(-Colombo, March 31, 2024-)
மலையக இந்து குருமார் சம்மேளனத்தைச் சேர்ந்த இந்து குருமார்கள் இன்று (31) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களை மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.
இதன்போது மலையக மக்களின் வீடு மற்றும் காணிப் பிரச்சினைகள், மலையகத்தில் இந்து சமயத்தையும் கலாச்சாரத்தையும் மேம்படுத்துதல் பற்றிய விடயங்களையும் மலையக இந்து குருமார்கள் தோழர் அநுர குமார திசாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டுசென்றனர்.
நீண்ட நேரம் இடம்பெற்ற இந்த உரையாடலில் மலையக மக்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைளுக்கு எவ்வாறான அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது மற்றும் நடப்பு அரசியல், பொருளாதார நிலைமைகள் குறித்தும் தோழர் அநுர குமார திசாநாயக்க தெளிவுப்படுத்தினார்.
இது ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக அமைந்திருந்தது.