(-Matara, May 01, 2024-)
தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு கொண்டாடுகின்ற இறுதி மே தினக் கூட்டம் யாழ்ப்பாணம், அநுராதபுரம், கொழும்பு மற்றும் மாத்தறையில் மிகவும் பெருமையுடன் நடாத்தப்படுகின்றது. அடுத்த வருடத்தின் மே தினம் கொண்டாடப்படுவது தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழாகும். ஆயிரத்து எண்ணூற்றி எண்பத்தாறில் அமெரிக்காவின் ஹேமார்க்கற் நகரத்தில் எட்டு மணித்தியால வேலை நாளைக்கோரி வெள்ளைக்கொடியேந்தி பேராட்டம் நடாத்திய நிராயுதபாணிகளான மக்களுக்கு எதிராக அடக்குமுறை பிரயோகிக்கப்பட்ட தினத்தை அடிப்படையாகக்கொண்டு உலகமக்கள் மேதினத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆட்சியாளர்களும் இந்த தினத்தைக் கொண்டாடி பல்வேறு கூத்துக்களை நடாத்துகிறார்கள். ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சிக் கும்பல், ஐக்கிய மக்கள் சக்தியின் எஞ்சியுள்ள குழுவினர் மற்றும் மொட்டின் குழுவினருடன் மே தினத்தைக் கொண்டாடுகின்ற விதத்தை எண்களால் வெளிப்படுத்தினாலும் தேசிய மக்கள் சக்தியின் பலத்தை வெளிக்காட்டி திசைகாட்டியைச் சேர்ந்த எங்களுக்கு போட்டி நிலவுவது எம்மிடமே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரணிலுடனோ சஜித்துடனோ வேறு எவருடனோ எமக்கு போட்டியில்லை. எமக்கு இருப்பது அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு இந்த தாய்நாட்டை செல்வந்த நாடாக்குகின்ற மற்றும் அழகுபடுத்துகின்ற போட்டி மாத்திரமே.
யாழ்ப்பாணத்திற்கு, அநுராதபுரத்திற்கு, கொழும்பிற்கு மற்றும் மாத்தறைக்கு ஒன்றுதிரண்டுள்ள இலட்சக்கணக்கான மக்கள் ஏகோபித்த குரலில் கூறிநிற்பது இந்த ஊழில்மிக்க கொடிய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமென்பதே. ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றி தெரிவிக்கின்ற மே தினக் கூட்டமொன்றை ஐக்கிய தேசிய கட்சி நடாத்துகின்றதாம். 1980 யூலை வேலைநிறுத்தத்தின்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஒருஇலட்சம்பேரை வீதியில் இறக்க ரணில் விக்கிரமசிங்க கையை உயர்த்தியதற்காகவா அவருக்கு நன்றி தெரிவிக்கப் போகிறார்கள்? அதைப்போலவே மத்திய வங்கியை கொள்ளையடித்தாலா? நேற்று இரவு எண்ணெய் விலையைக் குறைத்ததாக இன்று வீம்புவார்த்தை பேசுவதாலா? அதைப்போலவே பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக கெசற் வெளியிட்டதாலா? ரணில் விக்கிரமசிங்க என்னதான் செய்தாலும் விரட்டியடிக்கப்படவேண்டிய ஓர் ஆட்சியாளனாக மாறிவிட்டார். மக்களை ஏமாற்றி அரிசி பங்கிட்டாலும் காணி உறுதிகளை வழங்கினாலும் மீண்டும் ஏமாறப்போவதில்லை என மக்கள் சபதம் செய்துவிட்டார்கள். தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி மக்கள் குவிந்துள்ளதால் ரணில் விக்கிரமசிங்க பயந்துள்ள அளவே அதன் மூலமாக வெளிக்காட்டப்படுகின்றது. இன்று திரட்டியதைப்போன்றே மென்மேலும் இலட்சக்கணக்கில் மக்களை ஒன்றுதிரட்டி இந்நாட்டில் மக்கள் நேயமுள்ள ஆட்சியைக் கட்டியெழுப்ப ஒருவர்போல் ஒருங்கிணைவோம்.
இன்னும் ஓரிரு வாரங்களில் சஜித்தின் ஆத்தல்களைப் பார்க்க இயலுமென்று ஒருசிலர் கூறுகிறார்கள். எனினும் இது ஆத்தல் எடுப்பதற்கான தருணமன்று. எழுபத்தாறு வருடங்களாக நாட்டை வங்குரொத்து அடையச் செய்வித்த அனைத்து ஆட்சியாளர்களையும் வருகின்ற சனாதிபதி தேர்தலில் விரட்டியப்பதற்கான வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. நாட்டையும் மக்களையும் மறுமலர்ச்சி யுகமொன்றுக்கு கொண்டுசெல்கின்ற காலகட்டத்தில் மக்கள் சக்தியை வழங்குகின்ற வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களுடனும் உலகவாழ் மக்களுடனும் ஒன்றுசேர்ந்து நாங்களும் கொண்டாடுகிறோம். மே தினத்தைக் கொண்டாடுவதற்கான தார்மீக உரிமையைக் கொண்டுள்ள உழைக்கும் மக்கள், கமக்காரர்கள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் அர்த்தமுள்ள நோக்கினைக் கொண்டதாக கொண்டாடுவதற்கான வாய்ப்பினை தேசிய மக்கள் சக்தி மாத்திரமே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. நாட்டை வெற்றிபெறச் செய்விக்கின்ற தீர்வினைக் கொண்டு வருகின்ற மே தினக் கூட்டத்தினால் புதிய பலத்தையும் ஊக்கத்தையும் பெற்று நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அணிதிரள்வோம்.
