Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“பிரஜைகளுக்கு புதிய வாழ்க்கையை பெற்றுக்கொடுக்கின்ற தேசிய மறுமலர்ச்சி யுகமொன்றைக் கட்டியெழுப்பிடுவோம்!”-தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(தேசிய மக்கள் சக்தியின் கூட்டம் – சிலாபம் – 2024.07.28)

Public-Rally-Chillaw

கடந்த 50-60 வருட காலமாக இந்த நாட்டு மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவும் மஹிந்த ராஜபக்ஷவும் ஒருவருக்கொருவர் எதிராக ஆயுதமேந்திக்கொண்டு போராடுபவர்களாகவே புலப்பட்டார்கள். பச்சை நிறம் – நீல நிறம் என பிளவுபட்ட அவர்கள் பொய்யான காட்போட் வாள்களை ஏந்தி போரிட்டார்கள். ஆனால் ஊரிலுள்ள மக்கள் உண்மையாக பிளவுற்று சண்டைபோட்டுக் கொண்டார்கள். ஆனமடுவையின் ரங்கே பண்டார, இறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நடுத்தெருவில் சுட்டுக்கொள்ளவில்லையா? அவர்களால் தொடர்ந்தும் பகைவர்கள்போல் பிரிந்து சண்டைபோட முடியாது. அதனால் அவர்களுக்கு ஒரே மேடையில் ஏறவேண்டிய நிலையேற்பட்டது. களுத்துறையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஒரு கதிரையில் ரணில் விக்கிரமசிங்க, அடுத்த கதிரையில் மஹிந்த ரரஜபக்ஷ, இன்னுமொரு கதிரையில் ரவி கருணாநாயக்க, அடுத்த கதிரையில் பசில் ராஜபக்ஷ, அடுத்தாக வஜிர அபேவர்தன மற்றுமொரு கதிரையில் ரோஹித அபேகுணவர்தன. அந்த மேடை யானையுடையதா மொட்டுக்கட்சியினுடையதா? ரணிலைப் பார்த்ததும் யானைப்போல் தான் இருந்தது. அடுத்த கதிரையில் உள்ள மஹிந்தவைக் கண்டதும் மொட்டுபோல் தெரிகிறது. இப்பொழுது அது யானையுமல்ல மொட்டுமல்ல ஒரு பூட்டு ஆகும்.

இதுவரை காலமும் நாட்டின் அதிகாரமும் ஒன்றில் பச்சை நிறத்திடம் அல்லது நீல நிறத்திடமே இருந்தது. நீல நிற ஊழல் போ்வழிகளுக்கு பச்சை நிற அரசாங்கத்திடமிருந்தும் பச்சை நிற ஊழல் போ்வழிகளுக்கு நீல நிற அரசாங்கத்திடமிருந்தும் பாதுகாப்பு கிடைத்தது. இருப்பவர்கள் பாரிய திருட்டுக்களுக்கும் குற்றச் செயல்களுக்கும் பங்காளிகளாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டம் அமுலாகவில்லை. நிச்சயமாக செப்டெம்பர் 21 ஆம் திகதி மக்கள் வெற்றிபெறுவார்கள். அந்த வெற்றியை தடுக்க அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். 875 கோடி ரூபாவை ஒதுக்கிக் கொண்டு தோ்தல் இயக்கத்திற்காக பணத்தை செலவிட்டு வருகிறார்கள். கைவிடவேண்டாம் பங்கிடுகின்ற எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ளுங்கள். திருடிக் குவித்த பணத்திலிருந்து இந்த காலத்தில் இப்படியாவது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பது நல்லது. பகிர்ந்தளிக்காமல் சேமித்துக் கொண்ட பணத்தை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் நிச்சயமாக பறிமுதல் செய்யும்.

