113 ஆவது சர்வதேச மகளிர் தினம்
சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் திகதியில் வருகிறது. பெண்களுக்கென ஒரு நாள் அவசியம் எனும் விடயம் 1910 இல் கம்யூனிஸ்ட் அகிலத்தில் முன்மொழியப்பட்டது. பெண்களை சமூகத்தின் சக்தியாக அணிதிரட்டும் மற்றும் அவர்களின் வலிமையை வெளிப்படுத்தும் நாளாக இடதுசாரிய அர்த்தத்தில் இத்தினத்தின் செயற்பாடுகள் சீரமைக்கப்பட்டன.
இம்முறை சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இலங்கையில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன், தேசிய மக்கள் சக்தியின் தலைமையில் பெண்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் அதைப்போலவே மக்களின் வாழ்வில் சிக்கல்களை தோற்றுவித்துள்ளவர்களுக்கும், அநீதியான நடப்பு அரசியல் முறைக்கும் எதிராக பெண்களை ஸ்தாபனமயப்படுத்தும் நோக்குடன் நாடு முழுவதும் பிரமாண்டமான ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்ததுடன், பெருந்தொகையான பெண்களின் பங்களிப்புடன் இச்செயற்பாடு வெற்றிகரமாக இடம்பெற்றது.
~களுத்துறை~
~பதுளை~
~கண்டி~
~அனுராதபுரம்~