சின் பெருமளவிலான அனுபவங்களை அதற்காக ஈடுபடுத்துவோம். தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்குகையில் மத்திய வங்கி பிணைமுறி கொள்ளை காரணமாக பாரியளவில் உயர்வடைந்த வட்டி வீதம் 2045 வரை நீண்ட கால ரீதியில் தாக்கங்களை ஏற்படுத்தும்.

எனினும் அந்த நிலைமையிலிருந்து விடுபட்டு தேசிய திட்டமொன்றின்படி தொழில் முயற்சியாளர்களை நெறிப்படுத்துவதற்காக குறைந்த வட்டிக்கு கடன் வழங்குகின்ற அபிவிருத்தி வங்கியொன்றை நாங்கள் நிறுவுவோம். தொழில்முயற்சியாளர்களுக்கு கடன் வழங்குவதற்காக தாபிக்கப்பட்டிருந்த தேசிய அபிவிருத்தி வங்கிக்கு என்ன நோ்ந்தது. அந்த வங்கியை அரசியல் தலையீடுகளுக்கு இரையாக்கி முற்றாகவே சீர்குலைத்தார்கள். கோப் குழுவின் தவிசாளர் என்ற வகையில் நான் செயலாற்றிய காலத்தில் அந்த விசாரணைகளுக்காக அழைப்பித்த உத்தியோகத்தர்கள் இந்த இடத்திலும் இருக்கக்கூடும். அமைச்சரின் பிடியில் அகப்பட்ட உத்தியோகத்தர்களின் அழுத்தம் பற்றி எமக்கு தெரியும். எனினும் எங்களுடைய அரசாங்கமொன்றின் கீழ் இந்த நிதி ஒன்றியத்தில் இருக்கின்ற தொழில்வாண்மையாளர்களிடமிருந்து தெளிவுப்படுத்திக் கொள்ள முடியும். நாட்டின் பொருளாதாரத்தின் குருதிச் சுற்றோட்டத் தொகுதியாக தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி ஒன்றியம் முதன்மையாக செயலாற்றும். ஏற்கெனவே 21 மாவட்டங்களில் இந்த நிதி ஒன்றியத்தின் கருத்தரங்குகள் நடாத்தப்பட்டிருந்தன. அந்தந்த மாவட்டத்திற்கு அவசியமாகின்ற தொழில் முயற்சிகளுக்கு உயிரளிக்கையில் நிதிசார் வசதிகளை வழங்க உங்களின் கருத்துக்கள் அடிப்படையாக பயன்படுத்திக் கொள்ளப்படும். மக்கள் மீது கூருணர்வு கொண்டதாக செவிசாய்த்து நாட்டை கட்டியெழுப்புகின்ற மறுமலர்ச்சிப் பயணத்திற்காக அனைவரினதும் பங்கேற்பினை எதிர்பார்க்கிறோம்.

Bank-And-Finance-Matara

“நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புகின்ற மாயாஜால வித்தை அரசியலே என உலக வங்கி பிரதிநிதிகள் கூட ஏற்றுக்கொண்டார்கள்”
-தேசிய மக்கள் சக்தி பொருளாதார பேரவையின் தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த-

இன்றளவில் எதிரான குழுக்கள் முன்னெடுத்து வருகின்ற பொய் பிரச்சாரங்கள் மத்தியில் முதன்மையாக அமைவது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்று அதிகாரத்திற்கு வந்தால் மக்களின் சேமிப்புக் கணக்குகளிலுள்ள பணத்தை பறிமுதல் செய்யுமென்பதாகும். மாபெரும் மாற்றமொன்றுக்காக மக்களை அணிதிரட்டிக் கொண்டிருக்கும்போது எமக்கெதிராக கட்டியெழுப்பப்படுகின்ற பொய்யான பிரச்சாரங்களுக்கும் குறைகூறல்களுக்கும் பதிலளிக்கவும் வேண்டியுள்ளது. ஒரு கால கட்டத்தில் பேராசிரியர் ஒருவர் கூட ஊழல் மோசடிகளால் ஒரு நாடு அபிவிருத்தியடையுமாயின் பரவாயில்லை எனக்கூறினார். அவர்களின் அந்த வழிகாட்டல்களின் அனுசரணையையும் பெற்றுக்கொண்டு சென்ற பயணத்தில் நாட்டை வங்குரோத்து அடையச் செய்வித்த பின்னர் ஊழல் மோசடிகள் பற்றிய பாரிய எதிர்ப்பு மக்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்திலே ரணில் விக்கிரமசிங்கவும் அவருடைய குழுவும் புள்ளி விபரங்களை எடுத்துக்காட்டி நாட்டை கட்டியெழுப்பியது தாமே எனக்கூறிக்கொண்டு இருக்கிறார்கள். முன்னெடுத்து வருகின்ற இந்த வேலைத்திட்டம் தடைப்பட்டால் நாடு மீண்டும் படுகுழிக்குள் விழுவதாக பாரிய ஒரு பயத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