“வரலாற்றுரீதியான மாற்றத்திற்கான தீர்மானகரமான தினமென்றவகையில் இன்றைய தினம் வரலாற்றில் சேர்கின்றது.”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய-
இலட்சக்கணக்கான மக்களின் முன்னிலையில் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகின்ற எனது முதலாவது தருணம் இதுவாகும். என்னால் இந்த மே தினக் கூட்டத்தை ஒருபோதுமே மறந்துவிட முடியாது. உங்களுக்கும் அப்படித்தான் என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு காரணங்களால் வரலாற்றுரீதியான தனித்துவமான ஒரு கூட்டமாக இது மாறுகின்றது. கடந்த காலத்தில் மே தினக் கூட்டங்களை நடாத்தி, பல்வேறு போராட்டங்களை நடாத்தி, பிரஜைகளின் போராட்டத்தின் பின்னர் அனுபவங்களை சேர்த்துக்கொண்டு எதிர்காலம் பற்றி மிகுந்த திடசங்கற்பத்துடன் ஒரு நோக்கம் கொண்டவர்களாகவே நாங்கள் இங்கு குழுமியுள்ளோம். இந்த நாட்டுக்கு சமூகத்திற்கு மாற்றமுள்ள தருணமொன்று உருவாகின்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் மாற்றியமைப்பதற்காகவும் நாமனைவரும் ஒன்றுசேர்ந்துள்ளோம். கூட்டுணர்வுடன், மனச்சாட்சி நன்றாகவே விழிப்படைந்து கூர்மையடைந்த மக்கள் பலமே இங்கு ஒன்றுசேர்ந்துள்ளது. இன்றைய தினத்தில் வரலாற்றில் புதிதாக எழுதப்படுகின்ற புரட்சிகரமான போராட்டக்காரர்கள் குழுமமொன்று ஒன்று சேர்ந்துள்ளது. மருத்துவர்கள், தாதியர், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், கமக்காரர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சம்பளம் பெறுகின்ற மற்றும் பெறாத நாமனைவரும் இந்நாட்டின் மிகவும் அகல்விரிவான மக்கள் பலத்திற்காக ஒன்றுசேர்ந்திருக்கிறோம். வாழ்க்கையில் முதல்த்தடவையாக மே தினக் கூட்டமொன்றில் பங்கேற்றுள்ளவர்கள் நாட்டை மாற்றியமைக்கின்ற மக்கள் சக்திக்காக இடையீடு செய்திருக்கிறோம்.
அதைப்போலவே பல வருடங்களாக போராடிய, போராட்டங்களில் ஈடுபட்ட, அடிதடிக்குள்ளாகிய, எண்ணற்ற தோல்விகளை அனுபவித்த, அளவுகக்திகமாக இழிவுபடுத்தப்பட்ட, சமூகத்தில் ஏளனத்திற்கு இலக்காகி எனினும் தமது அரசியல் நோக்கங்களை கைவிடாமல் திடசங்கற்பத்துடன் அனைத்து தோல்விகளையும் தாங்கிக்கொண்டு வெற்றிகரமான தருணம்வரை இருந்த குழுவினர் இங்கே இருக்கிறார்கள். அவர்களின் பலமும் புதிதாக சேர்கின்றவர்களின் பலமும் காரணமாகவே இன்று கண்ணுக்கெட்டிய தூரத்தில் வெற்றி புலப்படுகின்ற இடத்திற்கு வந்திருக்கிறோம். இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு உயிர்கொடுக்கின்ற பெண்களும் எம்மத்தியில் வரலாற்றில் முதல்த்தடவையாக மே தினத்தில் பங்கேற்கின்றவர்களும் இந்த இடத்தில் இருக்கிறார்கள். பெருந்தோட்டங்களில், ஆடைத்தொழிலகங்களில் போன்றே வெளிநாடுகளில் உழைக்கின்ற பெண்கள் இந்நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பினை பலப்படுத்தி இந்த மே தினத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். அதைப்போலவே சம்பளம் பெறாமல் மனைப்பெண்களாக உழைக்கின்றவர்களும் வேறு பல துறைகளில் பணிபுரிகின்ற பெண்களும் எமது அரசியல் செயற்பொறுப்பினை ஈடேற்றுவதற்காகவே எம்மோடு இணைந்திருக்கிறார்கள். இந்த நாட்டின் முதுகெலும்பு பெண்களாகிய நாங்களே என்பதை நன்றாக மனதில்கொள்ளவேண்டும். உலகிற்கே எடுத்துக்காட்டாக அமைந்து இந்த நாட்டை மாற்றியமைக்கின்ற சக்தியின் சமபங்காளிகளாக நாங்கள் ஒரே மூச்சடன் ஒன்றிணைந்து இருக்கிறோம்.
