Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

தோழர் அநுர குமார திசாநாயக்க தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்தார்…

(-Colombo, June 11, 2024-)

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க இன்று (11) முற்கபல் இலங்கை தமிழ் அரசு கட்சியின் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

அதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடுவதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

இந்தக் கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட தோழர்கள் இணைந்துகொண்டிருந்தனர்.

நாட்டின் நிகழ்கால பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பாக மக்கள் முகம்கொடுத்து வருகின்ற சிக்கல்கள் குறித்தும் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதன் தேவை குறித்தும் இதன்போது ஆழமாக கலந்துரையாடப்பட்டது.