Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“எமது நாட்டின் இளைஞர்களின் கைகளில் அரசியல் சுக்கான் கைளிக்கப்படவேண்டும்.” -தேசிய மக்கள் சக்தியியன் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(-Colombo, June 02, 2024-)

இன்றளவில் பாதகமான வானிலை காரணமாக அனர்த்த நிலைமையொன்று உருவாகி இருக்கின்றது. ஒருசில பிரதேசங்களில் மக்கள் அகதிகளாகி இருக்கிறார்கள். அதைப்போலவே உயிரிழப்புகளும் பதிவாகி உள்ளன. மழை காரணமாக உயிரிழந்த மற்றும் நிர்க்கதி நிலைக்குள்ளாகிய மக்களுக்கு தேசிய மக்கள் சக்தி என்றவகையில் எமது பக்கத்தில் இருந்து உதவியளிக்க, ஒத்துழைப்பு வழங்க எமது நிவாரண சேவை செயலணிகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. வெள்ளப்பெருக்கு காரணமாக ஒருசில பிரதேசங்களுக்கு செல்லமுடியாமல் இருக்கின்றது. வெள்ளப்பெருக்கினால் உயிரிழக்கவும் இவ்வளவு பெருந்தொகையானோர் இடம்பெயரவும் கூடாது. மழை இயற்கையானது. ஆனால் விபத்துகள் இயற்கையானவையல்ல. எமது நாட்டின் ஆட்சியாளர்கள் நீண்டகாலமாக கடைப்பிடித்த தவறான அபிவிருத்திக் கொள்கைகளின் பெறுபேற்றினைத்தான் நிகழ்கால தலைமுறையினர் அனுபவித்து வருகிறார்கள். உலகில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தினால் இவ்வாறான ஆபத்துகளை முன்கூட்டியே இனங்கண்டு, மழை எப்பகுதிகளுக்கு அதிகமாக கிடைக்கின்றது, எந்தப் பிரதேசங்களுக்கு வெள்ளப்பெருக்கு அபாயம் நிலவுகின்றது என்பதை எதிர்வுகூற முடியும். இவ்விதமாக இனங்கண்டு இந்த அனர்த்தங்களை குறைத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. தரவுகளையும் தகவல்களையும் பெற்றுக்கொள்ளக்கூடிய தொழில்நுட்பம் முன்னேற்றமடைந்துள்ளது. எனினும் எமது நாட்டில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறியுள்ளார்கள். இந்த அனர்த்தங்கள் எமக்கு உரத்தகுரலில் கூறுவது இந்த நாட்டை மாற்றியமைக்க வேண்டுமென்ற செய்தியையாகும்.

இங்கே இருப்பவர்கள் மிகவும் பலம்பொருந்திய அழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய இளைய தலைமுறையினராவர். இந்த தலைமுறையினர் உலகத்திற்கு பாரிய செய்தியையும் அனுபவத்தையும் பெற்றுக்கொடுக்கக்கூடியவர்களாவர். எமது பழைய அரசியல்வாதிகளுக்கும் அரசியல்வாதிகளின் கொள்கைகளுக்கும் பலமான தாக்குலை நடாத்தியிருக்கிறார்கள். இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் அண்மைக்கால வரலாற்றின் மிகப்பெரிய இயற்கையான மக்கள் எழுச்சி இடம்பெற்றது. கடந்த பல தசாப்தங்களில் எந்தவோர் இடத்திலும் மக்கள் தன்னிச்சையாகவே ஒழுங்கமைந்து வீதியில் இறங்கி அதன் ஆட்சியாளர்களை விரட்டியடிக்கவில்லை. மத்தியகிழக்கு நாடுகளில் ஒருசில சம்பவங்கள் இடம்பெற்றாலும் அவை உள்நோக்கங்கள் மற்றும் மறைமுகமான இடையீடுகளின்படியே இடம்பெற்றன. எமது நாட்டில் மக்கள் தன்னிச்சையாகவே எழுச்சிபெற்றார்கள். இந்த மக்களை விழித்தெழச் செய்விப்பதில் பாரிய செயற்பொறுப்பினை ஆற்றியவர்கள் நிகழ்கால இளைஞர் தலைமுறையினராவர். நிகழ்கால உலகம் எங்கள் காலத்தில் நிலவிய தலைமுறையல்ல. 1995 இல் இருந்து 2009 வரை 15 வருட காலத்திற்குள் பிறந்த தலைமுறையினரை இசெட் தலைமுறையினர் என நாங்கள் அழைக்கிறோம். அதற்குப் பிற்பட்ட தலைமுறையினரை அல்ஃபா தலைமுறையினர் என அழைக்கிறார்கள். எமது தலைமுறையினர் எக்ஸ் தலைமுறையினர் 1965 – 1979 இற்கு இடையில் பிறந்தவர்களாவர். இங்கு குழுமியுள்ள பெரும்பகுதியினர் இசெட் தலைமுறையைச் சேர்ந்தவர்களாவர். எமது நாட்டில் இருக்கின்ற 25 இலட்சம் குடும்ப அலகுகளில் 30 இலட்சம் குடும்பங்களில் இசெட் தலைமுறையைச் சேர்ந்த வாலிபனோ யுவதியோ அடங்குகிறார்கள்.

