புளொட் தலைவர் திரு. சித்தார்த்தன் எம்.பி.யை அவரது இல்லத்தில் வைத்து (14.02.2024) கட்சியின் இரண்டு முக்கிய பிரமுகர்களுடன் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான தோழர் பிமல் ரத்நாயக்க, தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் சந்தித்தனர். தற்போதைய அரசியல் நிலமைகள் குறித்தும், தேர்தல்கள், பொருளாதார நெருக்கடி மற்றும் வடக்கு மற்றும் தெற்கின் மக்கள் இயக்கங்களின் வரலாறு குறித்தும் விவாதித்தனர். இது இரண்டு பிரதிநிதிகளுக்கு இடையே ஒரு சுமுகமான மற்றும் புரிதலுடனான உரையாடலாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.