Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“ஒட்டுமொத்த சமூகத்தையுமே ஒன்றுசேர்த்து புதிய மாற்றத்திற்காக தோள்கொடுப்போம்” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திசாநாயக்க-

(இரத்தினபுரி மாவட்ட பெண்கள் மாநாடு – 2024.03.03)

எங்களுக்கு தற்போது இரண்டு பிரதான பணிகள் இருக்கின்றன. ஒன்று அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது. இரண்டாவது இந்த நாட்டை சீர்செய்வது. நீண்டகாலமாக இந்த நாட்டின் ஆட்சியாளர்கள், அரசியல் அதிகாரிகள் இந்த நாட்டுக்கு அழிவுமிக்க நிலைமையையே உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள். அவர்கள் அதிகாரத்தில் இருந்தால் எமக்கு அழிவுமிக்க எதிர்காலத்தையே எஞ்சவைப்பார்கள். அதனை இனிமேலும் பரீட்சித்துப் பார்க்கவேண்டிய அவசியம் கிடையாது. நலமான எதிர்காலத்திற்காகவே நாங்கள் அனைவரும் மல்லுக்கட்டவேண்டும். அதற்காக இதுவரை பயணித்த அரசியல் பாதைக்குப் பதிலாக புதிய அரசியல் பயணப்பாதையில் பிரவேசித்தே ஆகவேண்டும். நாங்கள் அதிகாரத்தை பெற்றேதீரவேண்டும். இந்த வருடத்தின் ஒற்றோபர் இறுதியளவில் இந்த நாட்டில் ஓர் புதிய அரசாங்கமே நிலவும். இப்போது தேர்தலை நடாத்துவது பற்றி ஐயப்பாட்டுடன் ஏன் சிந்திக்கிறீர்கள்? முதல்த்தடவையாக நாட்டின் “அதிகாரம்” மேலே இருக்கின்ற ஊழல்மிக்க பிரபுக்கள் அமைப்பிடமிருந்து பொதுமக்களின் கைகளுக்கு மாறஇருப்பதாலாகும். அவர்கள் இதுவரை தேர்தலை பிற்போட்டது அதிகாரத்தை இழக்கவேண்டி நேரிடுமென்ற அச்சம் காரணமாகவே. இங்கே குழுமியுள்ள பெண்களைப் பார்க்கும்போது இப்போது தேர்தலை பிற்போட எப்படியும் அஞ்சுவார்கள்.

தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றுசேர்கின்ற மக்களின் அலை மிகப்பெரியது. அதன் காரணமாக பாம்பும் கீரியும் ஒன்றுசேர்ந்திருக்கின்றது’ அனைவரும் கூட்டாக அவதூறு கற்பித்தலில் ஈடுபட்டுள்ளார்கள். ரணில் விக்கிரமசிங்க அவருடைய பிரச்சார வேலைத்திட்டத்தை வடிவமைத்துள்ளார். அந்த வடிவமைத்தலுக்கான இலங்கையில் இருக்கின்ற மூன்று பிரச்சார நிறுவனங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. அந்த பிரச்சாரத் திட்டத்தில் எம்மைப்பற்றிக் கூறவே வேண்டும். எம்மைப்புறிக் கூறவேண்டிய பகுதியை எமது ஒருவரிடமே கொடுத்துள்ளார்கள். ரணில் விக்கிரமசிங்க உருவாக்குகின்ற பிரச்சார அறிவித்தல்களில் மூன்று விடயங்கள் இருக்கின்றன. ஒன்று 88 – 89 மற்றும் மே மாதம் 09 ஆந் திகதி சம்பவங்களில் மக்கள் விடுதலை முன்னணி தமது வன்முறைசார்ந்த வரலாற்றினைக் கைவிடவில்லை என்பதற்கான பிரச்சாரம் வழங்குவதாகும். மே மாதம் 09 ஆந் திகதிய தீமூட்டல்களுடன் தொடர்புடையவர்களின் பெயர்ப்பட்டியல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருக்கின்றது. அதில் பங்கேற்றவர்களின் அரசியல் தொடர்புகள் அந்த பெயர்ப்பட்டியலில் இருக்கிறன. அதிகூடிய தொடர்பு மொட்டுக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே உண்டு. இவர்களின் இந்த முயற்சி மீண்டும் இறந்தகாலத்தை கிளறியெடுத்து மவிமு பற்றிய பீதிநிறைந்த புலக்காட்சியொன்றை உருவாக்குவதாகும்.