பல தசாப்தங்களாக சிறிய கும்பலிடமே அதிகாரம் பொதிந்திருந்தது. மன்னர் காலத்திலும் அப்படித்தான். சிறந்த மன்னர்களின்கீழ் புரிந்த அபிவிரத்திப் பணிகளின் எச்சங்களை இன்றும் எம்மால் காணமுடிகின்றது. காலனித்துவ யுகத்தில் சிறிய கும்பலொன்று இந்நாட்டின் செல்வங்களை சூறையாடின. அந்த சூறையாடலுடன் தொடர்பட்ட உள்நாட்டுச் சிறிய கும்பலிடம் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டில் அதிகாரம் கைமாறியது. அன்று நிலவிய உலக நிலைமையின்படி இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் எமக்கு கிடைத்தாலும் இந்நாட்டின் பொதுமக்கள் அதிகாரத்தின் பங்காளிகாளக மாற்றிக்கொள்ளப்படவில்லை. ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தேழின் பின்னர் ஊழல், வன்முறை, இனவாதம் பிரயோகிக்கப்பட்டு எந்தவொரு கீழ்த்தரமான சதிவேலையையும் புரிந்து அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதை வாடிக்கையாக மாற்றிக்கொண்டார்கள். அதனை மாற்றியமைக்க முடியாது என பெரும்பாலானோர் சிந்திக்குமளவுக்கு இந்த ஊழல்மிக்க கும்பல் பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதற்கான பலம்பொருந்திய சக்தியைக் கட்டியெழுப்புகின்ற பங்காளிகளை இலட்சக்கணக்கில் இந்த கூட்டத்தில் நாங்கள் காண்கிறோம். இந்த மக்கள் பலத்தைக்கொண்டு நாங்கள் அரசாங்கத்தை அமைத்து வரலாற்றினை மாற்றியமைக்கின்ற மாற்றத்தின் பங்காளிகாளாக மாறியிருக்கிறோம். அதற்கு தலைமை வகிப்பவர்கள் நாங்கள் அனைவருமே. அந்த வரலாற்றுரீதியான மாற்றத்தின் தீர்மானகரமான நாளாக இன்றைய தினம் வரலாற்றில் சேர்கின்றது. அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு மனிதம் மீதான மட்டற்ற அன்பு கொண்டவர்களாக நாட்டைக் கட்டியெழுப்பகின்ற செயற்பொறுப்பு எமக்கு இருக்கின்றது. இந்த மாற்றத்திற்காக எமது உயிரைக்கூட அர்ப்பணிக்க நாமனைவரும் தயார் என்பதை நாங்கள் அறிவோம்.
அரசாங்கமொன்றை மாற்றுவதற்குப் பதிலாக பாரதூரமான மாற்றமொன்றைச்செய்ய அணிதிரண்டு இருக்கிறோம் என்பதை நாமனைவரும் அறிவோம். அதற்காக புதிதாக கற்றுக்கொள்ள, ஆய்வுகளை மேற்கொள்ள மேலோட்டமாகவன்றி ஆழமாக சிந்திக்க அனைவரும் தூண்டப்பட்டு இருக்கிறோம். அதற்காக ஒழுக்கமுள்ள அமைப்பாண்மைசார்ந்த சுற்றுச்சூழல் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இங்கு இருக்கின்ற அன்பு, மகிழ்ச்சி, புத்துணர்ச்சி, இந்த வலிமை வேறு எங்குமே கிடையாது. அதனை எவராலும் காப்பியடிக்கவோ தோற்கடிக்கவோ முடியாதென்பதை நாங்கள் அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறோம். நியாயமான, நேர்மையான, செல்வமிக்க, அன்புநிறைந்த ஒரு நாட்டுக்காக எதிர்வரும் சில மாதங்களில் திடசங்கற்பத்துடன் வெற்றியைநோக்கி வீறுநடை பயில அனைவருக்கும் பலமும் ஊக்கமும் கிடைக்கட்டுமாக.
“திசைகாட்டி இருப்பது சூழ்ச்சிகளால் வீழ்த்தக்கூடிய இடத்திலல்ல”
-மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா-
இன்னும் ஒருசில மாதங்களில் இந்நாட்டில் மக்கள்நேயமுள்ள ஆட்சியொன்றை நிறுவத் தயார் என்ற செய்தியை எடுத்துக்கொண்டு பல மாவட்டங்களிலிருந்து மாத்தறைக்கு வருகைதந்திருக்கின்ற அனைவருக்கும் முதற்கண் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மாத்தறை, கொழும்பு, அநுராதபுரம் மேதினக் கூட்டங்களில் பங்பேற்ற மக்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அடுத்த ஆரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தி நிறுவும் என்பதாகும். பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன் மாவட்ட மாநாட்டுத் தொடரைப்போலவே இளைஞர் மாநாடுகளை நடாத்துவதற்கான வாய்ப்பு கிடைத்த வேளையிலும் ஒரே குழுவினரை எல்லா இடங்களுக்கும் கொண்டுசெல்வதாக கூறினார்கள். வங்குரோத்துநிலை காரணமாக அவ்வாறு கூறியவர்களிடம் நாட்டின் மூன்று திகைளிலும் பரந்து வாழ்பவர்கள் ஒரே குழுவினரா என நாங்கள் இப்போது கேட்கிறோம். அதுதான் தேசிய மக்கள் சக்தியின் பலம், தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கை. நாங்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து பலவருடங்களாக கட்டியெழுப்பிய மாபெரும் மனிதக் குழுமமே இது. நாங்கள் எவ்வளவு பலம்பொருந்தியவர்கள் என எதிரிகள் கண்டுகொண்டிருக்கிறார்கள். மாத்தறை கடற்கரைப் பரப்பில் ஒரு இலட்ம் மக்களைப்போன்றே அநுராதபுரம் சல்காது மைதானமும் நிரம்பி வழிகின்றது. கொழும்பில் அவையனைத்தையும் விஞ்சிசென்ற குழுவினர் சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். 1886 ஆம் ஆண்டில் அப்போதிருந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையைப் பிரயோகித்தமையால் சர்வதேச தொழிலாளர் தினம் உருவாகியது. உரிமைகளைக்கோரி வீதியில் இறங்குகின்ற மக்களை அடக்கிய இந்நாட்டு ஆட்சியாளர்கள் இன்று மேதினத்தைக் கொண்டாடுகிறார்கள். ரணில் விக்கிரமசிங்கவின் மாமா 1987 மே தினத்தை தடைசெய்து நாராஹேன்பிற்ற அபயாராமய மீத துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு இருவரை படுகொலை செய்தார். அவர்களும் இன்று மே தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.
ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுண, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய எல்லாக் கட்சிகளும் காலாவதியாக மக்களிடமிருந்து பிரிந்துசென்று வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீழ்ந்துகொண்டிருப்பதென்பதும் வரலாற்றினை புதிதாக எழுதுகின்ற திடசங்கற்பம் கொண்ட முற்போக்கான மக்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்து உள்ளார்கள் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கு குழுமியுள்ள எவருக்கும் வாக்குறுதி அளித்து, சாராயம் வழங்கி, காசு கொடுத்து அழைத்து வரவில்லை. அனைவரும் வட்டார சபைகள் மட்டத்தில் நன்கொடைப் பத்திரங்கள் மூலமாக பணத்தைச் சேகரித்து ஒரு சாப்பாட்டுப் பொதியை எடுத்துக்கொண்டு சிரமங்களுக்கு மத்தியில் இந்த இடத்திற்கு வந்த இலட்சக்கணக்கான மக்களே இருக்கிறார்கள். அவர்களின் பயணத்தை திசைதிருப்ப எவராலும் முடியாது. கிராம மட்டதிலான அமைப்பாண்மை வலையமைப்பு என்றவகையில் திடசங்கற்பம்கொண்ட மக்கள் ஒரு நோக்கத்துடனேயே இங்கு வந்திருக்கிறார்கள். இவ்வளவு பெருந்திரளான மக்களை பங்கேற்கச் செய்வித்தும் ஒழுக்கமுள்ளவர்களாக நாட்டை மாற்றியமைக்கின்ற சக்தியாக புரிந்துணர்வுடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டைக் கட்டியெழுப்புகின்ற ஒழுக்கத்துடன் தொண்டு அடிப்படையில் செயலாற்றுகின்ற சக்தி திசைகாட்டி மாத்திரமே என்பதை நீங்களும் நாங்களும் நாமனைவரும் நிரூபித்திருக்கிறோம். இங்கெ இருப்பவர்கள் கற்பாறையையும் சாகுபடி செய்யக்கூடியவர்களே என்பதை செயலால் நிரூபித்த திடசங்கற்பம்கொண்ட மக்களாவர். இன்னமும் எம்மோடு இணைந்திராத மக்களை ஒருங்கிணைத்து வரலாற்றில் முதல்த்தடவையாக அரசாங்கமொன்றை நிறுவுவோம் என சபதம் செய்கின்ற மக்களே இங்கு குழுமி இருக்கிறார்கள்.
ஏகாதிபத்திய வல்லரசுகள், ஆட்சியாளர்கள் உலகம் பூராவிலும் உள்ள மக்களை பாதிப்பிற்கு உள்ளாக்கி எமக்கு உயிர்வாழப் பொருத்தமான சூழலற்ற நிலைமையே எமக்கு மரபுரிமையாகி இருக்கின்றது. ஒரு பக்கத்தில் காசு மேடுகள் குவிந்து வருவதோடு மறு பக்கத்தில் ஏழ்மைநிலை குவிந்துவருகின்றது. வறுமை, வசதியின்மை, வயிற்றுப் பசி, கலவியில் இருந்து அந்நியப்படுத்துதல், சுகாதார வசதிகள் இன்மை போன்றே போதைப்பொருட்கள் விரிவாக்கப்பட்ட ஓர் உலகத்திலேயே இன்று நாங்கள் வசிக்கிறோம். ஏகாதிபத்தியவாதிகள் தற்போது ஆயுதங்களை உற்பத்திசெய்து யுத்தத்தையும் உருவாக்குகிறார்கள். மறுபுறத்தில் ஓளடதங்களை உற்பத்தி செய்து அந்த ஓளடதங்களை விற்பனை செய்வதற்காக நோயாளிகளையும் உருவாக்குகிறார்கள். அதைப்போலவே பல மாதங்களாக பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேயல் தாக்குதல் நடாத்துகின்றது. இவவாறான கவலைக்கிடமான நிலைமைகளே உலகம் பூராவிலும் காணப்படுகின்றன. உலகின் இந்த கொடுமைநிலையை முடிவுக்குக் கொண்டுவருகின்ற போராட்டத்திற்காக திசைகாட்டியைச் சேர்ந்த நாமனைவரும் இருகைகளையும் உயர்த்தி ஒத்துழைப்பு வழங்குவதாக வெளிப்படுத்துகிறோம். பாலஸ்தீன மக்களுக்கு நாங்கள் இந்த மேதினத்திலும் ஒத்தழைப்பினை தெரிவித்துக் கொள்கிறோம்.