பொருளாதார தரவுகள் என்பது அரசியலிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. அமைச்சர்களின் அவசியப்பாட்டுக்கு அமைவாகவன்றி ஜனநாயக ரீதியாக பொருளாதார துறையில் இடையீடு செய்வதற்கான வாய்ப்பினை வழங்குவதனூடாக பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். இந்த நாட்டில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான மாயாஜால வித்தை அரசியலே என்பதை உலக வங்கி பிரதிநிதிகள் கூட ஏற்றுக்கொண்டார்கள். இது பற்றி வலியுறுத்திக்கூறுவது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. திறந்த மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் அந்த அலுவல்களை மேற்கொள்வதற்கான இயலுமை நிலவுவது தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரமே. பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பண்டங்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்வதில் மேலும் பல காரணிகள் தாக்கம் ஏற்படுத்துவதோடு நிதித்துறை தனித்துவமான முக்கியத்துவத்தை வகிக்கின்றது. பணம் குட்டிப்போடுகின்ற இடங்களில் முதலீடு செய்வதை விட தேசிய அவசியப்பாட்டின் பேரில் உற்பத்தித்துறையில் ஈடுபடுத்துவதை ஒரு கொள்கையாக அமுலாக்க வேண்டும். அது ஒரு அரசியல் தேவையாகும். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் தனியார் மற்றும் அரச வங்கிகள் ஒன்று சோ்ந்து ஒத்துழைப்புடன் செயலாற்றும். அரச மற்றும் தனியார் என்ற வகையில் பிரிந்து முரண்பாட்டு நிலைமையுடன் பேணி வரமாட்டாது. நாட்டுக்கு அவசியமான வலிமைமிக்க நிதிசார் தொகுதியொன்றுக்காக பலம்பொருந்திய அரசதுறையின் நிதிசார் முறைமையொன்றின் வழியுரிமை உறுதிப்படுத்தப்படுகின்றது. தொழில் முயற்சியாளர்கள் வசம் உள்ள ஆதனங்களை பிணையாக வைத்துக்கொண்டு அவர்களின் கழுத்தை நெரித்துக்கொண்டு கடன் கொடுப்பதற்கு பதிலாக அரசு இடையீடு செய்து அவசியப்பாட்டிற்கிணங்க நிதி வழங்குதல் மேற்கொள்ளப்படும். நிதிசார் துறை, தொழில் முயற்சியாளர்கள் மற்றும் அரசாங்கம் ஆகிய முத்தரப்பினர்களும் ஒன்று சோ்ந்து நிதித்துறையின் செயற்பொறுப்பினை மறுமலர்ச்சி யுகமொன்றுவரை அணிதிரட்டும். எதிரி பதற்றமடைந்து மேற்கொண்டு வருகின்ற பிரச்சாரங்களுக்கு ஏமாந்து விடவேண்டாம்.

Bank-And-Finance-Matara

“தொழில்வாண்மையாளர்கள் அனைவரினதும் பொறுப்பு அரசியல் மாற்றத்தின் பங்காளிகளாக மாறவேண்டியதே”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் வசந்த சமரசிங்க-

தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி ஒன்றியத்திற்கு இந்த நாட்டை கட்டியெழுப்புவதில் பாரிய செயற்பொறுப்பினை மேற்கொள்ள வேண்டியதாக இருக்கின்றது. அதைபோலவே எதிர்வரும் நாட்களுக்குள் ஜனாதிபதி தோ்தலுக்காக பாரிய செயற்பொறுப்பினையும் மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. இந்த நாட்டை மறுமலர்ச்சி யுகமொன்றுக்கு எடுத்துச் செல்வதிலான அடிப்படை வெற்றியாக தேசிய மக்கள் சக்தியின் அபேட்சகர் தோழர் அநுர குமார திசாநாயக்காவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டியுள்ளது. அதற்காக உங்களை சந்திக்க வருகின்ற வாடிக்கையாளர்களை விழிப்புணர்வூட்டுவதற்கான பொறுப்பு உங்கள் அனைவரிடமும் கையளிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவை உள்ளிட்ட மக்களின் பகைவர்கள் பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்திக் கொண்டு உயர்நீதிமன்றத்தைக்கூட கீழடக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்றத்திற்கு வெளியில் அவர்கள் அந்த கதைகளை கூறினால் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி நேரிடும் என்பதால் பாராளுமன்ற சிறப்புரிமைகளின் மறைவிலிருந்து கொண்டு தமது வங்குரோத்து நிலைமையை மறைத்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். ரணில் அடித்த கேம் எல்லாமே முடிந்து விட்டது. சுயேட்சை வேட்பாளராக முன்வந்து ஏதோ செய்ய முனைகிறார்.

