–2023.11.18 – தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி – நுகேகொட–
இன்று தெல்கந்த சந்தியில் இருந்து நுகேகொட வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏன் எதிர்ப்பு பேரணியில் வந்தார்கள்? அரசாங்கம் எமது நாட்டின் பெறுமதிமிக்க தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக: வரம்பற்ற வரிச்சுமையை திணித்து மக்கள்மீது சுமத்தியுள்ள அழுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக: மக்களின் அத்தியாவசிய பண்டங்களின் விலையை வரம்பற்ற வகையில் அதிகரித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே. எனினும் இந்த எதிர்ப்பு தெரிவிப்பதால் மாத்திரம் நின்றுவிட மாட்டாது. தேசிய மக்கள் சக்தியின் மக்கள் நேயமுள்ள ஆட்சியைக் கட்டியெழுப்புவதற்காக வரிசைப்படுத்துகின்ற எதிர்ப்பு இயக்கமாகும். இந்நாட்டின் ஆட்சியாளர்கள் பொது ஆதனங்களைக் கொள்ளையடிக்கையில் நாட்டின் தேசிய சொத்துக்களை விற்கையில் சனநாயகத்தை சுருட்டிக்கொள்ளும்போது பல தசாப்தங்களாக நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம். தற்போது எதிர்ப்பு ஒரு திட்டவட்டமான திருப்புமுனைக்கு வந்து ஊழல்மிக்க ஆட்சியாளர்களை விரட்டியடிக்கும்வரையும் மக்கள்நேயமுள்ள ஆட்சியொன்றை கட்டியெழுப்புதல் வரையும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. எமது நாட்டின் அரசியல் மிகவும் திட்டவட்டமான தீர்வுக்கட்டமான திருப்புமுனையை நோக்கிப் பயணித்துள்ளது. அடுத்த வருடத்தின் நவெம்பர் மாதமளவில் புதிய அரசாங்கமொன்றை, புதிய ஆட்சியொன்றை நிறுவுவோமென நாங்கள் உங்களிடம் உறுதியாகக் கூறுகிறோம். ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது இந்த கொடிய அழிவுமிக்க ஆட்சியின் இறுதி வரவுசெலவுத் திட்டமாக மாறுவது திண்ணம்.
இந்த வரவுசெலவினை சமர்ப்பித்து தலையணை உறைபோல மறுபக்கம் புரட்டுவதாக ரணில் குறிப்பிட்டார். இதற்கு ஒருசில மாதங்களுக்கு முன்னரும் ரணில் தலையணை உறையை மறுபக்கம் புரட்டியதாகக் கூறினார். இரண்டு தடவைகள் தலையணை உறையை திருப்பிப்போட்டால் இருந்த அதே பக்கமல்லவா தற்போது இருக்கும். நாட்டின் வளங்களை விற்று, கடன்பெற்று வருகைதந்த பயணத்தின் மற்றுமொரு அடியெடுப்பு மாத்திரமே. ஒரு நாட்டினதும் உலக மக்களினதும் அவசியப்பாடுகளுடன் அமைந்தொழுகத்தக்கவகையில் பண்டங்கள் மற்றும் சேவைகள் உற்பத்தியை மாற்றியமைத்து முன்கொண்டுசெல்கின்ற திட்டமொன்று இந்த ஆட்சியாளர்களிடம் கிடையாது. சதாதகாலமும் தேயிலை, இரப்பர், தெங்கு ஏற்றுமதிப் பொருளாதாரம் பற்றியே பேசினார்கள். தேயிலை, இரப்பர், தெங்கின் அளவுக்கே இந்த தலைவர்களும் பழையவர்களே. உலகில் ஏற்படுகின்ற மாற்றங்களுடன் நேரொத்தவகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய உற்பத்திகளை செய்வதில் இந்த ஆட்சியாளர்கள் வெற்றிபெறவில்லை. உலகில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு நேரொத்ததாக அமையத்தக்கவகையில் கல்வியை மாற்றியமைப்பதில் இந்த தலைவர்கள் வெற்றிபெறவில்லை. அதனால் உலகத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டு, பொருளாதாரம் சீரழிந்து, குற்றச்செயல்கள் நிறைந்த நாடொன்று எஞ்சியுள்ளது. பிரஜைகளுக்கு தமது அத்தியாவசிய