(-Colombo, December 17, 2024-)
சீன பொதுமக்கள் அரசியல் ஆலோசனை சம்மேளனத்தின் (CPPCC) தேசியக் குழுவின் உப தலைவர் Qin Boyong அவர்கள் டிசம்பர் 17ம் திகதி, பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் வைத்து, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார்.
Qin Boyong உள்ளிட்ட தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், இரு நாடுகளுக்குமிடையில் நீண்டகாலமாக காணப்படும் நட்புறவை வரவேற்றதுடன் இரு தரப்பு தொடர்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் கவனம் செலுத்தினார். நோய்க்கட்டுப்பாடு, நிலையான அபிவிருத்தி மற்றும் பல்துறைகளின் வர்த்தக மற்றும் கைத்தொழில் தொடர்புகளை வலுப்பத்துவது தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong, பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹாவத்த, பிரதமரின் ஊடக செயலாளர் விஜிதா பஸ்நாயக்க, வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசியா தொடர்பான பணிப்பாளர் நாயகம் எஸ்.ருவந்தி தெல்பிட்டிய மற்றும் குறித்த பிரிவின் பணிப்பாளர் உதானி குணவர்தன உள்ளிடட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.