Public-Rally-Chillaw

அதைபோலவே பொய்யான தகவல்களையும் குறைகூறல்களையும் பாரியளவில் பகிர்ந்தளிக்கின்ற தோ்தல் இயக்கமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலரை தெரிவு செய்து அவர்களுக்காக இயங்கி வருகின்ற ஊடகங்கள் இருக்கின்றன. எனினும் நாங்கள் சந்திக்காத இலட்சக்கணக்கான மக்கள் தேசிய மக்கள் சக்திக்காக தோற்றி வருகிறார்கள். அவர்கள் அரச பலத்துடன் ஒரு சில அரச உத்தியோகத்தர்களை இணைத்துக் கொண்டு தோ்தல் நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊர்களில் நிறுவியுள்ள சமுதாய பாதுகாப்பு குழுக்களை ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சார அலுவல்களுக்காக ஈடுபடுத்த பிரதேச ஓ.ஐ.சி. இற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தேசபந்துவை இடைநிறுத்தியமைக்காக ரணில் ஏன் இவ்வளவு கோபப்பட வேண்டும். அதனால் தான் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார். தினேஷ் குணவர்தனவும் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார். முடியுமானால் பாராளுமன்றத்திற்கு வெளியில் வந்து அதனைக் கூறுங்கள். தேசபந்து தான் இன்னமும் பொலிஸ் மா அதிபர் என நினைப்பாரேயானால் ஒரு கையொப்பத்தை இட்டுக்காட்டவும்.

எங்களிடம் அரச அதிகாரம் கிடையாது, ஊடக அதிகாரமும் கிடையாது, பெருஞ் செல்வத்தின் அதிகாரமும் கிடையாது. எங்களிடம் இருப்பது சிலாபம் நகரத்திற்கு ஆற்று வெள்ளம்போல் திரண்டு வந்துள்ள மக்களின் பலமாகும். எதிர்வரும் இரண்டு மாதங்களில் இதுவரை செயலாற்றியதை போல் ஏழு எட்டு மடங்கு செயலாற்றுங்கள். உங்கள் வாக்குப்பெட்டிகளை திசைக்காட்டிக்கே புள்ளடியிட்ட வாக்குச் சீட்டுகளால் நிரப்புங்கள். அதன் பின்னர் பாராளுமன்றத்தை சுத்தப்படுத்துகின்ற அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டும். மக்கள்மீது எல்லையற்ற அழுத்தத்தைக் கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் விசேட கொடுப்பனவுகளை வழங்கி வேலை செய்கின்ற விதத்தை நாங்கள் கண்டோம். எண்ணெய் விலை அதிகரித்ததும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவினை ஒரு இலட்சம் ரூபாவால் அதிகரித்துக் கொடுக்க தீர்மானித்தார்கள். நானும் எங்களுடைய ஹரினி தோழரும் தோழர் விஜித ஹேரத்தும் அதிகரித்த ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவினை எங்களுக்கு வழங்கவேண்டாமென சபாநாயகருக்கு எழுத்தில் அறிவித்தோம். பார் பேமிட்டுக்களை பெற்று இரண்டு மூன்று கோடி ரூபாவிற்கு விற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கேகாலையின் இராஜாங்க அமைச்சர் மூன்று பார் பேமிட்டுக்களை பெற்று ஒன்பது கோடி ரூபாவிற்கு விற்றிருக்கிறார். சஜித் பிரேமதாஸ அதிகாரத்திற்கு வந்ததும் அதனை இரத்துச் செய்வதாக கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியை சோ்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த பேமிட்டுக்களை வாங்கவில்லை எனக்கூறினால் நான் அதனை நிரூபிப்பேன். பெற்றோல் ஷெட்டுகளை பெற்று விற்கிறார்கள். செப்டெம்பர் 21 ஆம் திகதி வெற்றிக்கு பின்னர் இந்த அயோக்கித்தனமான பாராளுமன்றத்தை கலைத்து நல்ல பாராளுமன்றமொன்றை அமைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்குவோம்.

மக்களுக்கு உணவும் கல்வியும் சுகாதாரமும் வழங்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். மக்களுக்கு உணவின்றி மருந்தின்றி 2048 வரை காத்திருக்கும்படி ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். நாட்டை நாசமாக்கியவர்கள் நாட்டை கட்டியெழுப்புவதாகக் கூறுவது கேலிக்கூத்து. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாட்டை மாற்றியமைக்கின்ற வறுமையிலிருந்து மீட்டெடுக்கின்ற குற்றச் செயல்களும் போதைப்பொருட்களுமற்ற சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்ட புதிய நிலைமாற்றத்திற்காக நாம் அனைவரும் ஒன்று சேருவோம். பிரஜைகளுக்கு புதிய வாழ்க்கையை பெற்றுக்கொடுக்கின்ற புதிய தேசிய மறுமலர்ச்சி யுகமொன்றை கட்டியெழுப்புவோம்.