உணவுகள் மற்றும் ஔடதங்களை உள்ளிட்ட பண்டங்களைப் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நாட்டை உருவாக்கி இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அழிந்துபோன ஒரு நாடும் சமூகமும் எம்மெதிரில் உள்ளது. எழுபத்தைந்து வருட சாபக்கேடு இதுதான். ரணில் விக்கிரமசிங்க வரவுசெலவில் முன்வைப்பது அந்த சாபக்கேட்டின் நீடிப்பினையாகும். ரணில் வரவுசெலவின் முதலாவது அத்தியாயத்திலேயே எழுபத்தைந்து வருடகால சாபக்கேடு பற்றி சொல்லாமல் சொல்லப்படுகின்றது. ரணில்களின் அரசியல் கொள்கைதான் வரவுசெலவுத் திட்டத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது. 75 வருடகால அழிவினைப் பற்றி அவர்கள் இப்போது எம்மிடம் கூறுகிறார்கள். ரணிலிடமிருந்தோ அல்லது மகிந்தவிடமிருந்தோ அல்லது அதே பாணியிலான பின்தொடர்பவர் ஒருவரிமிடருந்தோ நாட்டை மீட்டெடுத்தலை எதிர்பார்க்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தியின் கனவான்கள் கூறுவது “எங்கள் கொள்கையையே ரணில் அமுலாக்கி வருகிறார்” என்பதாகும். நாட்டை முன்நோக்கி நகர்த்தவல்ல உபாய மார்க்கம் தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே இருக்கின்றது.
கால்நடை வளங்கள் சபைக்குச் சொந்தமான விவசாயப் பண்ணைகள் தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் கைகளிலேயே இருக்கின்றன. எமது நாட்டின் பாற்பண்ணைத் தொழிலுக்கு புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டுவந்து மாற்றத்தை ஏற்படுத்துவதைக் கைவிட்டு இருபத்தெட்டாயிரம் ஏக்கர் காணிகளை விற்கத் தயாராகி வருகிறார். 31 விவசாயப் பண்ணைகளைச் சேர்ந்த 28,000 ஏக்கர்களை இந்தியாவின் “அமூல்” கம்பெனிக்கு விற்றுத் தீர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் விற்பனைப் பட்டியலில் இருப்பது நட்டமடைகின்ற நிறுவனங்கள் மாத்திரமல்ல. இலங்கையின் அரச நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய இலாபத்தை ஈட்டுகின்ற நிறுவனங்களும் விற்கப்படுகின்றன. இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் கடந்த வருடத்தில் பன்னிரண்டாயிரத்து நானூற்றி எண்பத்தாறு மில்லியன் இலாபத்தை ஈட்டியது. இந்த வருடத்தின் செத்தெம்பர்வரை நான்காயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது மில்லியன் இலாபம் பெற்றுள்ளது. காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வரி வருமானமும் பங்கிலாபமும் பொது திறைசேரிக்கு கிடைத்துக்கொண்டிருந்தது. இலங்கை வங்கியின் கடந்த வருட இலாபம் முப்பதாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தேழு மில்லியன் ஆகும். மக்கள் வங்கியின் கடந்த வருட இலாபம் இருபத்தோராயிரம் மில்லியன் ஆகும். விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் இவ்வருட செத்தெம்பர் வரையான இலாபம் இருபத்தாறாயிரம் மில்லியன் ஆகும். மக்களுக்குச் சொந்தமான பாரிய இலாபம் ஈட்டுகின்ற இந்’த நிறுவனங்களை விற்க ரணிலுக்கு இடமளிக்கப் போகிறோமா? தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டின் தொழிற்சங்க இயக்கத்துடன் ஒன்றுசேர்ந்து இந்த வளங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு பாதுகாத்துக் கொடுக்க செயலாற்றி வருகின்றது.
