-Colombo, December 16, 2023-
பெண்கள் மற்றும் சிறுவர் அமைச்சிற்கான வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டை குறைத்ததிற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினர் பாராளுமன்ற சுற்று வட்டத்திற்கு அருகில் 04ம் திகதி நடாத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியதால் தமது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டதை உறுதிப்படுத்துமாறு கோரி அடிப்படை மனித உரிமை மனு டிசம்பர் 15 மு.ப. 11.30க்கு பா.உ. கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் உச்ச நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டது.
இதற்காக தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சமன்மலி குணசிங்க, சட்டத்தரணி நிமலா சிறிவர்தன, சட்டத்தரணி சமிலா குலசேகர, சட்டத்தரணி மது கல்பனா உள்ளிட்டோர் ஒன்றிணைந்தனர்.