எழுபத்தாறு வருடங்களாக மக்களின் வாக்குகளால் நியமிக்கப்பட்ட ஆட்சியாளர்கள் கைமாறாக மக்களுக்கு திருப்பிக் கொடுத்துள்ளது வங்குரோத்து அடைந்த நாட்டையாகும். அந்த வங்குரோத்து அடைந்த நாட்டில் இந்நாட்டில் சிறியசிறிய தேர்தல் விளையாட்டுகள் தொடங்கப்பட்டுள்ளன. மக்களை நரகத்தில் வாழவைத்து தேர்தல் காலத்தில் அந்த நரகத்திற்கு சற்று இன்ரவெல் கொடுப்பதை இதுவரை காலமும் ஆட்சியாளர்கள் செய்துவந்தார்கள். தேர்தல் எதையாவது பங்கிட்டு, ஏழ்மையை விதைக்கின்ற ரணில் விக்கிரமசிங்காக்கள் இருபது கிலோ அரிசியை பகிர்கிறார். இந்த அரசியல் கலாசாரத்தை நாங்கள் மாற்றியமைத்திட வேண்டும். அதைப்போலவே மோசடி, ஊழல், விரயத்தை தடுத்து திருடர்களுக்கு தண்டனை வழங்கவும் வேண்டும். திருடிய ஒவ்வொரு சதத்தையும் மீளவும் அறவிட்டுக் கொள்ளவும் வேண்டும். அதற்காக இருக்கின்ற ஒரே சக்தி தேசிய மக்கள் சக்தி மாத்திரமே என்பதை நாங்கள் மக்களுக்கு உறுதியாகக் கூறுகிறோம். மக்கள் பிரதிநிதி என்றவகையில் இதுவரை நியமித்த உறுப்பினர்களும் அமைச்சர்களும் பொதுப்பணத்தை விரயமாக்கி மெய்ப்பாதுகாவலர்கள் புடைசூழ செல்கின்ற வீதிகளை அமைத்தாலும் மேலும் பொதுப்பணத்தைச் செலவிட்டு அமைச்சரின் கையால் நாடாவை வெட்டுகின்ற கலாசாரத்தை நாங்கள் முற்றாகவே மாற்றிடுவோம். இன்றளவில் பொலீஸின் அரைவாசிப்பேர் ஈடுபடுத்தப்பட்டிருப்பது கள்வர்களை பிடிப்பதற்காக அல்ல: கள்வர்களைப் பாதுகாப்பதற்காகவே. நாட்டின் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த பொலீஸாரும் வாகனங்களும் தட்டுப்பாடாகவே இருக்கின்றது. எனினும் பொலீஸாரையும் பொலீஸ் வாகனங்களையும் விடுவித்து மக்கள் சேவைக்காக ஈடுபடுத்துவோமென நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம். இந்த கலாசாரத்தை மாற்றியமைக்கின்ற பாரதூரமான செயற்பொறுப்பு எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய உற்பத்திப் பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்பவேண்டும். அதனை அரசாங்கத்தினால் தனித்து சாதிக்க முடியாது. தனியார் பிரிவையும் மக்களையும் இணைத்துக்கொண்டு உற்பத்திப் பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்பி அதன் பெறுபேறுகளை நியாயமானவகையில் மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். எமது நோக்கம் தொழில் முயற்சிகளை கையகப்படுத்துவதல்ல: நிலவுகின்ற தொழில் முயற்சிகளை பலப்படுத்தி தேசிய பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்புவதாகும். மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய வாழ்க்கைத் தரமொன்றைக் கட்டியெழுப்புவதற்காகவே எமக்கு பொருளாதாரமொன்று அவசியமாகின்றது. இந்த சமூகப் பேரழிவினை மாற்றியமைக்கின்ற ஆழமான மாற்றத்திற்கு அவசியமான தேசிய மறுமலர்ச்சிக்காக முழு நாடுமே அணிதிரட்டப்பட வேண்டும். மே தினத்திற்காக மக்கள் இங்கு வந்ததைப்போலவே நாட்டைக் கட்டியெழுப்பவும் அணிதிரட்டப்பட வேண்டும். இதற்காக மக்களை அணிதிரட்டி நாங்கள் பயணிக்கையில் இதுவரை அதிகாரத்தில் இருந்தவர்கள் பதற்றமடைந்து பல்வேறு சூழ்ச்சிகளை புரிந்துவருகிறார்கள். இதுவரை திருடிய பொதுச்சொத்துக்களை திசைகாட்டி ஆட்சியின்கீழ் மீளக்கையகப்படுத்துவதைப் போன்றே அந்த திருடர்களைத் தண்டிப்பதும் கட்டாயமாக இடம்பெறும். ஐக்கிய மக்கள் சக்தி இந்நாட்களில் திசைகாட்டியை தோற்கடித்து அவர்கள் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதாக மேடைகள்தோறும் கூறிவருகின்றது. அரசாங்கத்தை தோற்கடிப்பதாக கூறுவதில்லை. அதுமாத்திரமல்ல, தேசிய மக்கள் சக்திக்கு எதிராக புதிதாக பொய், அவதூறு கற்பிக்கவும் தொடங்கி உள்ளார்கள். பொய்யாக சவால் விடுக்கவும் தொடங்கி உள்ளார்கள்.
