Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இந்திய அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார்

-Colombo, February 05, 2024-

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பினையேற்று அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று (05) பிற்பகல் இந்திய அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Ajit Doval அவர்களை சந்தித்தார். இந்தச் சந்திப்பு Sardar Patel Bhavan இல் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின்போது பிராந்தியத்தின் பாதுகாப்பு பற்றியும், இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்தும் ஆழமாக கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.