Public-Rally-Chillaw

“வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் ஜனாதிபதி ஒருவரை நியமித்துக் கொள்வோம்”
-மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா-

2022 இல் ஏற்பட்ட மக்கள் போராட்டம் மூலமாக ஆட்சியாளர்களை விரட்டியடித்தாலும் முழுமையான வெற்றியை அடைந்து கொள்ள முடியாமல் ரணில் விக்கிரமசிங்க பின்தொடருகின்ற ஜனாதிபதியாகியுள்ளார். போராட்டத்தில் வெற்றிபெற முடியாமல் போன அனைவருக்கும் தோ்தலில் வெற்றியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. தற்போது நடைபெற போவது அரசியல்வாதிகள் விரும்பாவிட்டாலும் மக்கள் ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் விரும்புகின்ற தோ்தலாகும். ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ, சஜித் பிரேமதாஸ ஆகிய அனைவருக்கும் விரும்பாத தோ்தலாக மாறியிருப்பது 76 வருட கால இருண்ட கும்பல்களின் ஆட்சிக்கு பதிலாக பொதுமக்களின் ஆட்சியொன்று நிறுவப்படுவதாலாகும். வெற்றிக்கு அவசியமான அனைத்து காரணிகளும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. நீங்களும் நாங்களும் ஒருங்கிணைத்திருப்பது மற்றுமொரு ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக மாத்திரமல்ல. நாங்கள் “புதிய தேசிய மறுமலர்ச்சி” என்பதையே தொனிப்பொருளாக கொண்டுள்ளோம். மீண்டும் எழுச்சி பெறவேண்டியது அவசியமாகும். கடந்த 50 – 60 வருடங்களிலும் எந்தவிதமான வெற்றியையும் பெறாமல் கடன் வாங்கித் தின்று கடன் மேடு ஒன்றினை உருவாக்கியிருக்கிறோம். ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்திற்கு வரும்போது ஒட்டுமொத்த கடன் 83 பில்லியன் டொலராகும். இப்போது 100 பில்லியன் டொலரைத் தாண்டிவிட்டது.

மக்கள் மீது வற் வரி விதிக்கப்பட்டு மாதச் சம்பளம் பெறுகின்றவர்கள் மீது 36 வீதம் வரை வரி விதிக்கப்பட்டு மென்மேலும் வரி சுமத்தப்பட்டுள்ளது. அவர் நாட்டை மீட்டெடுக்கவில்லை. வீழ்ந்த மஹிந்த ராஜபக்ஷாக்களையே மீட்டெடுத்துள்ளார். எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பு வீழ்த்தப்பட்ட நாட்டை கட்டியெழுப்புவதாகும். எமது நாட்டிலே இருக்கின்ற பெரும்பாலனவர்கள் தமது கைகளால் ஏதேனும் பணியைச் செய்து வருமானத்தை ஈட்டிக்கொள்கின்ற மக்களாவார்கள். அவர்களின் தொழில் துறைகளுக்கு தடையேற்படுத்தப்பட்டுள்ளது. அதனால் புத்தளம் மாவட்டத்தில் ஓடு, செங்கல் தொழிற்சாலைகள் பல மூடப்பட்டு விட்டன. மூடப்பட்டுள்ள இந்த கைத்தொழில்களுக்கு கைகொடுத்து உயர்த்தி விடுவது திசைக்காட்டியின் கொள்கையாகும். அரசியல்வாதிகள் தொழில் முனைவோரிடமிருந்து கப்பம் பெறுவதை நிறுத்துவது எங்களுடைய செயற்பொறுப்பாகும்.