இந்நாட்களில் பாராளுமன்றத்தில் ஊழலுக்கெதிரான நாடகமொன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. அதற்குள்ளே இருப்பது ஊழல்பேர்வழிகளுக்கு இடையிலான முரண்பாடாகும். தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எங்களுக்கு குறைந்த அளவிலான ஊழல்பேர்வழிகள் அல்லது அதிக அளவிலான ஊழல்பேர்வழிகள் என்ற தெரிவு கிடையாது. கள்வன் கள்வனே, ஊழலை நிறுத்துவதற்கான இடையறாத போராட்டமே தேசிய மக்கள் சக்திக்கு இருக்கிறது. அதனை நாங்கள் புரிந்து வருகிறோம். இந்த நாட்டை படுகுழிக்குள் தள்ளுவதில் தாக்கமேற்படுத்தியது தவறான பொருளாதாரக் கொள்கைகள் மாத்திரமல்ல: மக்களின் செல்வத்தைக் கோடிக்கணக்கில் கொள்ளையடித்தமையும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் – மோசடிகளில் கைதேர்ந்தவர்களான மொட்டுவிடமே ரணில் விக்கிரமசிங்கவின் உயிர் இருக்கின்றது. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியால் மாத்திரமே அதனை முடிவுக்கு கொண்டுவர முடியும்.
அதைப்போலவே ஒட்டுமொத்த அரச பொறியமைப்புமே ஆட்டங்கண்டுள்ளது. இலங்கையில் போதைத்தூள் சம்பந்தமான அனைத்துத் தகவல்களையும் பொலீஸார் அறிந்துள்ளதாக மேல்மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேட்ட பிரதிப் பொலீஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கூறுகிறார். எனினும் எண்ணிக்கையில் ஏறக்குறைய முப்பது நாற்பது வரையுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பற்றி அறியாதிருக்கும் அளவுக்கு பொலீஸார் பச்சிளம் பாலகர்களா? அரச பொறியமைப்பினை அரசியல் பலத்தினால் இருகூறாக்கியதன் விளைவுகள்தான் இவை. கோப் குழுவின் முன்னிலையில் விசாரணைக்காக அழைப்பிக்கப்பட்ட குற்றஞ்சுமத்தப்பட்டவர்களுடன் கோப் குழுவின் தவிசாளர் சைகை மொழியில் குறிப்பால் உணர்த்துகிறார். எந்தவொரு நிறுவனத்திற்கும் தற்போது பொறுப்புக் கூறுதலோ பொறுப்பு வகித்தலோ கிடையாது. கிரிக்கெற் நிறுவனம் தொடர்பில் அமைச்சரவையில் இணக்கப்பாடு கிடையாது. பொலீஸ் மா அதிபரொருவரை நியமிக்க இயலாதுள்ளது. பல சிரேட்ட பிரதிப் பொலீஸ் மா அதிபர்களுக்கு எதிராக வழங்குகள் நிலவுகின்றன. ஒரு நாடு இவ்வாறு பயணிக்க முடியுமா? இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ்பெற்றுக்கொண்டு பயணிக்க முடியுமா? சிதைக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த அரச பொறியமைப்பினையும் மேலிருந்து கீழ்நோக்கி மீண்டும் பலப்படுத்த வேண்டும். பொலீஸின் சுற்றுப்புறங்களிலும் குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன, பாதாள உலகத்தினர் காணிகளை கைப்பற்றிக் கொள்கிறார்கள். எனினும் எந்தவிதமான பொறுப்புக்கூறலும் கிடையாது. சுங்கம், உண்ணாட்டரசிறை திணைக்களம், பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு, சபாநாயகருக்கு எந்தவிதமான பொறுப்புக்கூறலுமின்ற நாட்டை நகர்த்திச்செல்ல முடியுமா?