அதைப்போலவே இவர்கள் சனநாயகம் பற்றிப் பேசுகிறார்கள். தற்போது உயிருடன் இருக்கின்ற முன்னாள் சனாதிபதிகள் ஐவரும் சனநாயகத்திற்கு சட்டத்திற்கு எதிராக இயங்கியவர்கள். ஐவருமே நீதிமன்றத்தில் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள். பாராளுமன்றத்திற்கு அருகில் இருக்கின்ற காணிகளை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையகப்படுத்தி தனது நண்பரொருவருக்கு வழங்கியமைக்காக நீதிமன்றத்தில் குற்றவாளியாகியமையால் சந்திரிக்காவிற்கு அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொருளாதாரத்தை வங்குரோத்து அடையச் செய்வித்த தவறுக்காக “பொருளாதாரப் படுகொலையாளிகள்” என உயர்நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவராவார். முன்னாள் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு மூலமாக அவருக்கு அதிகாரமின்றி பாராளுமன்றத்தைக் கலைத்தார். உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஏழு பேர் அது அரசியலமைப்பிற்கு முரணானதென தீர்ப்பளித்தார்கள். அடுத்ததாக உயிர்த்தஞாயிறு தாக்குதலின்போது சனாதிபதி என்றவகையில் தனக்கு கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பினை ஈடேற்றத் தவறியமையால் அந்த தவறுக்காக நூறு மில்லியன் (10 கோடி) நட்டஈடு விதிக்கப்பட்டது. மைத்திரிபால சிறிசேன தான் அமைச்சரவையில் இருக்கின்றவேளையில் தான் இளைப்பாறுகின்றவேளையில் தனக்கு தேவையான இல்லத்தை அமைச்சரவையில் தான் அமர்ந்திருந்தே அங்கீகரித்துக் கொண்டார். அவற்றுக்கு ரணில் விக்கிரமசிங்க கையை உயர்த்தினார். சஜித் கையை உயர்த்தினார். மைத்திரிபால சிறிசேன இளைப்பாறியபின்னர் இருப்பதற்காக கொழும்பில் பெறுமதிமிக்க பாரிய வீடு கொடுக்கப்பட்டது. அந்த வீடு அவருக்குச் சொந்தமானதல்ல என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வீட்டிலிருந்து வெளியே இழுத்துப்போடப்பட்டார். இவர்களுக்கு வெட்கமில்லை. அண்மையில் ரணில் விக்கிரமசிங்க பொலீஸ் மா அதிபரை நியமித்தார். அந்த நியமனம் அரசியல் அமைப்பிற்கு முரணானதாகும். அரசியலமைப்புப் பேரவையின் ஐவர் அங்கீகரிக்க வேண்டும். அரசியலமைப்புப் பேரவையின் நால்வர் அங்கீகரித்தார்கள். இருவர் எதிர்த்தார்கள். இருவர் அமைதியாக இருந்தார்கள். வாக்குகளின் எண்ணிக்கை சமமானதாக அமையின் சபாநாயகர் தனது அறுதியிடும் வாக்கினைப் பாவிக்கலாம். இந்த இடத்தில் வாக்குகள் சமமானதாக இல்லை. எனினும் சபாநாயகர் ஆதரவாக வாக்கினை அளித்து பொலீஸ் மா அதிபரை நியமித்தார். அந்த நியமனம் அரசியல் அமைப்பிற்கு முரணானதாகும். பட்டப்பகலில் இவ்வாறு அப்பட்டமாகவே சட்டத்தை மீறுகின்ற, அரசியலமைப்பிற்கு முரணாக செயலாற்றுகின்றவர்கள் ” தேசிய மக்கள் சக்தி வந்தால் சனநாயகம் இல்லாதொழியும்” என கூறுகிறார்கள். சனநாயகத்தை மீறுபவர்கள், பாரியளவிலான குற்றச்செயல் புரிபவர்கள், ஊழில்பேர்வழிகளை பாதுகாப்பவர்கள் அவர்களே. தேசிய மக்கள் சக்தி மக்களை பயமுறுத்துதல் பற்றி ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரத் திட்டத்தில் இருக்கின்றது.