Public-Rally-Chillaw

இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் ஊழலும் மோசடியும் கட்டாயமாக நிறுத்தப்பட வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் கட்டாயமாக சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்படல் வேண்டும். உரிமையாளர்களற்ற எத்தனையோ சடலங்கள் கிடைக்கின்றன. அவை பற்றி விசாரிக்கக்கூடாதா? ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைப் பற்றி விசாரித்தறியவேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்திய குற்றவாளிகள் பற்றி விசாரித்தறிய வேண்டும். ஒரு மனிதனை ஜனாதிபதியாக்குவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதென்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் தான் இந்த நாட்டிலே இனவாதத்தை தூண்டிவிட்டார்கள். முஸ்லிம், தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள இனவாதத்தை தூண்டி விட்டவர்கள் அவர்களே. வாக்குகளை பெறுவதற்காக முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிட்டார்கள். அதேநேரத்தில் சிங்கள மக்களை பாதுகாக்கவே தான் முன்மொழிவதாக கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த கருத்திற்கு ஊடகங்கள் பரவலான பிரச்சாரத்தை பெற்றுக்கொடுத்தன. மானுடத்திற்கு எதிரான குற்றச் செயல் புரிந்தவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படல் வேண்டும். அதிகாரத்திற்காக அசிங்கமான, கீழ்த்தரமான, அநாகரிகமான அரசியலில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தேசிய மறுமலர்ச்சியின் முதலில் செய்ய வேண்டியது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதாகும்.

இலங்கை தேசியத்தை கட்டியெழுப்புவதற்கான முதலாவது அடியெடுப்பு செப்டெம்பர் 21 ஆம் திகதியே ஆரம்பிக்கிறது. அந்த நாள் கட்டாயமாக வரலாற்றின் குறிக்கப்படுகின்ற நாளாக மாறும். நாங்கள் புதிய ஒரு ஜனாதிபதியை நியமிப்போம் அவர் ஒரு “சோ்” அல்ல. அவர் ஒரு “தோழர்” ஆவார். “அதிமேதகு ஜனாதிபதி உத்தமர்” எனப்படுகின்ற குற்றச் செயல் புரிபவர்கள் யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களையும் நாட்டையும் பாதுகாத்துக் கொள்கின்ற ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும். கூட்டாக செயலாற்றக்கூடிய கூட்டான கருத்துக்களுக்கு இடமளிக்கின்ற ஒரே இயக்கம் தேசிய மக்கள் சக்தியாகும்.

நாங்கள் வருவது ஒரு நல்ல நோக்கத்துடனாகும். எவரையும் பழிவாங்குவதற்காக வருவதில்லை. பல வருடங்களாக கைவிட முடியாத கனவொன்றினை மனதில் வைத்துக்கொண்டு நாங்கள் வந்திருக்கிறோம். நாம் அனைவரும் மகிழ்ச்சியாக வாழக்கூடிய கனவினை ஏந்திக்கொண்டு வந்திருக்கிறோம். உழைத்தோம். தோ்தலில் வெற்றிபெற்றோம். தோல்வியடைந்தோம். எனினும் நோக்கத்தை கைவிடவில்லை. நாங்கள் விலைபோகவில்லை. கொள்கையை விட்டுச் செல்லவுமில்லை. என்றாவது ஒரு நாள் மக்கள் எங்களுக்கு செவிசாய்ப்பார்கள் என்பதை நம்பி கொள்கைப்பிடிப்புள்ளவர்களாக பயணித்தோம். அரசியலை காட்டிக்கொடுக்காமல், அயராது உழைத்து, அர்ப்பணிப்புடன் இவ்வளவு தூரம் பயணித்திருக்கிறோம். எதிர்வரும் இரண்டு மாதங்களில் எவரையும் கைவிடாமல் அனைவரிடமும் சென்று உரையாடி எவராலும் தோற்கடிக்க முடியாத மக்கள் பலத்தை கட்டியெழுப்புவோம். வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் ஜனாதிபதி ஒருவரை வெற்றியீட்டச் செய்விப்போம்.

