(-Colombo, May 06, 2024-)
ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்து பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெலர் (Ben Mellor) அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) பிற்பகல் ம.வி.மு. தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இலங்கைப் பிரதானி ஹுமைரா ஹாசியா ( Humairaa Hatia) அவர்கள், இலங்கைக்கான பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் என்ருவ் பெட்றிக் (Andrew Patrick) அவர்கள் மற்றும் முதலாவது செயலாளர் டொம் சொப்பர் (Tom Soper) அவர்களும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கையின் நடப்பு பொருளாதார, அரசியல் நிலைமைகள், பிராந்திய புவி அரசியலில் நிலவும் சவால்கள் மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.