அவர்களின் திட்டத்தில் இரண்டாவதாக இருப்பது மக்களை ஏமாற்றுவதற்காக எடுக்கின்ற முயற்சியாகும். ” இது நாடு சிதைவடைந்துள்ள ஒரு தருணமாகும். இது புதியவர்களைக் கொண்டுவந்து பரீட்சித்துப்பார்க்க உகந்த தருணமல்ல. கடினமான நேரமாகும்” அதாவது பழக்கப்பட்டவர்களான ரணிலுக்கே கொடுங்கள் என்பதற்கான அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்புவதாகும். அவர்கள் யார்? இந்த பொருளாதாரத்தை வீழ்த்தியவர்கள். எமது நாட்டில் டொலர் தட்டுப்பாட்டினை ஏற்படுத்தியவர்கள், உற்பத்தியை வீழ்த்தியவர்கள். எம்பிலியிட்டியவில் பல தசாப்தங்கள் பழைய கடதாசி ஆலைக்கு சிறந்த சந்தையை அமைத்திருந்தால் இன்று உலகில் மிகவும் முன்னேற்றகரமான தொழிற்சாலையாக அமைந்திருக்கக்கூடும். ரணில் விக்கிரமசிங்கவின் பியகம தொகுதியில் உரத் தொழிற்சாலையொன்று இருந்தது. 1982 இல் 50,000 மெட்றிக் தொன் யூரியா பாகிஸ்தானுக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது பயிர்ச்செய்கைக்கு இந்த உரப் பிரச்சினை எவ்ளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது? அந்த தொழிற்சாலையை இந்த ரணில் விக்கிரமசிங்கவே நாசமாக்கினார். ஹிங்குரான, கந்தளாய் சீனித் தொழிற்சாலைகள் இருந்தன. துல்ஹிரிய, மத்தேகொட, பூகொட புடவைத் தொழிற்சாலைகள் இருந்தன. அவற்றை விற்று மூடிவிட்டார்கள். அவர்கள் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியவர்கள் அல்ல. பொருளாதாரத்தை நாசமாக்கியவர்கள். உலகில் எங்கேயும் ஒரு நாட்டை வீழ்த்தியவர்கள் அதனை மீட்டெடுத்ததில்லை. நாட்டை வீழ்த்தியவர்களை விரட்டியத்து புதிய குழுவொன்று அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டே நாடுகளைக் கட்டியெழுப்பியுள்ளன.
ரணிலின் யூரியா கெம்பேனின் அடுத்த வாதம்தான் 3% எப்படி 51% ஆக அமையுமெனும் கணிதமாகும். கணிதத்தின்படி நினைத்துப்பார்க்க முடியாததுதான். எனினும் அரசியல் என்பது கணிதமல்ல. கணிதத்தின்படி அறுபத்தொன்பது இலட்சம் எடுத்த கோட்டாபய இன்னமும் சனாதிபதியாக இருக்கவேண்டுமல்லவா. அரசியல் என்பது சமூகவியலாகும். மக்கள் எவ்வாறு எழுச்சி பெறுவார்கள்? பிரச்சினைகள் எவ்வாறு தோன்றும்? பிரச்சினைகளை தாங்கிக்கொள்வது எவ்வாறு? அந்த பிரச்சினைகளுக்கு பிரதிபலிப்புச் செய்வது எவ்வாறு? இன்று நாடு முழுவதிலும் ஒலிக்கின்ற குரல் ” இந்த நாட்டை நாசமாக்கியவர்களை விரட்டியடித்திட வேண்டும்” என்பதாகும்: அது கணிதமல்ல. சமூகவியல். மக்கள் சிந்திக்கின்ற விதம் மாற்றமடைந்துள்ளது. எதிர்வரும் தேர்தலின்போது கணிதவியலில் மாத்திரமல்ல, சமூகவியலிலும் வெற்றிபெறுவது தேசிய மக்கள் சக்தியே என்பது தெளி்வானதாகும்.