அரச பொறியமைப்பு மாத்திரமல்ல, அரசியல் பொறியமைப்பும் சிதைவடைந்து இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க சனாதிபதியாக இருந்தபோதிலும் பிறரது அமைச்சரவையால் நாட்டை ஓட்டிச்செல்ல முடியாது. அரசியல் கட்டமைப்பினால் அரச பொறியமைப்பு நெறிப்படுத்தப்படல் வேண்டும். ரணிலிடம் அரசியல் கட்டமைப்பு கிடையாது. ரணில் விக்கிரசிங்க எந்தவொரு குழுவினை நியமித்தாலும் அந்த குழுவின் தலைவர் சாகல. வேறு அரசியல் கட்டமைப்பு கிடையாது. முன்னர் நிலவியது ராஜபக்ஷாக்களின் அரசியல் கட்டமைப்பு. அரச கட்டமைப்பு முறைப்படி நெறிப்படுத்தப்படுவதில்லை என்பது உயர்நீதிமன்றத்திலும்கூட நிரூபணமாகிவிட்டது.
அரச பொறியமைப்பு மாத்திரமல்ல, அரசியல் பொறியமைப்பும் சிதைவடைந்து இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க சனாதிபதியாக இருந்தபோதிலும் பிறரது அமைச்சரவையால் நாட்டை ஓட்டிச்செல்ல முடியாது. அரசியல் கட்டமைப்பினால் அரச பொறியமைப்பு நெறிப்படுத்தப்படல் வேண்டும். ரணிலிடம் அரசியல் கட்டமைப்பு கிடையாது. ரணில் விக்கிரசிங்க எந்தவொரு குழுவினை நியமித்தாலும் அந்த குழுவின் தலைவர் சாகல. வேறு அரசியல் கட்டமைப்பு கிடையாது. முன்னர் நிலவியது ராஜபக்ஷாக்களின் அரசியல் கட்டமைப்பு. அரச கட்டமைப்பு முறைப்படி நெறிப்படுத்தப்படுவதில்லை என்பது உயர்நீதிமன்றத்திலும்கூட நிரூபணமாகிவிட்டது.
ராஜபக்ஷாக்கள் அரசாங்கமொன்றை அமைத்தார்கள். தவறாகவேனும் தலைமைத்துவம் வழங்க அரசியல் கட்டமைப்பொன்று இருந்தது. இன்று ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமொன்றை அமைத்திருக்கின்றபோதிலும் அரசியல் கட்டமைப்பொன்று கிடையாது. அரசாங்கம் எடுக்கின்ற தீர்மானங்கள் தொலைதூரக் கிராமங்கள்வரை பயணிக்கின்ற, தொலைதூரக் கிராமங்களின் அவசியப்பாடுகள் கொழும்பை மையமாகக்கொண்ட கட்டமைப்புவரை பயணிக்கின்ற புதிய அரச கட்டமைப்பினையே எமது நாடு தாபிக்கவேண்டும். தேசிய மக்கள் சக்தி மாத்திரமே அதற்காக செயற்படுகின்ற ஒரே அரசியல் கட்டமைப்பினைக்கொண்ட இயக்கமாகும். முறையான அரசியல் தலைமைத்துவத்தைக்கொண்ட கிராமங்கள் வரை தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய பொறியமைப்பினைக் கட்டியழுப்பியே நாங்கள் அரசாங்கமொன்றை நிறுவுவோம். தேசிய மக்கள் சக்தியை கிராமம்வரை விரிவாக்குவதன் மூலமாக மாத்திரமே சீரழித்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். நாங்கள் கிராம அலுவலர் பிரிவு வரை வட்டாரச் சபைகளை நிறுவுவது வாக்குப் பெட்டியில் வாக்குகளை நிரப்பிக் கொள்வதற்காக மாத்திரமல்ல. கிராமத்தைக் கட்டியெழுப்புதல்வரை அவசியமாகின்ற அரசியல் தலைமைத்துவத்தை வழங்குகின்ற கட்டமைப்பு என்றவகையிலாகும்.