அவர்களின் எதிர்பார்ப்புகள் வித்தியாசமானவை, வீட்டுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய டிஜிட்டல் உலகத்தில் வாழ்பவர்களாவர். அந்த தலைமுறையினர் எமது தலைமுறையினருக்கு இருந்த மட்டுப்படுத்தப்பட்ட தேவைகள் மற்றும் சிறிய உலகத்தைப் பார்க்கிலும் மிகவும் வித்தியாசமானவர்களாக மாறியிருக்கிறார்கள். பேனா நண்பர்கள், வானொலியில் நேயர்களின் வேண்டுகோள்கள், தபால் அட்டைகள் என்பவற்றை அடிப்படையாகக்கொண்ட தலைமுறையினரில் இருந்து மாறுபட்டு டிஜிட்டல் உலகில் சஞ்சரிக்கிறார்கள். எமது தலைமுறையினர் காலையில் எழுந்து தேநீர் பருகுகிறார்கள்: அதற்குப் பதிலாக உங்கள் தலைமுறையினர் முதலில் போஃனைக் கையில் எடுக்கிறார்கள். தகவல்கள் உங்களை வேகமாக வந்தடைகின்றன. எமக்கு வடிகட்டிய தகவல்களே கிடைத்தன. செய்தித்தாள்களில் கிடைக்கின்ற தகவல்களுக்கு “ஆசிரியருக்கு கடிதம்” அனுப்புவதன் மூலமாகவே பிரதிபலிப்புச்செய்ய முடிந்தது. உங்களுக்கு தகவலொன்று கிடைக்கும்போதே உங்களால் பிரதிபலிப்புச்செய்ய முடியும். நாங்கள் எங்கள் இளமைப் பருவத்தை ஒரு சிறிய உலகில் கழித்தபோதிலும் நீங்கள் அகல்விரவான உலகில் கழிக்கிறீர்கள். 2022 இன் இளைஞர் எழுச்சிக்கு இந்த டிஜிட்டல் உலகமே அடிப்படையாக அமைந்தது. ஆனால் அந்த போராட்டத்தில் நிலவிய உண்மையான ஆன்மீக பிணைப்பும் உங்கள்மீது கொண்டிருந்த வளர்ந்துவருகின்ற இளைஞர் தலைமுறையினரின் எதிர்பார்ப்புகளை கவலைக்கிடமான அந்தத்தை நோக்கி கொண்டுசென்றது. உங்கள் தலைமுறையினர் அரசியல் கட்சிகளுடன் நெருக்கமாக பின்னிப்பிணைந்திராவிட்டாலும் எமது பரம்பரையினரைவிட நோக்கங்களால் அரசியலுடன் கடப்பாடுகள் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் சாதகமான அரசியலின் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

