-Colombo, January 31, 2024-
இலங்கைக்கான ஜேர்மனியத் தூதுவர் கலாநிதி பீலிக்ஸ் நியுமான் அவர்களுக்கும் தேசிய மக்கள் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (31) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கையின் நிகழ்கால பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை பற்றியும் மக்கள் எதிர்நோக்கியுள்ள சவால்நிறைந்த நிலைமை பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் ஜேர்மனிய தூதரகத்தின் அரசியல் விவகாரங்கள் பற்றிய ஆலோசகர் திருமதி தரிணி தலுவத்த மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத்தும் பங்கேற்றனர்.