அரச வருமானத்தைப் பெற்றுத்தருகின்ற நான்கு பிரதான தோற்றுவாய்கள் இருக்கின்றன. உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம் என்பவையே அவை. இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் கட்டியெழுப்பப்படவேண்டியது தேர்தல் நடைபெறுகின்ற நாளில் சென்று புள்ளடி இடுவதற்காக மாத்திரம் அல்ல. திறைசேரிக்கு செல்வத்தை அழைப்பிக்கின்ற வினைத்திறன்கொண்ட நான்கு நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள் என்றவகையிலாகும். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் நாட்டை சரிக்கட்டக்கூடிய செயற்பாட்டாளர்கள் என்றவகையிலேயே பொறியியலாளர்கள், கல்விமான்கள், சுகாதாரத்துறையில் திறன்கொண்டவர்கள், விவசாய விஞ்ஞானிகளை உள்ளிட்ட குழுவினர் உருவாக்கப்பட வேண்டும். தேசிய மக்கள் சக்தியைத் தவிர வேறு எவருக்கும் மக்கள் முன்னிலையில் சென்று கூறுவதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. 1977 இல் திறந்த பொருளாதாரத்தைக் கொண்டுவந்தோம் என்றுதான் முன்னர் ஐக்கிய தேசிய கட்சி ஊருக்குப் போய் கூறியது. மகிந்த ராஜபக்ஷ சிங்கப்பூரின் “லீ குவான் யூ” எனவும் கோட்டாபய ராஜபக்ஷ மலேசியாவின் “மஹதீர் மொஹமட்” போன்றவர் எனவுமே மகிந்தவின் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள். அந்த இருவரும் சேர்ந்து உருவாக்குகின்ற நாடு எப்படியிருக்குமென எங்களிடம் கேட்டார்கள். மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். அவர்கள் ஆசியாவின் அதிசயத்தைக் கட்டியெழுப்புவதாகக் கூறினார்கள். அப்பா வீடுகளை அமைத்தாரென சஜித் பிரேமதாசவால் இன்று கூறமுடியுமா? தற்போது எவராலும் ஒன்றுமே கூறமுடியாத “பக்காத் திருடர்கள்” என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
உலகத்துடன் முன்நோக்கிப் பயணிக்கின்ற புதிய உரையாடலொன்றை சமூகத்துடன் கட்டியெழுப்ப முடிவதும் அதனை அமுலாக்க முடிவதும் தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே ஆகும். இதற்காக செயலாற்றி வரும்போது ரணில் விக்கிரமசிங்க தேர்தலொன்றைத் தருவாரா எனும் உரையாடலும் ஒருபுறம் இருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க தற்போது இழுத்துக்கொண்டிருப்பது கோட்டாவின் குற்றியையாகும். ரணில் விக்கிரமசிங்கவின் கோட்டா குற்றி அடுத்த வருடத்தின் அக்டோபர் 17 ஆந் திகதிக்கு முன்னர் நடாத்தப்படவேண்டிய சனாதிபதி தேர்தலுடன் முற்றுப்பெறுகின்றது. உரிய வகையில் சனாதிபதி தேர்தல் கிடைக்காதென்பது மக்களுக்கு உறுதியாகின் அடுத்த செப்தெம்பருக்கு முன்னர் ரணிலை வீட்டுக்கு அனுப்புவார்கள். இன்று மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டியடிக்க வீதியில் இறங்கியதுபோல் செயற்படாதிருப்பது சனாதிபதி தேர்தலை இலக்காகக்கொண்டேயாகும். கோட்டாபயவை விரட்டியப்பதன் மூலமாக இடைவெளியை நிரப்பவல்ல மக்கள்நேயமுள்ள அரசாங்கமொன்று இருக்கவில்லை. முண்டம் பாராளுமன்றத்தில் எஞ்சியது. பாராளுன்றத்தினால் ரணிலின் தலை பொருத்தப்பட்டது. விரட்டியடிப்பதால் பயனில்லை என்பதையும் மக்கள் எதி்ர்பார்ப்புகளை ஈடேற்றுகின்ற அரசாங்கமொன்றைக் கட்டியெழுப்புவதன் மூலமாக மாத்திரமே விரட்டியடிக்க வேண்டுமென்பதையும் அந்த அனுபவ வாயிலாக மக்கள் தற்போது அறிவார்கள். ரணில் விக்கிரமசிங்கவைப்போல் புண்ணியத்திற்காக சான்ஸ் எடுப்பதற்காக நாங்கள் போராட்டம் நடத்தமாட்டோம். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை கட்டியெழுப்பும் திட்டத்தைக் கொண்டதாகவே நாங்கள் அரசாங்கத்தை விரட்டியடிப்போம். அதன் மிகவும் முக்கியமான மைல்கல் சனாதிபதி தேர்தலாகும். பாரியளவில் எதிர்பார்ப்புச் சிதைவினை அடைந்துள்ள மக்கள் எம்மீது அபார நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவர்கள் தொடர்பில் மிகவும் பாரதூரமான பொறுப்பே எமக்கு இருக்கின்றது.