சட்டம் நியாயமாக அமுலாக்கப்படுகின்ற, களவுகள் இடம்பெறாத இராச்சியமொன்றை எதிர்பார்த்தல், நியாயமான சமூகமொன்றைப் போன்றே முனைப்பான பொது அரசியல் தேவையில் ஈடுபட்டுள்ளமையாலேயே போராட்டத்திற்காக உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இளைஞர் தலைமுறையினரின் குமுறிக்;கொண்டிருக்கின்ற வேதனைகளிலிருந்து உருப்பெற்ற போராட்டத்தை ஆட்சியாளர்கள் போதைத்தூள்காரர்களின் வேலையென்றே அழைத்தார்கள். இந்த ஆட்சியாளர்கள் பாடமொன்றைக் கற்றுக்கொள்வதாயின் போராட்டத்தின் உட்பொருளிலிருந்தே கற்றுக்கொண்டிருக்க வேண்டும். எனினும் அவர்கள் முட்டாள்த்தனமாக, வன்மம்சார்ந்ததாக போதைத்தூள்காரர்களின் எழுச்சி என அழைத்தார்கள். மேலும் இதனை விபச்சாரத் தொழில் புரிபவர்களின் எழுச்சி என்றே அழைத்தார்கள். ஆகக்குறைந்தது அத்தகைய பாரிய மக்கள் எழுச்சியிருந்தும்கூட இந்த ஆட்சியாளர்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. தொலைதூரக் கிராமத்தில் வசித்தாலும் கோல்பேஸ் போராட்டத்துடன் ஆன்மீகப் பிணைப்பு நிலவியது. ஆட்சியாளர்கள் குறைந்தபட்சம் அந்த ஆன்மீகத் தொடர்பினைக்கூட விளங்கிக்கொள்ளாமல் தமது பலத்தைப் பிரயோகித்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட முயற்சி செய்தார்கள். பிரசன்ன ரணவீர விமான நிலைய ஊழியரைத் தாக்கியமை, அமைச்சர் தொண்டமான் நிறுவனமொன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்து நிருவாகத்தினரை அச்சுறுத்தியமை மூலமாக அவர்களின் பலத்தை தற்காலிகமாக நிறுவி பழைய மிருகத்திற்கு வெளியில்வர இடமளித்துள்ளார்கள்.

மக்களிடமிருந்து கொள்ளையடித்த சொத்துக்களை மீளவும் கையப்படுத்த வேண்டுமென்ற போராட்டக் கோஷமொன்று போராட்டத்தில் நிலவியது. அதைப்போலவே சட்டம் சமமானதாக அமுலாக்கப்படாமை அமைச்சர் டயான கமகே மூலமாக நன்றாகத் தெளிவாகின்றது. அவருக்கு குடியுரிமை கிடையாதென்பது டயனாவுக்கே நான்றாகத் தெரியும். அவ்வாறிருக்கையில் பாராளுமன்றத்திற்கு வந்து இராஜாங்க அமைச்சராக பதவிவகித்தமை சட்டத்திற்கு மேலாக இருக்கிறோம் என்று உணர்வுடனேயே. உங்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டால் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளாவீர்கள். எனினும் அவருக்கு ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு இருந்தது. நான்கு வருடங்களாக பாதுகாத்தார். ஒரு மிஸ் ஃபயர் மூலமாகவே தண்டனை கிடைத்தது. டயனாவிற்கு குடியுரிமை கிடையாதென்பதை இரண்டாவதாக அறிந்தவர் ரணில் ஆவார்.

அன்றைய எழுச்சியில்; நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிரான அபிப்பிராயமொன்று நிலவியது. இப்போது மீண்டும் வேகமாக இலாபமீட்டுகின்ற அரச நிறுவனங்களை உள்ளிட்ட நாட்டின் சொத்துக்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். எமது ஐவு தொழிற்றுறையையே ஆபத்தில் இலக்காக்கி இலாபத்தில் இயங்குகின்ற ரெலிகொம் நிறுவனத்தை விற்கப் போகிறார்கள். தற்கால ஆட்சியாளர்கள் இலாபமீட்டுகின்ற காப்புறுதிக் கூட்டுத்தாபனம், கால்நடை வளங்கள் சபையின் இருபத்தெட்டாயிரம் ஏக்கர் காணி, இலாபமீட்டுகின்ற கேஸ் கம்பெனியை விற்கப் போகிறார்கள். அதிலிருந்து தெளிவாவது ஊர் வழக்கில் கூறுவதாயின் கல்லில் அடித்தும் உருப்படியாக்க முடியாதென்பதாகும்.