தோ்தலைக் கண்டு அஞ்சி அவர்கள் அடிக்கின்ற இந்த கேம்களை தோ்தல் நெருங்கும்போது மேலும் உயர்ந்த அடுக்கிற்கு கொண்டு வந்து மக்களை குழப்பியடிக்க முயற்சி செய்கிறார்கள். தொழில்வாண்மையாளர் அனைவருக்கும் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பு இந்த அரசியல் மாற்றத்தின் முனைப்பான பங்காளிகள் என்ற வகையில் பங்களிப்புச் செய்வதாகும். உங்கள் சேவை நிலையத்தில் மாத்திரமல்ல ஊரிலும் மக்களை விழிப்புணர்வூட்டி குழப்பநிலையிலிருந்து மீட்டுக் கொள்வதற்காக பாரிய பணியை ஆற்றவேண்டியுள்ளது. உண்மையான அரசியல் மாற்றமொன்றின் தொடக்க நிலை அடுத்த செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெற வேண்டியுள்ளது. எங்களுடைய செயற்பொறுப்புப் பற்றி விசேட கவனத்துடன் தொழில்வாண்மையாளர்கள் என்ற வகையில் சமூகத்தில் நிலவுகின்ற அங்கீகரிப்பினையும் எதிர்காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக பிரயோகிப்போம்.

Show More

“பிரஜைகளுக்கு புதிய வாழ்க்கையை பெற்றுக்கொடுக்கின்ற தேசிய மறுமலர்ச்சி யுகமொன்றைக் கட்டியெழுப்பிடுவோம்!”-தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(தேசிய மக்கள் சக்தியின் கூட்டம் – சிலாபம் – 2024.07.28) கடந்த 50-60 வருட காலமாக இந்த நாட்டு மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவும் மஹிந்த ராஜபக்ஷவும் ஒருவருக்கொருவர் எதிராக ஆயுதமேந்திக்கொண்டு போராடுபவர்களாகவே புலப்பட்டார்கள். பச்சை நிறம் – நீல நிறம் என பிளவுபட்ட அவர்கள் பொய்யான காட்போட் வாள்களை ஏந்தி போரிட்டார்கள். ஆனால் ஊரிலுள்ள மக்கள் உண்மையாக பிளவுற்று சண்டைபோட்டுக் கொண்டார்கள். ஆனமடுவையின் ரங்கே பண்டார, இறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நடுத்தெருவில் சுட்டுக்கொள்ளவில்லையா? அவர்களால் தொடர்ந்தும் பகைவர்கள்போல் […]

(தேசிய மக்கள் சக்தியின் கூட்டம் – சிலாபம் – 2024.07.28)

Public-Rally-Chillaw

கடந்த 50-60 வருட காலமாக இந்த நாட்டு மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவும் மஹிந்த ராஜபக்ஷவும் ஒருவருக்கொருவர் எதிராக ஆயுதமேந்திக்கொண்டு போராடுபவர்களாகவே புலப்பட்டார்கள். பச்சை நிறம் – நீல நிறம் என பிளவுபட்ட அவர்கள் பொய்யான காட்போட் வாள்களை ஏந்தி போரிட்டார்கள். ஆனால் ஊரிலுள்ள மக்கள் உண்மையாக பிளவுற்று சண்டைபோட்டுக் கொண்டார்கள். ஆனமடுவையின் ரங்கே பண்டார, இறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நடுத்தெருவில் சுட்டுக்கொள்ளவில்லையா? அவர்களால் தொடர்ந்தும் பகைவர்கள்போல் பிரிந்து சண்டைபோட முடியாது. அதனால் அவர்களுக்கு ஒரே மேடையில் ஏறவேண்டிய நிலையேற்பட்டது. களுத்துறையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஒரு கதிரையில் ரணில் விக்கிரமசிங்க, அடுத்த கதிரையில் மஹிந்த ரரஜபக்ஷ, இன்னுமொரு கதிரையில் ரவி கருணாநாயக்க, அடுத்த கதிரையில் பசில் ராஜபக்ஷ, அடுத்தாக வஜிர அபேவர்தன மற்றுமொரு கதிரையில் ரோஹித அபேகுணவர்தன. அந்த மேடை யானையுடையதா மொட்டுக்கட்சியினுடையதா? ரணிலைப் பார்த்ததும் யானைப்போல் தான் இருந்தது. அடுத்த கதிரையில் உள்ள மஹிந்தவைக் கண்டதும் மொட்டுபோல் தெரிகிறது. இப்பொழுது அது யானையுமல்ல மொட்டுமல்ல ஒரு பூட்டு ஆகும்.

இதுவரை காலமும் நாட்டின் அதிகாரமும் ஒன்றில் பச்சை நிறத்திடம் அல்லது நீல நிறத்திடமே இருந்தது. நீல நிற ஊழல் போ்வழிகளுக்கு பச்சை நிற அரசாங்கத்திடமிருந்தும் பச்சை நிற ஊழல் போ்வழிகளுக்கு நீல நிற அரசாங்கத்திடமிருந்தும் பாதுகாப்பு கிடைத்தது. இருப்பவர்கள் பாரிய திருட்டுக்களுக்கும் குற்றச் செயல்களுக்கும் பங்காளிகளாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டம் அமுலாகவில்லை. நிச்சயமாக செப்டெம்பர் 21 ஆம் திகதி மக்கள் வெற்றிபெறுவார்கள். அந்த வெற்றியை தடுக்க அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். 875 கோடி ரூபாவை ஒதுக்கிக் கொண்டு தோ்தல் இயக்கத்திற்காக பணத்தை செலவிட்டு வருகிறார்கள். கைவிடவேண்டாம் பங்கிடுகின்ற எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ளுங்கள். திருடிக் குவித்த பணத்திலிருந்து இந்த காலத்தில் இப்படியாவது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பது நல்லது. பகிர்ந்தளிக்காமல் சேமித்துக் கொண்ட பணத்தை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் நிச்சயமாக பறிமுதல் செய்யும்.