அவர்கள் எமக்கு எதிராக ஒன்றுசேர்வார்கள். அவர்களின் பணத்தைப் பிரயோகித்து, தொலைக்காட்சிகளில், செய்தித்தாள்களில் விளப்பரங்களைப் போட்டு நான் கூறியவகையிலான பிரச்சாரத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதைப்போலவே பல்வேறு பாணியிலான குறைகூறல்கள் எழுகின்றன. அத்தகைய அவதூறுகளுக்கு பதிலளித்திட நாங்கள் நேரத்தை செலவிடப்போவதில்லை. குறைகூறல்கள், சேறுபூசுதல்கள் மூலமாக தேசிய மக்கள் சக்தி்யை பலவீனப்படுத்த நிலவிய காலம் கடந்துவிட்டது. எமக்கு எதிராக அனைத்துமே திட்டமிடப்பட்டுள்ளன. எனினும் தோல்விகண்டுள்ளன. நாங்கள் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான எமது பயணத்தை தொடர்வோம். அதன் பிரதானமான பங்குதான், எமது நாட்டின் பொருளாதாரத்தின் திரும்பற்புள்ளியான பெண்களின் விழித்தெழல். திசெம்பர் 30 ஆந் திகதி அதுவரை இலங்கை வரலாற்றில் பிரமாண்டமான பெண்கள் எழுச்சியை மாத்தறையில் வெளிக்காட்டினோம். அவர்கள் அதற்காகவே அதிகம் பதற்றமடைந்தார்கள். அவர்கள் நினைத்தார்கள் அரசியல் ஆண்களின் வேலையென்று. பெண்கள் முனைப்பான அரசியலில் பிரவேசிக்க மாட்டார்களென, அரசியல் தமது வகிபாகமென விளங்கிக்கொள்ள மாட்டார்களென அவர்கள் நினைத்தார்கள். பெண்கள் சதாகாலமும் ஆண்கள் தரப்பினரை அரசியலில் வைத்துவிட்டு பெண்கள் மௌனமாக இருந்தார்கள். எமது பெண்களை துன்பங்களுக்கு இலக்காக்கி, நிர்க்கதி நிலைக்கு உள்ளாக்கி, அந்த நிர்க்கதியில் இருந்து விடுபட எதையாவது கொடுத்து தமது பக்கத்திற்கு தி்ருப்பிக்கொள்ள முடியுமென நினைத்தார்கள்.

ரணில் விக்கிரமசிங்கவின் புதிய வேலைத்திட்டம்தான் அஸ்வெசும, 20 கிலோ அரிசி, காணி உறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுதல். பழைய மக்கள் என நினைத்தே அவர்கள் கணிக்கிறார்கள். இப்போது இருப்பவர்கள் புதிய மக்கள். உலக வரலாற்றில் அண்மைக்காலத்தில் மக்கள் வீதிக்கு வந்து ஏழு மாதங்களுக்கு மேற்பட்ட காலமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு, இரத்தினபுரி, மாத்தறை, அநுராதபுரம் , காலிமுகத்திடலில் நாடுபூராவிலும் மக்கள் வெளியில் இறங்கி ஆட்சியாளனை விட்டியடித்தார்கள். இப்போது இருப்பவர்கள் உலக வரலாற்றில் சாதனை படைத்த மக்களாவர். அன்று இருந்த மக்களல்ல இன்று இருப்பவர்கள் என்பதை ரணில் விக்கிரசிங்காக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
நீங்கள் எந்த அளவுக்கு பொறுமையாக இருந்தீர்கள்? இனிமேலும் எமது நாட்டுப் பெண் இந்த அநீதியை, அநியாயத்தை பொறுத்திருக்க வேண்டியதில்லை. ஏழ்மையைப் பொறுத்துக்கொள்ளக் கூடாது. பொறுமையின் எல்லை கடந்துள்ளது. இந்த பாதிக்கப்பட்ட பெண்களை ஒன்றாக ஒருங்கிணைத்து எமது நாட்டை புதிய திசையை நோக்கி வழிப்படுத்த தேசிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. இதன் பிரதான பங்காளிகள் நீங்கள்தான். இலங்கையின் பெண்கள் முனைப்பான அரசியலில் பிரவேசித்துள்ளார்கள். அது தேசிய மக்கள் சக்தியுடனாகும்.
இன்னும் ஏழு மாதங்களே இருக்கின்றனள. சந்திக்கின்ற அனைவருடனும் பேசுங்கள். விழிப்புணர்வூட்டுங்கள். நீங்கள் எந்த அளவுக்கு ஊரில் முனைப்பானவர்களாக இருக்கிறீர்கள்? நீங்கள் மற்றொருவரை வென்றெடுக்க முயற்சி செய்கிறீர்களா? அந்த அளவுக்கே நாங்கள் வெற்றியை நெருங்குகிறோம். தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கான மிகஅதிகமான பங்கு உங்களின் இடையீடு மற்றும் உங்களின் முனைப்பான பங்களிப்பிலேயே தங்கியுள்ளது. பெருமைமிக்க பங்காளி, வீறுகொண்ட பெண், விடாமுயற்சியுள்ள ஒருவராக மாறுங்கள். எம்மால் இந்த வெற்றியை அடைய முடியும். நீங்கள் இடையீடு செய்கின்ற அளவுக்கு ஒற்றோபர் மாதத்தில் நிலவுவது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமாகும்.
அதன் பின்னர் இந்த நாட்டை சீர்செய்ய வேண்டும். முதலில் பிரஜைகளின் உணவுப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க வேண்டும். மக்களின் உணவுத் தேவைக்கு தீர்வுவழங்க வேண்டும். அப்போது மானியம் பற்றிக் கேட்கிறார்கள். மானியம் என்பது தீயதென ஓர் அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறார்கள். உலகின் எல்லா நாடுகளிலும் மானியம் வழங்கப்படுகின்றது. பிரான்சில் இங்கிலாந்தில் எம்மைவிட மானியம் வழங்கப்படுகின்றது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதாரத்துடன் பின்னிப்பிணைந்திராத வறிய சமுதாயமொன்று இருக்கின்றது. அவர்களுக்கு மானியம் வழங்கப்படவேண்டும். எனினும் மானியத்தில் சிறைவைக்கப்படலாகாது.

நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்றதுமே பிள்ளையின் கல்வியை உறுதிசெய்திடுவோம். கல்வியை வழங்குவதை தொடக்கத்தில் இருந்தே ஆசிரியர்கள், பாடசாலை உபகரணங்கள், அப்பியாசப் புத்தகங்கள், வறிய பாடசாலைகளுக்கு மதியஉணவு வழங்குவதை நாங்கள் திட்டமிடுவோம். ரணில் கூறுவதன்படி 2015 இல் பிறந்த பிள்ளைக்கு முதலாம் வருடத்தில் சேர்வதற்காக 2048 வரை காத்திருக்க வேண்டுமா? அதைப்போலவே சுகாதார வசதிகளை வழங்கவேண்டியது அவசியமாகும். ஒபரேஷன் செய்துகொள்ள எதிர்பார்த்துள்ள நோயாளிக்கு 2048 வரை காத்திருக்குமாறு கூறமுடியுமா? ரணில் அப்படித்தான் சிந்திக்கிறார். உணவுபானங்கள், கல்வி, சுகாதாரம் என்பவை எமது ஆட்சியில் துரித நிவாரணங்களாக வழங்கப்படுமென்பதை உறுதிசெய்கிறோம். இந்த அவசியப்பாடுகளை நிவர்த்திசெய்யாமல் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. ரணில் பொருளாதாரத்தை சீர்செய்ததாக கூறுகிறார். உண்ண உணவின்றி, நோய்க்கு மருந்தின்றி, பிள்ளைக்கு கல்வியின்றி கரைசேரத்த பொருளாதாரம் என்ன? இவற்றுக்கு எவ்வாறு பணம் தேடிக்கொள்வது எனும் பிரச்சினை இருக்கலாம். பணத்தை தேடிக்கொள்ளும் விதத்தை நாங்கள் கூறுகிறோம். நாங்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதனோடு சம்பந்தப்பட்ட குழுவுடன் கலந்துரையாடினோம். அதன் சட்டங்களில், பணியாட்டொகுதியில், தொழில்நுட்பத்தில் மாற்றங்களைச் செய்யவேண்டியுள்ளது. இந்த மாற்றங்களைச் செய்தால் தற்போது கிடைக்கின்ற வருமானத்தை இருமடங்குகளால் அதிகரிக்க முடியும். சுங்கத்தின், மதுவரியின் வருமானத்தை அதிகரிக்கமுடியும். ஜோன்ஸ்டன், தயா கமகே, அலோசியஸ் மத்திய வங்கிக்கு பொல்லுவைத்தவர்கள். இந்த செல்வத்தை சேகரித்துக்கொள்ள முடியும். இந்த வருமானத்தின் ஊடாக பிரஜைகளின் உணவு, கல்வி, சுகாதாரத்தை நாங்கள் உறுதிசெய்வோம்.