இந்த சவால்களுக்கு தினங்களை ஒதுக்கி நாங்கள் பதிலளித்தோம். எனினும் அந்த நாட்களுக்கு வருவதில்லை. அதனால் அவர்களை தினமொன்றை கூறுமாறு அறிவித்தாலும் அதற்கும் வருவதில்லை. அத்தகைய சிறியசிறியவற்றுக்காக பதலளித்துக்கொண்டு இருப்பதைவிட இந்த மே தினத்தில் நாங்கள் உங்களுக்கு பெரிய செய்தியொன்றைக் கொடுக்கவேண்டி உள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் மொட்டின் உயர்மட்ட தலைவர்களுடன் உளவுப்பிரிவைச் சேர்ந்த ஒருசிலரும் ஒன்றுசேர்ந்து திசைகாட்டியின் வெற்றியைத் தடுத்திட திட்டங்களை வகுத்துவருகின்றமை எமக்கு பதிவாகியுள்ளது. பொருட்களை பங்கிட்டு, இலஞ்சம் கொடுத்து, தேர்தலை பிற்பொட்டு திசைகாட்டியின் வெற்றியைத் தடுக்க இயலாதென்பதால் திசைகாட்டியை பிளவுபடுத்த பொய்யான செய்திகளை நிர்மாணித்த வருகிறார்கள். ஜே.வி.பி – என்.பி.பி. என இரண்டாகப் பிரிக்கின்ற பொய்யான செய்தியொன்றை அடுத்தவாரத்தில் பிரச்சாரம்செய்யத் தொடங்குவார்கள். எவரை பிரித்தாலும் திசைகாட்டியைச்சேர்ந்த எங்களைப் பிரிக்க முடியாதென்பதை உறுதியாக கூறிவைக்கிறோம். ஒரு பக்கத்தில் பிரச்சாரம்செய்ய திட்டமிட்டுள்ளார்கள், ஊர்களிலுள்ளவர்களை ஜே.வீ.பி. – என்.பி.பி. என இரண்டாகப் பிரிக்கத் திட்டமிட்டுள்ளார்கள். அதைப்போலவே மறுபுறத்தில் திசைகாட்டியின் நிருவாகத்தின்கீழ் ஜே.வீ.பி. ஐ சேர்ந்தவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக ஜே.வீ.பி. அல்லாதவர்களை பயமுறுத்துகின்ற பிரசாரத்தை அனுப்பிவைக்க திட்டமிட்டுள்ளார்கள். நாங்கள் நாங்கள் இருப்பது சதித்திட்டங்காளல் வீழ்த்தக்கூடிய இடத்தில் அல்லவென்பதை இந்த சதித்திட்டங்களுக்கு வலியுறுத்திக்கூறுகிறோம். திசைகாட்டி அடிமட்டத்தில், வட்டார மட்டத்தில் இருந்தே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. திசைகாட்டி அடிமட்டத்தில் இருந்தே கட்டியெழுப்பப்படுகின்றது. எதிரிகளுக்கு நாங்கள் கூறிக்கொள்வது திசைகாட்டியில் பிளவினை ஏற்படுத்துவது பற்றிக் கனவு காண்பதென்’றால். அது ஒரு பகல் கனவு மாத்திரமே. இந்த நாட்டைக் கட்டியெழுப்புகின்ற திடசங்கற்பத்துடன் தெம்புடன் முன்நோக்கி நகர்கின்ற ஒரே சக்தி திசைகாட்டி மாத்திரமே.
எம்மை பிளவுபடுத்துவதாகக் கூறினாலும் உண்மையாகவே பிளவுபடுவது யார்? இற்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்னர் அறுபத்தொன்பது இலட்சம் வாக்குகளைப்பெற்ற மொட்டுக்கு தற்போது என்ன நேர்ந்துள்ளது? டலஸ் கழன்றுபோய்விட்டார். லன்சாவை உள்ளிட் கழுவொன்று கழன்றுபொதய்விட்டது. வியத் மக கழன்றுபொய்விட்டது. எவர்கள் எவரையும் நாங்கள் எடுப்பதில்லை என்பதால் எம்மிடம் வருவதில்லை. நாட்டை நாசமாகக் பங்களிப்புச் செய்த எவரையும் திசைகாட்டியுடன் சேர்த்துக்கொள்வதில்லை எனும் உறுதிமொழியை நாங்கள் கொடுக்கிறோம். மொட்டடின் மற்றுமொரு பகுதியினர் சஜித்துடன், வேறோரு பிரிவினர் ரணிலுடன். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் எக்கச்சக்கமான வழக்கு, தலைவர்கள் கிடையாது. செயலாளர்களும் தலைவர்களும் ஒரு குழுவினரை நியமிக்கையில் மற்றுமொரு குழுவினர் தடையுத்தரவினைப் பெறுகிறார்கள். அரசியல்ரீதியாக அநாதைகளாகி விட்டார்கள். நாங்கள் தேசிய மக்கள் சக்தியைக் கட்டியெழுப்பியதாலேயே ஐக்கிய மக்கள் சக்தி எனப் பெயரிட்டார்கள். நாங்கள் பெண்கள் மாநாட்டினை நடாத்துகையில் அதனை அதனைக் காப்பியடிக்கிறார்கள். அந்த இடத்தில் ஐக்கியம் – மக்கள் – சக்தி மூன்றுமே கிடையாது. அங்கு ஒற்றுமையே கிடையாது. ரணில் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு நிதியங்களிலிருந்து சஜித்தின் கட்சியைச் செரந்து ஆறு, ஏழு பேருக்கு மாத்திரம் நாற்பது கோடியை வழங்கியுள்ளார். மேலம் சிலருக்கு பார் பேர்மிற் வழங்கப்பட்டுள்ளன.புதிய நாட்டை அமைக்கப் போவதாகக் கூறுகின்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் ஏற்கென்வே ரணிலிடமிருந்து பார் பேர்மிற் பெற்றுள்ளார்கள். கண்டிப் பக்கம் இருக்கின்ற ஒருவர் இரண்டு பார் பேர்மிற்றுகளையும் இரண்டு கோடிக்கு விற்றுவிட்டார். அதற்கிடையில் விஜயமுனி த செய்ஸா சுயாதீனமாக இருக்கிறாராம். ஐக்கிய மக்கள் சக்தியின் துண்டுகள் உடைந்து, சிதைந்து வருகின்றதேயொழிய புதிதாக எவருமே சேர்வதில்லை.