Public-Rally-Chillaw

“சுதந்திரத்தை அனுபவிக்கக்கூடிய பொருளாதார ஆற்றலை அனைவருக்கும் கட்டியெழுப்ப வேண்டும்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் சதுரங்க அபேசிங்க-

நெருக்கடிக்கு இலக்காகி உள்ள ஆட்சியாளர்கள் இறுதிச் சுற்றிலே ஐ.எம்.எப். இடமிருந்து கடன் பெற்று வெளிநாட்டு கடன் செலுத்துவதை பிற்போட்டுக் கொண்டு போராட்டத்தினால் விரட்டியடிக்கப்பட்ட தலைவர்களை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்கள். அந்த ஊழல் போ் வழிகள் பற்றி எமது நாட்டின் இளைஞர்களை உள்ளிட்ட மக்கள் அனைவராலும் விளங்கிக் கொள்ள முடியுமென நான் நம்புகிறேன். பொருளாதார கொள்கைகளை உள்ளிட்ட கொள்கைகளை அறிமுகம் செய்து அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான கூட்டு செயற்பாங்கிற்கு நாங்கள் வந்துள்ள பின்னணியில் மக்களை வெற்றியீட்டச் செய்விக்கின்ற கூட்டத்தில் இந்த கொள்கை ரீதியான வாக்குறுதிகளை அளிக்கிறோம். எங்களுடைய பெற்றோர்கள் நாங்கள் இழந்துள்ள உலகத்தின் மிக உயர்ந்த கல்வியை உங்கள் பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுப்போம். அது மாத்திரமல்ல பாடசாலையிலிருந்து வெளியில் வரும்போது அவர்களுடைய இயலுமைக்கேற்ற வகையில் அரசாங்க அல்லது தனியார் துறையில் தொழில்களை புரிவதற்கு அல்லது ஒரு தொழில் முயற்சியாளராக செயற்படுவதற்கு அவசியமான கல்வியை புதிதாக அறிமுகம் செய்வோம். அவர்களுடைய கல்விக்கு உள்நாட்டில் மாத்திரமல்ல வெளிநாடுகளிலும் நன்மதிப்பொன்றினை பெற்றுக்கொடுப்பது எமது நோக்கமாகும். இன்று வெளிநாட்டு தொழில்கள் என நாங்கள் அனுப்பிவைப்பது அந்த நாடுகளில் உள்ள பிரஜைகள் விரும்பாத தொழில்களையாகும்.

அதைப்போலவே எமது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வழங்குகின்ற சட்டத்தின் சமத்துவத்தை உருவாக்குவதாக வாக்குறுதியளிக்கிறோம். நான் அந்த பாதுகாப்பான வாழ்க்கையை கழித்தேன். நான் 26 வயதிலேயே தொழில் செய்ய தொடங்கினேன். மாலை 6.30 மணியளவில் வேலையை முடித்துவிட்டு இரண்டு பிள்ளைகளுடன் நேரத்தைக் கழிக்க தொடங்குவேன். உல்லாசமான வார இறுதியை கழித்தேன். அதைபோலவே அனைத்து பிரஜைகளுக்கும் பொருளாதார சுதந்திரம் கிடைக்க வேண்டும். வாரத்திற்கு 40 மணித்தியாலம் வேலை செய்தால் வாழ்க்கையின் ஒரு பகுதி என்ற வகையில் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான பொருளாதார இயலுமை கட்டியெழுப்படல் வேண்டும். இந்த கலாச்சார வாழ்க்கையை அடைவதற்கான வாய்ப்பு 76 வருடங்களுக்கு பின்னர் நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் கிடைத்துள்ளது. அதனை யதார்த்தமாக மாற்றிக் கொள்ள புத்தளம் மாவட்ட மக்கள் திசைக்காட்டியின் வேட்பாளரான தோழர் அநுர குமார திசாநாயக்கவிற்கு மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுப்போம்.

Public-Rally-Chillaw

“நிலவுகின்ற துன்பகரமான நிலைமையை மாற்றியமைப்பதற்கான பொறுப்பினை திசைகாட்டி ஏற்றுக்கொள்ள தயார்”
-தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நிறைவேற்றுச் சபை உத்தியோகத்தர் கயான் ஜானக்க-

எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலுக்காக புத்தளம் மாவட்ட மக்கள் பல்வேறு பிரிவுகளில் ஒழுங்கமைந்து மிகச்சிறப்பாக தயாராகி இருக்கிறார்கள். மீனவர், கமக்காரர், பெண்கள், உழைக்கும் மக்கள் என்றவகையில் ஒழுங்கமைத்துவந்த பயணத்தின் வெற்றிகரமான பெறுபேறு கிடைத்துள்ளது. இந்த மாவட்டத்தின் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் வட்டார சபைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த இரண்டு மாதத்திற்குள் தோ்தல் அமைப்புக்களை தாபித்து வருகிறோம். ஒவ்வொரு தோ்தல் தொகுதிக்கும் தோ்தல் குழுக்களை நிறுவுதல் அடுத்த பத்தாம் திகதி அளவில் நிறைவு பெறும். இன்று இத்தருணமாகும்போது பாடசாலை செல்கின்ற பிள்ளைகளில் 14 இலட்சம் போ் பட்டினியாக பாடசாலைக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நிலவுகின்ற துக்ககரமான நிலைமையை மாற்றியமைக்கின்ற பொறுப்பினை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளத் தயார். எதிர்காலத்தில் மேலும் பலமடைந்து தோ்தல் வெற்றிக்காக மிகுந்த பலத்துடனும் வலிமையுடனும் அணிரள்வோம் என அழைப்பு விடுக்கிறோம்.

Public-Rally-Chillaw

“யானைக்கும் – மனிதனுக்கும் இடையிலான மோதலுக்கு திசைகாட்டியின் சுற்றாடல் குழுவின் கீழ் தீர்வுகள் வகுக்கப்பட்டு விட்டன.”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று பேரவை அங்கத்தவர் பேராசிரியர் சந்தன அபேரத்ன-

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் குழுக்களின் மத்தியில் மீன்பிடி அலுவல்கள் சம்பந்தமான தயாரிக்கப்படுகின்ற கொள்கையில் புத்தளம் மாவட்டத்தின் மீனவர்கள் மீது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் மீன்பிடித் துறைமுகங்களும் படகுத்துறைகளும் அழிவடைய இடமளித்தல், மீன்பிடி கருவிகளில் விலைகள் தாக்குப்பிடிக்க முடியாததாக அமைதல் மற்றும் எரிபொருள் விலையேற்றம் சம்பந்தமாக எங்களுடைய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மிகுந்த சிரமங்களின் மத்தியில் அறுவடை செய்து வருகின்ற மீன் விளைச்சலுக்கு நியாயமான விலை இதுவரை கிடைப்பதில்லை. அது சம்பந்தமாக அடிப்படை திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதோடு இந்த மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யக்கூடிய சுற்றுலா தொழிற்றுறையில் சாத்தியவள கற்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றளவில் உல்லாசப் பயணிகளுக்கு வீசா வழங்கும்போது கூட கொள்ளையடிக்கின்ற ஆட்சியொன்று நிலவுகின்றது. அதற்கு மேலதிகமாக எமது மாவட்டத்தில் இயங்கி வந்த சீமெந்து தொழிற்சாலை மூடப்பட்டு விட்டது. அதற்கு பதிலாக இந்த மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகளை பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான மோதலுக்கு இரையாகியுள்ள கருவலகஸ்வெவ, நவகத்தேகம உள்ளிட்ட பிரதேசத்தில் நிலவுகின்ற பாரதூரமான பிரச்சினையை தீர்த்து வைக்க சுற்றாடல் குழுவின் கீழ் தீர்வுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. செப்டெம்பர் 21 ஆம் திகதி தோழர் அநுர ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் இந்த அபிவிருத்தித்திட்டங்கள் அனைத்தும் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

Public-Rally-Chillaw

“நாங்கள் அனைத்து பிரஜைகளுக்கும் சாதகமான எதிர்காலமொன்றை அமைத்துக் கொடுப்பதற்காகவே பல்வேறு சக்திகளை ஒன்று திரட்டினோம்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவையின் உறுப்பினர் மௌலவி முனீர் முலஃப்பர்-