அன்றைய 2022 எழுச்சியிருந்து பாடம் கற்றுக்கொள்வதாயின் அந்த எழுச்சியுடன் இணையாகச் பயணிக்கின்ற அரசியலுக்கு செல்லவேண்டியிருந்தது. எனினும் அந்த அரசியல் தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே இருக்கின்றது. 2022 போராட்டத்திலிருந்து பாரிய அனுபவத்தைப் பெற்றாலும் அது முடிவானதல்ல. எதிர்வரும் தேசிய பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக செயலாற்றுவது அதன் இரண்டாம் கட்டமாகும். எதிர்காலம் இருப்பது இசெட் மற்றும் அல்பா தலைமுறையினரின் கைகளில் தான். ஏதிர்காலத்திற்காக அரசியல் நோக்கங்கள் வரிசைப்படுத்தப்படல் வேண்டும். விசேட அறிவையும் திறமையையும் அன்றைய தலைமுறையினரை விட நீங்கள் சேர்த்துக் கொண்டுள்ளீர்கள். அன்று ஒரு தங்கச் சங்கிலியை வாங்குவதற்கு, மோதிரம் ஒன்றை செய்து கொள்வதற்காக பணத்தை சேகரித்துக்கொண்ட நோக்கத்திற்காக காமண்ட் பெக்டரி ஒரு தீர்வாக அமைந்தது. இன்று கல்வி மட்டத்தில் உயர்வடைந்து தொழில்சார் மட்டத்தை அடைந்த வித்தியாசமான இளைஞர்களே இருக்கிறார்கள். உலகத்திலுள்ள புதிய மாற்றங்களை உறிஞ்சி எடுத்துக்கொண்ட வித்தியாசமான வாழ்க்கை நோக்கங்கள் உங்களுக்கு இருக்கின்றன. அன்று இருந்த தொழில் இன்று உங்களுக்கு ஒத்துவராத காரணத்தினால் காமண்ட் பெக்டரிகளில் வெற்றிடங்கள் நிலவுகின்றன. எனினும் இளைஞர்களுக்கு தொழிலும் கிடையாது. அதற்கான காரணம் இளைஞர்கள் வசிக்கின்ற நிகழ்கால உலகத்திற்கு அந்த வெற்றிடங்கள் பொறுத்தமானவை அல்ல. காமண்ட் பெக்டரிகளில் கேட்கின்ற ஆரம்ப நிலை உழைப்புக்குப் பதிலாக அறிவும் அனுபவமும் கொண்ட வித்தியாசமான உழைப்புத் தேர்ச்சியே அவர்களிடம் நிலவுகின்றது.

இளைஞர் தலைமுறையினர் நிராகரித்த பொருளாதாரமே இந்த நாட்டில் நிலவுகின்றது. இளைஞர் தலைமுறையினர் மாறிய வேகத்திற்கு இணையாக பொருளாதாரம் மாற்றம் அடையவில்லை. அதனால் இந்தப் பொருளாதாரத்துடன் இணைந்து கொள்ளாத பெருந்தொகையான இளைஞர்கள் வெளியில் இருக்கிறார்கள். அந்த இளைஞர்களின் சிந்தனைகள், எதிர்பார்ப்புகள், வாழ்க்கை பாங்குகளுக்கு நேரொத்ததாக சீராக்கப்பட்ட பொருளாதாரத் திட்டமொன்றை உருவாக்குவதே எமது நோக்கமாகும். 2030 அளவில் 45 மில்லியன் மென்பொருள் பொறியியலாளர்கள் உலகத்திற்கு தேவைப்படுவார்கள். அதனோடு தொடர்புடைய திட்டங்களுக்கு இளைஞர்களை கொண்டு செல்வதற்கான வழிவகைகளை ஆட்சியாளர்கள் வகுத்துள்ளார்களா? அவ்வாறு இடம் பெறாமையால் எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற தன்மையில் பாதிக்கப்பட்டுள்ள, நாட்டை கைவிட்டுச் செல்லும் நோக்கத்தைக் கொண்ட இளைஞர் தலைமுறையினரே தற்போது இருக்கிறார்கள். எனினும் உங்களின் விருப்பு வெறுப்புகள், எதிர்பார்ப்புகள், பாணிகளுக்கு நேரொத்ததாக அமைகின்ற சினிமா, இசை, விளையாட்டுக்கள் சம்பந்தமான திட்டங்கள் தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே இருக்கின்றன. நவீன உலகத்துடன் கைகோர்த்துச் செல்கின்ற இளைஞர் தலைமுறையினரின் நோக்கங்களை ஈடேற்றுவது தேசிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும். நாங்கள் தற்போது உலகில் மிகவும் ஆரம்ப நிலை உழைப்புச் சந்தையையே இன்றளவில் கைப்பற்றிக் கொண்டுள்ளோம். இந்த தலைமுறையைச் சேர்ந்த பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்மாணிப்பதற்கான உண்மையான தேவை எமக்கிருக்கின்றது.