சஜித் பிரேமதாச பாடசாலைப் பிள்ளைகளுடனேயே விவாதம் பற்றி பேசுகிறார். அந்த பிள்ளைகளையும் நண்பர்களே எள்றே கூற்றுகிறார். புதிதாக தொடங்கி இருப்பது ஜப்பானிய மொழியில் பேசிக் காட்டுவதையாகும். சஜித் பிரேமதாசவை சூழ உள்ளவர்களும் இந்த இந்த பெச்சுகள் காரணமாக நிரக்கதி நிலையுற்று இருக்கிறார்கள். நாட்டை நாசமாக்கியவர்கள் நாள்தொறும் நாசமாகி வருவது நிரூபிக்கப்பட்டு வருகின்றது. வரலாற்றில் ஒருபோதுமே இடதுசாரி, முற்போக்கான சக்திகளுக்கு இதுபோன்ற தருணமொன்று உருவாகவில்லை. அதனால் வரலாற்றில் முதல்த்தடவையாக உண்மையான அர்த்ததத்தில் மக்கள்நேயமுள்ள ஆட்சியொன்றை நிறுவ அனைவரும் ஒன்றுசேரவேண்டும். எனினும் அவர்கள் எழுப்புகின்ற அவதூறுகளைப் பார்க்கிலும் மிகவும் உயரத்திலேயே நாங்கள் இப்போது இருக்கிறோம். எண்பத்தெட்டு – எண்பத்தொன்பது பற்றி அவர்கள் தினந்தோறும் மந்திரம் ஓதினாலும் எவ்வளவுதான் குறைகூறல்கள், சேறு பூசுதல்களை மேற்கொண்டாலும் அரசியல் விவாதங்களக்கு வந்து மிருகங்கள் போல் கத்தினாலும் அவையனைத்திலும் மக்கள் அவர்களை விட்டு விலகிப் போகிறார்கள். மனச்சாட்சி உள்ள ஒவ்வொருவரும் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றிக் குழுமி பொதுமக்களின் அரசாங்கமொன்றை நிறுவி வரலாற்றினை பதிதாக எழுதுகின்ற பாரிய செயற்பொறுப்பு எம்மிடம் இருக்கின்றது. மே மாதத்தின் பதினைந்தாம் திகதி தொடக்கம் வட்டார சபைகள் மட்டத்தில் நடவடிக்கையென்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இன்னமும் எம்மை விளங்கிக்கொள்ளாத மக்கள் மத்தியில் சென்று விடயங்களை தெளிவுபடுத்தி எதிரியின் பொய்ப் பிரசாரங்களை தோற்கடித்திட வேண்டும். குறிக்காக திசைகாட்டி அரசாங்கமொன்றின்கீழ் எனைய கட்சியை சேர்ந்தவர்களை பழிவாங்குவதாக கூறி அனுப்புகின்ற செய்தியை தோற்கடித்திடவேண்டும். அரசியல் பழிவாங்கல் கலாசாத்தை எமது ஆட்சியின்கீழ் சதாகாலமும் முடிவுறுத்துவோம் என்பதை வலியுறுத்துகிறோம்.