சுற்றுப்புற பிரதேசங்களில் ரணில் ஜனாதிபதி என்று போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அது செப்டெம்பர் 21 ஆம் திகதி மாத்திரமே. நிச்சயமாக தோழர் அநுர குமார திசாநாயக்க தோ்தலில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். “ஒன்றாக வெற்றிபெறுவோம்” என்று போராட்டக் கோஷத்தை தொடங்கியிருக்கிறார்கள். அந்த வெற்றி எவருக்காக? இந்த நாட்டு மக்களுக்கு அல்ல. அது அவர்களின் வகுப்பைச் சோ்ந்தவர்களுக்கு. மக்களின் வெற்றி இருப்பது தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே என்பதை வலியுறுத்தி கூறவிரும்புகிறேன். அவர்கள் உங்களுக்கு அருகில் வந்து பல வருடங்களாக பல்வேறு சக்திகளை அமைத்துக் கொண்டது அவர்களுக்கு அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காகவே. தேசிய மக்கள் சக்தி நாடு பூராவும் சென்று பல்வேறு சக்திகளை சோ்த்துக் கொண்டது அரசாங்கமொன்றை அமைத்துக் கொள்வதற்காக அல்ல; நாட்டின் மக்கள் அனைவருக்கும் சாதகமான எதிர்காலமொன்றை அமைத்துக் கொடுப்பதற்காகவே. மொட்டுக் கட்சியில் இருக்கின்ற திருடர்கள் அத்தனை பேரும் ஐக்கிய மக்கள் சக்தி மேடையில் ஏறியதும் எப்படி நல்லவர்களாக மாறுவார்கள் என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. தேசிய மக்கள் சக்தியை சுற்றி இணைந்திருப்பவர்கள் கள்வர்களுடன் இருந்த சக்திகளல்ல. மக்களுடன் இருந்த சக்திகளே என்பதை நாங்கள் வலியுறுத்த வேண்டும். ஊழலற்றவர்களாக செயலாற்றக்கூடிய ஒரே சக்தி தேசிய மக்கள் சக்தி மாத்திரமே என்பதை முழு நாடுமே விளங்கிக்கொண்டுள்ளது.

Public-Rally-Chillaw

“විඳි දුක් අවසන් කර ලස්සන රටක් හදන්න අපි හැමෝම එක්වෙන්න ඕනෑ”
-ජාතික ජන බලවේගයේ ජාතික විධායක සභික සමන්මලී ගුණසිංහ-

මේ රටේ ගැහැනුන් වන අපි ගමක් ගමක් ගානේ, ආයතනයක් ආයතනයක් ගානේ ගොස්, ගැහැනුන්ට අවදි වෙන්න කියලා ආරාධනා කළා. තම තමන්ගේ ලෝකවල් හදාගෙන තම තමන්ගේ පවුල්වලට අනාගතය නිර්මාණය කරන්න හදපු අතීතයෙන් මිදී අපේ රටේ ගැහැනුන් එළියට ඇවිත් සිටින්නෙ මේ රටේ ජනතාව, අනාගතය සහ දරුවන් ජයග්‍රහණය කරවන්නයි. මෙතෙක් කල් මේ රටේ ජනතාව සමග ගැහැනුන් විදිහට අපිත් සොයා යමින් තිබූ පාර හැමෝම පැැහැදිලි කරගෙන තිබෙනවා. සැප්තැම්බර් 21 දක්වා ඒ ගමන ධෛර්යයෙන් යන්න ඕනෑ. ඒ වගේම අපේ යහළුවන්, නෑදෑයන්, සියලු දෙනාටම ජාතික ජන බලවේගයේ පවුලත් එක්ක එකතු වෙන්න ඕනෑ කියලා ආදරයෙන්, ආරාධනා කරන්න ඕනෑ. මේ දිස්ත්‍රික්කයේ කර්මාන්ත ගණනාවකට විභවයක් තිබුණාට ආදරණීය අම්මලා වැඩිපිරිසක් ඉන්නේ මැදිපෙරදිග රැකියාවලයි. සහෝදරියන් වැඩි පිරිසක් ඉන්නේ විදේශ රැකියාවලයි. සැමියන් විශාල පිරිසක් ඉන්නේ විදේශ රටවලයි. එහෙම නැත්නම් නිදහස් වෙළඳ කලාපයේ කුකුල් පැටවුන් වගේ කාමරවලට ගාල් කර තිබෙනවා. අපි හැමෝම මේ දක්වා විඳි දුක් අවසන් කර, ලස්සන රටක් හදන්න අපි හැමෝම එක්වෙන්න ඕනෑ.