தேசிய மக்கள் சக்தியின் ஹற்றன் பிரகடனத்தை மக்கள்மயப்படுத்தும் மலையக மக்கள் சபை மாநாடு தெனியாயவில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்களான தோழர் சுனில் அந்துன்நெத்தி, தோழர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், தோழர் சமந்த வித்தியாரத்ன, தெனியாய தொகுதியின் அமைப்பாளர் தோழர் கதிரேசன் கண்ணன் மற்றும் தெனியாய தொகுதி உறுப்பினர் தோழர் லிஸ்றா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன், தென் மாகாணத்தைச் சேர்ந்த பெருந்திரளான மலையகத் தமிழர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
தாயகத்திற்கு வலிமை… கெளரவமான பிரஜை என்ற கருப்பொருளில் நாடு முழுவதும் ஹற்றன் பிரகடனத்தை மக்கள்மயப்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.