(-Colombo, August 16, 2024-)
நேற்று (16) பிற்பகல் கண்டி அஸ்கிரிய மஹா விகாரையின் சியம் மஹா நிக்காய அஸ்கிரிய பீடத்தின் மஹா நாயக்க வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் பிரதி பதிவாளர், அஸ்கிரி மஹா விகாரை பரிவேனாதிபதி சங்கைக்குரிய நாரம்பனாவே ஆனந்த மஹா நாயக்க தேரர் ஆகியோரை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்க சந்தித்தார்.
இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை பற்றி அவரை உள்ளிட்ட மஹா சங்கத்தினருடன் கலந்துரையாடிய தோழர் அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெறுவதற்கான அவர்களின் நல்லாசியை பெற்றுக்கொண்டார்.
இத்தருணத்தில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் லால் காந்த பங்கேற்றார்.