Public-Rally-Chillaw

அதைபோலவே பொய்யான தகவல்களையும் குறைகூறல்களையும் பாரியளவில் பகிர்ந்தளிக்கின்ற தோ்தல் இயக்கமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலரை தெரிவு செய்து அவர்களுக்காக இயங்கி வருகின்ற ஊடகங்கள் இருக்கின்றன. எனினும் நாங்கள் சந்திக்காத இலட்சக்கணக்கான மக்கள் தேசிய மக்கள் சக்திக்காக தோற்றி வருகிறார்கள். அவர்கள் அரச பலத்துடன் ஒரு சில அரச உத்தியோகத்தர்களை இணைத்துக் கொண்டு தோ்தல் நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊர்களில் நிறுவியுள்ள சமுதாய பாதுகாப்பு குழுக்களை ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சார அலுவல்களுக்காக ஈடுபடுத்த பிரதேச ஓ.ஐ.சி. இற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தேசபந்துவை இடைநிறுத்தியமைக்காக ரணில் ஏன் இவ்வளவு கோபப்பட வேண்டும். அதனால் தான் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார். தினேஷ் குணவர்தனவும் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார். முடியுமானால் பாராளுமன்றத்திற்கு வெளியில் வந்து அதனைக் கூறுங்கள். தேசபந்து தான் இன்னமும் பொலிஸ் மா அதிபர் என நினைப்பாரேயானால் ஒரு கையொப்பத்தை இட்டுக்காட்டவும்.

எங்களிடம் அரச அதிகாரம் கிடையாது, ஊடக அதிகாரமும் கிடையாது, பெருஞ் செல்வத்தின் அதிகாரமும் கிடையாது. எங்களிடம் இருப்பது சிலாபம் நகரத்திற்கு ஆற்று வெள்ளம்போல் திரண்டு வந்துள்ள மக்களின் பலமாகும். எதிர்வரும் இரண்டு மாதங்களில் இதுவரை செயலாற்றியதை போல் ஏழு எட்டு மடங்கு செயலாற்றுங்கள். உங்கள் வாக்குப்பெட்டிகளை திசைக்காட்டிக்கே புள்ளடியிட்ட வாக்குச் சீட்டுகளால் நிரப்புங்கள். அதன் பின்னர் பாராளுமன்றத்தை சுத்தப்படுத்துகின்ற அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டும். மக்கள்மீது எல்லையற்ற அழுத்தத்தைக் கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் விசேட கொடுப்பனவுகளை வழங்கி வேலை செய்கின்ற விதத்தை நாங்கள் கண்டோம். எண்ணெய் விலை அதிகரித்ததும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவினை ஒரு இலட்சம் ரூபாவால் அதிகரித்துக் கொடுக்க தீர்மானித்தார்கள். நானும் எங்களுடைய ஹரினி தோழரும் தோழர் விஜித ஹேரத்தும் அதிகரித்த ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவினை எங்களுக்கு வழங்கவேண்டாமென சபாநாயகருக்கு எழுத்தில் அறிவித்தோம். பார் பேமிட்டுக்களை பெற்று இரண்டு மூன்று கோடி ரூபாவிற்கு விற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கேகாலையின் இராஜாங்க அமைச்சர் மூன்று பார் பேமிட்டுக்களை பெற்று ஒன்பது கோடி ரூபாவிற்கு விற்றிருக்கிறார். சஜித் பிரேமதாஸ அதிகாரத்திற்கு வந்ததும் அதனை இரத்துச் செய்வதாக கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியை சோ்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த பேமிட்டுக்களை வாங்கவில்லை எனக்கூறினால் நான் அதனை நிரூபிப்பேன். பெற்றோல் ஷெட்டுகளை பெற்று விற்கிறார்கள். செப்டெம்பர் 21 ஆம் திகதி வெற்றிக்கு பின்னர் இந்த அயோக்கித்தனமான பாராளுமன்றத்தை கலைத்து நல்ல பாராளுமன்றமொன்றை அமைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்குவோம்.

மக்களுக்கு உணவும் கல்வியும் சுகாதாரமும் வழங்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். மக்களுக்கு உணவின்றி மருந்தின்றி 2048 வரை காத்திருக்கும்படி ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். நாட்டை நாசமாக்கியவர்கள் நாட்டை கட்டியெழுப்புவதாகக் கூறுவது கேலிக்கூத்து. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாட்டை மாற்றியமைக்கின்ற வறுமையிலிருந்து மீட்டெடுக்கின்ற குற்றச் செயல்களும் போதைப்பொருட்களுமற்ற சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்ட புதிய நிலைமாற்றத்திற்காக நாம் அனைவரும் ஒன்று சேருவோம். பிரஜைகளுக்கு புதிய வாழ்க்கையை பெற்றுக்கொடுக்கின்ற புதிய தேசிய மறுமலர்ச்சி யுகமொன்றை கட்டியெழுப்புவோம்.