எமது எதிரிகள் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் எனக் கூறி மக்களை பயமுறுத்துகின்ற பிரச்சாரங்களை அனுப்பிவைக்கிறார்கள். பொருட்களை பங்கிட்ட வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாதென்பதை உணர்ந்ததும் இவ்வாறான பிரச்சாரங்களை அனுப்பிவைத்து மக்களை பயமுறுத்துகின்ற பொய்யான குறைகூறல்களை புரிந்துணர்வுடன் தோற்கடித்திட வேண்டுமென்பதை மக்களுக்கு எடுத்துரைக்கவேண்டும். தமக்க தனிப்பட்டமுறையில் எதனையும் எதிர்பாராமல் இலட்சக்கணக்கான மக்களை ஒன்றுசேர்க்க இயலுமென்பதை மாத்தறை கடற்கரை பரப்பிற்கு வருகைதந்த மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். குடும்பங்களாக ஒன்றுசேர்ந்து புதிய நாட்டைக் கட்டியெழுப்பு தயார் என்பதை நிரூபித்துள்ளார்கள். எதிர்காலத்திற்காக நிகழ்காலத்தை நாங்கள் கையிலெடுக்க வேண்டும். எமது அம்மா, அப்பாவால் மீட்டெடுக்க முடியாமல் போனவை எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளன. நாங்கள் அதனை எங்கள் பிள்ளைகளிடம் ஒப்படைக்கத் தேவையில்லை. கடன் சுமையில் இருந்து விடுபட்ட ஒரு நாட்டில் வசித்திட நாமனைவரும் விரும்புகிறோம். பிச்சையேந்தகின்ற பொருளாதாரத்திற்குப் பதிலாக பலம்பொருந்திய பொருளாதாரமொன்றை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டும். வளங்கள் நிறைந்த எங்கள் நாட்டு மக்கள் பிறரிடம் கையேந்தாமல் வாழக்கூடிய நிலையில் சுயகௌரவம்கொண்ட குழுவினர் வசிக்கனின்ற அழகான ஒர நாட்டை நாங்கள் கட்டியெழுப்பவேண்டும். போதைப்பொருட்களிலிருந்து விடுபட்ட பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு நிலவுகின்ற, ஒருவரையொருவர் பேணிப்பாதுகாக்கின்ற சமூகமொன்றை நாங்கள் நிர்மாணிப்போம். தனித்தனி மனிதர்களுக்குப் பதிலாக கூட்டுமனப்பான்மையால் பிணைந்த மனிதர்களாக வாழக்கூடிய சமூகமொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம்.
இந்த வருடத்தில் இரண்டு தேர்தல்கள் நடைபெற உள்ளன. ஒற்றோபர் மாதத்தில் நடைபெறுகின்ற சனாதிபதி தேர்தலில் திசைகாட்டியின் வெற்றியை தடுக்கவலல்ல எநட்தவொரு பலவானும் கிடையாது. திசைகாட்டியின் தலைவர் தோழர் அநுர சனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று வரலாற்றில் முதல்த்தடவையாக எம்மைல “தோழர்” என அழைக்கப்படக்கூடிய ஒருவரை நியமித்தக்கொள்ளக்கூடிய வாய்ப்பு பிறந்துள்ளது. “சேர்”, “அதிமேதகு”, “உத்தமராம்” எனக் கூறாமல் “தோழர்”, “அண்ணா”, “தம்பி”, “மாமா” என அழைக்கக்கூடிய தலைவரொருவரை சனாதிபதியாக நியமித்துக்கொண்டு பாராளுமன்றத்தின் இந்த திருட்டுக் கும்பலை விரட்டியடித்து மக்கள் பிரதிநிதிகளை நியமித்துக்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புகின்ற வேலைக்குப் பொருத்தமான பாராளுமன்றமொன்றை நியமித்துக்கொள்வோம். நாங்கள் நல்ல மனிதர்களால் பாராளுமன்றத்தை நிரப்பத் தயார். நாட்டைக் கட்டியெழுப்பவல்ல பலம்பொருந்திய அரசாங்கமொன்றை நாங்கள் அமைக்கத் தயார். நாட்டைக் கட்டியெழுப்பி நாமனைவரும் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்புகின்ற ஆழமான செய்தியை இந்த மே தினத்தில் நாங்கள் வழங்குவோம். அதில் ஒரு பங்கு உங்களுக்கும் உண்டு வெற்றிக்காக உழைக்கவேண்டும். பேராட வேண்டும். எம்மால் சேர்க்கக்கூடிய அனைத்துச் சக்திகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். தொழிலாளர்கள், கைத்தொழிலதிபர்கள், தொழில்வாண்மையாளர்கள், பெண்கள், மாணவர்கள் அனைவரையும் கூட்டாக சேர்த்துக்கொண்டு ஒருபோதுமே தோற்கடிக்கமுடியாத மீளத்திருப்பமுடியாத பிரமாண்டமான சக்தியைப் பெற்று நாங்கள் கட்டியெழுப்புவோம்.
எமது பிரபல்யமான கவிஞர் ரத்ன ஸ்ரீ விஜேசிங்க எழுதிய கவிதையொன்றினைக் கூறி நாங்கள் விடைபெறுகிறோம்.
“எனவே நண்பர்களே பூக்கள் பூத்த மரமொன்றில்
சந்தேகமே இல்லை விளைச்சல் கிடைப்பது நிச்சயமே
மனதால் கைவிடாமல் மலர்களின் மென்மையை
வாரீர் மகரந்தச் சேர்க்கைக்கு சீக்கிரமாகக் குழுமி“
நாடு பூராவிலும் விளைச்சல் தருகின்ற மலர்கள் இலட்சக்கணக்கில் மலரந்துள்ளன. இந்த மலர்களை விளைச்சலாக்குகின்ற மகரந்தச் சேர்க்கையில் நாங்கள் ஈடுபடவேண்டும். அதற்காக ஒன்றிணைவோம். புதிய நாடு, புதிய நாளைய தினம், புதிய சமூகத்தை எமது வாழ்நாளில் எமது கண்ணெதிரில் கட்டியெழுப்பி, நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்ற பெருமைமிக்க பிரஜைகளாக மாறுகின்ற வெற்றிக்காக ஒன்றுசேர்வோம். அதற்காக அனைவரும் கைகோர்த்துக் கொள்ளுங்கள்.