Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

இலங்கை வணிகப் பேரவைக்கும் தோழர் அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு…

(-Colombo, August 01, 2024-)

நேற்று (01) பிற்பகல் ம.வி.மு. பிரதான அலுவலகத்தில் இலங்கை வணிகப் பேரவையின் தலைவர் திரு. துமிந்த ஹுலங்கமுவ உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இலங்கை வணிகப் பேரவையினால் உருவாக்கப்பட்டுள்ள “Vision 2030 – ஐந்து வருட பொருளாதார திட்டம்” வெளியீட்டுப் பிரதியும் இதன்போது தோழர் அநுரவிடம் கையளிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பில் இலங்கை வணிகப் பேரவையின் உப தலைவர் கிறிஷான் பாலேந்திர, பிரதி உப தலைவர் பிங்குமால் தெவரதந்திரி மற்றும் பணிப்பாளர் சபை பிரதிநிதிகளான அமல் கப்ரால், சரத் கனேகொட, சுபுன் வீரசிங்க, வினோத் ஹய்ட்ராமணீ உள்ளிட்ட முக்கியஸ்தவர்களும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்களான பேராசிரியர் அனில் ஜயந்த மற்றும் பேராசிரியர் ஹர்ஷன சூரியப்பெரும ஆகிய தோழர்களும் கலந்துகொண்டிருந்தனர்.