Public-Rally-Chillaw

“வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் ஜனாதிபதி ஒருவரை நியமித்துக் கொள்வோம்”
-மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா-

2022 இல் ஏற்பட்ட மக்கள் போராட்டம் மூலமாக ஆட்சியாளர்களை விரட்டியடித்தாலும் முழுமையான வெற்றியை அடைந்து கொள்ள முடியாமல் ரணில் விக்கிரமசிங்க பின்தொடருகின்ற ஜனாதிபதியாகியுள்ளார். போராட்டத்தில் வெற்றிபெற முடியாமல் போன அனைவருக்கும் தோ்தலில் வெற்றியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. தற்போது நடைபெற போவது அரசியல்வாதிகள் விரும்பாவிட்டாலும் மக்கள் ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் விரும்புகின்ற தோ்தலாகும். ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ, சஜித் பிரேமதாஸ ஆகிய அனைவருக்கும் விரும்பாத தோ்தலாக மாறியிருப்பது 76 வருட கால இருண்ட கும்பல்களின் ஆட்சிக்கு பதிலாக பொதுமக்களின் ஆட்சியொன்று நிறுவப்படுவதாலாகும். வெற்றிக்கு அவசியமான அனைத்து காரணிகளும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. நீங்களும் நாங்களும் ஒருங்கிணைத்திருப்பது மற்றுமொரு ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக மாத்திரமல்ல. நாங்கள் “புதிய தேசிய மறுமலர்ச்சி” என்பதையே தொனிப்பொருளாக கொண்டுள்ளோம். மீண்டும் எழுச்சி பெறவேண்டியது அவசியமாகும். கடந்த 50 – 60 வருடங்களிலும் எந்தவிதமான வெற்றியையும் பெறாமல் கடன் வாங்கித் தின்று கடன் மேடு ஒன்றினை உருவாக்கியிருக்கிறோம். ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்திற்கு வரும்போது ஒட்டுமொத்த கடன் 83 பில்லியன் டொலராகும். இப்போது 100 பில்லியன் டொலரைத் தாண்டிவிட்டது.

மக்கள் மீது வற் வரி விதிக்கப்பட்டு மாதச் சம்பளம் பெறுகின்றவர்கள் மீது 36 வீதம் வரை வரி விதிக்கப்பட்டு மென்மேலும் வரி சுமத்தப்பட்டுள்ளது. அவர் நாட்டை மீட்டெடுக்கவில்லை. வீழ்ந்த மஹிந்த ராஜபக்ஷாக்களையே மீட்டெடுத்துள்ளார். எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பு வீழ்த்தப்பட்ட நாட்டை கட்டியெழுப்புவதாகும். எமது நாட்டிலே இருக்கின்ற பெரும்பாலனவர்கள் தமது கைகளால் ஏதேனும் பணியைச் செய்து வருமானத்தை ஈட்டிக்கொள்கின்ற மக்களாவார்கள். அவர்களின் தொழில் துறைகளுக்கு தடையேற்படுத்தப்பட்டுள்ளது. அதனால் புத்தளம் மாவட்டத்தில் ஓடு, செங்கல் தொழிற்சாலைகள் பல மூடப்பட்டு விட்டன. மூடப்பட்டுள்ள இந்த கைத்தொழில்களுக்கு கைகொடுத்து உயர்த்தி விடுவது திசைக்காட்டியின் கொள்கையாகும். அரசியல்வாதிகள் தொழில் முனைவோரிடமிருந்து கப்பம் பெறுவதை நிறுத்துவது எங்களுடைய செயற்பொறுப்பாகும்.

Public-Rally-Chillaw

இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் ஊழலும் மோசடியும் கட்டாயமாக நிறுத்தப்பட வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் கட்டாயமாக சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்படல் வேண்டும். உரிமையாளர்களற்ற எத்தனையோ சடலங்கள் கிடைக்கின்றன. அவை பற்றி விசாரிக்கக்கூடாதா? ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைப் பற்றி விசாரித்தறியவேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்திய குற்றவாளிகள் பற்றி விசாரித்தறிய வேண்டும். ஒரு மனிதனை ஜனாதிபதியாக்குவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதென்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் தான் இந்த நாட்டிலே இனவாதத்தை தூண்டிவிட்டார்கள். முஸ்லிம், தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள இனவாதத்தை தூண்டி விட்டவர்கள் அவர்களே. வாக்குகளை பெறுவதற்காக முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிட்டார்கள். அதேநேரத்தில் சிங்கள மக்களை பாதுகாக்கவே தான் முன்மொழிவதாக கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த கருத்திற்கு ஊடகங்கள் பரவலான பிரச்சாரத்தை பெற்றுக்கொடுத்தன. மானுடத்திற்கு எதிரான குற்றச் செயல் புரிந்தவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படல் வேண்டும். அதிகாரத்திற்காக அசிங்கமான, கீழ்த்தரமான, அநாகரிகமான அரசியலில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தேசிய மறுமலர்ச்சியின் முதலில் செய்ய வேண்டியது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதாகும்.