உணவு, சுகாதாரம், கல்வி மாத்திரமல்ல சமூகப் பாதுகாப்பு, உள அமைதி, இரசனை மக்களுக்கு அவசியமாகும். வீட்டில் உள்ளவர்கள் ஒன்றாக அமர்ந்து ஒருநாளில் ஒருவேளை உணவையாவது சுவைக்கக்கூடாதா? அவ்விதமாக மகிழ்ச்சியுடன் இருக்கின்ற மக்களையும் நாட்டையும் கட்டியெழுப்ப எமக்கு புதிய பொருளாதாரத் திட்டமொன்று அவசியமாகும். எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வளமான பெருநிலம் இருக்கின்றது. விவசாயத்தினால் கட்டிவளர்க்கக்கூடிய பிரதேசமாகும். நாங்கள் கமக்காரனின் வாழ்க்கையை உயர்த்தவல்ல எட்டுஅம்ச விவசாயக் கொள்கையை வகுத்துள்ளோம். இரத்தினபுரியின் செல்வமான இரத்தினக் கற்களுக்கு பெறுமதியைச் சேர்த்து பெறுமதியை அதிகரிப்பதற்கான திட்டங்களை நாங்கள் அமைத்துள்ளோம். பாரியளவில் உள்ள தேயிலைச் செய்கை அதனோடு வாழ்கின்ற மக்கட் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டமொன்றை வகுத்துள்ளோம். சுற்றுலாத் தொழில்த்துறை, கப்பற்றொழில், கப்பற்றொழிற்றுறையுடன் கட்டியெழுப்பப்படுகின்ற மெராயன் சேர்விஸை விருத்திசெய்வதற்கான திட்டங்கள் எம்மிடம் இருக்கின்றன.
இந்த சமூகத்தையும் பொருளாதாரத்தையும் புதிய மாற்றத்திற்கு இலக்காக்குவதற்கான புதிய பொருளாதார வேலைத்திட்டத்தில் நாங்கள் பிரவேசிக்க வேண்டும். எம்மிடம் அதற்கான இரண்டு படிமுறைகள் இருக்கின்றன. முதலாவது அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது. அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவது. ஊர்களில் சிங்கள, முஸ்லீம், தமிழ் பிரிவினைகளை வைத்துக்கொள்ள வேண்டாம். ஒட்டுமொத்த சமுதாயத்தையும் ஒன்றுசேர்த்து புதிய மாற்றத்திற்கு தோள்கொடுப்போம். அதற்காக நீங்கள் இடையீடுசெய்க.

“ஆட்சியாளர்கள் சொர்க்கசுகத்தை அனுபவிக்கின்ற அரசியலில் ஈடுபட மக்கள் தயாரில்லை”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்-

தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பக்கூடிய, சிங்கள, தமிழ், முஸ்லீம் அனைவருக்கும் நியாயமான சமூகத்தைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே மேடை தேசிய மக்கள் சக்தியின் மேடையாகும். எமது நாடு பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாசார ரீதியாக பாரிய சீரழிவிற்கு உள்ளாக்கி எமது வாழ்க்கையை தவிடுபொடியாக்கிவிட கடந்த 76 வருடங்களாக நாட்டை ஆட்சிசெய்தவர்கள் செயலாற்றி இருக்கிறார்கள். தவிடுபொடியாக்கப்பட்ட, எதிர்பார்ப்புகள் சிதைக்கப்பட்ட எமது வாழக்கையைத் தொடர்ந்தும் அவ்வாறே நீடிக்க இடமளிக்க முடியாதென திடசங்கற்பம் கொண்ட நாங்கள் ஊர்ஊராகச்சென்று வீடுகள்தோறும் சென்று பெண்கள் சபைகளை நிறுவி புதிய மறுமலர்ச்சிக்காக பெண்களை அணிதிரட்டினோம். அவர்கள் இங்கு ஒன்றுசேர்ந்திரப்பது வேறு அரசியல் கட்சிகளைப்போல் அதிகாரத்திற்காக, பதவிகளுக்காக, சிறப்புரிமைகளுக்காக அல்லது அன்றைய வேளைக்காக கிடைக்கின்ற பணத்திற்காக அல்ல. எமது பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியாக, சிறப்பாக வாழக்கூடிய நாடொன்றை நிறுவுவதற்காக ஒன்றுசேர்ந்த ஒரு சக்தியே இங்கு இருக்கின்றது. நாமனைவரும் ஒருவர்போல் சிரித்துமகிழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்பி வெற்றிகரமான நாளைய தினத்தை பெற்றுக்கொடுப்போமென்ற நம்பிக்கையை கட்டியெழுப்பி முடித்துவிட்டோம். இதுவரை நாட்டை ஆட்சிசெய்த பாசறைகள் கலக்கமடையத்தக்க வகையிலான அணிதிரளல் எம்மைச் சுற்றி இருக்கின்றது. இந்த மக்கள் சக்தியைக் கண்டே எம்மைக் குறைகூறுகிறார்கள், அவதூறாக பேசுகிறார்கள்.