பாரம்பரியரீதியாக மகிந்தாக்களை ரணில் விக்கிரமசிங்காக்களை நம்பி செயலாற்றிய பெருந்தொகையான மக்கள் அவர்கள்மீது கொண்டிருந்த நம்பிக்கையைப் பார்க்கிலும் பல்லாயிரம் மடங்கு நம்பிக்கையுடனேயே எம்மை நாடி வருகிறார்கள். இவ்விதம் வருகின்ற மக்களிடம் பிரதானமாக இரண்டு எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. ஒன்று தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை நிறுவுவது பற்றிய நம்பிக்கை. இந்த நாட்டில் மாத்திரமல்ல வெளிநாட்டில் வசிக்கின்ற நல்ல வாழ்க்கையைக் கழிக்கின்ற இலங்கையர்கள்கூட பல்லாயிரக்கணக்கில் எம்மைச்சுற்றிக் குழுமியுள்ளமை ஐக்கிய அமெரிக்காவில் உறுதியாகியது. வருகின்ற முதலாவது சந்தர்ப்பத்திலேயே நாங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றை நிறுவவேண்டும். அதற்காக செயலாற்றவேண்டிய முக்கியமான ஏறக்குறைய பத்து மாதங்கள் பிறந்துள்ளது. இலங்கை அரசியலிலும் இலங்கை வரலாற்றிலும் மிகவும் முக்கியமானதாக அமைகின்ற ஏறக்குறைய பத்து மாத காலப்பகுதிக்கள் பலம்பொருந்தியவகையில் கைவிடாமல் மல்லுக்கட்டவேண்டும். தேசிய மக்கள் சக்தியின் பலம்பொருந்திய அரசாங்கமொன்றை நிறுவவேண்டும். வரிச்சுமைக்கு எதிராக, விற்றுத்தீர்ப்பதற்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக, சனநாயகத்தை சுருட்டுவதற்கு எதிராக, தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிராக மக்களை அணிதிரட்டுவோம். அதற்காக நாங்கள் அரசாங்கமொன்றைக் கட்டியெழுப்புவோம். நாங்கள் அமைக்கின்ற அரசாங்கத்தைச் சுற்றி உலகத்தின் புதிய அறிவினை வரிசைப்படுத்தி, உலகத்துடன் போட்டியிடக்கூடிய பொருளாதாரமொன்றைக் கட்டியழுப்பிட வேண்டும். சமூக நீதி, நேர்மை, வினைத்திறன், ஒவ்வொரு பிரஜையினதும் நன்மதிப்பு உறுதிப்படுத்தப்படுகின்ற ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம். எம்மனைவரதும் தோள்கள்மீது தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியைக் கட்டியழுப்புகின்ற அத்துடன் நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பொறுப்பு சமத்தப்பட்டுள்ளது. நிச்சயமாக வருங்காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியொன்றை நிறுவி வீழ்ச்சியடையச் செய்வித்துள்ள நாட்டைக் கட்டியெழுப்புவோம். அதற்காக நாமனைவரும் ஒருவர்போல் செயலாற்றுவோம். உங்கள் அனைவருக்கும் வெற்றிகிட்டட்டும்.