இலங்கை தேசியத்தை கட்டியெழுப்புவதற்கான முதலாவது அடியெடுப்பு செப்டெம்பர் 21 ஆம் திகதியே ஆரம்பிக்கிறது. அந்த நாள் கட்டாயமாக வரலாற்றின் குறிக்கப்படுகின்ற நாளாக மாறும். நாங்கள் புதிய ஒரு ஜனாதிபதியை நியமிப்போம் அவர் ஒரு “சோ்” அல்ல. அவர் ஒரு “தோழர்” ஆவார். “அதிமேதகு ஜனாதிபதி உத்தமர்” எனப்படுகின்ற குற்றச் செயல் புரிபவர்கள் யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களையும் நாட்டையும் பாதுகாத்துக் கொள்கின்ற ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும். கூட்டாக செயலாற்றக்கூடிய கூட்டான கருத்துக்களுக்கு இடமளிக்கின்ற ஒரே இயக்கம் தேசிய மக்கள் சக்தியாகும்.

நாங்கள் வருவது ஒரு நல்ல நோக்கத்துடனாகும். எவரையும் பழிவாங்குவதற்காக வருவதில்லை. பல வருடங்களாக கைவிட முடியாத கனவொன்றினை மனதில் வைத்துக்கொண்டு நாங்கள் வந்திருக்கிறோம். நாம் அனைவரும் மகிழ்ச்சியாக வாழக்கூடிய கனவினை ஏந்திக்கொண்டு வந்திருக்கிறோம். உழைத்தோம். தோ்தலில் வெற்றிபெற்றோம். தோல்வியடைந்தோம். எனினும் நோக்கத்தை கைவிடவில்லை. நாங்கள் விலைபோகவில்லை. கொள்கையை விட்டுச் செல்லவுமில்லை. என்றாவது ஒரு நாள் மக்கள் எங்களுக்கு செவிசாய்ப்பார்கள் என்பதை நம்பி கொள்கைப்பிடிப்புள்ளவர்களாக பயணித்தோம். அரசியலை காட்டிக்கொடுக்காமல், அயராது உழைத்து, அர்ப்பணிப்புடன் இவ்வளவு தூரம் பயணித்திருக்கிறோம். எதிர்வரும் இரண்டு மாதங்களில் எவரையும் கைவிடாமல் அனைவரிடமும் சென்று உரையாடி எவராலும் தோற்கடிக்க முடியாத மக்கள் பலத்தை கட்டியெழுப்புவோம். வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் ஜனாதிபதி ஒருவரை வெற்றியீட்டச் செய்விப்போம்.

Public-Rally-Chillaw

“சுதந்திரத்தை அனுபவிக்கக்கூடிய பொருளாதார ஆற்றலை அனைவருக்கும் கட்டியெழுப்ப வேண்டும்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் சதுரங்க அபேசிங்க-

நெருக்கடிக்கு இலக்காகி உள்ள ஆட்சியாளர்கள் இறுதிச் சுற்றிலே ஐ.எம்.எப். இடமிருந்து கடன் பெற்று வெளிநாட்டு கடன் செலுத்துவதை பிற்போட்டுக் கொண்டு போராட்டத்தினால் விரட்டியடிக்கப்பட்ட தலைவர்களை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்கள். அந்த ஊழல் போ் வழிகள் பற்றி எமது நாட்டின் இளைஞர்களை உள்ளிட்ட மக்கள் அனைவராலும் விளங்கிக் கொள்ள முடியுமென நான் நம்புகிறேன். பொருளாதார கொள்கைகளை உள்ளிட்ட கொள்கைகளை அறிமுகம் செய்து அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான கூட்டு செயற்பாங்கிற்கு நாங்கள் வந்துள்ள பின்னணியில் மக்களை வெற்றியீட்டச் செய்விக்கின்ற கூட்டத்தில் இந்த கொள்கை ரீதியான வாக்குறுதிகளை அளிக்கிறோம். எங்களுடைய பெற்றோர்கள் நாங்கள் இழந்துள்ள உலகத்தின் மிக உயர்ந்த கல்வியை உங்கள் பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுப்போம். அது மாத்திரமல்ல பாடசாலையிலிருந்து வெளியில் வரும்போது அவர்களுடைய இயலுமைக்கேற்ற வகையில் அரசாங்க அல்லது தனியார் துறையில் தொழில்களை புரிவதற்கு அல்லது ஒரு தொழில் முயற்சியாளராக செயற்படுவதற்கு அவசியமான கல்வியை புதிதாக அறிமுகம் செய்வோம். அவர்களுடைய கல்விக்கு உள்நாட்டில் மாத்திரமல்ல வெளிநாடுகளிலும் நன்மதிப்பொன்றினை பெற்றுக்கொடுப்பது எமது நோக்கமாகும். இன்று வெளிநாட்டு தொழில்கள் என நாங்கள் அனுப்பிவைப்பது அந்த நாடுகளில் உள்ள பிரஜைகள் விரும்பாத தொழில்களையாகும்.