அதேபோலவே மரபு ரீதியான பிரபுக்கள் அரசியலை முன்னெடுத்து வருகின்ற குடும்ப அரசியலை இளைஞர் தலைமுறையினரின் கைகளுக்கு மாற்ற வேண்டியுள்ளது. ஐ.ம.ச. அல்லது வேறு எவரேனும் அத்தகைய பலத்தை இளைஞர் தலைமுறையினருக்கு வழங்கமாட்டார்கள். சஜித் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் அனைவரும் முந்திய தலைமுறையினர்களின் மைந்தர்களாவர். மறு பக்கத்திலிருப்பவர்கள் மைந்தர்களின் சேர்க்கையாவர். எமது இளைஞர்களை அவர்கள் போஸ்டர் ஒட்டுவதற்காகவும் கென்வசிங் போவதற்காகவும் மாத்திரமே ஈடுபடுத்துவார்கள். தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த நாங்கள் எவருமே பாரம்பரிய அரசியல் குடும்பங்களிலிருந்து வருபவர்களல்ல. இந்த நாட்டை மாற்றியமைப்பதற்காக புதிய அரசியல் எதிர்பார்ப்புக்களை தெரிவுசெய்து கொண்டவர்கள் மாத்திரமே தேசிய மக்கள் சக்தியில் இருக்கிறார்கள். அவர்களின் கையில் இருக்கின்ற பெட்டனை எடுத்து உங்கள் கைகளில் கொடுக்கின்ற செயற்பாட்டினை நாங்கள் செய்து வருகிறோம். மிகவும் குறுகிய காலத்தில் நாங்கள் அந்த பெட்டனை உங்களின் கையில் கொடுத்து நீங்கள் நாட்டை கட்டியெழுப்புகின்ற விதத்தை பார்த்து மகிழ்ச்சியடைய எதிர்பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்கள் எளிதில் அதிகாரத்தை கைவிட மாட்டார்கள். அவர்கள் கொண்டுள்ள குடும்ப அதிகாரத்தையும் அரசாங்க அதிகாரத்தையும் பயன்படுத்தி அரசியல் பலத்தை உடும்புப் பிடியாக வைத்துக்கொள்ள அவர்கள் எத்தனிக்கிறார்கள். மகனுக்கு பெட்டனை கையளிப்பதற்கான எல்லா வேலைகளையும் தகப்பன் செய்வார். அப்படியானால் நாங்கள் மல்லுக்கட்டி இந்த பெட்டனை கைமாற்றிக்கொள்ள எதிர்வரும் தேசிய தேர்தலை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

அதிகாரத்தை கைமாற்றிக் கொள்ள உகந்த தருணம் வரும்வரை தெம்புடன் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டால் எனது வாழ்க்கையில் 35 வருடங்கள் அதனை பிடித்துக்கொண்டிருந்தேன். அவதூறுகள், அவமதித்தல், குற்றச்சாட்டுகள், மக்களால் நிராகரிக்கப்படுதல், 3 வீதம் வரை வீழ்த்தியமை எல்லாவற்றுக்கும் மத்தியில் தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கும் பணியை கடந்த காலம் பூராவிலும் செய்து வந்திருக்கிறோம். தற்போது காலம் கனிந்துள்ளது. முதலில் நடாத்தப்படுவது ஜனாதிபதி தேர்தலையா, பொதுத் தேர்தலையா என்பதை தெரிவு செய்ய முடியாத அளவுக்கு ஆட்சியாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மொட்டுக் கட்சிக்கு வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்து கொள்ள முடியாமல் இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா? என்பதை தீர்மானிக்கமுடியாத நிலைமை உருவாகியிருக்கிறது. மரபு ரீதியாக அதிகாரத்தில் இருக்கின்ற அரசாங்கம் ஒன்றுக்கு பின்னர் எதிர்க் கட்சித் தலைவரின் தலையில் கிரீடம் விழுந்த காலம் இப்போது மலையேறிவிட்டது. அதனால் அவர்கள் பாரிய மன அழுத்தத்திற்கு இலக்காகியுள்ளார்கள். பாடசாலை பிள்ளைகளின் முன்னிலையில் பேசுகின்ற விடங்களைப் பார்த்தால் அவர்களின் மன அழுத்தம் தெளிவாகின்றது. எதிhக்;கட்சித் தலைவர் ஒரு கோமாளியாக மாறிவிட்டார்.

குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களாகிய உங்களின் பலம் இந்த கற்பாறையை விட உறுதியானதென நாங்கள் நம்புகிறோம். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புத்துணர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் வெற்றியை சுவைத்து சிரித்த முகத்துடன் இந்த மாற்றத்திற்கு பங்களிப்புச் செய்வோம். அனைவருக்கும் வெற்றி கிட்டட்டுமென பிரார்த்திக்கிறோம்.