எமது நாட்டில் சனநாயகத்திற்கு முடிவுகட்டி உயர்நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட ஒருவரை பொலீஸ் மா அதிபராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய பொலீஸ் மா அதிபரொருவரின்கீழ் சட்டமும் அமைதியும் அமுலாகையில் எமது நாட்டின் பிள்ளைகளுக்கும் மக்களுக்கும் நீதி நிலைநாட்டப்பட மாட்டாது. சட்டத்தை மதிக்கின்ற தேசமொன்றை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் மாத்திரமே நிர்மாணிக்க முடியுமென்பது தெளிவாகி உள்ளது. இந்த நாட்டு மக்களை விவேகமுள்ள அரசியலின்பால் வழிப்படுத்துவது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. சமூகத்தில் போன்றே தேசிய அரசியல் கட்சியிலும் தலைவர் தொடக்கம் அடிமட்டம்வரை சமூக கலாசார ஒழுக்கம் நிலவவேண்டும். நெறிமுறைகொண்ட இலங்கையைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. பெருந்தோட்டங்களை எடுத்துக்கொண்டாலும் வடக்கு கிழக்கினை எடுத்துக்கொண்டாலும் கொழும்பு, திஹாரிய, அம்பாந்தோட்டையை எடுத்துக்கொண்டாலும் எந்தவொரு பிரதேசத்திலும் வசிக்கின்ற மக்களுக்கு சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய உரிமை இருக்கவேண்டும். அதற்காக அடிமைத்தனமற்ற இலங்கையைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும்.

புதிய சூரியன் உதிக்கின்ற தேசமொன்றை எதிர்வரும் சனாதிபதி தேர்தலின்பின்னர் நாங்கள் கூட்டாக ஒன்றுசேர்ந்து கட்டியெழுப்புவோம் என்பதை உறுதியாகக் கூறுகிறோம். கடந்த வருடத்தைப் பார்க்கிலும் இந்த வருடத்தில் வறுமை 27% ஆல் அதிகரித்துள்ளது. இலங்கையின் ஒவ்வொரு குடும்பத்திலும் 2/3 கடந்த வருடத்தைப் பார்க்கிலும் இந்த வருடத்திலும் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு பதிலளிக்க ஆட்சியாளர்களால் முடியாது. ஆற்றாமையை நிரூபித்தே 16 இலட்சமாக விளங்கிய சமுர்த்தி பயன்பெறுனர்கள் 24 இலட்சமாக அதிகரித்திருக்கிறார்கள். மானியம் பெறவேண்டிய மட்டத்திற்கு மக்களின் வருமானத்தை வீழ்த்தி, வரிச்சுமையை ஏற்றிய ஆட்சியாளர்கள் சொர்க்க சுகம் அனுபவிக்கின்ற அரசியல் பாசறையை பாதுகாத்திட தயாரில்லை என்பதை மக்கள் நிரூபித்துள்ளார்கள். நாங்கள் அனைவரும் சிங்கள, தமிழ், முஸ்லீம் பேதமின்றி ஒருவர்போல் வாழக்கூடிய இலங்கையைக் கட்டியெழுப்பிட ஒன்றுசேர்வோமாக.