அதைப்போலவே எமது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வழங்குகின்ற சட்டத்தின் சமத்துவத்தை உருவாக்குவதாக வாக்குறுதியளிக்கிறோம். நான் அந்த பாதுகாப்பான வாழ்க்கையை கழித்தேன். நான் 26 வயதிலேயே தொழில் செய்ய தொடங்கினேன். மாலை 6.30 மணியளவில் வேலையை முடித்துவிட்டு இரண்டு பிள்ளைகளுடன் நேரத்தைக் கழிக்க தொடங்குவேன். உல்லாசமான வார இறுதியை கழித்தேன். அதைபோலவே அனைத்து பிரஜைகளுக்கும் பொருளாதார சுதந்திரம் கிடைக்க வேண்டும். வாரத்திற்கு 40 மணித்தியாலம் வேலை செய்தால் வாழ்க்கையின் ஒரு பகுதி என்ற வகையில் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான பொருளாதார இயலுமை கட்டியெழுப்படல் வேண்டும். இந்த கலாச்சார வாழ்க்கையை அடைவதற்கான வாய்ப்பு 76 வருடங்களுக்கு பின்னர் நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் கிடைத்துள்ளது. அதனை யதார்த்தமாக மாற்றிக் கொள்ள புத்தளம் மாவட்ட மக்கள் திசைக்காட்டியின் வேட்பாளரான தோழர் அநுர குமார திசாநாயக்கவிற்கு மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுப்போம்.

Public-Rally-Chillaw

“நிலவுகின்ற துன்பகரமான நிலைமையை மாற்றியமைப்பதற்கான பொறுப்பினை திசைகாட்டி ஏற்றுக்கொள்ள தயார்”
-தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நிறைவேற்றுச் சபை உத்தியோகத்தர் கயான் ஜானக்க-

எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலுக்காக புத்தளம் மாவட்ட மக்கள் பல்வேறு பிரிவுகளில் ஒழுங்கமைந்து மிகச்சிறப்பாக தயாராகி இருக்கிறார்கள். மீனவர், கமக்காரர், பெண்கள், உழைக்கும் மக்கள் என்றவகையில் ஒழுங்கமைத்துவந்த பயணத்தின் வெற்றிகரமான பெறுபேறு கிடைத்துள்ளது. இந்த மாவட்டத்தின் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் வட்டார சபைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த இரண்டு மாதத்திற்குள் தோ்தல் அமைப்புக்களை தாபித்து வருகிறோம். ஒவ்வொரு தோ்தல் தொகுதிக்கும் தோ்தல் குழுக்களை நிறுவுதல் அடுத்த பத்தாம் திகதி அளவில் நிறைவு பெறும். இன்று இத்தருணமாகும்போது பாடசாலை செல்கின்ற பிள்ளைகளில் 14 இலட்சம் போ் பட்டினியாக பாடசாலைக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நிலவுகின்ற துக்ககரமான நிலைமையை மாற்றியமைக்கின்ற பொறுப்பினை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளத் தயார். எதிர்காலத்தில் மேலும் பலமடைந்து தோ்தல் வெற்றிக்காக மிகுந்த பலத்துடனும் வலிமையுடனும் அணிரள்வோம் என அழைப்பு விடுக்கிறோம்.

Public-Rally-Chillaw

“யானைக்கும் – மனிதனுக்கும் இடையிலான மோதலுக்கு திசைகாட்டியின் சுற்றாடல் குழுவின் கீழ் தீர்வுகள் வகுக்கப்பட்டு விட்டன.”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று பேரவை அங்கத்தவர் பேராசிரியர் சந்தன அபேரத்ன-

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் குழுக்களின் மத்தியில் மீன்பிடி அலுவல்கள் சம்பந்தமான தயாரிக்கப்படுகின்ற கொள்கையில் புத்தளம் மாவட்டத்தின் மீனவர்கள் மீது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் மீன்பிடித் துறைமுகங்களும் படகுத்துறைகளும் அழிவடைய இடமளித்தல், மீன்பிடி கருவிகளில் விலைகள் தாக்குப்பிடிக்க முடியாததாக அமைதல் மற்றும் எரிபொருள் விலையேற்றம் சம்பந்தமாக எங்களுடைய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மிகுந்த சிரமங்களின் மத்தியில் அறுவடை செய்து வருகின்ற மீன் விளைச்சலுக்கு நியாயமான விலை இதுவரை கிடைப்பதில்லை. அது சம்பந்தமாக அடிப்படை திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதோடு இந்த மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யக்கூடிய சுற்றுலா தொழிற்றுறையில் சாத்தியவள கற்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றளவில் உல்லாசப் பயணிகளுக்கு வீசா வழங்கும்போது கூட கொள்ளையடிக்கின்ற ஆட்சியொன்று நிலவுகின்றது. அதற்கு மேலதிகமாக எமது மாவட்டத்தில் இயங்கி வந்த சீமெந்து தொழிற்சாலை மூடப்பட்டு விட்டது. அதற்கு பதிலாக இந்த மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகளை பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான மோதலுக்கு இரையாகியுள்ள கருவலகஸ்வெவ, நவகத்தேகம உள்ளிட்ட பிரதேசத்தில் நிலவுகின்ற பாரதூரமான பிரச்சினையை தீர்த்து வைக்க சுற்றாடல் குழுவின் கீழ் தீர்வுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. செப்டெம்பர் 21 ஆம் திகதி தோழர் அநுர ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் இந்த அபிவிருத்தித்திட்டங்கள் அனைத்தும் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

Public-Rally-Chillaw

“நாங்கள் அனைத்து பிரஜைகளுக்கும் சாதகமான எதிர்காலமொன்றை அமைத்துக் கொடுப்பதற்காகவே பல்வேறு சக்திகளை ஒன்று திரட்டினோம்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவையின் உறுப்பினர் மௌலவி முனீர் முலஃப்பர்-

சுற்றுப்புற பிரதேசங்களில் ரணில் ஜனாதிபதி என்று போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அது செப்டெம்பர் 21 ஆம் திகதி மாத்திரமே. நிச்சயமாக தோழர் அநுர குமார திசாநாயக்க தோ்தலில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். “ஒன்றாக வெற்றிபெறுவோம்” என்று போராட்டக் கோஷத்தை தொடங்கியிருக்கிறார்கள். அந்த வெற்றி எவருக்காக? இந்த நாட்டு மக்களுக்கு அல்ல. அது அவர்களின் வகுப்பைச் சோ்ந்தவர்களுக்கு. மக்களின் வெற்றி இருப்பது தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே என்பதை வலியுறுத்தி கூறவிரும்புகிறேன். அவர்கள் உங்களுக்கு அருகில் வந்து பல வருடங்களாக பல்வேறு சக்திகளை அமைத்துக் கொண்டது அவர்களுக்கு அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காகவே. தேசிய மக்கள் சக்தி நாடு பூராவும் சென்று பல்வேறு சக்திகளை சோ்த்துக் கொண்டது அரசாங்கமொன்றை அமைத்துக் கொள்வதற்காக அல்ல; நாட்டின் மக்கள் அனைவருக்கும் சாதகமான எதிர்காலமொன்றை அமைத்துக் கொடுப்பதற்காகவே. மொட்டுக் கட்சியில் இருக்கின்ற திருடர்கள் அத்தனை பேரும் ஐக்கிய மக்கள் சக்தி மேடையில் ஏறியதும் எப்படி நல்லவர்களாக மாறுவார்கள் என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. தேசிய மக்கள் சக்தியை சுற்றி இணைந்திருப்பவர்கள் கள்வர்களுடன் இருந்த சக்திகளல்ல. மக்களுடன் இருந்த சக்திகளே என்பதை நாங்கள் வலியுறுத்த வேண்டும். ஊழலற்றவர்களாக செயலாற்றக்கூடிய ஒரே சக்தி தேசிய மக்கள் சக்தி மாத்திரமே என்பதை முழு நாடுமே விளங்கிக்கொண்டுள்ளது.

Public-Rally-Chillaw

“විඳි දුක් අවසන් කර ලස්සන රටක් හදන්න අපි හැමෝම එක්වෙන්න ඕනෑ”
-ජාතික ජන බලවේගයේ ජාතික විධායක සභික සමන්මලී ගුණසිංහ-

මේ රටේ ගැහැනුන් වන අපි ගමක් ගමක් ගානේ, ආයතනයක් ආයතනයක් ගානේ ගොස්, ගැහැනුන්ට අවදි වෙන්න කියලා ආරාධනා කළා. තම තමන්ගේ ලෝකවල් හදාගෙන තම තමන්ගේ පවුල්වලට අනාගතය නිර්මාණය කරන්න හදපු අතීතයෙන් මිදී අපේ රටේ ගැහැනුන් එළියට ඇවිත් සිටින්නෙ මේ රටේ ජනතාව, අනාගතය සහ දරුවන් ජයග්‍රහණය කරවන්නයි. මෙතෙක් කල් මේ රටේ ජනතාව සමග ගැහැනුන් විදිහට අපිත් සොයා යමින් තිබූ පාර හැමෝම පැැහැදිලි කරගෙන තිබෙනවා. සැප්තැම්බර් 21 දක්වා ඒ ගමන ධෛර්යයෙන් යන්න ඕනෑ. ඒ වගේම අපේ යහළුවන්, නෑදෑයන්, සියලු දෙනාටම ජාතික ජන බලවේගයේ පවුලත් එක්ක එකතු වෙන්න ඕනෑ කියලා ආදරයෙන්, ආරාධනා කරන්න ඕනෑ. මේ දිස්ත්‍රික්කයේ කර්මාන්ත ගණනාවකට විභවයක් තිබුණාට ආදරණීය අම්මලා වැඩිපිරිසක් ඉන්නේ මැදිපෙරදිග රැකියාවලයි. සහෝදරියන් වැඩි පිරිසක් ඉන්නේ විදේශ රැකියාවලයි. සැමියන් විශාල පිරිසක් ඉන්නේ විදේශ රටවලයි. එහෙම නැත්නම් නිදහස් වෙළඳ කලාපයේ කුකුල් පැටවුන් වගේ කාමරවලට ගාල් කර තිබෙනවා. අපි හැමෝම මේ දක්වා විඳි දුක් අවසන් කර, ලස්සන රටක් හදන්න අපි හැමෝම එක්වෙන්න ඕනෑ.

Show More